புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
20 Posts - 3%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:27 am

First topic message reminder :

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:52 am

வின்சன் ஏ. ஸ்மித் என்பாரும், வால்டர் எலியட் என்பாரும் பல்லவர் கோதாவரி யாறுகட்கு இடையிலுள்ளதான வெங்கி நாட்டில் இருந்தோராகலாம் எனக் கருதுகின்றனர்

பல்லவரைப்பற்றித் தனிநூல் எழுதியியுள்ள புதுச்சேரியிலிருக்கும் புரொபசர் ஜி.ஜே. துப்ரீல் என்பாரும், பல்லவர் ஆந்திர நாட்டிலிருந்தோராகலாமென்றும், பல்லவர் இருகூறாய்ப் பிரிந்து ஆந்திரநாட்டிலும், தமிழ் நாட்டிலும் அரசு புரிந்தனரென்பதும் பொருந்தும் என்றும் இங்ஙனம் கருதுகின்றனரே யன்றிப் பெருசியா முதலிய இடங்களிலிருந்து வந்தொரெனக் கூறவில்லை. பல்லவரது முதன்மைப் பட்டணம் காஞ்சி என்பதும், அவர்கள் ஆந்திர நாட்டுடன் தொண்டைமண்டலத்தையம் ஒரே காலத்தில் ஆண்டிருக்கினறன ரென்பதும் சரித்திரத்தில் நன்கு விளக்கமாம்.

இனி, இவர்களைக் குறித்து எமது ஆராய்ச்சியிற் புலப்பட்ட வற்றை இங்கே காட்டுதும். காஞ்சி முதலிய இடங்களுள்ள பகுதி முன்பு அருவா நாடு எனவும் வழங்கப்பட்டது. அங்கிருந்தோர் அருவாளர் எனப்பட்டனர். அந்நாடு தமிழகத்தின் பகுதியே யாகலின் அருவாளரும் தமிழரே யென்பது கூறாதே அமையும். அருவாளரை நாகரென்பார் கொள்கையும் முன்னரே காட்டப்பட்டது இவருடன், ஆந்திரரும், கருநாடரும் தமிழ் மூவேந்தர்க்குப் பகையாயிருந்தமையாலே’ வடுகரருவாளர் வான் கருநாடர் …..குறுகாரறிவுடையார்’ என்று இழித்திடப் பட்டனர். சோழன் கரிகாலன் அருவாளரை வென்றதும் தெரிந்ததே. அருவா நாடு தொண்டை நாட்டின் கண்ணதாகலின் அந்நாட்டினை முன்பு ஆண்டோர் எனப் பட்ட தொண்டையர் என்பாரும் அருவாளரும் ஓரினத்தவரென்று கருதலாகும். பழைய நாளில் இவர்கள் ‘ மன்பெறு மரபின்ஏனோர்’ எனவும், ‘குறுநில மன்னர் எனவும் கூறப்பட்டு வந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:54 am

‘வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந்
தாரு மாரமுந் தேரும் வாளும்
மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய’
என்னும் மரபியற் சூத்திரமும்,
‘மன்பெறு மரபின் ஏனோரெனப்படுவார் அரசு பெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க. அவை பெரும்பாணாற்றுள்ளும் காணப்படும்’ என்னும் அதனுரையும் இவ்வுண்மை தெரிப்பனவாகும். கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பு தொண்டை நாட்டின் ஆட்சியும், நிலைமையும் எப்படி யிருந்தனவென்று விளக்கமாக அறிதற்கு இடமில்லை. கரிகாற் பெருவளவன் காலத்திலிருந்து அது நல்ல நிலமை யடைந்து விட்டதென்று கொள்ளலாகும் . கரிகாலன் காஞ்சிப் பதியை விரிவுபட வகுத்தமைத்தனன் என்பது.

நாக பல்லவ சோழரும், கள்ளரும்
‘என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி
லிலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்

வன்றி றற்புலி யிமையாமல் வரைமேல்
வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை

சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்

குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்’

என்று பெரிய புராணம் கூறுதலால் வெளியாகின்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:54 am

கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். அவனட்சியின் பெருமையை,

‘கைப்பொருள்வெளவுங் களவோர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்
உருமு முரறா தரவுந் தப்பா
காட்டு மாவு முறுகண் செய்யா’

என்றும்,

‘முறைவேண் டுநர்க்குங் குறைவேண் டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக்
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துருப்பில் சுற்றமோ டிருந்தோன்’

என்றும், பிறவாறும் பெரும்பாணாற்றுப்படை கூறுதல் கொண்டு அறியலாகும். இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:55 am

திருமங்கையாழ்வார் பல பாட்டுக்களில் பல்லவரைக் குறித்திருக்கின்றனர்
அவற்றுள் அட்டபுயகரப் பதிகத்தில்,
‘மன்னவன் றொண்டையர் கோன் வணங்கு
நீண்முடி மாலை வைரமேகன்
தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி
யட்ட புயகரத் தாதிதன்னை’
என்றும்,

திருவரங்கப்பதிக்கத்தில்,
‘துளங்கு நீண்முடி யரசர்தங் குரிசில்
தொண்டைமன்னவன்

என்றும் ஓர் பல்லவனைத் தொண்டை மன்னன் எனப் பாடியிருக்கின்றனர்.

வண்டை நகரதிபனும், முதற் குலோத்துங்கச் சோழனுடைய மந்திரத்தலைவனும ஆகிய கருணாகரத் தொண்டைமானை,

‘பல்லவர்கோன் வண்டைவேந்தன்’

என்று செயங்கொண்டார் பரணியிற், கூறுகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:55 am

பல்லவர் தொண்டையர் என்னும் பெயர்கள் ஒரே மரபினரைக் குறிப்பன என்பதற்கு இவற்றினும் வேறென்ன சான்று வேண்டும்.
கல் வெட்டுக்களிலும் பல்லவரைத் தொண்டையர் என்று குறித்திருக்கிறது. தளவானூர்க் கல்வெட்டில் ஒரு பல்லவன் ‘தொண்டையர் தார்வேந்தன்’ என்று கூறப்படுகின்றான்.
‘மறைமொழிந்தபடி மரபின் வந்த குலதிலகன் வண்டை நகரரசனே’ என்று பரணி கூறுவது பல்லவர் அல்லது தொண்டையர் பின்பு அரச வகுப்பினராகக் கொள்ளப் பட்டு வந்தமைக்குச் சான்றாகும்.

கி.பி.4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டின் இடைக் காலம் வரையில் பல்லவராட்சி மிக மேன்மையடைந்திருந்தது. அக் காலததில் சோழர்கள் பல்லவர்க்குக் கீழே சிற்றரசராயிருந்தனர். பல்லவரில் புகழ் பெற்ற மன்னர் பலரிருந்தனர். பல்லவர் காலத்தில் சிற்பம் உர்ந்த நிலையில் இருந்ததுபோல் வேறு காலத்தில் இருந்ததில்லை அவர்களிற் சிலர் சிறிது காலம் சமண, பெளத்த மதங்களைத் தழுவியிருப்பினும், பெரும்பாலோர் சைவராகவோ வைணவராகவோ இருந்து வந்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் பல. பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் பல்லவர் பலரிருக்கின்றனர்.

சைவசமய குரவர்களும், ஆழ்வர்களும் அக்காலத்தில்தான் தோன்றி விளங்கினர். சமயக் குரவரும், ஆழ்வாரும் புகழந்து பாடும் பெருமையும் பல்லவர் பெற்றிருந்தனர். இத்தகையாரையோ ஒரு கொள்ளைக் கூட்டத்தார் எனச் சிலர் கருதுவது ! இது காறும் கூறியவற்றிலிருந்து பல்லவ ரென்பார் தொன்று தொட்டுத் தொண்டை நாட்டி லிருந்துவந்த தொண்டையரே! என்பது விளக்கமாம். அவர் வடக்கிலிருந்து வந்தோ ரென்பதற்குச் சிலர் கூறும் வேறு காரணறங்கள்:

பல்லவர்க்கள் முதலில் அளித்த செப்புப் பட்டயங்கள் பிராகிருதத்திலும், வடமொழியிலும் இருப்பதும், அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவரென்றும், வேள்விகள் புரிந்தனரென்றும் கூறப்படுதலும் ஆம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:56 am

பட்டயங்கள் எங்கோ சில சிற்றூர்களிலும், காடுகளிலும், நிலத்தின் கீழும் இருந்து இங்ஙனம் அகப்பட்டவை. அவைமுற்றிலும் கிடைத்து வட்டன என்று எங்ஙனம் கூறமுடியும்? அன்றியும் தமிழ் வழங்காத தெலுங்கு நாட்டை அவர்கள் கைப்பற்றி ஆண்டபொழுது அங்கே அளித்த பட்டயங்கள் தமிழில் எப்படி இருக்கக்கூடும்? தமிழராயிருந்தோர் பிராகிருதத்தில் சாசனம் அளித்திருக்க முடியா தென்றால், பிராகிருதம் அல்லது வடமொழியே பயினறவர் பின்பு எங்ஙனம் தமிழராகித் தமிழிலே சாசனம் அளித்திருத்தல் கூடும்? இதனாலே அக்காரணம் அத்துணை உறுதியிடைத்தன் என்பது தோன்றும்.

அவர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவ ரென்றும் சொல்வது காரணம் ஆகலாம், எனின், தமிழ் வேந்தர்கள் சூரியன் மரபினரென்றும், சந்திரன் மரபினரென்றும் கூறப்படுவதற்கு யாது சொல்வது? சோழர்களோடு மாறுபட்டிருந் தோரும், ஆந்திர நாட்டையும் கைப்பற்றி ஆண்டோரும, எண்ணிறந்த பிராணர்களைத தமிழகத்திற் குடியேற்றிஅவர்கட்கு எண்ணிறைந்த தானங்களை அளித்தோரும் ஆகிய பல்லவர், தம்மை அசுவத்தாமன் வழியில் வந்தோர் என்றும் பாரத்துவாசர் கோத்திரத்தினர் என்றும் கூறிக்கொள்வதில் வியப்பென்னை? பல்லவரது மரபின் வரலாறு நாளடைவில் விரிந்து வந்திருப்பதை சாசனங்கள் விளக்குமன்றோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:56 am

அவர்கள் வேல்வி புறிந்ததுதான் எங்ஙனம் காரணமாகும்? தமிழ் மூவேந்தரும் எண்ணிறந்த வேள்விகள் செய்திருத்தலை சங்கநூல்களால் அறியலாகும். பண்டியன் பல்யாக சாலை முதுக்குடுமி பெருவழுதி என்னும் பெயரே அதனை விளக்கும் அவனைப் பாடிய நெட்டிமையார் என்ற புலவரும் ‘நின்னுடன் எதிர்த்து தோற்றொழிந்த பகைவர் பலரோ, நீ வேள்வி புறிந்த களம் பலவோ’ என்று கூறுகின்றார் இவ்வாற்றால் பல்லவர் வடக்கிலிருந்து வந்தோர் என்பார் அதற்குக் கூறும் காரணம் ஒன்றேனும் திட்ப்ப முடைதன் றென்பது விளங்கா நிற்கும். பல்லவரது ஆதி ஊறைவிடம் தொண்டை நாடே என்பதனை மறுக்கக் தகுந்த வேறு ஆதரவுகள் கிடைக்கு மேல் அவர் மணிமேகலையில் கூறப்பட்டதும் தமிழ் நாட்டை யடுத்து தெற்கிலுள்ளதுமாகிய மணிபல்லவம் என்னும் தீவினின்று வந்தோர் எனக் கருதல் பொருத்தமுடைத்தாகும்.
இனி கள்ளர் வகுப்பினரை பல்லவர் வழியினர் என்பதற்கு பல பொருத்தங்களுள்ளன. அவற்றினை இங்கே காட்டுதும். பல்லவர் தொண்டையர் என்னம் பெயர்கள் ஒரே வகுப்பினரை குறிப்பன வென்று முன் விளக்கப்பட்டதும். காடவர், சேதிபர், காடுவெட்டி என்னும் பெயர்களும் பல்லவருக்கு உரியவை. திருத்தொண்டர்களில் ஒருவாராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயநாரை

‘பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவே’

என்று திருத்தொண்டர் திருவந்தாதியும் ;

‘வைய நிகழ் பல்லவர் தங் குலமரபின் வழித்தோன்றி’
எனவும்,
‘கன்னிமதில் சூழ்காஞ்சி காடவ ரையடிகளார்’

எனவும் பெரியபுராணமும் கூறுகின்றன

சுழற்சிங்க நாயனாரை,
‘கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற் சிங்கன்’

என்று திருத்தொண்டத் தொகையும்;
‘பல்லவகுலத்த வந்தார்’

என்று பெரியபுராணமும் கூறுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:57 am

திருமுனைப்பாடி நாட்டுக்கச் சேதி நாடு என்பதும் ஒரு பெயர். மெய்ப்பொருணாயனார் புராணத்தில் ,

‘சேதிநன்னாட்டு நீடு திருக்கோவலூர்’

என்று கூறப்பட்டுள்ளது. சேதிநாடு ஆண்டமைபற்றிப் பல்லவர் சேதிபர்கோன்எனவும் படுவர்.

காடுவெட்டி என்பதும் பல்லவரது பெயராகச் சாசனங்களில் வருகிறது. ‘காடு வெட்டித் தமிழ் பேரரையன்’ என்று கல்வெட்டிற் காணப்படுவதிலிருந்து இப்பெயர்அரசரக்குரியதென்பது விளங்கும்.
பழைய திருவிளையாடற் புராணத்திலிருந்து கீழே காட்டியள்ள ஒரு சரித்திரத்தாலும் இது விளங்கம்.
‘சிவபக்தியில் மேம்பட்டவனும் மிக்க புகழ்வாய்ந்தோனும் ஆகிய காடு வெட்டி யென்னும் ஓர் தலைவன் மதுரையிற்சொக்கலிங்கப் பெருமானைப் பணிதற்குச் சென்று வையையாற்றின் வடகரையை அடைந்தான். அப்பொழுது பாண்டியன் நாற் புரத்த மதிற் கதவையும், சாத்தித்தன் முத்திரையிட்டு, அவனுடன் படையெடுக்க முயன்றான். வையையும் பெருகிவிட்டது. இந்நிலைமையில் சிவபிரானானவர் காடு வெட்டியின் அன்புக்கு இரங்கி, நள்ளிரவில் வடக்கு மதில் வாயிலை முரித்து வந்து, ஓர் இயந்திரத்தால் அவனையாற்றின்தென்கரையில் ஏற்று வித்து, மதில் இடித்த வழியாகக் கொண்டு சென்று, இருளை வெளிதாக்கி, அவனுக்குச் சோதி விமானத்தையும், தாம் தமது ஒப்பற்ற திருவுருவத்தையும் காட்டியருள, அவனம் கண்டுபோற்றி மனமுருகி நின்றான். நின்றவன் பின் பெருமானது கட்டளையால் விடியமுன்னே மதுரையை விட்டுப்போய் விட, ஆலவாயடிகளாரும் மதிலை புதுப்பித்துத் தமது இடபவிலச்சினையிட்டுப் பாண்டியனுக்குக் கனவிலே அறிவித்தருளினார்’ என்பது கதைச் சுருக்கம். இதில் சுட்டியுள்ள தோன்றலை ஓர் சோழன் என்று கடம்பவனபுராணம் முதலியன கூறுகின்றன. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் இவனைச் சோழன் என்று கூறினும் கச்சியில் இருந்தவனாகத் தெரிவிக்கின்றது. வரலாற்றுண்மை அறிய வழியில்லாத நிலைமையில் புராண ஆசிரியர்கள் இவனைச் சோழனென்று கருதினர் போலும்? மேலெ குறிப்பிட்ட பெயர்கள் (தொண்டைமான், பல்லவராயர், பாடவராயர், சேதிராயர், காடு வெட்டி) எல்லாம் கள்ளர் வகுப்பினரக்குள் வழங்கும் கிளைப்பெயர் அல்லது பட்டங்களாக உள்ளன. வாண்டையார் (வண்டையார்) என்னம் பட்டமும் வண்டை வேந்தனாகிய கருணாகரத் தொண்டைமான் வழியினர்என்பதைக் காட்டும். இவர்களுக்குள்வழங்கும் பட்டப் பெயர்களேல்லாம் இந்நூலிறுதியில் தொகுத்துக் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெயரினையு முடையார் பற்பலவூர்களில் இருந்தலால் அவ்வூர்களை அங்கே குறிப்பது மிகையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:58 am

இனி, முத்தரையர் என்பார் கள்ளர் வகுப்பினரென முன்போ காட்டப்பட்டது. முத்தரையர் என்னும் பெயர் முதலில் பல்லவர்க்கு உரியதாய்ப் பின்ப அவர் கீழ் ஆண்ட சிற்றரசர்க்கு வந்ததெனச் சிலர் கருதியுள்ளனர். முதல் மகேந்திரவர்மன், முதற் பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ வேந்தர்கட்கு முறையே பகாப்பிடுகு. பெரும் பிடுகு (பிடுகு = இடி) என்ற பட்டங்கள்உள்ளன. முத்தரையர்க்கும் இப்பெயர் வழக்குண்டு என்பதனைப் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பெயர் காட்டும். புதுக்கோட்டை நாட்டிலுள்ள திருமெய்யத்தில் ‘விடேல்விடுகு’ என்னும் பெயருள்ள முத்தரையன் ஏரிகள் வெட்டு வித்திருக்கின்றனன். நந்திக் கலம்பகத்தில் நந்திவர்ம பல்லவன் ‘விடேல் விடுகு’ என்று கூறப்படுகின்றனன் .இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது முத்தரையரும் பால்லவ வகுப்பினரே யென்று காட்டும். காஞ்சியிலிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இது காறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும். பெயர்கள் ஒத்திருப்பது கொண்டு இவர்கள் பல்லவ வகுப்பினரெனல் பொருந்தாது எனின், பெயர்களே யன்றி வரலாறுகளும் ஒத்திருத்தல் இதில் பலவிடத்தும் காணப்படும். பல்லவரல்லர் என்பதற்கோ யாது காரணமும் இல்லையென்க.

கள்ளர் வகுப்பினராகிய புதுக்கோட்டை அரச பரம்பரையினர் தொண்டைமண்டலத்திலிருந்து வந்த பல்லவர் எனவே புதுக்கோட்டைச் சரிதம் கூறுகின்றது. வின்சன் எ. ஸ்மித் முதலியோரும் அங்ஙனமே கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப் பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:59 am

திருவாளர் பி.டி. சீனிவாசையங்கார் அவர்கள் தாம் எழுதியுள்ள பல்லவர் சரிதத்தில், ( நாம் முன்பு மறுத்துள்ள) சில காரணங்களையெடுத்துக் காட்டிப் பல்லவர் கள்ளரினத்தினினின்றும் உதித்தவராகாதர் எனக் கூறினரேனும், பின் பல்லவர் தமிழராகிவிட்டாரென்று கூறி வந்து, தமது நூலை முடிக்குமிடத்தில் ‘ஒரு தெலுங்கு பல்லவக் கிளையார் 17-ம் நூற்றாண்டில் தொண்டைமான் என்றும் பல்லவ ராஜா என்றும் பட்டத்துடன் புதுக்கோட்டை அரசரானார். இப்போது புதுக்கோட்டை அரசரே பல்லவகுல மன்னருடைய புகழை நிலை நிறுத்தி ஆள்கிறார்’ என்று குறித்திருக்கின்றனர். இங்ஙனம் பலர் கருத்தும் இக்கொள்கையை ஆதரிப்பனவாகவேயுள்ளன.

இனி, புதுக்கோட்டை மகராஜா காலேஜில் தலைவராக இருந்த திருவாளர் வெ. இராதாகிருட்டினையர் அவர்கள் எழுதிய புதுக்கோட்டைச் சரிதத்திலிருந்தும், கல்வெட்டு முதலியவற்றிலிருந்தும் கள்ளர்களைப் பற்றி அறியப்படுகின்ற பல அறிய செய்திகளை இங்கே தொகுத்துக் காட்டுவோம்.

“பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள்.

மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக