புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
65 Posts - 63%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
1 Post - 1%
viyasan
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
257 Posts - 44%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
17 Posts - 3%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 39 of 43 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41, 42, 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 12, 2011 9:17 am

'ரமலத்துக்கு துரோகம் செய்த நயன்தாரா சீதையா?'-இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு


பிரபுதேவா மனைவி ரமலத்தை பிரியக் காரணமாக இருந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா, என இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தெலுங்கில் தயாராகும் 'ராம ராஜ்ஜியம்' படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

இதில் ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும், வால்மீகி முனிவர் வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராகவும், லட்சுமணன் வேடத்தில் ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர்.

புராண கதை என்பதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா சீதையாக நடிக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

தெலுங்கில் தயாராகும் ராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. பிரபுதேவா திருமணமானவர். மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர். அவர் வாழ்க்கையில் புகுந்து ரம்லத்துக்கு துரோகம் செய்தவர் நயன்தாரா.

எனவே சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தகுதி இல்லை. அவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் படத்தை திரையிடவிடாமல் தடுப்போம். ஆந்திர மக்களும் இதை புறக்கணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு உள்ளார்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 12, 2011 9:17 am

செல்வராகவன் - ஆண்ட்ரியா லடாய்... தனுஷுடன் நடிக்க மறுப்பு!

தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை ஆண்ட்ரியா. இயக்குநர் செல்வராகவன் எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார் ஆண்ட்ரியா. எனவே ரிச்சா கங்கா பாத்யாய் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

இந்த நிலையில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.

ஆனால் படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்போது நடிக்க மறுத்து வெளியேறியுள்ளார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரிச்சாதான் ஒஸ்தி படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பவர்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:38 am

அழகர்சாமியின் குதிரை - திரை விமர்சனம்

பாஸ்கர் சக்தி எழுதிய நாவலைத் தழுவி, சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘அழகர்சாமியின் குதிரை’. இசைஞானி இளையராஜாவின் இசை ஆதிக்கம் படத்தின் ஆரம்பித்திலிருந்தே துவங்கி விடுகிறது.

தேனி அருகிலுள்ள மல்லயபுரம் கிராமத்தில் உள்ள அழகர்சாமி கோவிலில் ஆண்டுக்கொரு முறை திருவிழா நடக்கும். அந்த திருவிழாவின் போது அழகர்சாமி, அவருடைய மரக்குதிரையில் ஏறி ஊர்முழுக்க பவனி வருவார். அப்படி வந்தால்தான் ஊருக்குள் மழை பொழியும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கை.

மூன்று வருடத்திற்குப் பிறகு, அக்கோவிலில் திருவிழா நடக்க இருக்கும் சமயத்தில் அழகர்சாமியின் மரக்குதிரை, திடீரென்று காணாமல் போய்விடுகிறது. இதனால் திருவிழா தடைபட, கலக்கமடையும் கிராம மக்கள் அந்த மரக்குதிரையை தேடிச் சலித்து விட்டு, கடைசியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றனர்.

அதனைக் கண்டுபிடிக்க ஒரு போலிஸ்காரரே அக்கிராமத்திற்கே வருகிறார். அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மலையாள மந்திரவாதி ஒருவர் குருட்டாம் போக்கில் ‘அக்குதிரை காட்டில் இருக்கிறது’ என்று சொல்ல, குதிரையைத் தேடி காட்டுக்குள் செல்கின்றனர்.

அதே சமயத்தில், மல்லயபுரத்திற்கு அருகே உள்ள அகமலை கிராமத்தில் குதிரையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் அழகர்சாமியாக வரும் அப்புக் குட்டி. அவரது குதிரை காட்டிற்குள் மேய்ந்து கொண்டிருக்க, அங்கு வரும் ஊர் மக்கள் அப்புக்குட்டியின் குதிரையை, மரக்குதிரைதான் கடவுள் அருளால் நிஜக்குதிரையாகியிருக்கிறது என நினைத்து, அக்குதிரையை அழைத்துச் சென்று விடுகின்றனர். திருவிழாவும் ஆரம்பித்து விடுகிறது.

தன் குதிரையைக் காணமல் தவிக்கும் அப்புக் குட்டி, எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து விட்டு கடைசியில் மல்லயபுரம் கோவிலில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அவரது குதிரையை கூட்டிச் செல்ல முயல்கையில் ஊர் மக்கள் அவரை அடித்து அனுப்புகின்றனர். அவர் தன் குதிரையை மீட்டுத் தருமாறு காவல் துறையில் புகார் தருகிறார்.

இதனால் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை தீவிரமாகிறது. அழகர் சாமியின் மரக்குதிரை கிடைத்ததா? அப்புக்குட்டியின் குதிரை மீட்கப்பட்டதா? ஊர் திருவிழா நடந்ததா? என்பதை மிகவும் சுவாரசியமாகக் காட்டி, கடைசியில் எதிர்பாராத திருப்பத்துடன் சுபம் போடுகிறார்கள்.

குதிரைக்காரராக வரும் அழகர்சாமி பாத்திரத்தில் அப்புக் குட்டி. அந்த பாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வு. தன் குதிரை மீது பாசம் வைத்திருப்பதாகட்டும், ஊர்மக்களின் முன்பு தன் குதிரையை மீட்க போராடுவதாகட்டும் மனிதர் வெள்ளந்தியாய் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சரண்யா மோகன். இவரும் தன் பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண் எப்படியிருப்பார், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண் எப்படியிருப்பார் என உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஊர் தர்மகர்த்தாவின் மகனாக வரும் கேரக்டர் மனதில் நிற்கும் கேரக்டர். கிராமத்து மக்களின் மூட நம்பிக்கைகளை சாடும் ஒற்றை மனிதாராக வருகிறார். ‘சாமி இருக்குதுன்னா எப்படிடா மூணு வருஷம் திருவிழா நடக்காம போச்சு, எப்படிடா குதிரை காணாம போச்சு’ என நெத்தியடியாய் கேட்கிறார்.

மலையாள மந்திரவாதியாக வரும் ‘மேனஜர்’ கிருஷ்ணமூர்த்தியும், குதிரையை கண்டுபிடிக்க வரும் போலீஸ்காரராக சூரியும் நடித்திருப்பது மட்டுமின்றி, படத்தின் காமெடி பகுதியை கவனித்துக் கொள்கின்றனர்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிக நேர்த்தி. கிராமத்தின் சூழல், திருவிழாக் கோலம், ஊர் பெரிசுகளின் அடாவடிகள் என அனைத்தையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

இளையராஜாவின் இசை இப்படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் தன் இசை ராஜாங்கத்தை நடத்தியிருக்கிறார். ‘பூவைக் கேளு... காத்தைக் கேளு... என்னைப் பத்தி சொல்லும்...’ காதில் ரீங்காரமிடும் பாடலாகும்.

இப்படத்தின் கதாநாயகனே இப்படத்தின் திரைக்கதைதான். எதார்த்தமான கதையை, திரைவடிவமாக்கியிருப்பதற்கு சுசீந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கிராமத்தில் உள்ள நடைமுறைகள், அவர்களூடே அவர்களையே அறியாமல் பொதிந்து கிடக்கும் மூடபழக்கங்கள் என அனைத்தையும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

“அந்த குதிரையை மை போட்டு நான் கண்டு பிடிக்கிறேன்” என்று மந்திரவாதி கிருஷ்ணமூர்த்தி சொல்ல, ஒரு சிறுவன் “உன்னிடமிருந்து ஒரு மண்டை ஓட்டை எடுத்திருக்கேன். அதையே உன்னால கண்டுபிடிக்க முடியல.. நீ மரக்குதிரையை கண்டுபிடிப்பியா..?’’ என்று கிண்டல் செய்கிறான்.

இது அறியாமை மற்றும் மூட நம்பிக்கைளில் அடைந்து கிடக்கும் மக்களுக்கு சொல்வது போல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நகைச்சுவையில் ஊசி ஏற்றிச் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.

அப்புக்குட்டிக்கு ஏற்ற ஜோடியாக சரண்யா மோகன் இல்லை. அவருக்கு பதில் ஏதேனும் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

நடிகைகளின் சதையை நம்பாமல், கதையை நம்பி படம் எடுத்த்தற்கும், பிரபல கதாநாயகர்களுக்காக படத்தை எடுக்காமல் கதையை கதாநாயகனாக்கியதற்க்காகவும் இயக்குனர் சுசீந்திரனுக்கு பலமான கைத்தட்டல் கொடுக்கலாம்.

எதார்த்தமான கிராமத்து வாழ்க்கையை, திருவிழா கோலத்தில் காண ஏற்ற படம் இந்த ‘அழகர்சாமியின் குதிரை’.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:39 am

எதார்த்தங்களோடு அழகர்சாமியின் குதிரை!

"வெண்ணிலா கபடிகுழு", "நான் மகான் அல்ல" போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் அடுத்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் தான் "அழகர்சாமியின் குதிரை". காணாமல் போகும் குதிரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், 2005ம் ஆண்டில் பாஸ்கர் சக்தி ஒரு வார இதழில் எழுதிய கதையே இப்போது படமாக வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு பிறகு, மல்லையாபுரம் சென்ட்ரல் ஸ்டேஷன் போன்ற இடங்களில் சூட்டிங் நடத்தியிருக்கின்றனர்.

படம் ரொம்பவே எளிமையாக எதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக ரூ.1லட்சத்திற்கு மேல் புதிய உடைகளை அந்த கிராமத்து மக்களுக்கு வாங்கி கொடுத்து, அவர்கள் பயன்படுத்திய பழைய உடைகளை வாங்கி படப்பிடிப்புக்கு பயன்படுத்தியுள்ளனர். படம் முழுக்க பசுமை போர்த்திய காட்சிகளை இதயத்தை இதமாக்கியிருந்தாலும், இசைக்சேர்ப்புக்கு ஹங்கேரியில் இருந்து 5பேரை வரவழைத்து பின்னணி இசையை பின்னி எடுத்தி விட்டாராம் இசைஞானி இளையராஜா.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:39 am

பாட்டு எழுதித் தள்ளும் சிம்பு.!

சிம்பு தான் இயக்கி நடிக்கும் படங்களில் எப்போதும் ஒரு பாடலையாவது எழுதி விடுவார். ஏற்கனவே "லூஸுப் பெண்ணே" , "எவன்டி உன்ன பெத்தான்" போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

சிம்பு நடித்து வெளிவந்துள்ள 'வானம்' படத்திற்காக எழுதிய "எவன்டி உன்ன பெத்தான்" பாடல் இப்போது இந்தியிலும் ஆல்பமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த பாடல்களைப் போலவே தான் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் 'போடா போடி' படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.

நான் கரக்ட் ஆனவன், ரொம்ப நல்லவன்
CONFUSION இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிட்டேன்
21 வயசு வரைக்கும் வேலைக்கு போய் வேலையே லவ் பண்ணிட்டேன்
இப்போ ஒரு பொண்ணா லவ் பண்லான்னும் தோணுதுங்க மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவ்வளவு நாள் ஜாலியா இருந்துடேன்னா ஒரு பொண்ணாலா காலி ஆய்டேன்னா
ஒரு பொண்ணாலா காலி ஆய்டேன்னா அய்யோ
So CONFUSIONங்க தலை எல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க கொஞ்சம் அட்வைஸ் சொல்லுங்க
So லவ் பண்ணாலாமா வேண்டாமா சொல்லுங்க
லவ் பண்ணாலாமா வேண்டாமா
லவ் பண்ணலாமா வேண்டாமா லவ் வேண்டாமா பண்ணலாமா லவ்

என்று போகிறது அந்த பாடல்.

அதைப் போலவே தான் இயக்கி நடிப்பதாக இருக்கும் 'வாலிபன்' படத்திற்காகவும் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடல்

நான் உன்ன லவ் பண்றேன் நீ என்னை லவ் பண்றீயா
அப்படின்னு நான் உன்னை கேட்க மாட்டேன்

ஏன்னா நீயும் லவ் பண்ணலேனு சொன்னா நான் தாங்க மாட்டேன்
ஏன்னா நீயும் லவ் பண்ணலேனு சொன்னா நான் தாங்க மாட்டேன்

நீ என்னை கட்டிப்பியா ஏன் பிள்ளையா பெத்துப்பியா
அப்படின்னு நான் உன்னை கேட்க மாட்டேன்

ஏன்னா நீயும் பெத்துக்க மாட்டேன்னு சொன்னா நான் தாங்க மாட்டேன்
ஏன்னா நீயும் பெத்துக்க மாட்டேன்னு சொன்னா நான் தாங்க மாட்டேன்

என்று போகிறது அந்த பாடல். தான் எழுதி பாடும் பாடல்கள் யாவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவது போலவே இந்த பாடலும் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையுடம் இருக்கிறாராம் சிம்பு.




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:41 am

அமீரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "கண்ணபிரான்"


"ராம்", "மெளம் ***பேசியதே", "பருத்திவீரன்" போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய டைரக்டர் அமீர், தற்போது "ஜெயம்" ரவியை வைத்து "ஆதி பகவான்" என்ற படத்தை இயக்கி வருகிறார். "எங்கேயும் காதல்" படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் இந்தபடத்தில் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து வருகிறாராம். இந்தபடத்தை முடித்த பின்னர் அமீர், அடுத்து "கண்ணபிரான்" என்ற படத்தை இயக்க இருக்கிறர். இப்படத்தின் நாயகனாக நமது இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:42 am

'முழுகாமல்' இருக்கிறார் ஷில்பா ஷெட்டி!

நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் அவரும், கணவர் ராஜ் குந்த்ராவும் படு சந்தோஷமாகியுள்ளனர்.

நடிகையாக ஷில்பாவின் கிராக்கி மங்கிப் போய் வெகு காலமாகி விட்டது. இப்போது அவர் தனது காதல் கணவருடன் லண்டனில் குடித்தனம் செய்து வருகிறார். கூடவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் புதிய சந்தோஷமாக கர்ப்பமாகியிருக்கிறார் ஷில்பா. 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணமானது. தற்போது இவர்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு குட்டிப் பாப்பா வரவுள்ளது.

ஷில்பாவுக்கு இது முதல் குழந்தையாகும். அதேசமயம், ராஜ் குந்த்ராவுக்கு இது 2வது குழந்தையாகும். ராஜ் குந்த்ராவின் முதல் மனைவி கவிதா. இவர்களுக்கு டலீனா என்ற பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு இப்போது 6 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குழந்தைச் செல்வம் குறித்து ஷில்பா அளித்திருந்த ஒரு பேட்டியில், எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். குழந்தைப் பேறுக்காக காத்திருக்கிறேன். குறைந்தது 2 குழந்தைகளாவது பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக தாயாகியிருக்கிறார் ஷில்பா.

ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்திற்காக தனது மனைவி கவிதாவை உதறித் தள்ளினார் குந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:43 am

காமசூத்ரா விளம்பர நடிகைக்கு திருமணம்!

காமசூத்ரா விளம்பரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சுவேதா மேனன் தனது காதலனை திருமணம் செய்யவிருக்கிறார். மலையாளத்தில் அனஸ்வரம் என்ற படத்தில் மம்முட்டி ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சுவேதா மேனன். தமிழில் விரைவில் வெளியாகவிருக்கும் தாரம் படத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் சுவேதா மேனனனுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். மும்***பையில் பிறந்து வளர்ந்த சுவேதா மேனன், அங்குள்ள ஒரு வார இதழில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஸ்ரீவத்சன் மேனனை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சுவேதா மேனன்- ஸ்ரீவத்சவ் மேனன் திருமணம் வருகிற 18ம்தேதி நடைபெற உள்ளது.

நடிகை சுவேதா மேனன் 1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் கலந்து கொண்ட இந்திய அழகி போட்டியில் 3வது இடம் பிடித்தவர்தான் இந்த சுவேதா சென் என்பது கூடுதல் தகவல்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:44 am

ஹன்சிகாவை மிரட்டும் ஆந்திர புயல் ரிச்சா!

தமன்னா புகழ் பாடிய தமிழ்சினிமா, சிலபல காரணங்களால் டாப்ஸியை புகழோ புகழென்று புகழ்ந்தது. அதன் பிறகு அவரையும் கைகழுவிவிட்டு ஹன்சிகா பக்கம் திரும்பியது பார்வை. இப்போது ஹன்சிகாவை மிரட்ட ஆந்திராவில் இருந்து களமிறங்கியிருக்கிறது ஒரு புயல். அவர் பெயர் ரிச்சா. ஆந்திராவில் இருந்து. முதலில் அம்மணியின் அழகை நம்பி அழைத்தவர் செல்வராகவன்தான். தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆன்ட்ரியா அதிரடியாக நீக்கப்பட்டு அங்கே அமர்த்தப்பட்டார் ரிச்சா.

செல்வராகவனைத் தொடர்ந்து சிம்புவும் தனது அடுத்த படமான ஒஸ்தியில் அம்மணியை புக் பண்ணி விட்டாராம். ஹன்சிகா வந்த புதிதில் இருந்த எழுச்சி இப்போது இந்த ரிச்சாவுக்கும் இருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்! நிலைமையை உணர்ந்த ரிச்சா, சென்னையில் ஒரு மேனேஜரை நியமித்து கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

ஹன்சிகா மோகம் சரிந்ததற்கு காரணம், அவர் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் என இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்ததால்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
நன்றி TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:58 am

பிரேசில் திரைப்படவிழாவில் பாண்டியராஜன

சிறந்த நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன் முதன்முறையாக "ஹெல்ப்" என்ற ஆங்கில குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 20ம் தேதி பிரேசிலில் நடக்கும் ஆர்ட்டெக்கோ பிலிம் விழாவில் பங்கேற்க இருக்கிறது.

இதுகுறித்து பாண்டியராஜன் கூறியதாவது, என்னுடைய ஹெல்ப் படம் பிரேசில் விழாவில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஹெல்ப் படம் 11நிமிடம் ஓடக்கூடியது. பொதுவாக பாண்டியராஜன் என்றால் ***காமெடி பண்ணுபவன் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். குறும்படம் இயக்குவது இதுமுதல் முறையல்ல. ஏற்கனவே தமிழில் மூன்று குறும்படங்கள் இயக்கியுள்ளேன். முதன்முதலில் நான் இயக்கிய தமிழ் குறும்படமான மகன் படம், குழந்தை தொழிலாளர்கள் பற்றிய படம். இப்படம் ஐதராபாத்தில் நடந்த சர்***வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் பங்கேற்றது. மேலும் இந்தபடம் 35 மொழிகளில் டப் செய்யப்பட்டது. அதன்பின்னர் இரு துளிகள் என்ற குறும்படத்தை இயக்கினேன். இப்படம் போலியா தடுப்பு பற்றிய விழிப்புணர்வு படம், அதற்கடுத்து உடலுறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் பற்றிய குறும்படத்தை இயக்கினேன். இந்த இரண்டு படங்களும் லக்னோவில் நடந்த பிலிம் திருவிழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்போது இரண்டு குறும்படம்ங்கள் இயக்குவது தொடர்பான வேலையில் இறங்கியுள்ளேன். தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு குறும் படங்களை இயக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 39 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 39 of 43 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41, 42, 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக