ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

+14
ranhasan
மனோஜ்
உமா
ANTHAPPAARVAI
realvampire
அப்துல்லாஹ்
உதயசுதா
கலைவேந்தன்
பிஜிராமன்
ஹாசிம்
மகா பிரபு
அன்பு தளபதி
balakarthik
கிராமத்தான்
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by கிராமத்தான் Sat May 07, 2011 9:56 am

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!



எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.



பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?
அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?

சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?
கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?
தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,


அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?
பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?


கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?


மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?


கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?


ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?


ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?


மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?


தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?


பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?


நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?


நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?


கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா


சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...



கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...


கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...


அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று கோயில், இன்று- டாஸ்மாக்….


நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...


அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்


இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...




கடவுளை மற - மனிதனை நினை
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by balakarthik Sat May 07, 2011 10:03 am

இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 10:16 am

balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவர் சொல்வதாலோ இல்லை எழுதுவதாலோ கடவுள் இல்லை என்று ஆகிவிடாது பத்தோட பதினோன்னு அத்தோட இது ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by balakarthik Sat May 07, 2011 10:24 am

maniajith007 wrote:
balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவர் சொல்வதாலோ இல்லை எழுதுவதாலோ கடவுள் இல்லை என்று ஆகிவிடாது பத்தோட பதினோன்னு அத்தோட இது ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்

உண்மைதான் மணி இது போன்ற நாத்திக வாதிகளுக்கும் , பகுத்தறிவு வாதிகளுக்கும் கூட இல்லை என்று சொல்வதற்காகவாது கடவுள் தேவைபடுகிறார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by மகா பிரபு Sat May 07, 2011 10:24 am

என்னை பொறுத்தவரை கடவுளை நம்பாமல் இருப்பது தப்பில்லை. அடுத்தவரை நம்பக்கூடாது என்று சொல்வது தான் தவறு...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 10:25 am

balakarthik wrote:

உண்மைதான் மணி இது போன்ற நாத்திக வாதிகளுக்கும் , பகுத்தறிவு வாதிகளுக்கும் கூட இல்லை என்று சொல்வதற்காகவாது கடவுள் தேவைபடுகிறார்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by மகா பிரபு Sat May 07, 2011 10:27 am

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 56667 கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 56667 கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 56667
இவர் சொல்வதாலோ இல்லை எழுதுவதாலோ கடவுள் இல்லை என்று ஆகிவிடாது பத்தோட பதினோன்னு அத்தோட இது ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்

உண்மைதான் மணி இது போன்ற நாத்திக வாதிகளுக்கும் , பகுத்தறிவு வாதிகளுக்கும் கூட இல்லை என்று சொல்வதற்காகவாது கடவுள் தேவைபடுகிறார்.
முற்றிலும் உண்மை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by ஹாசிம் Sat May 07, 2011 10:28 am

balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


நேசமுடன் ஹாசிம்
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by பிஜிராமன் Sat May 07, 2011 10:35 am

நன்றி கிராமத்தான் உங்கள் ஆதங்கத்தை பகிர்ந்தமைக்கு கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 224747944

என் கருத்தை கூற விரும்புகிறேன்........
கடவுள் ஒன்றும் சூப்பர் ஹீரோ அல்ல....ஆபத்து நேரத்தில் வந்து காப்பதற்கு.....

அவர் ஒரு புகார் பெட்டி போல...
அதாவது virtual புகார் பெட்டி....
நாம் யாரிடமும் கூற முடியாத ஒரு விசயத்தையோ.....நம் மனதில் அடித்து கொண்டிருக்கின்ற விசயத்தையோ பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பன்.......
அதாவது virtual நண்பன்

ஒவ்வொருவரும்.....மனதை சாந்தி படுத்தி கொள்ள கடவுளை ஒரு கருவியாக பயன்படுதி கொள்கின்றனர்....
பணம் அற்றவன் மனதளவில் வேண்டி சாந்தி காண்கிறான்
பணம் உள்ளவன் பணத்தை கொட்டி சாந்தி தேடவும் இவ்வாறு செய்தால் பாவத்தில் இருந்து விட பெற்று விடுவோம் என்றும்....நம்புகிறான்.......

ஒரு சிலரே......பணத்தை சில நல்ல காரியங்களில் செலவளித்து நிம்மதி காண்கின்றனர்........நல்ல காரியங்களில் சில......அனாதை விடுதி குழந்தைகளுக்கு உதவுவது....சமூக சேவையில் ஈடுபடுவது....

ஆக மொத்தம் கடவுள் என்பவர்......மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்க பட்ட ஒரு சக்தி......virtual power.....
நிச்சயம் இப்படி ஒரு சக்தி இருப்பதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் உணர நேரிடும்.....

என்னை பொறுத்தவரை.....
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..
தாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை......
மக்கள் துயரத்தையும் துக்கத்தையும் .....சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள கடவுள் என்ற virtual power ஐ தவிர வேறு யாரும் இல்லை..

மனிதன் உடைந்து உட்காரும் பொது......உற்ற துணை கடவுள்.....

இது என் சொந்த கருத்து தான்.....

நன்றி கிராமத்தான்


Last edited by பிஜிராமன் on Sat May 07, 2011 10:39 am; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by மகா பிரபு Sat May 07, 2011 10:38 am

பிஜிராமன் wrote:
அவர் ஒரு புகார் பெட்டி போல...
அதாவது virtual புகார் பெட்டி....
நாம் யாரிடமும் கூற முடியாத ஒரு விசயத்தையோ.....நம் மனதில் அடித்து கொண்டிருக்கின்ற விசயத்தையோ பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பன்.......
அதாவது virtual நண்பன்
சிறப்பான கருத்து..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum