புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
21 Posts - 4%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 11 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:27 am

First topic message reminder :

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:00 am

தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பி.ஏ.,பி.எல்.,) வாயிலாகக் கிடைக்லுற்ற செய்திகள் பின் வருவன:

நாட்டின் பெயர் (தஞ்சாவூர்)

நாட்டின் முதற்கரை

பொதுத்தலம்

காசாநாடு
தெக்கூர்
கோயி
கேனூர் நாடு
தெக்கூர்
கோட்தைத்தெரு
பின்னையுர்நாடு
பின்னையூர்
பின்னையூர்
தென்னம நாடு
தொன்னம நாடு
…..
கன்னந்தங்குடி நாடு
மேலையூர்
. . . . .
உரத்த நாடு
புதுவூர்
கோயிலூர்
ஒக்கூர் நாடு
மேலையூர்
. . . .
கீழ ஒக்கூர் நாடு
கீழையூர்
. . . . .
திருமங்கலக் கோட்டை நாடு
மேலையூர்
. . . .
தென்பத்து நாடு
பேரையூர்
அப்பராம்பேட்டை
ராஜவளநாடு
நடுவாக்கோட்டை
. . . . . . .
ராஜ வள நாடு
நடுவாக்கோட்டை
. . . . .
பைங்கா நாடு
பைங்கா நாடு
. . . .
வடுகூர் நாடு
தென்பாதி
. . .
கோயில்பத்து நாடு
கம்பை நத்தம்
கோயில்பத்து
சுந்தர நாடு
வளமரங்கோட்டை


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:01 am

குளநீள் வளநாடு
துரையண்டார் கோட்டை
கடம்பர் கோயில்
பாப்பா நாடு
தெற்குக் கோட்டை
சங்கரனார்கோயில்
அம்பு நாடு தெற்க வடக்குதெரு
செங்குமேடு 12டான் விடுதி
அம்புகோயில்
வாகரை நாடு
குருங்குளம்
. . . . .
வடமலை நாடு
பகட்டுவான் பட்டி
. . . . .
கொற்கை நாடு
செங்கிபட்டி கூனம் பட்டி
. . . . . .
ஏரிமங்கல நாடு
ராயமுண்டான்பட்டி
வெண்டையன்பட்டி
செங்கள நாடு
விராலிப்பட்டி
நொடியூர்
மேலைத்துவாகுடிநாடு
சூரியூர்
. . . .
மீசெங்கிளி நாடு
. . . .
. . . .
தண்டுகமுண்டநாடு
. . . . .
. . . . .
அடைக்கலங்காத்தநாடு
அள்ளூர்
. . . .
பிரம்பை நாடு
பிரம்பூர்
. . .
கண்டி வள நாடு
நடுக்காவேரி
. .. .


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:01 am

வல்ல நாடு
இளங்காடு
. . ..
தந்தி நாடு
நத்தமாங்குடி
. . ..
வாராப்பூர்
பொன்னம் விடுதி
. .. . .
ஆலங்குடி நாடு
ஆலங்குடி
. .. .
வீரக்குடி நாடு
வாண்டான் விடுதி
திருமணஞ்சேரி
கானாடு
திருவரங்குளம்
. .. . .
கோ நாடு
. . ..
. .. . .
பெருங்குளூர் நாடு
பெருங்களூர்
. . . ..
கார்யோக நாடு
. . . .
. . .. .
ஊமத்த நாடு
சிங்கவனம்
. . . . .


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:02 am

கள்ளர் நாடுகளில் இதுகாறும் தெரிந்தவை இங்கு ஒருவாறு எழுதப்பட்டன. இவை இன்னம் நன்காராய்ந்து ஒழுங்குபடுத்தற்பாலன.

இனி, நாட்டுக் கூட்டத்தின் இயல்பினைச் சிறிது விளக்குதும்.

தஞ்சை சில்லாக் கெசட்டியரில் (1906) பின் வருமாறுகூறப் பெற்றுளது.
” கள்ளர் நாடுகளில் கிராமப் பஞ்சாயத்து வழக்கமாக இருந்து வந்தது. வேளாளர் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தமையால் இது நின்றுவிட்டது. கிராமத்தில் முக்கியமானவர் அம்பலகாரர் எனப்படுவர். இவர் ஊரிலுள்ள சில்லசைச் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பர். ஏனையரில் மேலாபனவராகக் கொள்ளப்படுவர். சில சமயங்களில் பல கிராமப் பஞ்சாயத்தார்கள் ஒன்றுகூடிப் பொதுக் காரியங்களை ஆராய்வதுண்டு”.

தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு என்னும் ஆங்கிலப் புத்தகத்தில்,

“சிவகங்கை ஜமீன்தாரியில் பதினான்கு நாடுகள் உள்ளன. பதினான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டிற்கு ஒருமுறை சுவர்ணமூர்த்தி சுவாமியினன் திருவிழா விடயமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம்” என்று குறித்திருக்கிறது.

“வெள்ளூர் நாடு ஐந்து மாகாணங்களையுடையது. பதினொரு கரைகளாகப் பிரிக்கப்ட்டிருப்பது. ஒருகரைக்கு இரண்டு கரையம்பலமாகும். நாட்டுத்தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவர். மாகாணக்கூட்டம், நாட்டுக்கூட்டம் என இருவகைக் கூட்டங்கள் உண்டு. ஒரு அம்பலமும், கடிகளும் கூடுவது மாகாணக்கூடம். நாட்டுக்கூட்டம் என்பது நாட்டுத்தலைரும், இருபத்திரண்டு கரையம்பலங்களும் மற்றைய குடிகளும் கூடுவதாகும். நீதி (சிவில்) வழக்கு, குற்ற (கிரிமினல்) வழக்குகளைத் தீர்க்கம் கழகங்கள் (பஞ்சாயத்து) அங்கு உள்ளன” என்னும் இச்செய்தி முன்பும் காட்டப்பெற்றுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:03 am

“ஐந்து கிராமத்தினர் ஒன்று சேர்ந்து காங்கயன் என்பானைத் தலைமையாக ஏற்படுத்தினரென்றும், அதற்காகச் சற்றிலுமுள்ள நான்கு கிராமத்தினன் அதிகாரிகள் காங்கயனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் தாக்தகினரென்றும், பின்ப இந்நால்வரும் காங்கயனால் தோல்வியுற்றுத் தலைக்கு ஒரு மாநிலம் கோயிலுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று என்றும் நெடுங்குடிக் கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கிறது”.

“இவர்களில் தலைவர்களை ஏற்படுத்துவதில் தேந்தெடுப்பு (எலக்ஷன்) நடந்து வந்தது. நந்தவனபட்படி மேல்ண்டான் என்ற தலைவன் ஒருகால்தன்றம்பியொடும்ஈ மற்றமுள்ள துணைவர்களோடும் வெளிச்செல்ல நேர்ந்தபொழுது, மேல்கொண்டானடைய அத்தையை அத்தலைமை யேற்றுக்கொள்ளும்படி செய்தனர், அம்மாது நியாயவிசாரணையிலும், காரிய நிர்வாகத்திலும் அவ்வளவு திறமை வாய்த்திருந்தனள். இக்கூட்டத்திற்கு
(கான்பிடரேஷனக்கு) மதுரை அரசர் தலைமையில் உதவி கிடைத்து வந்தது. மதுரையின் பிரதிநிதிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்துகொண்டு வரி வாங்கி இக்கூட்டத் தலைவர்களுக்குக் கொடுத்து வந்தனர். சிலர் இக் கூட்டத்தினரால் சிற்சில துன்பங்கள் உண்டாயின என்று நினைத்தாலும், இக்கூட்டத்தினர் பலமடைந்து ஒற்றுமையுடனிருந்ததால் திருச்சிக்கோட்டைக்கு முன்பு அவர்கள் உதவி செய்தது போல் எப்பொழுதும் உதவி செய்யம்படி துணையாகப் பெற்றுக் கொள்ளலாம். திருச்சிக் கோட்டையை முற்றகையிட்ட மகம்மதிய சிப்பாய்களின் தாக்கதலைவிடக் கள்ளர்களின் தாக்குதலுக்கே மிக நடுங்கினரென்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்” என்று , திருச்சி ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக்கின்றனர். புதுக்கோட்டைச் சரிதத்தில் இவ்வரலாறுகள் காணப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:04 am

இங்கே காட்டியவற்றிலிருந்தும் பிறவாறு யாம் ஆராய்ந்தவற்றிலிருந்தும் நாட்டுக்கூட்டத்தின் இயல்பினைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாகும்:-

கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலக்காரர் அல்லது நாட்டாண்மைக்காரர் என்பது சிறப்புப்பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுள்ளோர் எல்லாவிதமான வழக்குகளையும் அம்பலகாரரிடம் தெரிசவித்துக் கொள்ள அவர் வழக்குகளின் உண்மையைக் கண்டறிந்து, ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்பச்செய்து விடுவர். வழக்காளிகளும் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடீரென அடைந்து விடுவதில்லை.

அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம், ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச்சார்ந்த தகதியுடைய வேறு யாரையாவதுஊரார் தேர்ந்தெடுத்துக்கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியவராகப் போய்விடினும் அவரது உரிமைக்கப் பழுது வருவதில்லை. சில சமயங்களில்பெண்டிரும் கூட அவ்வுரிமையை வகித்து நடத்துவாராவர். ஒரு நாடு அல்லது நாட்டின் பகுதியில் (மாகாணத்தில்) உள்ள ஒவ்வொரு ஊர் அம்பலக்காரரும் ஆண்டிற்கு ஒருமுறை கூடுவதுண்டு. இது நாட்டுக் கூட்டம் அல்லது மகாநாடு எனப்படும். நாட்டின் முதற்கரை அல்லது தலைக்கிராமத்திலுள்ள அம்பலகாரர், மற்றையூர்களின் தலைவர்களுக்கு மகாநாடு கூட நாள் குறிப்பிட்டுத் திருமுகம் அனுப்புவர். குறிப்பிட்ட நாளிலே நாட்டின் பொதுத்தலத்தில் கூட்டம் ஆரம்பமாகும்.

ஒவ்வொரு நாடு அல்லது நாட்டின் உட்பட்ட மாகாணத்திலும் ஏதேனும் ம் ஒரு தெய்வம் இருக்கம். அத்தெய்வத்திற்குக் காப்புக் கட்டித் திருவிழாச் செய்யத் தீர்மானித்தற் பொருட்டாகப் பெரும் பாலும் நாட்டுக் கூட்டம் கூடும் ஆனால் அப்பொழுதே நாட்டின் உட்பட்ட கிராமப் பொது வழக்குகளெல்லாம் கொண்டு வரப்பெறும். ஏரி குளம், வாய்க்கால், எல்லைப்புறம் என்பன பற்றியும் மற்றும் பலவகையாகவும் ஒரு கிராமத்திற்கு மற்றொரு கிராமத்துடன் ஏற்பட்டுள்ள பிணக்குகளெல்லாம் அப்பொழுது கொண்டுவந்து வாதிக்கப்படும். நாட்டுமக்கள் பெருந்திரளாகக் கூடுவதும் உண்டு எனினும் அவர்கள் வேடிக்கை பார்ப்பதன்றி இடையே யாதும் பேசுதல் செய்யார். அம்பலகாரர்கள் மாத்திரமே பேசி முடிவு செய்தல் வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:05 am

வழக்கு மிகுந்து விடுமேல் கூட்டம் தொடர்ச்சியாய்ப் பல நாள் நடைபெறுவதுமுண்டு. எல்லா வழக்குகளும் யாருக்கும் மனத்தாஙகலின்றித் தீர்த்து வைக்கப்பட்ட பின்னரே திருவிழா நிச்சயிக்கப் பெறும். நாட்டுக் கூட்டத்தின் தீர்ப்புகள் எல்லாம் எழுத்துமூலமன்றி வாய்மொழியாகவேயிருக்கும். பத்திமெழுதிப்பதிவு (ரிஜிஸ்தர்) செய்தும் பிறழ்ச்சி மிகுகின்ற இக்காலத்தில் இச்செயல் எவ்வளவு வியப்பைத் தருவதாகும்! வெறும் வாய்மொழிக்கு முன்பு அவ்வளவு மதிப்பிருந்தது. வாய்மொழித் தீர்ப்பிற்கு யாவரும் கட்டுப்பட்டு நடந்த வந்தனர். இவ்வாறாக உர்வழக்குகளெல்லாம் அவ்வூர் தலைர்களாலும், நாட்டு வழக்குகளெல்லாம் நாட்டு கூட்டங்களாலும் ஒரு காசும் செலவின்றி உண்மை கண்டுமுடிவு செய்யப்பட்டு வந்தன.

இப்பொழுதோ வழக்காளிகளிற் பெரும்பாலரும் தம் சொத்துக்களையெல்லாம் இழந்து முடிவில் ஓட்டாண்டிகளாகி விடுதல் கண்கின்றோம். சட்டத்திற்றேறி மன்றின்கண் ஏறி விடும். வக்கீற் கூட்டத்தினர்க்கு நாட்டிலுள்ள ஏழை மக்களின் நலத்தில் கருத்துண்டாவதில்லை. ஏழைகளுக்கு நன்மை செய்ய அவர்களுக்கு எவ்வளவோ வன்மையுண்டு. அவ்படியிருந்தும் யார் எக்கோடு கெட்டால் என்னென்று அவெர்கள் வழக்குகளைப் பெருக்கவே முயலுகின்றனர். அவர்களுக்கு உண்மையாகவே உயர் நோக்கம் இருக்குமாயின் இப்பொழுதுள்ள வளவிற் பாதியளவாக வேனும் வழக்குகள் குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை. இராஜராஜ தேவர் முதலான பழைய சோழ மன்னர்கள் காலத்தில் ஊர்தோறும் பஞ்சாயத்துகள் இருந்து, நாட்டின் ஆட்சி சிறிதும்வருத்தமின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்திருத்தலை அறிவிக்கும் கல்வெட்டுச் சாசனங்கள் எண்ணிறந்தனவுள்ளன.

அம்முறையர்னது நாளடைவில் அருகிவந்து இப்பொழுதுள்ள நிலைமை சம்பவித்திருக்கிறது. அரசாங்கத்தினர் சிற்சில இடங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்படுத்திப் பார்க்கின்றனர். அவற்றின் தன்மையும், பயனும் இப்பொழுது விளக்கமாகச் சொல்லுதற்கில்லை. இந்தியாவிலுள்ள அரசியற் கிளர்சியாளர்களில் ஒரு பகுதியார் தங்கள் கொள்கைகளில் பஞ்சாயத்துச் சபை ஏற்படுத்துவதும் ஒன்றாகக் கொண்டிருக்கின்றனர். அஃது எவ்வளவு பயனளிக்கு மென்பது பின்பே தெரியக்கூடும். அது நிற்க, கள்ளர் குலத்தினர்க்குப் பஞ்சாயத்தும் , நாட்டுக் கூட்டமும் தொன்று தொட்டுள்ள வழக்க மேயாதலின் அவர்கள் மீண்டும் அவைகளைக் காலத்துக்கேற்ற திருந்திய முறையில் ஏற்படுத்தி நடத்திக்கொண்டு வருவது எளிதேயாகும். அவ்வாறு நடத்திவரின் அவர்கட்கும், நாட்டிற்கும் எவ்வளவோ நன்மையண்டு. அரசாங்கத்தினரும், பிறரும் அவற்றை ஆதரிக்கவே கடமைப் பட்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் ஒற்றமையே இன்றியமையாதது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:06 am

இனி, நாடு காவலின் இயற்கையை சிறிது விளக்குதும்

கள்ளர் குலத்து இப்பொழுது அரசராயும், குறுநில மன்னராயும் உள்ளாரது காவல் இங்கே எடுத்துக் காட்ட வேண்டுவதன்று. ஏனைய நாட்டாமைக்காரரை பற்றியே இங்கு கூறவது. இன்னோர் பண்டு அரசராயும், குறுநில மன்னராயும் விளங்கி இருந்தமையாலும் அம்மைக்காலம் வரையில் குறுநில மன்னர்களாய் இருந்திருத்தலாலும் இவர்களது செல்வாக்கிற்கு பிற வகுப்பினர் பெரிதும் கட்டுப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டாமைக் காரர் அல்லது அம்பலக்காரர் காவலில் பற் பல ஊர்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக தஞ்சை ஜில்லாவின் மேற்கு பக்கத்தில் உள்ளவர்களில் காங்கய அம்பலக்காரரை முதன்மையாகக் கூறலாம் . அவர்கட்கு சென்னப்பட்டினம் வரையில் காவற் கிராமங்கள் இருந்தன என்பர். அடுத்து, ராயமுண்டார் , சோழகர், சோழங்கதேவர், மேல்கொண்டார், நாட்டரையர், சொம்பியமுத்தரசு, வன்னிமுண்டார், கொடும்புராயர், கண்டியர் முதலானவர்களைக் கூறலாகும். இதிலிருந்து இன்னார்க்கு இன்னின்ன கிராமங்கள் என இவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர் என்பது விளங்கும். காவர் கிராமம் என்பதில் இவர்களுடைய உரிமையும், கடமையும், என்னவென்று பார்ப்போம்.

ஓர் அரசனுக்கு குடிகள் வரிசெலுத்துவது போன்றே கிராமத்தார்கள் இவர்கட்கு ஆண்டுதோரும் வரி செலுத்துவர். வரி தனித்தனியாவேனும், கிராமத்தார் ஒன்று சேர்ந்து மொத்தமாக வேனும் செலுத்துவதுண்டு. மற்றும் அம்பலக்காரர் வீட்டில் கல்யாணம் முதலிய நடக்குங்காலங்களில் காணிக்கை செலுத்துவதுண்டு. இவ்வுரிமையை பெற்றுக்கொள்ளும் அரசு காவலர் தமது காவலில் உள்ள ஊர்களில் எவ்வகை களவும், கொள்ளையும், நிகழாமல் பார்த்துக்கொள்ளும் கட்டுப்பாடுடையர். களவு நிகழாமல் பார்ப்பதென்றால் தாம் சென்று காத்து நிற்பதில்லை; ஆட்களை அனுப்பி காப்பதும் இல்லை. தம் வலிமையாலும் ஆணையாலும் பாது காப்பாராவர். இன்னாருடைய அரசு காவலில் உள்ள ஊர் என்று தெரிந்தால் திருடர்கள் அவ்வழிச் செல்லமாட்டார்கள். ஒரு கால் ஏதேனும் களவு நிகழ்ந்து விடின் கிராமத்தார் அம்பலக்காரருக்கு செய்தி தெரிவிப்பர். அம்பலக்காரர் தம் ஆட்களை பல இடங்களுக்கு அனுப்பி களவு போன பொருளை எவ்வாற்றாலேனும் மீட்டுக் கொடுப்பர்.

சில சமயங்களில் அம்மபலக்கார் தம் கைப்பொருள் செலவு செய்து மீட்க நேரும். இதில் கிராமத்தார்க்கு எவ்வளவு நன்மையிருக்கிறதென்று பாருங்கள். சில சமயங்கள் அரசு காவலர் சிலர் தவறான வழிகளில் நடத்தலும் நிகழக்கூடியதே. அது குறித்து அம்முறையே வெறுக்கத்தக் கதாகது. தற்காலத்தில் நாட்டின் சாதன பாது காப்புக்கு போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நூற்றில் 90 ஊர்களுக்கு அதன் சம்பந்தமே இல்லை. அவ்வூர்களில் ஏதேனும் நிழந்து விட்டால் அவர்கள் நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்க , அன்னோருத்தரைவைப் படிப்படியாகப் பெற்றுப் போலீசுக்காரர் வந்து பாத்து ஏதேனும் எழுதிக் கொண்டு போகின்றனர். இதில் எவ்வளவு நம்மையை நாம் எதிர் பார்க்கமுடியும்? இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுதுதான் பழைய அரசு காவலின் பயன் விளங்கா நிற்கும் .

அம்பலகாரர்கட்கு அன்னோர் காவலுட்பட்ட கிராமத்து மக்கள் தாம் ஆண்டுதோறும் செலுத்தும் வரி முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாட்டயங்களும், முறிகளும் எழுதிக் கொடுத்திருக்கின்றனர் அரசாங்கத்தினர் அவற்றில் பல பட்டயங்களைக் கைப்பற்றி விட்டனரென்றும், பட்டயம் பெற்றிருந்த சிலரிடம் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கட்க உபகாரச் சம்பளம் கொடுத்து வந்திருக்கின்றன ரென்றும் அறிகின்றோம். தாங்கள் பரம்பரையாக அடைந்து வந்து வருவாயை இழந்த காரணத்தால் அம்பலகாரரிற் சிற்சிலர் தத்தம் பெருந்தன்மையை இழக்கவும் நேர்ந்தது. இப்பொழுது பெரும் பான்மை அரசு பாவர் ஒழிந்துவிட்டது. சிற்சில இடங்களில் பழமையை நினைவுகூர்ந்து, அன்புபள்ளி ஒருவகையான சம்பந்தம் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இனி, அம்பலகார்கள் அரச காவல் முறையை நாடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை, இவர்கள் தம்முடைய நிலங்களை நன்கு பயிரிட்டுத் தம் ்உழைப்பினார் வருகின்ற பொருள் கொண்டு தம்ட் வாழ்க்கையை நடாத்தி ஏனையர்க்கும் இயன்ற உதவிசெய்து கொண்டு அறநெறியில் நிற்பார்களாயின் எவ்வளவோ சீரும் சிறப்பும் எய்துவார்கள். பழைய நாளில் இவர்கள் அரசு காவல் முறி பெற்றமைக்குச் சில சான்றுகள்் காட்டி இவ்வதிகாரத்தை முடிப்போம். பினவருபவை, விணணனூர்ப் பட்டி, திருவாளர் மு. கந்தசாமிச் சோழங்க தேவர் அவர்களிடமிருந்து எமதருமை மாணவர் திரு. வீ. உலகதாசக் கொடும்புராயர் வாயிலகக்கிடைத்த பழைய (ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முந்திய ) ஏடுகளிற் கண்டவை:-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:06 am

1. ‘ஈசுவர u ஆனி t 152 வாலிகொண்டாபுரம் சீமை வெண்பா னாட்டில் கூரையூரைச் சேர்ந்த வடவின்னம் பூண்டியிலுக்கும் இருசப்ப நாயனார், முத்துக் கருப்ப உடையார் நாங்களிருவரும் ஏரிமங்கல நாட்டில் விண்ணனூர்ப்பட்டியிலிருக்கும் பலபத்திரச் சோழகனார் குமாரர் குஞ்சான் சோழகனார்க்கு மேன்காவர் பொருப்பு முறிகொடுத்தப்படி .
முறியாவது வடவிண்ணம் பூண்டி மாகாணத்தில் ராயத்துடையார் கிராமம் உட்பட்ட நம்முடைய கிராமம் 12 . இந்த பன்னிரண்டு கிராமத்துக்கு ம் வருடம் ஒன்றுக்குப் பொருப்பு கெட்டி 12 பொன் கொடுத்துக்கொண்டு வருவோமாகவும். இந்த மேன்காவல் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலே இருப்பீராகவும் .

2. அக்ஷய uதை t 72 முத்துலிங்க ரெட்டியார் கிராமமான துறைமங்கலம் அகரங்குடியான (பொளை) ? துறைமங்கலத்தில் இருக்கும் லெட்சுமணரெட்டியர் நல்லப்ப ரெட்டியார், காளத்தி ரெட்டியார், எறமரெட்டியார், பூசாரிசின்னத்தம்பி உடையார், கலிதீர்த் உடையார், ரெட்டை பச்சை உடையார், அகரத்தில் இருக்கும் மகாஜனங்கள் கொண்டையா, நரசைய்யா, லிங்கய்யா, மன்னக்கோன், மறவைக்கோன், பெருச்சிக்கோன் நாங்கள் அனைவரும் ஏறிமங்கள நாட்டிலிருக்கம் கருத்த காங்கையர் , வேலாயுத சோழகர் இவர்களுக்கு மேன் காவல் முறிஎழுதிக் கொடுத்தோம் . இதற்கு வருடம் ஒன்றுக்கு பொருப்பு மதுரை சக்கரம் 10 இந்த 10 பொன்னுக்கு கருத்த காங்கயர் பாதிக்கு 5 பொன்னும் வேலாயுத சோழகர் பாதிக்கு 5 பொன்னம் வருஷா வருஷம் கொடுத்துவருவோமாகவும். இந்த படிக்கு சம்மதித்து நாங்கள் அனைவரும் காவல் முறிகொடுத்தோம்.
சாக்ஷிகள்:- சிறுவாச்சூர் நல்லப்ப ரெட்டியர், பெருமாயிலூ நல்லப்பரெட்டியர்… .நாட்டுக்கணக்கு ரெங்கநாதபிள்ளை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:07 am

3. தாது u வைகாசி t 132 ஏறிமங்கல நாட்டிலிருக்கும் கருத்த காங்கைய அம்பலக்காரர் கீழத் துவாகுடியைச் சேர்ந்த செங்கிப்பட்டியிலிருக்கும் ஓந்தையா மேல்கொண்டார் அம்பலக்காரர், கருவிப்பட்டியிலிருக்கும் ராமையா மேல்கொணடார் அம்பலக்காரர் இவர்களுக்கு கூகையூர்ச் சீமை நாட்டார் செகநாத உடையார் மற்றும் ்உள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன்காவல் பட்டையம் எழுதி கொடுத்தோம். மேன் காவலாவது கூகையூர், மாமந்தூர், வீரபயங்கரம், கருத்துளங்குறிச்சி இந்த கிராமம் நான்குக்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 20. செந்து அளம்பளம் , கிருஷ்ணாபுரம், பெருமாள் பாளையம், சித்தேரி, நரையூர், வடபாதி, அரசங்குடி, சிறுபாக்கம், உறத்துர், திருவலந்துறை, பசும்பலூர், பாதாங்கி, ஐயனார்பாளையம், பில்லாங்குளம், சிறு நிலா, பெறுநிலா, பட்டாக்குறிச்சி, வடகரைப் பாதி, மாவிலிவகை, ஆண்டியமடம், ஆகிய இருபது கிராமத்துக்கு ம் பொருப்பு மதுரைச் சக்கரம் பொன் 90. இந்த 20 கிராமம் உட்பட கிராமம் 24 க்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 10. இந்தப்படிக்குச் சம்மதித்து மேன்காவல் பட்டயம் கொடுத்தோம். . . . .
இதற்குச் சாட்சி:- சிகம்பூர் பெரியஉடையார், சிறுமதுரை திருமேனிப் படையாச்சி.

ஐந்தாம் அதிகாரம் முற்றும்

Sponsored content

PostSponsored content



Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக