ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்

2 posters

Go down

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Empty நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்

Post by கோவைசிவா Mon Sep 07, 2009 11:44 pm

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்







கோவை மாவட்டம் சூலூர்: காதலனைக் கைப்பிடிக்க, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவியின் செயல் அம்பலமானது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணம் செய்த காதலர்கள் பிரிந்தனர். கோவை குறிச்சியைச் சேர்ந்த மளிகை வியாபாரி சுப்பிரமணியம். இவரது மகள் சிவகாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.


கடந்த முதல் தேதியன்று, இவரது தோழிக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், கல்லூரிக்குச் செல்ல "லிப்ட்'" கேட்ட தன்னை யாரோ கடத்திச் செல்வதாக சிவகாமி தகவல் தெரிவித்திருந்தார். இதுபற்றி கல்லூரி முதல்வருக்குத் தெரிந்து, அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லை அடுத்துள்ள வடமதுரையில் சிவகாமி தனது காதலனுடன் இருந்ததைக் கண்டுபிடித்து போலீசார் நேற்று அழைத்து வந்தனர்.


போலீஸ் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. சிவகாமி தனது பாட்டி வீட்டிலிருந்து கொண்டு திண்டுக்கல், வடமதுரையில் பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டிருந்தார். அப்போதே உடன் படித்த சுரேஷ் கண்ணனை காதலித்துள்ளார். பள்ளி வயதுக் காதலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகியுள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும், சிவகாமியை அவரது பெற்றோர் கோவைக்கு அழைத்து வந்து விட்டனர். கல்லூரியில் சேர்ந்த பின்னும் இருவரும் மொபைலில் தொடர்பு வைத்திருந்தனர். கடந்த முதல் தேதி கோவை வந்த சுரேஷ்கண்ணன், சிவகாமியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து அவரின் நான்கு நண்பர்களின் உதவியுடன் சிவன்மலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் வடமதுரையில் உள்ள சுரேஷின் மாமா வீட்டுக்குச் சென்று விட்டனர்.


காதலனுடன் செல்லும் போதுதான், "தன்னை காரில் யாரோ கடத்துவதாக' பொய்யான மெசேஜ் அனுப்பி, தனது பெற்றோரையும், போலீசாரையும் சிவகாமி திசை திருப்பியுள்ளார். திருமணம் செய்து கொள்ள நண்பர்களின் உதவியை நாடி திருப்பூர் வந்த போது, மொபைல் போனில் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த ஆதாரத்தைக் கொண்டு அவர்களை போலீசார் வளைத்தனர். அதன்பின் வடமதுரையில் பதுங்கியிருந்த புதுமணத் தம்பதியை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.


சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருவரின் பெற்றோரும் இவர்கள் திருமணத்தை ஏற்க மறுத்த நிலையில், போலீசார் இருவரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அவர்களை அவர்கள் பெற்றோர் தனித் தனியாக அழைத்துக் கொண்டு சென்றனர். சமீபத்தில் வெளிவந்த "நாடோடிகள்' படத்தில் வருவதைப்போல, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்த காதலர்கள், பெற்றோரின் வற்புறுத்தலால் மீண்டும் அவரவர் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி விட்ட சம்பவம், சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Empty Re: நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்

Post by Chocy Mon Sep 07, 2009 11:50 pm

இதுலாம் ஒரு பொளைபுனு அலைதுங்க
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Empty Re: நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்

Post by கோவைசிவா Mon Sep 07, 2009 11:51 pm

மகிழ்ச்சி
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Empty Re: நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum