ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அட்சய திரிதியை ஸ்பெஷல்

Post by krishnaamma Fri May 06, 2011 1:28 pm

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Large236454

வாழப்பிறந்தவனுக்கு வடக்கு: செல்வம், பொன், பொருள், வியாபாரம்,
தொழில் அபிவிருத்தி ஆகியவற்றை அருள் பவர் லட்சுமி குபேரர். "குபேரன்'
என்றால் "செல்வத்தைப் பெருக்குபவன்' . இலங்கையை ஆண்ட ராவணனின் தம்பி
குபேரன். இவர்களின் தந்தை விச்ராவசு. குபேரன் மிகச் சிறந்த சிவபக்தன்.
சிவபெருமானைத் தியானித்து பலகாலம் தவம் செய்து வந்தான். சிவபெருமான் அவனை
வடதிசைக்கு அதிபதியாக நியமித்து ஆளச் செய்தார். அன்று முதல் வடதிசைக்கு
ஏற்றம் உண்டானது. "வாழப் பிறந்தவனுக்கு வடக்கு' என்ற சொல்வழக்கு உண்டானது
இதனால் தான்.நவக்கிரகங்களில் பொன்மனம் படைத்தவர் குரு. இவருக்குரிய திசை
வடக்கு. குருவின் பார்வை பட்டால் கோடி நன்மை என்று குறிப்பிடுவர்.
குபேரனுக்குரிய விமானம் குபேரவிமானம். இவ்விமானம் எங்கு பறந்து சென்றாலும்
பொன்,முத்து, நவமணிகளைச் சிந்திக் கொண்டே செல்லும். அந்த விமானத்தை
குபேரனிடம் இருந்து ராவணன் பெற்றுக் கொண்டதாக ராமாயணம் கூறுகிறது.
குபேரன் சிவந்தநிறமும், குள்ளமான உருவமும், புஷ்டியான செல்வச்செழிப்பும்
கொண்டவராக இருக்கிறார். குபேர பட்டினத்திற்கு அழகாபுரி என்று பெயர்.
அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மீது மீனாசனத்தில் மெத்தையின் மீது குபேரன்
அமர்ந்திருப்பார். முத்துக்குடை அவர் மீது சுழன்று கொண்டிருக்கும்.
திருப்பதி வெங்கடாஜலபதி- பத்மாவதி திருமணத்திற்குப் பணம் தேவைப்பட்டது.
பெருமாள் குபேரனை அழைத்து உதவும்படிவேண்டிக் கொண்டார். ""என்னிடம் உள்ள
செல்வத்திற்கு எல்லாம் அதிபதி திருமகளே. அவளோ உம் மார்பில்
குடியிருக்கிறாள். அதனால், என்னிடம் செல்வம் கேட்டுப் பெற வேண்டியதில்லை,''
என்று லட்சுமி குபேரர் மறுத்துவிட்டார்.
திருமால் கலியுக தர்மத்தை தான் கடைபிடித்துத் தான் ஆகவேண்டும். அதனால்,
114 லட்சம் பொற்காசுகளைக் கடனாகத் தரும்படி வேண்டிக் கொண்டார். அதற்கு
ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்துவதாகவும், கலியுகத்தின் முடிவில் அசலை
மீண்டும் லட்சுமி குபேரருக்கு தந்துவிடுவதாகவும் சொல்லி கடன்பத்திரத்தில்
கையெழுத்து இட்டார். அந்தப் பத்திரத்தில் பிரம்மாவும், சிவ பெருமானும்
சாட்சி கையொப்பம் இட்டனர். வெங்கடேசப்பெருமாள் வட்டிக் கட்டுவதற்காக நாம்
உண்டியலில் பணம் போடுகிறோம். அதற்கு ஈடாக பலமடங்கு அருளை நமக்குத் திருப்பி
அருள்கிறார். அட்சய திரிதியை அன்று செல்வ வளம் தரும் லட்சுமி குபேரரை
வழிபட்டால் வீட்டில் செல்வத்திருமகளின் அருள் பெருகும்.
செல்வம் பெருக்கும் லட்சுமி ஸ்தோத்திரம்
செல்வ வாழ்வருளும் திருமகள் லட்சுமி இல்லம் தேடி வரும் நல்ல நாள்
அட்சயதிரிதியை. இந்நாளில் அவள் திருவடிகளைப் போற்றி வழிபடும்
ஸ்தோத்திரத்தைப் படித்து செல்வவளம் பெறுவோம்.
* சுவர்ணமயமானவளே! பொன், நவமணி ஆபரணங்களைச் சூடியிருப்பவளே!
மகிழ்ச்சியைத் தந்தருள்பவளே! எல்லோராலும் விரும்பப்படுபவளே! பாவத்தைப்
போக்கி நல்லருள் செய்பவளே! லட்சுமி தாயே! உன் அருளைப் பொழிவாயாக.
* பொன், பொருளைத் தருபவளே! பசுவின் உடம்பில் குடியிருப்பவளே!
வாகன சுகத்தைக் கொடுப்பவளே! வள்ளல் போல் அள்ளித் தருபவளே! என்றும் என்
இல்லத்தில் நீங்காது அருளாட்சி செய்ய வந்தருள வேண்டும்.
* குதிரை, யானை, தேர் என அனைத்து வாகனத்திலும் பவனி வருபவளே!
அனைவருக்கும் புகலிடமாய்த் திகழ்பவளே! மந்தகாசப் புன்னகையுடன் பொன்மயமாய்
ஜொலிப்பவளே! யானையால் பூஜிக்கப்படுபவளே! திருமகளே! உன் கடாட்சப்பார்வையை
என் மீது காட்டுவாயாக.
* பக்தர்களை மகிழ்விப்பவளே! இருக்குமிடத்தை ஒளியால் பிரகாசிக்கச்
செய்பவளே! தாமரைப் பூவில் வாழ்பவளே! ஸ்ரீ என்னும் திருநாமம் பெற்றவளே!
அஷ்டதிக்கும் ஒளிவீசும் மலர்ந்த முகத்தைக் கொண்டவளே! உன் அருளை என்மீது
பொழிவாயாக.
* தாமரை மலர் போன்ற இதயம் கொண்டவளே! அமிர்தத்தால் திருமஞ்சனம்
செய்யப்படுபவளே! மகாவிஷ்ணுவின் மனதில் இடம்பிடித்தவளே! மலர் போன்ற
மென்மையான திருவடிகளை எம் தலை மீது எப்போதும் வைத்து அருள்புரிவாயாக.
அட்சய திரிதியை அன்று நடவேண்டிய மரம்
நெல்லிமரத்தில் திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம். விஷ்ணுவின் அம்சமாக
நெல்லிமரம் திகழ்கிறது. நெல்லிக்கனிக்கு "ஹரிபலம்' என்ற பெயரும் உண்டு.
லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகத் திகழ்வது நெல்லி. ஆதிசங்கரர்
சந்நியாசியாக பிச்சை தேடிக் கிளம்பினார். ஒருவீட்டில் நின்று"பவதி
பிக்ஷõம்தேஹி' என்று மூன்றுமுறை சப்தமிட்டார். அவ்வீட்டுப் பெண்ணான
தர்மசீலையிடம் தர்மம் கொடுப்பதற்கு உணவில்லை. வீட்டில் இருந்த ஒரு
நெல்லிக்கனியை அவருடைய பிக்ஷõபாத்திரத்தில் இட்டாள். வறுமையிலும் தானம்
செய்த அவள் மீது சங்கரருக்கு இரக்கம் உண்டானது. அவ்வீட்டில்
லட்சுமிகடாட்சம் பெருக "கனகதாராஸ்தவம்' என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
திருமகளின் அருளால் பொன்மழை பொழிந்தது. வீட்டில் நெல்லிமரம் இருந்தால்
அட்சயதிரிதியை அன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் மஞ்சள், குங்குமம் இட்டு
வழிபாடு செய்யலாம். நெல்லிக்கனி குளிர்ச்சியும், புளிப்புச் சுவையும்
கொண்டது. இதைச்சாப்பிட்டால் பார்வைக்குறைவு, நரைமுடி ஆகிய குறைகள் வராது.
துவாதசி திதியில் (அமாவாசை அல்லது பவுர்ணமி கழித்த பத்தாம் நாள்) உணவில்
நெல்லிக்கனியைச் சேர்த்துக் கொள்வது சிறப்பு. முதுமையான வடிவம் கொண்டிருந்த
சியவன முனிவர், நெல்லிக்கனியை சாப்பிட்டு இளமையைப் பெற்றதாகக் கூறுவர்.
இதனால் தான் இவரது பெயரால், நெல்லிக்கனி லேகியத்திற்கு "சியவனப் பிராஸ்'
என்ற பெயருண்டு. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் திருமகள் நித்யவாசம்
புரிவாள். தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும்
அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல்
இருக்கும். குறைவில்லா செல்வம் வீட்டில் பெருக அட்சய திரிதியை நாளில்
நெல்லிமரத்தை வீட்டில் நடுவது சிறப்பு.
அடசய திரிதியையில் என்ன பொருள் வாங்கலாம்?
"அட்சயம்' என்றால் "குறைவில்லாதது' என்று பொருள். இந்த நாளில் எப்பொருளை
வாங்கினாலும் அப்பொருள் நம் வீட்டில் குறைவில்லாமல் பெருகிவிடும். தர்மர்
சூதாடித் தோற்ற நிலையில், கவுரவர்கள் திரவுபதியை சபையில் மானபங்கப்படுத்த
முயன்றனர். அவள் கண்ணனை நினைத்து இருகரங்களையும் குவித்து நின்றாள்.
கண்ணனும் "அக்ஷய' என்று அருள்பாலித்தார். இதனால், திரவுபதியின் புடவையை
இழுத்து மலைபோல குவித்தும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. தங்கம்,
உப்பு, மஞ்சள், கண்ணாடி, குடை, மளிகை சாமான்கள், ஆடை, ஆபரணங்கள்,
பாத்திரங்கள், பர்னிச்சர், கட்டுமானப்பொருட்கள், வாகனங்கள், அழகுசாதனப்
பொருட்கள், புத்தகங்கள், பைக், கார், புத்தகம், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள் உட்பட எந்தப் பொருள்களையும் இந்நாளில் வாங்குவதால், எப்போதும்
குறைவில்லாமல் நிறைந்திருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by krishnaamma Fri May 06, 2011 1:34 pm

மேலே சொன்னதெல்லாம் நான் சொல்லல , தினமலர் ல போட்டுள்ளார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by krishnaamma Fri May 06, 2011 1:34 pm

லட்சுமி கோயில்கள்
பெருமாள் கோயில்களில் உள்ள தாயார் லட்சுமி. இவளை வழிபட்ட பிறகே,
பெருமாளை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் ஒன்று உண்டு.
திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்த போது, இரணியனைக் கொன்ற உக்கிரம் தணியாமல்
ஆவேசமாக நின்றார். அப்போது லட்சுமி பெருமாளைப் பிரார்த்தித்து, அவருடைய
உக்கிரத்தைத் தணித்தாள். தன் கோபத்தைத் தணித்ததால் லட்சுமியின் அருள்
பெற்றவர்க்குப் பெருமாள் வேண்டாமலேயே அருள்புரிந்து விடுவார்.
குகை லட்சுமி: ஜம்முவில் இருந்து 16 கி.மீ., தொலைவில் உள்ள தலம்
காட்ரா. அங்கிருந்து 16கி.மீ., மலையேறிச் சென்றால் பாணகங்கை என்னும்
நதிக்கரையை அடையலாம். அங்குள்ள ஒரு குகையில் லட்சுமிதேவி அருள் செய்கிறாள்.
இக்கோயில் வைஷ்ணவி என்று போற்றப்படுகிறாள்.
பாற்கடல் லட்சுமி: காஷ்மீர் ஸ்ரீநகரில் துலாமுலா என்னும் இடம்
நான்கு புறங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது. அதன் நடுவில் உளள குளத்தின்
நீரை லட்சுமியின் வடிவமாகப் போற்றுகின்றனர். இந்த குளத்தை "க்ஷீரபவானி'
என்னும் அழைக்கின்றனர். "க்ஷீரம்' என்றால்"பால்' . லட்சுமி பாற்கடலில்
பிறந்ததாக ஐதீகம்.
வைஷ்ணவி கோயில்: வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள்
சென்னை அம்பத்தூர் அருகில் வடதிருமுல்லைவாயிலில் வைஷ்ணவி தேவியை பிரதிஷ்டை
செய்து வைத்து வழிபட்டார். காஷ்மீரத்தில் உள்ள வைஷ்ணவி தேவியை தரிசித்து
வந்த சுவாமிகள், தமிழ் மக்களும் லட்சுமியை வழிபட்டு பலன் பெறவேண்டும் என்ற
நோக்கில் இக்கோயிலைக் கட்டினார்.
நிற்கும் மகாலட்சுமி: மாயவரம் தரங்கம்பாடி ரோட்டில் தலைச்சங்காடு
என்னும் கோயிலில் இருக்கும் தாயார் தலைச்சங்க நாச்சியார் என்ற பெயருடன்
அருள்பாலிக்கிறார். கோயில்களில் தாயார் அமர்ந்தகோலத்தில் காட்சி அருள்வது
வழக்கம். ஆனால், இங்குமட்டும் நின்ற கோலத்தில் காணலாம். தலைச்சங்க
நாண்மதியம் என்னும் பெயர் பெற்ற இங்குள்ள உற்சவ தாயாருக்கு செங்கமலவல்லி
என்பது திருநாமம்.
நடன லட்சுமி: மைசூருவுக்கு அருகிலுள்ள (ஹாசன் மாவட்டம்) நூக்கி
ஹல்லி என்னும் இடத்தில் உள்ள கோயிலில் மகாலட்சுமி நடனமாடும் பெண்ணாகக்
காட்சி அருள்கிறாள். ஹொய்சாள மன்னர்கள் கட்டிய இக்கோயிலில் லட்சுமிக்கு
எட்டுகைகள் இருப்பது சிறப்பு.
மும்பை மகாலட்சுமி: மும்பையில் உள்ள மகாலட்சுமி கோயில் மிகவும் பிரம்மாண்டமானதாகும். இங்கு லட்சுமிதேவியின் அருகில் மகாகாளி, சரஸ்வதி உள்ளனர்.
* மகாராஷ்டிரா, கோலாப்பூரில் உள்ள மகாலட்சுமி கோயிலில் மூலவராக விளங்கும் லட்சுமியை தரிசிக்க வெள்ளிக்கிழமையில் கூட்டம் அலைமோதும்.
வேடுவ லட்சுமி: ஆந்திரா, அகோபிலத்தில் திருமகள் வேடுவப் பெண்ணாக
இருப்பதாக ஐதீகம். இங்கு வசிக்கும் மலைப்பிரதேச மக்களுக்கு செஞ்சுக்கள்
என்று பெயர். வேடுவப் பெண்ணாக இருக்கும் இவளுக்கு "செஞ்சு லட்சுமி' என்று
பெயர்.
தவக்கோல திருமகள்: ஆந்திரா, மங்களகிரி பானக நரசிம்மர் கோயிலில்
"மார்கொண்ட லட்சுமம்மா' என்ற திருநாமத்தோடு திருமகள் விளங்குகிறாள். சாதாரண
உடையுடன் தேவி காட்சி அளிப்பது சிறப்பு. சகல செல்வத்திற்கும் அதிபதியான
லட்சுமி இங்கு தவக்கோலத்தில் இருக்கிறாள்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by krishnaamma Fri May 06, 2011 1:36 pm

கனகா தாரா சோஸ்த்ரம் இந்த லிங்க் இல் இருக்கு . தேவயானவர்கள் பார்க்கவும்.

http://www.eegarai.net/t18114-topic


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:57 pm

"அட்சய திரிதியை" இவ்வாண்டு மே13ல் வருகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அதாவது 13-5-2013 வருகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by பாலாஜி Fri Apr 26, 2013 4:00 pm

krishnaamma wrote:"அட்சய திரிதியை" இவ்வாண்டு மே13ல் வருகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அதாவது 13-5-2013 வருகிறது புன்னகை

ஏறகனவே தங்கம் வாங்கு வாங்கு என்று வாங்குகிறீர்கள் .. இப்ப இப்படி ஒரு நாள் ..

"அட்சய திரிதியை" அன்னிக்கு எத்தனை கிலோ தங்கம் வாங்குவதாக உத்தேசம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by krishnaamma Fri Apr 26, 2013 4:03 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:"அட்சய திரிதியை" இவ்வாண்டு மே13ல் வருகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அதாவது 13-5-2013 வருகிறது புன்னகை

ஏறகனவே தங்கம் வாங்கு வாங்கு என்று வாங்குகிறீர்கள் .. இப்ப இப்படி ஒரு நாள் ..

"அட்சய திரிதியை" அன்னிக்கு எத்தனை கிலோ தங்கம் வாங்குவதாக உத்தேசம்

தங்கம் மட்டும் குறி இல்லை பாலாஜி, அன்று தான தருமம் செய்தால் ரொம்ப நல்லது, அது தான் இவ்வளவு போட்டேன், பழைய திரியை மேலே கொண்டு வந்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by பாலாஜி Fri Apr 26, 2013 4:07 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:"அட்சய திரிதியை" இவ்வாண்டு மே13ல் வருகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அதாவது 13-5-2013 வருகிறது புன்னகை

ஏறகனவே தங்கம் வாங்கு வாங்கு என்று வாங்குகிறீர்கள் .. இப்ப இப்படி ஒரு நாள் ..

"அட்சய திரிதியை" அன்னிக்கு எத்தனை கிலோ தங்கம் வாங்குவதாக உத்தேசம்

தங்கம் மட்டும் குறி இல்லை பாலாஜி, அன்று தான தருமம் செய்தால் ரொம்ப நல்லது
, அது தான் இவ்வளவு போட்டேன், பழைய திரியை மேலே கொண்டு வந்தேன் புன்னகை

தருமம் தானே .. எனது முகவரிக்கு ஒரு தொகையை DDயில அனுப்புங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by krishnaamma Fri Apr 26, 2013 4:11 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:"அட்சய திரிதியை" இவ்வாண்டு மே13ல் வருகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அதாவது 13-5-2013 வருகிறது புன்னகை

ஏறகனவே தங்கம் வாங்கு வாங்கு என்று வாங்குகிறீர்கள் .. இப்ப இப்படி ஒரு நாள் ..

"அட்சய திரிதியை" அன்னிக்கு எத்தனை கிலோ தங்கம் வாங்குவதாக உத்தேசம்

தங்கம் மட்டும் குறி இல்லை பாலாஜி, அன்று தான தருமம் செய்தால் ரொம்ப நல்லது
, அது தான் இவ்வளவு போட்டேன், பழைய திரியை மேலே கொண்டு வந்தேன் புன்னகை

தருமம் தானே .. எனது முகவரிக்கு ஒரு தொகையை DDயில அனுப்புங்க

அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by யினியவன் Fri Apr 26, 2013 5:35 pm

சலூன்ல போயி மொட்டை அடிக்காம பார் அ சேஞ்
இந்த நாளில் நகைக் கடைல வச்சு அடிச்சு விடுவாங்க நமக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum