ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

5 posters

Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

Post by பது Wed May 04, 2011 3:51 pm

அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என அந்த நாடு கூறிவரும் நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட்டுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க தூதுவர் மூன்று நாடுகளுக்கும் பங்குள்ளதாக கூறியுள்ளதையடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெசாஹுர், கராச்சி துணை தூதரங்களை அமெரிக்கா காலவரையறையின்றி மூடியுள்ளது. இதனையடுத்து விசா உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. எனினும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையை தொடர்ந்து அடுத்த மாதம் இஸ்லாமாபாத்துக்கு பயணம் செய்யவிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணம் ரத்துச் செய்யப்படும் என கூறப்படுகின்றது. அல் குவைதா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானிடமிருந்து எந்தவித உதவியும் பெறாமல் அங்கு தஞ்சமடைந்திருக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என நிரூபிக்க முடியுமா என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உலகமே தேடிவந்த ஒருவர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருந்தமை அதிர்ச்சியளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அல் குவைதாவின் 20 சிரேஷ்ட தலைவர்களில் குறைந்தது ஆறு பேராவது பாகிஸ்தானில் சுற்றித்திரிகின்றனர். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாபாத்துக்கு அருகில் எவ்வாறு தங்கியிருந்தார் என அந்நாட்டிடம் அமெரிக்க சட்ட நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது பற்றி அந்நாட்டுக்கு தெரியுமா? தெரியாதா என்று ஊகிக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த கேள்வியை கேட்க விரும்புகின்றோம். இந்த உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உண்டு. பாகிஸ்தானுக்கு என்ன தெரியும் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தீவிரவாத ஒழிப்புக்குழுவின் ஆலோசகர் ஜோன் பிரர்னன் ஒசாமாவுக்கு எந்தவித உ தவியும் அளிக்கவில்லை என பாகிஸ்தான் கூறியிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார் என்பதனை சி.ஐ.ஏ. விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அபோதாபாத்தில் வசித்து வந்த ஒசாமா பின்லேடன் பெற்ற உதவிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ தினம் இடம்பெற்ற தாக்குதலில் ஒசாமா பின்லே டனை கைது செய்ய முடியாமல் போனமையினால்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்த அவரது மனைவி மனித கேடயமாக செயற்பட்டு அவர்களை பாதுகாக்க முனைந்ததாகவும் இறுதியில் வேறு மார்க்கமின்றி அவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்ட பின்னரே பின்லேடனின் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன் அல் குவைதா இயக்கத்தை முற்றிலுமாக இல்லாதொழிக்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பின்லேடனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அல் குவைதாவின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல் சௌஹாரி துடிப்பான ஓர் தலைவர் இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை ஒசாமா மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து விசேட செய்மதி மூலம் நேரடியாக பார்த்துள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா "ஹிலாரி கிளின்டன்' சி.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் என ஏழு பேர் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் அது முடியும்வரை அதி நவீன செயற்கை கோள் மூலம் இது ஒளிபரப்பப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த சமயம் ஒபாமா உட்பட அனைவரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டதாகவும் ஒரு சமயம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி இருக்கையின் நுனியில் இருந்தவாறு நகத்தை கடிப்பது போன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் நடந்த 40 நிமிட நேரமும் மிகவும் உன்னிப்பாக ஒபாமா நேரடியாக நிலைமையை அவதானித்ததாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் எவருடனும் பேசவில்லை எனவும் அத்துடன் அவர் அங்கிருந்தவாறு எந்தவித உத்தரவும் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் அனைவருக்கும் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்று சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி ராம நெட்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty பின்லேடனுக்கு அடைக்கலம்: அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

Post by தாமு Fri May 06, 2011 3:52 pm

புதுடெல்லி, மே. 6-


பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுக்கொண்டது. பாகிஸ்தானிடம் சொல்லாமலே இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்கா ராணுவம் மிக துணிச்சலாக மேற்கொண்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அரசுக்கு உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மரியாதை குறைந்துள்ளது.

அமெரிக்க கமாண்டோ வீரர்கள் ஹெலிகாப்டர்களில் ஊடுருவி வந்து தாக்கி விட்டு செல்வது கூட தெரியாமல் பாகிஸ்தான் ராணுவம் இருந்தது. கடும் ஏளனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பின்லேடனுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. உதவி செய்திருக்கலாம் என்று வெளியாகும் தகவல்கள் அந்த நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா கூறி இருப்பது பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் கூனிக் குறுகச் செய்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ் புல் முஜாகிதீன் தீவிரவாதிகள், பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் அரசே காரணம் என்றும், எனவே பழிக்கு பழி வாங்க தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இது பாகிஸ்தான் தலைவர்களை மிரளச் செய்துள்ளது.

சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதையை துடைப்பது எப்படி என்று பாகிஸ்தான் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவிடம் அமைதியாக பேசிக் கொண்டே அவர்கள் மாற்றுத் திட்டத்தை தயாரித்து வருகிறார்கள். அவர்களது கோபப்பார்வை முழுக்க-முழுக்க இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா மீது ராணுவ ரீதியாக அல்லது தீவிரவாதிகளை தூண்டி விட்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. வெறிகொண்டு துடிக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் கவனம் திசை திரும்பும் என்று ஐ.எஸ்.ஐ. நினைப்பதாக தெரிகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மற்றும் முக்கிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ. தீவிரமாகி உள்ளது. ஏற்கனவே இந்திய எல்லை நெடுகிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நூற்றுக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அவர்களை இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் படி ஐ.எஸ்.ஐ. உற்சாகப்படுத்தி விடுவது தெரிய வந்துள்ளது.

ஒரு வேளை தீவிரவாதிகள் முயற்சி வெற்றி பெறா விட்டால் பாகிஸ்தான் ராணுவத்தை எல்லையில் நேரடி தாக்குதல் நடத்த வைப்பது என்றும் ஐ.எஸ்.ஐ. வியூகம் வகுத்துள்ளது. அமெரிக்கா ரகசியமாக சென்று தாக்குதல் நடத்தியது போல எங்களாலும் தாக்குதல் நடத்த முடியும் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியதால் பாகிஸ்தானியர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் கூட இனி பாகிஸ்தானுக்குள் நுழைய முடியாது. எங்கள் ராணுவத்தை சாதாரணமாக நினைக்காதீர்கள் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அகமது காஜா பாஷா கூறியுள்ளார். பாகிஸ்தான் அரசு மற்றும் ஐ.எஸ்.ஐ. ரகசிய திட்டங்களை அறிந்து கொள்ள இந்திய ராணுவம் எல்லையில் பல் வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை ஓசையின்றி செய்துள்ளது.


மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty Re: அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

Post by தாமு Fri May 06, 2011 3:54 pm

நிர்வாணமாக இருந்திருந்தால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க மாட்டார்; லண்டன் பத்திரிகை தகவல்


லண்டன்,மே.6-


அல்-கொய்தா தலைவர் பின்லேடன் கடந்த திங்கட்கிழமை, அமெரிக்க கமாண்டோ படை வீரர்களால் பாகிஸ்தானில் ஒரு பங்களாவில் பதுங்கி இருந்த போது சுட்டுக் கொல்லப் பட்டார்.

அப்போது அவர் ஆடை எதுவும் அணியாமல் இருந்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்டிருக்க மாட்டார். அவர் ஆடை அணிந்திருந்தால் தற்கொலை செய்து கொள்வதற்கான சயனைட் குப்பியை வைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக கமாண்டோ படை வீரர்கள் நினைத்தனர்.

இதனால் பின்லேடன் தற்கொலை செய்து கொள்வார் என்று நினைத்த அமெரிக்க வீரர்கள், அவரை சுட்டுக் கொன்றதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.



மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty Re: அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

Post by கலைவேந்தன் Fri May 06, 2011 8:31 pm

எத்தனை பட்டாலும் தன் நிலையை மாற்றிக்கொள்ள நினைக்காத பாகிஸ்தான் உலக வரலாற்றின் வரைபடத்திலிருந்து காணாமல் போகக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty ஒசாமாவை காட்டிக் கொடுத்தாரா ஷவாஹிரி? _

Post by பது Fri May 06, 2011 10:48 pm

அல் கொய்தா அமைப்பை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, பின்லேடனின் பாதுகாப்பை சீர்குலைத்து அவருக்கு துரோகம் இழைத்து கடைசியில் அவரது மரணத்திற்கும் காரணமாகியது அல் ஷவாஹிரி என்று சவூதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அல் கொய்தா இயக்கம் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்தது. இந்தநிலையில் 2004ம் ஆண்டு பின்லேடனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இயக்கத்தின் நடவடிக்கைகளை அல் ஷவாஹிரியே கவனித்து வந்தார்.

அப்போது அவர் அல் கொய்தாவை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டார்.

இதனால் அவருக்கும், பின்லேடனுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. இந்த நிலையில், ஷவாஹிரி தலைமையில் எகிப்தியர்களைக் கொண்ட அல் கொய்தாவினர் தனித்து செயல்பட ஆரம்பித்தனர்.

மேலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் பத்திரமாக பதுங்கியிருந்த பின்லேடனுக்குத் தவறான தகவல்களைக் கூறி அங்கிருந்து அவரை வெளியேற வைத்து அபோட்டாபாட்டில் குடியேறச் செய்தது ஷவாஹிரி ஆகும். இதனால்தான் பின்லேடனின் பாதுகாப்புக்கு பெரும் சீர்குலைவு ஏற்பட்டது.

மேலும் பின்லேடனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டார் எகிப்தைச் சேர்ந்தவரான சைப் அல் அப்தல். இவர் கடந்த ஆண்டுதான் ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பியிருந்தார். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனின் மகன் மற்றும் குடும்பத்தினரை இவர்தான் ஈரானுக்கு அழைத்துச் சென்றார்.

பின்லேடனுக்கான தகவல் அளிப்பவராக செயல்பட்டு வந்த நபர் மூலம்தான் அமெரிக்கப் படையினர் பின்லேடனை நெருங்க முடிந்தது. இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தன்னை அமெரிக்கர்கள் கண்காணித்து வருவது இவருக்குத் தெரியும். இருந்தும் வேண்டும் என்றே அதை கண்டு கொள்ளாதது போல நடந்து கொண்டு மறைமுகமாக, பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கர்களுக்கு உறுதிப்படுத்தி விட்டார் இவர் என்று அந்த செய்தி கூறுகிறது.
நன்றி கேசரி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty Re: அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

Post by கே. பாலா Fri May 06, 2011 10:55 pm

வன்முறை கூடாது
காட்டிக் கொடுக்க கூடாது
தீவிரவாதம் கூடாது

இது போன்ற நிலை இனிமேல் ஏற்பட கூடாது கூடாது கூடாது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty Re: அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

Post by மாணிக்கம் நடேசன் Sat May 07, 2011 8:54 am

முதல்ல அந்த இத்தாலிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பிச்சக்காரி சோனியாவ குறி வச்சி தாக்கனும். அவ தான் தமிழனின் முதல் எதிரி. அப்பத்தான் தமிழ் ஈழம் பிறக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம் Empty Re: அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum