புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_lcapதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_voting_barதமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 07, 2011 10:16 pm

(முத்தைத்தரு பத்தித் திருநகை....)

முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்
வெட்டித்தலை கொத்திக் கிழியென
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ
சொத்துக்களைத் தட்டிப் பறிதமிழ்
கற்பைக்கெடு, குத்திக் கொலையென
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ

கொத்துக்குலை மொத்தத் தமிழ்அழி
கத்திக்குரல் சத்த மிடுகுடி
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோட்டு
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்
சுற்றிப்பொது பொத்து பொதுவென
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக

முற்றும்அழி ஒற்றைத் தமிழனும்
சற்றும்விதி பெற்றுக் குறைஉயிர்
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக
கத்திக்குடி மக்கள் முழுவதும்
திக்குத்திசை விட்டுத் திரிபடும்
சிக்கல்பட நச்சுக் கலவையை எறிந்தானே

வெட்டித்தலை கொட்டக் குருதியும்
பட்டுத்தெறி ரத்தக் கறையது
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானும்
பட்டுத்தொலை செத்துக் கிடவென
சொட்டும்மனம் இரக்கப் படவிலை
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட

பத்தும்பல கட்டுக் கதைகளை
விட்டுப்பலர் புத்திக் கழுவிட
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண
செத்தும்விழும் ரத்தப் பிணமதை
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே

பக்கம்இரு ரத்தக் கொலைவெறி
யுத்தப்பிரி யெத்தன் அரசது
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய
மத்தம்பிடி பித்தன் கொலையிடு
வித்தைதனை மெத்தப் பழகிய
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ

விட்டுத்துயில் தட்டு கதவினை
சட்டத்துறை தக்க பதிலிடும்
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை
சட்டத்தவர் இட்டுச் சிறையிட
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே

கட்டித்தடி வெள்ளை கொடியுடன்
விட்டுச்சுடும் வீரக் குழலதும்
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ

வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட
கத்திக்கிலி பற்றிக் கதறிய
மொத்தக்குரல் விட்டு தப்பென விடுமாமோ
வட்டிச்சக மொத்தத் தொகைபெற
கத்திக்குரல் விட்டுக் கதறிட
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ

சுற்றிச்சுழல் வட்டப் புவியது
சுற்றும்ஒளி உச்சிக் கதிரவன்
கற்றைஒளி புத்திப் புகழொடு தலையோனும்
ஒற்றைச்சிறு கையிற் கடைவிரல்
சற்றுத்திசை பக்கம் அசைவிட
வெற்றித்திரு மைந்தர் குமரரும் படையோடி

எட்டிக்களம் தொட்டுப் பகைவரை
முட்டிப்பெரு மின்னல் இடியெனப்
வட்டப்புயல் பட்டோர் நிலைதனை விளைத்தாரே
கட்டிப்படை சுற்றிப் பலமெடு
முத்துத்தமிழ் சொத்துக் குலமதின்
சத்துப்பெரு முற்றும் மறமெடு தமிழ்வீரன்

கத்துங்கடல் சுற்றும் பெருவெளி
மற்றும்நிலம் முற்றும் முப்படை
பெற்றுக்குல மங்கை கற்பினை அதிபேண
முத்திப்பயம் சித்தம் கொண்டுலை
பட்டுப்பல மொக்குப் பதருகள்
அச்சம்இது மிச்சம் மிலையென போர்கொண்டு

ஒற்றைக்கரம் கொண்டே உருவிய
வெட்டுக்கொலை வாளைச் செருகிட
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற
வட்டக்கதிர் தானும் மேற்கிடை மறைவானே

அச்சம்இலை சற்றுப் பொறுபொறு
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்
திட்டமிடு துட்டர் குணமுடன்
சட்டம்எமை முற்றும் புரிந்திட
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 10:18 pm

அருமையான சந்த கவிதை இதை படிக்கையில் முத்தை தரு பத்தி திரு எனப்படும் முருகன் பாடல் நினைவ்ர்க்கு வருகிறது தவறுஇருப்பின் மன்னிக்க

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 07, 2011 10:22 pm

maniajith007 wrote:அருமையான சந்த கவிதை இதை படிக்கையில் முத்தை தரு பத்தி திரு எனப்படும் முருகன் பாடல் நினைவ்ர்க்கு வருகிறது தவறுஇருப்பின் மன்னிக்க

அதேதான் அந்த சந்தத்தில்தான் எழுதினேன் வரிகளின் பிரிவு முதல் மாறிவிட்டது சீர் செய்திருக்கிறேன். இப்போது சரியாக தெரியும்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:41 pm

அருமை அருமை.......இந்த கவிதை பற்றி கருத்து கூறும் அளவு இன்னும் எனக்கு ஞானம் போதாது......
அருமை கிரிகாசன் தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) 224747944 தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 08, 2011 10:19 am

பிஜிராமன் wrote:அருமை அருமை.......இந்த கவிதை பற்றி கருத்து கூறும் அளவு இன்னும் எனக்கு ஞானம் போதாது......
அருமை கிரிகாசன் தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) 224747944 தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) 224747944


நன்றிகள் பிஜிராமன் அவர்களே! தங்கள் பாராட்டுக்கு தலைவணக்கம்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:45 am

அருமையான வரிகளில் முத்து முத்தாய் பதித்த வரிகள் தமிழுக்கு நிகர் எதுவும் இல்லை என்பதை வரிகளில் கோர்த்த விதம் அழகு ஐயா, அம்மா எப்பவும் ஸ்வாமி பாட்டாய் இதை பாடி தான் நான் கேட்டிருக்கிறேன்... இப்போது இந்த உங்க வரிகளை அந்த ராகத்தில் பாடி பார்த்தேன். அற்புதம் அதி அற்புதம்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 08, 2011 10:52 am

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகளில் முத்து முத்தாய் பதித்த வரிகள் தமிழுக்கு நிகர் எதுவும் இல்லை என்பதை வரிகளில் கோர்த்த விதம் அழகு ஐயா, அம்மா எப்பவும் ஸ்வாமி பாட்டாய் இதை பாடி தான் நான் கேட்டிருக்கிறேன்... இப்போது இந்த உங்க வரிகளை அந்த ராகத்தில் பாடி பார்த்தேன். அற்புதம் அதி அற்புதம்..... அன்பு வாழ்த்துக்கள் ஐயா


நன்றிகள் தங்களுக்கு! இதில் இப்போதுதான் ஒரு சந்தேகம் வருகிறது! நான் மரபை முற்றாக தெரிந்தவனல்ல. ஓசைக்காக சில சொற்களை பிரித்து வைத்துள்ளேன். இது சரியா என்பதை மரபிலக்கணம் தெரிந்த யாராவது வந்து கருத்து கூறிவார்களாயின் தவறென்றால் திருத்திக்கொள்ள உதவியாகவிருக்கும் உ+ ம் சட்டம்ஒரு, கொட்டும்இடி, முற்றும்அழி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 11:00 am

மரபு உங்களுக்கு முற்றும் தெரியாது எனக்கோ அப்படின்னா என்னென்னே தெரியாது... கலை வந்தால் உங்க சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 08, 2011 11:02 am

மஞ்சுபாஷிணி wrote:மரபு உங்களுக்கு முற்றும் தெரியாது எனக்கோ அப்படின்னா என்னென்னே தெரியாது... கலை வந்தால் உங்க சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன் ஐயா...

நல்லது. காத்திருக்கிறேன்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 12:28 pm

kirikasan wrote:
நன்றிகள் தங்களுக்கு! இதில் இப்போதுதான் ஒரு சந்தேகம் வருகிறது! நான் மரபை முற்றாக தெரிந்தவனல்ல. ஓசைக்காக சில சொற்களை பிரித்து வைத்துள்ளேன். இது சரியா என்பதை மரபிலக்கணம் தெரிந்த யாராவது வந்து கருத்து கூறிவார்களாயின் தவறென்றால் திருத்திக்கொள்ள உதவியாகவிருக்கும் உ+ ம் சட்டம்ஒரு, கொட்டும்இடி, முற்றும்அழி

முதற்கண் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பிடியுங்கள்..

சத்தியமாக என்னை அசத்திவிட்ட பாடல் இது என்றால் மிகையில்லை.

முத்தைத் தரு பதிகம் நான் சிறுவயது முதலாக நா குழறாமல் வாசிப்பவன். இப்போது உங்கள் பாடலை வரிவிடாமல் அந்த சந்தத்தில் பாடிப்பார்த்தேன். மிக அழகாகப் பொருந்துகிறது.

நீங்கள் எழுப்பிய ஐயத்திற்கு விடை :

குற்றம் குறை சிறிதும் இல்லை. சந்த இலக்கணம் அணி இலக்கணம் மற்றும் பாவிலககணம் காரணங்களுக்காக உயிரெழுத்துக்கள் நீட்டிப்பதும் உயிர்மெய் எழுத்துகள் பிரித்து எழுதப்படுவதும் ஏற்புடையது தான்.. கவலையுறாமல் உங்கள் சாதனைகளைத் தொடருங்கள்..

உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விடயம் ஒனறைச்சொல்லி விடுகிறேன்.

தமிழில் நிறைய அறிந்தாலும் சில கற்றுக்குட்டிகள் போல எல்லாம் தெரிந்ததாய் அகம்பாவம் காட்டுவது போலின்றி புதிதாய்க் கற்பவர் போல அனைத்தும் அறிய முயற்சிப்பது தான். இந்த பணிவுடன் கூடிய பெருக்கத்தைத் தொடருங்கள் கிரி..!

சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக