Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைத் தாலாட்ட வருவாளா?
+19
பாரதி பாலமுருகன்
SK
Aathira
சிவா
உதயசுதா
சிவசங்கர்
மஞ்சுபாஷிணி
வினுப்ரியா
உமா
சின்றெல்லா
பூஜிதா
திவ்யா
தாமு
Jiffriya
ந.கார்த்தி
puthuvaipraba
மகா பிரபு
முரளிராஜா
ANTHAPPAARVAI
23 posters
Page 4 of 11
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
என்னைத் தாலாட்ட வருவாளா?
First topic message reminder :
இது ஒரு காதல் கதை!
தொடரும்...
இது ஒரு காதல் கதை!
அவள் ஒரு அழகி!
எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!
நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்
அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல
அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!
அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!
அவள் பெயர் "......"
- Spoiler:
(கொஞ்ச நேரத்திற்கு அந்தப் பெயர் மௌனமாகவே இருக்கட்டும்....)
சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.
அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!
எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.
கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....
அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.
அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன
ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'
என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!
ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!
சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..
தொடரும்...
Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 1:47 pm; edited 1 time in total (Reason for editing : Delete my Name)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
அட பஸ்ஸை விட்டு இப்படியா எறங்குவீங்க.. பேசாம இன்னக்கி ஒரு நாள் அவங்க போகிற வழியில் இருக்கிற வேற காலேஜுக்குப் போக வேண்டியதுதானே...... எங்க சென்னை பசங்கல்லாம் அப்படித்தான் செய்வார்கள்..... சஸ்பென்ஸ் தாங்க முடியல...
நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள காதல் இளவரசனின் அந்தப்பார்வைக்காக.
நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள காதல் இளவரசனின் அந்தப்பார்வைக்காக.
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
மகா பிரபு wrote:அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.
நம்பர் வான்கூன உடனே உங்களுக்குத்தான் முதல்ல தருவேன்.
ஆனா அவள் ஒரு மாதரி...!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
சின்றெல்லா wrote:அருமயான... வரிகள்.. நண்பா...
1000 முறை படிதாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது... ..
உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
சிவா wrote:குயிலனின் கவிதைகளை மட்டுமே ரசித்து வந்த ஈகரை உறவுகளுக்கு, கதை எழுதும் கலையிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!
மிகவும் சிறப்பாகச் செல்கிறது! தொடருங்கள் குயிலன்!
இந்தக் கதையை, ஆஸ்கர் அவார்டுக்குப் பரிந்துரைத்த சிவா அவர்களுக்கு நன்றி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
Aathira wrote:அட பஸ்ஸை விட்டு இப்படியா எறங்குவீங்க.. பேசாம இன்னக்கி ஒரு நாள் அவங்க போகிற வழியில் இருக்கிற வேற காலேஜுக்குப் போக வேண்டியதுதானே...... எங்க சென்னை பசங்கல்லாம் அப்படித்தான் செய்வார்கள்..... சஸ்பென்ஸ் தாங்க முடியல...
நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள காதல் இளவரசனின் அந்தப்பார்வைக்காக.
ஆஸ்கர் அவார்டு கொடுத்த ஆதிரா அக்காவுக்கு சிறப்பான நன்றிகள்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
இதுக்குத்தான் நண்பன் வேணுங்குறது.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.
நம்பர் வான்கூன உடனே உங்களுக்குத்தான் முதல்ல தருவேன்.
ஆனா அவள் ஒரு மாதரி...!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
மகா பிரபு wrote:
இதுக்குத்தான் நண்பன் வேணுங்குறது.
அவள் ஒரு மாதரின்னு சொன்னது....
அடுத்தப் பகுதியில் உங்களுக்குப் புரியும் நண்பா!!!????
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
தொடர்ச்சி-2...
இறங்கிச் செல்லும் போது, இப்படி ஒரு பார்வையாவது பார்க்க மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் நான் பேருந்தை விட்டு இறங்க முயற்சித்த போது,
எனக்கு முன்பாக அவள் இறங்கினாள்!
என்ன ஆச்சரியம்?... அவள் ஏன் இறங்க வேண்டும்...? என்று குழப்பத்தில் நானும் இறங்க, அப்போதுதான் அவளும் 2 .50 தான் டிக்கெட் எடுத்தாள்
என்ற நியாபகம் எனக்கு வந்தது...
அப்படியானால், அவளும் இதே கல்லூரியில் தான் படிக்கிறாளா?...
நான் எதிர் பார்த்தது போல் அவளும் கல்லூரி நோக்கி நடந்து கொண்டிருந்தாள் என்னை எதிர் பார்த்த படியே!
சிறிது நேரத்தில் நானும் அவளும் அருகருகே நடக்க...
அவளோ, பேருந்தில் நடந்ததை இன்னும் மறக்காமல், சிரித்துக் கொண்டே என்னை ஓரக் கண்ணில் பார்த்தாள்.
எப்படிப் பேச்சுக் கொடுப்பது என்று நான் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது...
"என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" என்று அவளே ஆரம்பித்தாள்!
எப்படிப் பேசுவது என்று ஒத்திகைப் பார்த்த எனக்கு, என்ன பேசுவது என்று மறந்து போனது...
"ஹலோ!... உங்களைத்தான் கேட்டேன். என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" மீண்டும் கேட்டாள்.
உடனே நான் சுதாரித்துக் கொண்டு, "3rd year கம்ப்யூட்டர் சயின்ஸ்" என்றேன்.
அதற்கு அவள் "நானும் தான்!" என்றாள் குறும்புப் பார்வையுடன்.
நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க,
அவள் தன் தலையை சாய்த்து....கழுத்தை சின்னதாக ஒரு வெட்டு வெட்டி... புருவத்தை உயர்த்தி... படக்கென்று கண்ணை மூடித்திறந்து...
"நான் 1st year" என்றாள்.
"ஓ! அப்படியா?" என்று நானும் சிரிக்க,
அவளும் சிரித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" என்றாள்.
"கீதன்" என்று கூறி விட்டு, "உங்க பேர்?" என்றேன் நான்.
"லதீபா!" என்றாள்.
ஆம்! அதுதான் அவள் பெயர். அந்தப் பெயரை அவள் சொல்லும் போது தான் அழகாக இருக்கும் "லத்..தீ..ப்பா!"
"தினமும் இந்த பஸ்-ல தான் வரீங்களா?" என்று நான் கேட்க...
"இல்லை, இப்ப ரெண்டு நாளா தான் வந்து கிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி ஹாஸ்டல்-ல தங்கியிருந்தேன். ஆனா...ஹாஸ்டல் பீஸ்
அதிகமா வரதால, நானும் என் பிரண்ட்ஸ்-ம் சேர்ந்து பக்கத்துல வீடு எடுத்து தங்கியிருக்கோம்" என்றாள்.
பிறகு பேச வார்த்தையின்றி, ஒரு சிறிய மௌனத்துடன் இருவரும் நடக்க...
அந்த இடை வெளியில், அவள் எனக்கு டிக்கெட் எடுத்தாள் அல்லவா, அந்த நன்றிக் கடனுக்காக, பக்கத்தில் இருக்கும் காஃபி ஷாப்பில்,
அவளுக்கு ஒரு காஃபி வாங்கிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அதே போல அவளிடமும் கேட்டேன்,
"என்னங்க... பக்கத்துல தான் காஃபி ஷாப் இருக்கு, வரீங்களா..? ஒரு காஃபி சாப்டுட்டு போகலாம்" என்றேன்.
உடனே அவள் நின்று விட்டாள். சரி வரத்தான் போகிறாள் என்று நினைத்து, சந்தோசத்துடன் அவளைப் பார்த்து நான் புன்னகை செய்ய...
சற்றும் எதிர் பார்க்காத வண்ணம் "பளார்...!" என்று என் கன்னத்தில் அரைந்தாள்!
நான் நிலை குலைந்து போனேன்!
அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது....
"பொருக்கி ராஸ்கல்! ரெண்டு வார்த்தை பேசுன உடனே காஃபி ஷாப்புக்கு கூப்புடுறியே.... ரெண்டு நாள் பழகினா ஹோட்டலுக்குக் கூப்பிடுவியா?
இதெல்லாம் பஸ் ஸ்டாண்ட் ஓரத்துல ஒதுங்கி நிப்பாளுங்க... அவளுங்க கிட்ட வச்சிக்க... என் கிட்ட வச்சிகிட்டா, செருப்புப் பிஞ்சுடும். மைன்ட் இட்!"
என்று பட பட வென்று பேசிவிட்டு சென்று விட்டாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஒன்று நினைக்க, அவள் ஒன்று நினைத்துக் கொண்டாளே என்று வேதனையாக இருந்தது.
ஆனாலும் அவள் கைகளுக்கு அவ்வளவு வேகம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை!
அன்று முதல் எனக்கு மனசே சரியில்லை... நான் நினைத்ததை அவளிடம் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
ஒருநாள், பேருந்தில் அவளைப் பார்த்த போது, ஒரு எதிரியைப் பார்ப்பதைப் போல், என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
என் நண்பர்கள் எல்லாம் "ஏண்டா ஒரு மாதரியா இருக்கே?" என்று கேட்ட போது "ஒன்றும் இல்லை" என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னேன்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, லைப்ரரியில் அவளை சந்தித்தேன்.
நான் புத்தகத்தை தேடி எடுத்து வந்து அமர, அருகிலிருந்து ஒரு பெண் எழுந்து வேறு இடத்தில் அமர்ந்தாள்.
நான் நிமிர்ந்து பார்த்தேன். அது அவள் தான்!
இதுதான் சரியான இடம் என்று நினைத்து, அவளருகில் சென்றேன்...
என்னைப் பார்த்ததும் அவள் எழுந்தாள்...
"ஒரு நிமிஷம்!, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!" என்றேன்.
"எதுக்கு?" ஆத்திரத்துடன் கேட்டாள்.
"அன்னைக்கு நான் உங்களை காஃபி சாப்பிடக் கூப்பிட்டது, உங்க கூட ஜாலியா பேசிக் கிட்டு இருக்குறதுக்காக இல்லங்க! நீங்க எனக்கு டிக்கெட்
எடுத்துக் கொடுத்தீங்க இல்லையா? அந்த 2.50 ஐ திருப்பிக் கொடுத்தா மரியாதையா இருக்காது அப்படிங்கறதுக்காகத்தான், அதுக்குப் பதிலா
காப்பி சாப்பிடலாம்-னு கூப்டேன். ஆனா நீங்கதான் என்னை தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க. பரவாயில்ல, காரணத்தை சொல்லாம உங்கள காஃபி சாப்பிடக் கூப்பிட்டது
என் தப்புதான். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அழகா இருந்தீங்க, அதனால திரும்பத் திரும்ப பாக்கணும்-னு தோணுச்சு! உங்ககிட்ட பேசணும்-னும் தோணுச்சு!
ஆனா, நீங்க நினைக்கிற மாதரி, பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டா சுத்துறவன் நான் இல்லை."
என்று கூறி, அந்த 2.50 சில்லறையை டேபிளில் வைத்து விட்டு நான் வேகமாக வந்து விட்டேன்.
எப்படியோ... என் மனதில் உள்ளதை அவளிடம் சொல்லி விட்ட நிம்மதியில் நேராக எனது 'டிப்பார்ட் மெண்ட்'-க்கு வந்தபோது.......
நண்பர்கள், அனைவரும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்தனர்...!
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: என்னைத் தாலாட்ட வருவாளா?
அருமை நண்பா. கோபம் இருக்குமிடத்தில் தான் குணம் இருக்கும். விட்டுராதீங்க.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
» காதல் திருவிழா தேவதை வருவாளா ?
» தாலாட்ட தாயில்லை...!
» தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’!
» சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட நாவல் வேண்டும்.
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தாலாட்ட தாயில்லை...!
» தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’!
» சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட நாவல் வேண்டும்.
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
Page 4 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|