Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பிடிப்பதை நிறுத்த
+7
prabhukdm
balakarthik
Tamilzhan
சிவா
கலைவேந்தன்
ரபீக்
தாமு
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல் ஏற்படலாம்!
First topic message reminder :
நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பத்திய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செய்கின்றன. இது சம்மந்தப்பட்வரின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்று சிங்கப்பூரைசேர்ந்த மருத்துவ வல்லுநர் அடைக்கண் கூறியுள்ளார்.
புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது என்றும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு, போதாமை, பாலியல் செயல்படாத தன்மை உள்ளிட்ட குறைபாடுகளால் அவதிப்பட்டு வருவதாக ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டி. காமராஜ் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பத்திய உறவில் ஏற்படும் அதிருப்திதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகம், வாழ்க்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான் என்றும் காமராஜ் தெரிவித்து உள்ளார்.
உலகமயமாதல், கணினிமயமாதல் ஆகியவற்றின் விளைவும், பெருகி வரும் இணையத்தள கலாச்சாரமும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து உள்ளதோடு, மக்களை அதிக அழுத்தத்தையும், பளுவையும் கொண்ட வாழ்க்கைக்கு அழைத்து செல்வதோடு மக்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கின்றது.
தற்போதைய வேலை கலாச்சாரம் பாலியல் தொடர்பான மனிதர்களின் எண்ணத்தை மாற்றுவதுடன் தரம் தாழ்ந்து செல்லவும், பாலியல் சீர்குலைவுக்கும் காரணியாக அமைந்து உள்ளது எனவும் மருத்துவர் காமராஜ் தெரிவித்து உள்ளார். துரித உணவுக் கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு தொப்பை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் உருவாகும் ஊளைச் சதையாலும் ஒருவரின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
திருமணமான தம்பதிகளில் 15 விழுக்காட்டினரே கருவளர்ச்சி இன்மை சிக்கலுக்கு உள்ளாவதாகவும், இந்த பிரச்சனைக்கு 35 விழுக்காடு பெண்களும், 30 விழுக்காடு ஆண்களும் காரணிகளாக அமைகின்றனர். சில நேரங்களில் கரு வளர்ச்சியின்மைக்கு ஆணும், பெண்ணும் காரணமாக உள்ளனர்.
இந்த வகையானவர்கள் 20 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், மீதமுள்ள 15 விழுக்காட்டினர் விவாகரத்து பெற்றதால் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
யாழ்
நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பத்திய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செய்கின்றன. இது சம்மந்தப்பட்வரின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்று சிங்கப்பூரைசேர்ந்த மருத்துவ வல்லுநர் அடைக்கண் கூறியுள்ளார்.
புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது என்றும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு, போதாமை, பாலியல் செயல்படாத தன்மை உள்ளிட்ட குறைபாடுகளால் அவதிப்பட்டு வருவதாக ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டி. காமராஜ் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பத்திய உறவில் ஏற்படும் அதிருப்திதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகம், வாழ்க்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான் என்றும் காமராஜ் தெரிவித்து உள்ளார்.
உலகமயமாதல், கணினிமயமாதல் ஆகியவற்றின் விளைவும், பெருகி வரும் இணையத்தள கலாச்சாரமும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து உள்ளதோடு, மக்களை அதிக அழுத்தத்தையும், பளுவையும் கொண்ட வாழ்க்கைக்கு அழைத்து செல்வதோடு மக்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கின்றது.
தற்போதைய வேலை கலாச்சாரம் பாலியல் தொடர்பான மனிதர்களின் எண்ணத்தை மாற்றுவதுடன் தரம் தாழ்ந்து செல்லவும், பாலியல் சீர்குலைவுக்கும் காரணியாக அமைந்து உள்ளது எனவும் மருத்துவர் காமராஜ் தெரிவித்து உள்ளார். துரித உணவுக் கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு தொப்பை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் உருவாகும் ஊளைச் சதையாலும் ஒருவரின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
திருமணமான தம்பதிகளில் 15 விழுக்காட்டினரே கருவளர்ச்சி இன்மை சிக்கலுக்கு உள்ளாவதாகவும், இந்த பிரச்சனைக்கு 35 விழுக்காடு பெண்களும், 30 விழுக்காடு ஆண்களும் காரணிகளாக அமைகின்றனர். சில நேரங்களில் கரு வளர்ச்சியின்மைக்கு ஆணும், பெண்ணும் காரணமாக உள்ளனர்.
இந்த வகையானவர்கள் 20 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், மீதமுள்ள 15 விழுக்காட்டினர் விவாகரத்து பெற்றதால் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
யாழ்
Re: புகை பிடிப்பதை நிறுத்த
சிவா wrote:Tamilzhan wrote:சிவா wrote:பயனுள்ள தகவல்! இனிமேலாவது அனைவரும் திருந்தட்டும்!
ஆமாம் அனைவரும் திருந்தட்டும்...!
அதுக்கு ஏன் சார் என் தலையைத் தட்டுறீங்க...!!!
விளையாட்டுபிள்ளை !! ,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
prabhukdm- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
Re: புகை பிடிப்பதை நிறுத்த
நிறுத்தாதீர்கள், ஏன் என்றால் புகை பிடிப்பவன் விட்டில் களவு போகாது? புகை பிடிப்பவனை நாய் கடிக்காது? புகை பிடிப்பவனுக்கு முதுமையே வராது?
என் தெரியுமா?
புகை பிடிப்பதால் இருமல் வரும் நடுசாமம் வரையில் இருமிக் கொண்டே இருந்தால் திருடன் வருவானா? களவுதான் போகுமா?
புகை பிடித்து நாளடைவில் கை, கால் என்பன நடுக்கம் எடுப்பதனால் உடம்பை சமநிலையில் வைத்துக்கொள்ள கையில் தடி ஒன்றை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படி கையில் தடி இருந்தால் நாய் வருமா?
புகை புகை, புகை பிடித்து வெகு விரைவிலேயே (இள வயதிலேயே) இறந்து விடுவதனால் முதுமை வரவே வராது?
எனவேதான் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டாம்?
என் தெரியுமா?
புகை பிடிப்பதால் இருமல் வரும் நடுசாமம் வரையில் இருமிக் கொண்டே இருந்தால் திருடன் வருவானா? களவுதான் போகுமா?
புகை பிடித்து நாளடைவில் கை, கால் என்பன நடுக்கம் எடுப்பதனால் உடம்பை சமநிலையில் வைத்துக்கொள்ள கையில் தடி ஒன்றை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படி கையில் தடி இருந்தால் நாய் வருமா?
புகை புகை, புகை பிடித்து வெகு விரைவிலேயே (இள வயதிலேயே) இறந்து விடுவதனால் முதுமை வரவே வராது?
எனவேதான் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டாம்?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: புகை பிடிப்பதை நிறுத்த
றினா அவர்களுக்கு வணக்கம் புகை பிடிப்பதால் ஏற்படும் சிறமங்களை நான் அறிந்து சிறமப்பட்டு அதிலிருந்து விடுபட்டேன் என்னை போல் மற்றவர்கள் சிரமப்படக்கூடாது என்றே இதைபதிந்தேன்.எனது வாழ்க்கை டாக்சி டிரைவராக ஆரம்பித்தது அப்போது இரவில் தூக்கம் கெடாமல் இருக்க ஆரம்பித்தது இந்த பழக்கம் காலப் போக்கில் இதில் இருந்து விடுபட நான் பட்ட சிறமங்கள் கொஞ்சம் அல்ல எனவேதான் இந்தபதிவின் மூலம் மற்றவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க நமது ஈகரை நன்பர்களின் மறு பதிப்பில் (விவாதத்தில்) ஒரு 10 பேராவது இப்பழக்கத்தை விட்டால் எனக்கு மிக்க சந்தோசமே
என்றும் நன்பர்களுடன்
பிரபு
என்றும் நன்பர்களுடன்
பிரபு
பிரபு
prabhukdm- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
Re: புகை பிடிப்பதை நிறுத்த
றினா wrote:நிறுத்தாதீர்கள், ஏன் என்றால் புகை பிடிப்பவன் விட்டில் களவு போகாது? புகை பிடிப்பவனை நாய் கடிக்காது? புகை பிடிப்பவனுக்கு முதுமையே வராது?
என் தெரியுமா?
புகை பிடிப்பதால் இருமல் வரும் நடுசாமம் வரையில் இருமிக் கொண்டே இருந்தால் திருடன் வருவானா? களவுதான் போகுமா?
புகை பிடித்து நாளடைவில் கை, கால் என்பன நடுக்கம் எடுப்பதனால் உடம்பை சமநிலையில் வைத்துக்கொள்ள கையில் தடி ஒன்றை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படி கையில் தடி இருந்தால் நாய் வருமா?
புகை புகை, புகை பிடித்து வெகு விரைவிலேயே (இள வயதிலேயே) இறந்து விடுவதனால் முதுமை வரவே வராது?
எனவேதான் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டாம்?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: புகை பிடிப்பதை நிறுத்த
புகைப் பழக்கத்தை நிறுத்த, முதலில் புகைப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பயமே புகைக்கும் பழக்கத்தை விட்டொழிக்க உறுதுணையாக இருக்கும்.
புகைப்பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து, எப்பொழுதும் ஒதுங்கி இருப்பது நல்லது.
தனிமையில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கவும். இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பதை நிச்சயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் அதிக நேரத்தைச் செலவழியுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதென்பதெல்லாம் பொய்.. அவ்வாறு முடியாது! வேண்டாம் என் நினைத்த மறுகணம் தூக்கியெறிந்து விடுங்கள்!
புகைப்பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து, எப்பொழுதும் ஒதுங்கி இருப்பது நல்லது.
தனிமையில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கவும். இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பதை நிச்சயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் அதிக நேரத்தைச் செலவழியுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதென்பதெல்லாம் பொய்.. அவ்வாறு முடியாது! வேண்டாம் என் நினைத்த மறுகணம் தூக்கியெறிந்து விடுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புகை பிடிப்பதை நிறுத்த
மிக நல்ல ஆலோசணைகள் சிவா... கண்டிப்பாக சிலருக்கு பயன் படும்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: புகை பிடிப்பதை நிறுத்த
நான் உங்களை புண் படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை, மாறாக இதன் விளைவை நகைச்சுவையாக தெரிவித்தேன். இந்தக் கருத்தை வைத்தாவது திருந்துவார்கள் என்றுதான்.
என் பதிவு உங்களைப் புண் படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்.
நன்றி
என் பதிவு உங்களைப் புண் படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்.
நன்றி
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க!
வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம்
என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக்
கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள்
உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.
முதலில் சில புள்ளிவிவரங்கள்.
உயிர்க்கொல்லி
நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று புகையிலை
பயன்பாடு. புகையிலையை சிகரெட், ஹூக்கா, பொடி, அப்படியே மெல்லுவது என பல
வடிவங்களில் மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இப்படி புகையிலையின் பயன்பாடு
அதிகரித்தபடியே இருப்பது உலகம்
முழுவதும் இருக்கும் சுகாதார இயக்கங்களுக்கு கவலையளித்திருக்கிறது.
புகையிலையைப் பயன்படுத்துவதால் உடலின் பல்வேறு பகுதிகள்
பாதிக்கப்படுகின்றன. உடலின் ஒட்டுமொத்த நலனே பாதிக்கப்படுகிறது. இளைஞர்,
வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரிடமும் புகைபிடிக்கும்
பழக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
புற்றுநோய், வாய் புற்றுநோய், வயிறு, சிறுநீர் பை, சிறுநீரகம், குடல்
பகுதிகளில் புற்றுநோய்,
ஆண்மைக் குறைவு, இதயநோய்கள், பக்கவாதம் போன்றவை புகையிலைப் பழக்கத்தால்
ஏற்படும்.
புகையிலையை ஒரு சில தடவைகள் பயன்படுத்திவிட்டு விட்டுவிடலாம் என்று
இருக்க முடியாது. புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் மிக எளிதில் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.
புகையிலையில் இருக்கும் நிகோடின் மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்தத்
தூண்டும். நிகோடின் மூளையில்
ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். உடலில்
நிகோடின் குறையக் குறைய, அந்த உற்சாகமும் குறையும். இதனால், நிகோடின்
குறையும்போது மீண்டும் புகைக்கத் தோன்றும். இது முதலில் உணர்வுரீதியான
வேண்டுதலாகவே இருக்கும். ஆனால், அடுத்தகட்டத்தில், இது உடல் ரீதியான
வேண்டுதலாக மாற ஆரம்பிக்கும். சிகரெட் புகைக்காவிட்டால் உடலே சோர்வானது
போலத் தோன்றும்.
பிறகு அந்த நபர் வாழ் நாள் முழுவதும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.
சிகரெட்டில் இருக்கும் நிகோடின் மட்டும்தான் உடலுக்குத் தீமை
விளைவிக்கும் ரசாயனம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,
நிகோடின் தவிர சிகரெட் புகையில் தாரும் இருக்கிறது. இந்தத் தார் சுமார்
4,000 ரசாயனங்களைக் கொண்டது. சயனைடு, பென்சீன், ஃபார்மால்டிஹைடு, அசிட்டிலின், அம்மோனியா போன்ற இந்த ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு
விளைவிப்பவை. நுரையீரல், இதயம், எலும்பு, தோல் ஆகியவற்றில் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.
புகைபிடிக்கும்
பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. தொடர்ந்து
சிகரெட் குடிப்பவர் சில மணி நேரம் சிகரெட் குடிக்காமல் இருந்தாலே, தலைவலி,
எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதயத் துடிப்பு குறைவது,
இரத்த அழுத்தம் குறைவது
போன்றவையும் ஏற்படும். மிகுந்த மன உறுதியும் தகுந்த சிகிச்சை முறைகளுமே
சிகரெட்டிலிருந்து விடுதலை பெற உதவும்..
உடல்நல காரணங்கள், வாழ்க்கைச் சூழல் மாற்றம், குழந்தை, சிகரெட்டின் விலை
உயர்வு, சிகரெட் பழக்கத்தால் குடும்பத்தில் யாராவது இறந்துபோவது போன்ற
காரணங்களால் பலர் சிகரெட் குடிப்பதை விடுகிறார். மன உறுதியின்மையால்தான்
பலரால் அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவர முடிவதில்லை.
புகையிலையும் ஒரு போதைப் பொருள் என்றாலும் பிற போதைப் பொருள்களைப் போல சப்ளையே இல்லாமல் தடுப்பது என்பது இயலாத காரியம். இதனால், சுகாதார இயக்கங்களுக்கு இருக்கும் ஒரே வழி, புகையிலையால் ஏற்படும் தீமையைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு
ஏற்படுத்துவதுதான்.
இதனால், உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
புகையிலைப் பொருள்களின் மேலட்டையின் மீது படங்களுடன் கூடிய எச்சரிக்கையை
வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனால், புகையிலைப்
பழக்கத்தின் தீமை, படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் சென்று சேரும்
என்று நம்புகிறது அந்த அமைப்பு. சிகரெட்டின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து
வரும்
நிலையில் இம்மாதிரி நடைமுறைகள் புகையிலையின் தீமையைக் குறைக்க உதவும் என
உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவென்று உலக சுகாதார நிறுவனம்
விதித்திருக்கும் நடைமுறைகளை பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டு
நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. இந்தியாவிலும் மே 30க்குப்
பிறகு தயாரிக்கப்படும் சிகரெட் பாக்கெட்களிலும் பிற
புகையிலைப் பொருகளின் வெளி அட்டைகளிலும் அதன் தீமையை குறிக்கும் விதமான படங்களைப் பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
புகைப்பிடிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் விலை வெறும் சிகரெட்டின் விலை
மட்டுமல்ல. அதனால், ஏற்படும் உடல்நலக் கேடுகளைச் சரி செய்ய ஆகும்
விலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பதை விட்ட ஒரு
மாத்திலேயே உங்கள் உடல் நலத்திலும் பர்சிலும் மாற்றம் தெரியும்.
நன்றி: http://www.hi2web.com/forum
என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக்
கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள்
உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.
முதலில் சில புள்ளிவிவரங்கள்.
- உலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது.
- 2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 கோடி சிகரெட்கள் வாங்கப்படுகின்றன.
- பதின் வயதில் (teenage) இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் 13 வயதிலேயே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
- ஒவ்வொரு 8 விநாடிக்கும் ஒரு முறை புகையிலை பயன்படுத்தியதன் காரணமாக ஒருவர் இறக்கிறார். அதாவது வருடத்திற்கு 50 லட்சம் பேர்.
- தமிழ்நாட்டில் புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களில் 58 சதவீதம் பேருக்கு இதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரியவில்லை.
உயிர்க்கொல்லி
நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று புகையிலை
பயன்பாடு. புகையிலையை சிகரெட், ஹூக்கா, பொடி, அப்படியே மெல்லுவது என பல
வடிவங்களில் மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இப்படி புகையிலையின் பயன்பாடு
அதிகரித்தபடியே இருப்பது உலகம்
முழுவதும் இருக்கும் சுகாதார இயக்கங்களுக்கு கவலையளித்திருக்கிறது.
புகையிலையைப் பயன்படுத்துவதால் உடலின் பல்வேறு பகுதிகள்
பாதிக்கப்படுகின்றன. உடலின் ஒட்டுமொத்த நலனே பாதிக்கப்படுகிறது. இளைஞர்,
வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரிடமும் புகைபிடிக்கும்
பழக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
புற்றுநோய், வாய் புற்றுநோய், வயிறு, சிறுநீர் பை, சிறுநீரகம், குடல்
பகுதிகளில் புற்றுநோய்,
ஆண்மைக் குறைவு, இதயநோய்கள், பக்கவாதம் போன்றவை புகையிலைப் பழக்கத்தால்
ஏற்படும்.
புகையிலையை ஒரு சில தடவைகள் பயன்படுத்திவிட்டு விட்டுவிடலாம் என்று
இருக்க முடியாது. புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் மிக எளிதில் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.
புகையிலையில் இருக்கும் நிகோடின் மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்தத்
தூண்டும். நிகோடின் மூளையில்
ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். உடலில்
நிகோடின் குறையக் குறைய, அந்த உற்சாகமும் குறையும். இதனால், நிகோடின்
குறையும்போது மீண்டும் புகைக்கத் தோன்றும். இது முதலில் உணர்வுரீதியான
வேண்டுதலாகவே இருக்கும். ஆனால், அடுத்தகட்டத்தில், இது உடல் ரீதியான
வேண்டுதலாக மாற ஆரம்பிக்கும். சிகரெட் புகைக்காவிட்டால் உடலே சோர்வானது
போலத் தோன்றும்.
பிறகு அந்த நபர் வாழ் நாள் முழுவதும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.
சிகரெட்டில் இருக்கும் நிகோடின் மட்டும்தான் உடலுக்குத் தீமை
விளைவிக்கும் ரசாயனம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,
நிகோடின் தவிர சிகரெட் புகையில் தாரும் இருக்கிறது. இந்தத் தார் சுமார்
4,000 ரசாயனங்களைக் கொண்டது. சயனைடு, பென்சீன், ஃபார்மால்டிஹைடு, அசிட்டிலின், அம்மோனியா போன்ற இந்த ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு
விளைவிப்பவை. நுரையீரல், இதயம், எலும்பு, தோல் ஆகியவற்றில் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.
புகைபிடிக்கும்
பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. தொடர்ந்து
சிகரெட் குடிப்பவர் சில மணி நேரம் சிகரெட் குடிக்காமல் இருந்தாலே, தலைவலி,
எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதயத் துடிப்பு குறைவது,
இரத்த அழுத்தம் குறைவது
போன்றவையும் ஏற்படும். மிகுந்த மன உறுதியும் தகுந்த சிகிச்சை முறைகளுமே
சிகரெட்டிலிருந்து விடுதலை பெற உதவும்..
உடல்நல காரணங்கள், வாழ்க்கைச் சூழல் மாற்றம், குழந்தை, சிகரெட்டின் விலை
உயர்வு, சிகரெட் பழக்கத்தால் குடும்பத்தில் யாராவது இறந்துபோவது போன்ற
காரணங்களால் பலர் சிகரெட் குடிப்பதை விடுகிறார். மன உறுதியின்மையால்தான்
பலரால் அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவர முடிவதில்லை.
புகையிலையும் ஒரு போதைப் பொருள் என்றாலும் பிற போதைப் பொருள்களைப் போல சப்ளையே இல்லாமல் தடுப்பது என்பது இயலாத காரியம். இதனால், சுகாதார இயக்கங்களுக்கு இருக்கும் ஒரே வழி, புகையிலையால் ஏற்படும் தீமையைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு
ஏற்படுத்துவதுதான்.
இதனால், உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
புகையிலைப் பொருள்களின் மேலட்டையின் மீது படங்களுடன் கூடிய எச்சரிக்கையை
வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனால், புகையிலைப்
பழக்கத்தின் தீமை, படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் சென்று சேரும்
என்று நம்புகிறது அந்த அமைப்பு. சிகரெட்டின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து
வரும்
நிலையில் இம்மாதிரி நடைமுறைகள் புகையிலையின் தீமையைக் குறைக்க உதவும் என
உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவென்று உலக சுகாதார நிறுவனம்
விதித்திருக்கும் நடைமுறைகளை பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டு
நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. இந்தியாவிலும் மே 30க்குப்
பிறகு தயாரிக்கப்படும் சிகரெட் பாக்கெட்களிலும் பிற
புகையிலைப் பொருகளின் வெளி அட்டைகளிலும் அதன் தீமையை குறிக்கும் விதமான படங்களைப் பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
புகைப்பிடிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் விலை வெறும் சிகரெட்டின் விலை
மட்டுமல்ல. அதனால், ஏற்படும் உடல்நலக் கேடுகளைச் சரி செய்ய ஆகும்
விலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பதை விட்ட ஒரு
மாத்திலேயே உங்கள் உடல் நலத்திலும் பர்சிலும் மாற்றம் தெரியும்.
நன்றி: http://www.hi2web.com/forum
Guest- Guest
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
» குடியை நிறுத்த சில தீர்வு
» புகை பிடிப்பதை நிறுத்தினால்..!
» சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள்
» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
» குடியை நிறுத்த சில தீர்வு
» புகை பிடிப்பதை நிறுத்தினால்..!
» சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள்
» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|