ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கில் தோன்றும் விடியல்

4 posters

Go down

மேற்கில் தோன்றும் விடியல் Empty மேற்கில் தோன்றும் விடியல்

Post by kirikasan Thu May 05, 2011 7:31 pm

இகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே
அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே
நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே
சகமே வந்து உறவே கொண்டு சதியே செய்து கொல்லுமே!

வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

எவரோ வந்தார் கரமே தந்தார் இனிதே கனிவாய் மொழியால்
தவறே கொல்லல் தலைவா என்றார் தமிழன் வலிமை கண்டார்
இவரோ உதடில் நகையும் உள்ளத் துறையும் நஞ்சும் கொண்டே
கவரும் பேச்சில் கனிந்தே அள்ளிக் கனலைக் கொட்டிக் கொன்றார்

அருளே கொண்டார் அயலே வாழும் அருமை திருமால் சயனம்
பெருமோ ருயிராய் அமுதம் கடையப் பிறந்தோர் விதியாய் வந்தே
கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

இனமே கொன்று மனதே மகிழ வனமே வாழும் மிருகத்
தனமே கொண்டே பகைவர் வந்தால் சினமே கொள்ளா அற்பத்
தனமாய் உயிரை கொள்நீ யென்று தமிழர் தானும் நில்லாக்
கனலாய் தீயும் நெஞ்சில் கொண்டு களமே புகுந்தார் தவறோ?

பொருளே கொள்ளும் நினைவே கொண்டு போடும் முதலில் உணவும்
இருளே சூழும் போதே திருடக் கொலையும் செய்யும் கயவன்
அரிதே அதுபோல் தருணம் கண்டு அழியத் தமிழர் கொன்றார்
சரியோ தருமம் தலையும் கவிழச் சற்றேன் கண்ணும் அயர்ந்தாய்?

பெரிதோர் நிலைமை மாறும் பாராய் பேசும் அறமும் வெல்லும்
அரிதோர் உயர்வும் ஆகும் ஈழம் அடையும் துயரும் செல்லும்
விரிதோ ருலகில் வெளிச்சம் காணும் விடியல் இல்லைத் தூரம்
தெரிதே பாராய் உதிக்கு மொளியின் தோற்றம் மேற்கின் ஓரம்
***************


தாங்கள் புரிந்து கொள்வதற்காக சின்ன விளக்கம் உ+ம்

கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

கருவாய் உள்ளோர்(கருவிலுள்ள குழந்தைகள்), கட்டிய ணைப்போர் (பிறந்த மழலைகள்), கன்னி (கன்னிப்பெண்கள்), காப்போர் (பெற்றவர்), அன்னை,
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர்(தரு-மரம் போன்ற இறுக்கமான தேகம் கொண்ட
ஆண்கள், இளையோர்) எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார். தீயிலிட்டுக் கொன்றார்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மேற்கில் தோன்றும் விடியல் Empty Re: மேற்கில் தோன்றும் விடியல்

Post by kirikasan Thu May 05, 2011 8:16 pm

சில விளக்கம்:
வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

பேச்சுவார்த்தை ,சமாதானம் என்றுவந்தார்கள். ஆனால் உண்மையில் போராட்டத்தின் வலிமையை முடக்கும் நோக்கத்தில் உலகு திரண்டது.
அதனால் வருமே (உலகம்) தருமே துன்பம் என அறியாது இருமே இருங்கள் என்று வரவேற்றார், ஒளியின் உருவம்போன்ற (ஈழ)வேந்தன் கைதரும் ஓர் உறவை கண்டு ஆனால்....
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மேற்கில் தோன்றும் விடியல் Empty Re: மேற்கில் தோன்றும் விடியல்

Post by கலைவேந்தன் Thu May 05, 2011 8:46 pm

அழகான சந்தத்தில் இழந்து போன பந்தங்களைப்பற்றிய அமுதமான கவிதைகள்... பாராட்டுக்கள் கிரி ..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மேற்கில் தோன்றும் விடியல் Empty Re: மேற்கில் தோன்றும் விடியல்

Post by றினா Fri May 06, 2011 1:09 am

தமிழ் வாழ்க...
தமிழனும் வாழ்க...
அருமையிலும் அருமை


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மேற்கில் தோன்றும் விடியல் Empty Re: மேற்கில் தோன்றும் விடியல்

Post by பூஜிதா Fri May 06, 2011 11:46 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மேற்கில் தோன்றும் விடியல் Empty Re: மேற்கில் தோன்றும் விடியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum