Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters
Page 33 of 43
Page 33 of 43 • 1 ... 18 ... 32, 33, 34 ... 38 ... 43
சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
தள்ளிப் போன கோ திரைப்படம்
-ஹாரிஸ்தான் காரணமா?
இரண்டு கோடிகளுக்கும் மேல் சம்பளம். அதனால்தானோ என்னவோ இரண்டிரண்டு வரிகளாக கம்போஸ் செய்து ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்புவாராம் அவர். அவற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போதே மேலும் இரண்டு வரிகள் வந்து சேரும். இப்படி இன்ஸ்ட்டன்ட் இடியாப்பம் சுட்டாலும், ஒவ்வொன்றும் ஹிட்டோ ஹிட்¢ என்பதுதான் அவரது அட்ராக்ஷன். இப்படி வருஷத்துக்கு நாலே படம். பதினாறே பாட்டு. சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் என்ற பெரும்பேறு. இப்படியெல்லாம் ஹை டெக் வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருப்பது நம்ம ஹாரிஸ் ஜெயராஜ்தான்.
நல்ல டிபன் வேணும்னா நாலு தெரு சுத்துனாலும் தப்பிலை என்கிற கான்சப்ட்தானே எல்லா இயக்குனர்களுக்கும். அதனால்தான் இவர் காட்டிலும் செம மழை. போகட்டும்... விஷயத்துக்கு வருவோம். இம்மாதம் வெளியாக வேண்டிய கோ திரைப்படம் என்ன காரணத்தால் தள்ளிப் போனது?
கிரிக்கெட் மேட்ச், எக்ஸாம் ஃபீவர் என்று என்னென்னவோ காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தாலும், நிஜ காரணம் ஹாரிஸ்தானாம். படத்திற்கு இன்னும் ரீரெக்கார்டிங் பண்ணி முடிக்கவில்லையாம் அவர். இதை வெளியில் சொல்ல முடியாமல்தான் கிரிக்கெட் மீது பழியை போடுகிறார்களாம்.
TMT
-ஹாரிஸ்தான் காரணமா?
இரண்டு கோடிகளுக்கும் மேல் சம்பளம். அதனால்தானோ என்னவோ இரண்டிரண்டு வரிகளாக கம்போஸ் செய்து ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்புவாராம் அவர். அவற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போதே மேலும் இரண்டு வரிகள் வந்து சேரும். இப்படி இன்ஸ்ட்டன்ட் இடியாப்பம் சுட்டாலும், ஒவ்வொன்றும் ஹிட்டோ ஹிட்¢ என்பதுதான் அவரது அட்ராக்ஷன். இப்படி வருஷத்துக்கு நாலே படம். பதினாறே பாட்டு. சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் என்ற பெரும்பேறு. இப்படியெல்லாம் ஹை டெக் வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருப்பது நம்ம ஹாரிஸ் ஜெயராஜ்தான்.
நல்ல டிபன் வேணும்னா நாலு தெரு சுத்துனாலும் தப்பிலை என்கிற கான்சப்ட்தானே எல்லா இயக்குனர்களுக்கும். அதனால்தான் இவர் காட்டிலும் செம மழை. போகட்டும்... விஷயத்துக்கு வருவோம். இம்மாதம் வெளியாக வேண்டிய கோ திரைப்படம் என்ன காரணத்தால் தள்ளிப் போனது?
கிரிக்கெட் மேட்ச், எக்ஸாம் ஃபீவர் என்று என்னென்னவோ காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தாலும், நிஜ காரணம் ஹாரிஸ்தானாம். படத்திற்கு இன்னும் ரீரெக்கார்டிங் பண்ணி முடிக்கவில்லையாம் அவர். இதை வெளியில் சொல்ல முடியாமல்தான் கிரிக்கெட் மீது பழியை போடுகிறார்களாம்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
ராணாவில் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை பறித்த தீபிகா மீது பெரும் கோபத்தில் இருக்கிறார் அசின் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் அசின்.
பாலிவுட்டில் கஜினி என்ற ஒரேயொரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு இன்னும் முன்னணி நாயகி என்று வலம் வருபவர் அசின். தீபிகா படுகோனுக்குப் போட்டியாக இவரை மீடியா சித்தரிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழ் - இந்தியில் வெளியாகும் ரஜினியின் ராணா படத்தில் நாயகியாக முதலில் பேசப்பட்டவர் அசின்தான்.
ஆனால் பல்வேறு காரணங்களால் அசினை தள்ளி வைத்துவிட்டு தீபிகா படுகோனேயை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.
இதனால் தீபிகா படுகோன், அசின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பாலிவுட் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை மேற்கோள் காட்டி அசினிடம் கேட்டபோது, "சக நடிகர்-நடிகைகளுடன் நான் நட்பாகவே பழகுகிறேன். யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. தீபிகா படுகோனேக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். நீ உயர்வா? நான் உயர்வா? என்ற சிந்தனைகள் எங்களுக்குள் எழுந்ததே இல்லை.
அதே போல ஜெனிலியாவுடனும் நல்ல நட்பு உள்ளது. என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் வருகின்றன. யாரையும் நான் காதலிக்கவில்லை.
அக்ஷய்குமாருடன் 'ஹவுஸ்புல்- 2' படத்தில் நடிக்க உள்ளேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. ராணாவில் நடிக்க முடியாமல் போனது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. மற்றபடி தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வராததால் நடிக்கவில்லை. இவற்றில் தீபிகாவின் வாய்ப்பு எதையும் நான் பறிக்கவில்லை..", என்றார்.
தட்ஸ் தமிழ்
பாலிவுட்டில் கஜினி என்ற ஒரேயொரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு இன்னும் முன்னணி நாயகி என்று வலம் வருபவர் அசின். தீபிகா படுகோனுக்குப் போட்டியாக இவரை மீடியா சித்தரிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழ் - இந்தியில் வெளியாகும் ரஜினியின் ராணா படத்தில் நாயகியாக முதலில் பேசப்பட்டவர் அசின்தான்.
ஆனால் பல்வேறு காரணங்களால் அசினை தள்ளி வைத்துவிட்டு தீபிகா படுகோனேயை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.
இதனால் தீபிகா படுகோன், அசின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பாலிவுட் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை மேற்கோள் காட்டி அசினிடம் கேட்டபோது, "சக நடிகர்-நடிகைகளுடன் நான் நட்பாகவே பழகுகிறேன். யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. தீபிகா படுகோனேக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். நீ உயர்வா? நான் உயர்வா? என்ற சிந்தனைகள் எங்களுக்குள் எழுந்ததே இல்லை.
அதே போல ஜெனிலியாவுடனும் நல்ல நட்பு உள்ளது. என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் வருகின்றன. யாரையும் நான் காதலிக்கவில்லை.
அக்ஷய்குமாருடன் 'ஹவுஸ்புல்- 2' படத்தில் நடிக்க உள்ளேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. ராணாவில் நடிக்க முடியாமல் போனது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. மற்றபடி தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வராததால் நடிக்கவில்லை. இவற்றில் தீபிகாவின் வாய்ப்பு எதையும் நான் பறிக்கவில்லை..", என்றார்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.
ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.
மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.
இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.
இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, 'உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள்' என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்.
தட்ஸ் தமிழ்
ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.
மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.
இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.
இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, 'உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள்' என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
செல்வராகவன் - கமல் இணையவிருந்த விஸ்வரூபம் படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்போது கமல் உடனடியாக நடிக்கும் படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ட்ராபிக்கின் ரீமேக்கில். ஒரிஜினலாக இந்தப் படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளைதான் இந்த ரீமேக்கையும் இயக்கவிருக்கிறார்.
தான் அடுத்து நடிக்கப் போகும் படம் இந்த ட்ராபிக் ரீமேக்தான் என்பதை கமல்ஹாஸனும் நேற்று உறுதிப்படுத்தினார். கேரளாவில் நடந்த இந்தப் படத்தின் 100வது நாள் விழாவில் பங்கேற்ற அவர், இந்தப் படம் அப்படியே என்னை ஈர்த்துவிட்டது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், இதே தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்ற விரும்புகிறேன், என்றார்.
இதன் மூலம், செல்வராகவன் படத்தில் நடிப்பது இப்போதைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் கமல்.
அதுமட்டுமல்ல, படத்தை எப்போது ஆரம்பிக்கலாம் என்று கேட்க கமல் அலுவலகத்துக்குப் போன செல்வராகவனை வெளியிலேயே காக்க வைத்து அனுப்பிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் அடிபடுகிறது!!
தட்ஸ் தமிழ்
இப்போது கமல் உடனடியாக நடிக்கும் படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ட்ராபிக்கின் ரீமேக்கில். ஒரிஜினலாக இந்தப் படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளைதான் இந்த ரீமேக்கையும் இயக்கவிருக்கிறார்.
தான் அடுத்து நடிக்கப் போகும் படம் இந்த ட்ராபிக் ரீமேக்தான் என்பதை கமல்ஹாஸனும் நேற்று உறுதிப்படுத்தினார். கேரளாவில் நடந்த இந்தப் படத்தின் 100வது நாள் விழாவில் பங்கேற்ற அவர், இந்தப் படம் அப்படியே என்னை ஈர்த்துவிட்டது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், இதே தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்ற விரும்புகிறேன், என்றார்.
இதன் மூலம், செல்வராகவன் படத்தில் நடிப்பது இப்போதைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் கமல்.
அதுமட்டுமல்ல, படத்தை எப்போது ஆரம்பிக்கலாம் என்று கேட்க கமல் அலுவலகத்துக்குப் போன செல்வராகவனை வெளியிலேயே காக்க வைத்து அனுப்பிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் அடிபடுகிறது!!
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
விஜயின் மார்க்கெட் சரிந்துவிட்டதா ? இல்லையா
என்னங்க வழமைபோல் இந்த ரசிகனுக்கு வேறவேலை இல்லை என்று சலித்துக்கொள்வது தெரிகிறது.போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என எமது கடமையை நாம் செய்துதானே ஆகவேண்டும். அண்மைகாலமாக விஜயின் மார்க்கெட் கிழ் இறங்கிவிட்டது என கதை அடிபடுகிறது.அதை பற்றித்தான் இங்கே அலசி ஆராயப்போறோம்.
இளையதளபதி, பூவே உனக்காக என்னும் படத்தில் தொடங்கி போக்கிரிவரை பட்டைய கிளப்பிக்கொண்டு இருந்தவர்.பின்னர் தொடர் தோல்விகள். (முழுமையாக தோல்வி என கூறமுடியாது).
அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரகாசிக்கவில்லை.சூரியன் இல்லாத போது நட்சத்திரங்களுக்கு கொண்டாட்டம் என்பது போல விஜயின் பிரகாசிப்பு இல்லாத இந்த மூன்று ஆண்டுகளில் விஜய்க்கு கிழ் இருந்தவர்கள் மேலே வந்துவிட்டார்கள்.அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் சூர்யா.
ஆரம்பத்தில் விஜய்க்கு போட்டியாக இருந்தவர் அஜித்.அவரும் விஜயும் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர்.எனினும் விஜய் ஒரு படி மேல் ஏறி வசூலில் பாக்ஸ்ஆபிஸை நிரப்பினார்.தற்போது விஜய்க்கு போட்டியாக அஜித்துடன் சூர்யாவும் இணைந்து கொண்டார.ஆரம்பத்தில் மொக்கை படங்களை தந்த சூர்யா பின்னர் கஜினி,காக்க காக்க என நல்ல படங்களை தந்தார்.தற்போது மூன்று ஆண்டுகளாக வெற்றியை தந்த இவர் சமீபமாக ரத்த சரித்திரம் என்னும் குப்பையை தந்தார்.
இவை எல்லாம் இருக்கட்டும் நாம் இனி விசயத்திக்கு வருவோம்.
விஜய்க்கு மார்க்கெட் போய்விட்டது என கூறுவோர் முன்வைக்கும் காரணங்கள் என்ன :-
விஜயின் இறுதி ஆறு படங்களும் தோல்வியடைந்துள்ளது இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.இது மட்டுமே அவர்கள் முன்வைக்கும் காரணம்.
விஜயின் இறுதியாக வந்த ஆறு படங்களும் தோல்வி என்பவர்களுக்கு சரியான கணக்கு தெரியவில்லை போல் தோன்றுகிறது.விஜய் இறுதியாக நடித்த ஆறு படங்களாவன சுறா , வேட்டைகாரன் ,வில்லு , குருவி, அழகியதமிழ்மகன் , போக்கிரி என்பனவாகும்.போக்கிரி திரைப்படம் மெகா கிட் படம் என எல்லோரும் அறிந்த விடயம் ஆகும்.225 நாள் ஓடி வசூலில் சாதானை படைத்தது.
அழகியதமிழ்மகன் தோல்வியை தழுவினாலும் அதன் பின் வந்த குருவி 150 நாள் சென்னையில் ஓடி வெற்றி விழா கொண்டாடியது . அத் திரைப்படம் கில்லி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது. கில்லியின் வசூலினை இப்படம் தாண்டாத காரணத்தால் 150 நாள் ஓடியும் இப்படத்தை சிலர் தோல்வி படம் என்றே கூறுகின்றனர்.போக்கிரி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது வில்லு .இத்திரைப்படம் போக்கிரியினை போல் வசூலில் சாதனை படைக்கவில்லை.அதன் பின் வந்த வேட்டைக்காரன் திரைப்படம் வசூலில் கிட்டானது.விஜயின் இறுதி 6 படங்கள் தோல்வி என்று சொல்பவர்களை என்ன என்று சொல்வது
விஜய்க்கு மார்க்கெட் சரியவில்லை என நிருபிக்கும் ஆதாரங்கள்:-
சமீபத்தில் நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள்.தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும்.இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்
அடுத்து விஜயின் கால்ஷீட் கிடைத்து விட்டால் அவருக்கு லாட்டரி சீட் அடித்த மாதிரிதான் என்கிறார்கள் ஃபாக்ஸ் ஆபீஸ் இடைநிலைத் தரகர்கள். காரணம் விஜயின் படம் தோல்வி அடைந்தாலுமே கூட செகண்ட் ரிலீஸ் எனப்படும் இரண்டாம் கட்ட வெளியீட்டில் விஜயின் பழைய படங்கள் இப்போது இரண்டு வாரம் ஓடி பணம் சம்பாதித்து விடுவதுதான் என்கிறார்கள். இரண்டாம் கட்ட வெளியீட்டில் இன்று எம்.ஜியார், ரஜினி படங்களை வெள்ளிகிழமை போட்டால் அடுத்து வரும் வியாழன்வரை ஒருவாரம் குறையாமல் வசூல் எடுக்கலாம்.இப்பொது மூன்றாவதாக விஜய் படங்களுக்கு மட்டும்தான் இந்த மவுசாம். தவிர திருட்டு வீசிடி சந்தையில் ரஜினியை விடவும் விஜய்க்குத்தான் பிஸ்னஸ் என்கிறார்கள் பர்மா பஜார் பைரேட்டர்கள். படுதோல்வி அடைந்த சுறா, தமிழ்நாடு, பாண்டிச்செரி, ஏனாம், மங்களூர், மும்பை ஆகிய பைரசி சந்தையில் 4 கோடி கொட்டி கொடுத்திருக்கிறது என்று ரேண்டம் சர்வே எடுத்திருகிறார்கள் சென்னை லயோலா கல்லூரியின் புள்ளியியல் துறை மாணவர்கள். அந்த அளவுக்கு விஜய் மார்கெட் வலிமையாக உள்ளது.
அண்மையில் பிரபல ஜோஸ்ஆலுக்காஸ் நிறுவனம் தமது வர்த்தக தூதுவர் ஆக விஜயினை தெரிவு செய்துள்ளனர்.இவ்வாறு தெரிவு செய்தமைக்கு காரணம் என தெரியுமா.தமிழ் நாட்டில் சந்து பொந்தெல்லாம் ரீச்சாகும் ,மக்களை விரைவில் கவரும் நடிகர் நம்ம தளபதிதனாம்.
இந்தவருடம் சிறந்த அபிமான நடிகர் விருதை இசையருவி இளையதளபதி விஜய்க்கு வழங்கியது.அத்துடன் விஜய் டிவியின் வாக்கெடுப்பில் சிறந்த அபிமான நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு ஓபனிங் மாஸ் உள்ள ஒரே நடிகர் நம்ம விஜய் என கூறுதல் மிகையாகாது.
இளையதளபதி விஜய்க்காக பல பேஸ் புக் பக்கங்கள் உள்ளன,எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவுக்கு பல வலைத்தளங்களும்,ப்ளாக்குகளும் உள்ளன.உண்மையில் நீங்கள் தோல்வி என கருதும் சுறாவுக்கு பின்னர்தான் இவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.பாருங்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் என்னும் மாபெரும் சக்தியை உடைய நம்ம தளபதியின் மார்க்கெட் சரிந்துவிட்டது என கூறலாமா??
எங்க போறீங்க உங்க கருத்துக்களை எழுதிவிட்டு போங்க-
TMT
என்னங்க வழமைபோல் இந்த ரசிகனுக்கு வேறவேலை இல்லை என்று சலித்துக்கொள்வது தெரிகிறது.போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என எமது கடமையை நாம் செய்துதானே ஆகவேண்டும். அண்மைகாலமாக விஜயின் மார்க்கெட் கிழ் இறங்கிவிட்டது என கதை அடிபடுகிறது.அதை பற்றித்தான் இங்கே அலசி ஆராயப்போறோம்.
இளையதளபதி, பூவே உனக்காக என்னும் படத்தில் தொடங்கி போக்கிரிவரை பட்டைய கிளப்பிக்கொண்டு இருந்தவர்.பின்னர் தொடர் தோல்விகள். (முழுமையாக தோல்வி என கூறமுடியாது).
அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரகாசிக்கவில்லை.சூரியன் இல்லாத போது நட்சத்திரங்களுக்கு கொண்டாட்டம் என்பது போல விஜயின் பிரகாசிப்பு இல்லாத இந்த மூன்று ஆண்டுகளில் விஜய்க்கு கிழ் இருந்தவர்கள் மேலே வந்துவிட்டார்கள்.அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் சூர்யா.
ஆரம்பத்தில் விஜய்க்கு போட்டியாக இருந்தவர் அஜித்.அவரும் விஜயும் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர்.எனினும் விஜய் ஒரு படி மேல் ஏறி வசூலில் பாக்ஸ்ஆபிஸை நிரப்பினார்.தற்போது விஜய்க்கு போட்டியாக அஜித்துடன் சூர்யாவும் இணைந்து கொண்டார.ஆரம்பத்தில் மொக்கை படங்களை தந்த சூர்யா பின்னர் கஜினி,காக்க காக்க என நல்ல படங்களை தந்தார்.தற்போது மூன்று ஆண்டுகளாக வெற்றியை தந்த இவர் சமீபமாக ரத்த சரித்திரம் என்னும் குப்பையை தந்தார்.
இவை எல்லாம் இருக்கட்டும் நாம் இனி விசயத்திக்கு வருவோம்.
விஜய்க்கு மார்க்கெட் போய்விட்டது என கூறுவோர் முன்வைக்கும் காரணங்கள் என்ன :-
விஜயின் இறுதி ஆறு படங்களும் தோல்வியடைந்துள்ளது இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.இது மட்டுமே அவர்கள் முன்வைக்கும் காரணம்.
விஜயின் இறுதியாக வந்த ஆறு படங்களும் தோல்வி என்பவர்களுக்கு சரியான கணக்கு தெரியவில்லை போல் தோன்றுகிறது.விஜய் இறுதியாக நடித்த ஆறு படங்களாவன சுறா , வேட்டைகாரன் ,வில்லு , குருவி, அழகியதமிழ்மகன் , போக்கிரி என்பனவாகும்.போக்கிரி திரைப்படம் மெகா கிட் படம் என எல்லோரும் அறிந்த விடயம் ஆகும்.225 நாள் ஓடி வசூலில் சாதானை படைத்தது.
அழகியதமிழ்மகன் தோல்வியை தழுவினாலும் அதன் பின் வந்த குருவி 150 நாள் சென்னையில் ஓடி வெற்றி விழா கொண்டாடியது . அத் திரைப்படம் கில்லி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது. கில்லியின் வசூலினை இப்படம் தாண்டாத காரணத்தால் 150 நாள் ஓடியும் இப்படத்தை சிலர் தோல்வி படம் என்றே கூறுகின்றனர்.போக்கிரி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது வில்லு .இத்திரைப்படம் போக்கிரியினை போல் வசூலில் சாதனை படைக்கவில்லை.அதன் பின் வந்த வேட்டைக்காரன் திரைப்படம் வசூலில் கிட்டானது.விஜயின் இறுதி 6 படங்கள் தோல்வி என்று சொல்பவர்களை என்ன என்று சொல்வது
விஜய்க்கு மார்க்கெட் சரியவில்லை என நிருபிக்கும் ஆதாரங்கள்:-
சமீபத்தில் நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள்.தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும்.இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்
அடுத்து விஜயின் கால்ஷீட் கிடைத்து விட்டால் அவருக்கு லாட்டரி சீட் அடித்த மாதிரிதான் என்கிறார்கள் ஃபாக்ஸ் ஆபீஸ் இடைநிலைத் தரகர்கள். காரணம் விஜயின் படம் தோல்வி அடைந்தாலுமே கூட செகண்ட் ரிலீஸ் எனப்படும் இரண்டாம் கட்ட வெளியீட்டில் விஜயின் பழைய படங்கள் இப்போது இரண்டு வாரம் ஓடி பணம் சம்பாதித்து விடுவதுதான் என்கிறார்கள். இரண்டாம் கட்ட வெளியீட்டில் இன்று எம்.ஜியார், ரஜினி படங்களை வெள்ளிகிழமை போட்டால் அடுத்து வரும் வியாழன்வரை ஒருவாரம் குறையாமல் வசூல் எடுக்கலாம்.இப்பொது மூன்றாவதாக விஜய் படங்களுக்கு மட்டும்தான் இந்த மவுசாம். தவிர திருட்டு வீசிடி சந்தையில் ரஜினியை விடவும் விஜய்க்குத்தான் பிஸ்னஸ் என்கிறார்கள் பர்மா பஜார் பைரேட்டர்கள். படுதோல்வி அடைந்த சுறா, தமிழ்நாடு, பாண்டிச்செரி, ஏனாம், மங்களூர், மும்பை ஆகிய பைரசி சந்தையில் 4 கோடி கொட்டி கொடுத்திருக்கிறது என்று ரேண்டம் சர்வே எடுத்திருகிறார்கள் சென்னை லயோலா கல்லூரியின் புள்ளியியல் துறை மாணவர்கள். அந்த அளவுக்கு விஜய் மார்கெட் வலிமையாக உள்ளது.
அண்மையில் பிரபல ஜோஸ்ஆலுக்காஸ் நிறுவனம் தமது வர்த்தக தூதுவர் ஆக விஜயினை தெரிவு செய்துள்ளனர்.இவ்வாறு தெரிவு செய்தமைக்கு காரணம் என தெரியுமா.தமிழ் நாட்டில் சந்து பொந்தெல்லாம் ரீச்சாகும் ,மக்களை விரைவில் கவரும் நடிகர் நம்ம தளபதிதனாம்.
இந்தவருடம் சிறந்த அபிமான நடிகர் விருதை இசையருவி இளையதளபதி விஜய்க்கு வழங்கியது.அத்துடன் விஜய் டிவியின் வாக்கெடுப்பில் சிறந்த அபிமான நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு ஓபனிங் மாஸ் உள்ள ஒரே நடிகர் நம்ம விஜய் என கூறுதல் மிகையாகாது.
இளையதளபதி விஜய்க்காக பல பேஸ் புக் பக்கங்கள் உள்ளன,எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவுக்கு பல வலைத்தளங்களும்,ப்ளாக்குகளும் உள்ளன.உண்மையில் நீங்கள் தோல்வி என கருதும் சுறாவுக்கு பின்னர்தான் இவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.பாருங்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் என்னும் மாபெரும் சக்தியை உடைய நம்ம தளபதியின் மார்க்கெட் சரிந்துவிட்டது என கூறலாமா??
எங்க போறீங்க உங்க கருத்துக்களை எழுதிவிட்டு போங்க-
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
குளோசப் - பிராண்ட் அம்பாசிடர் சூர்யா
ரங்கநாதன்தெரு துணிக்கடை தொடங்கி நெஸ்காபி வரை எந்த விளம்பரம் கிடைத்தாலும் ஓடிப்போய் நடிக்கிறார் சூர்யா. சம்பளம் மட்டும் லம்பாக இருக்கணும் என்பது ஒன்றே கண்டிஷன்.
சூர்யாவின் புதிய அவதாரம் குளோசப். குளோசப்பில் பல் தேய்தால் முதல் மார்க் வாங்கலாம், கோடீஸ்வராகலாம் என தினம் தினம் இனி டிவியில் நம்மை உசுப்பேத்தயிருக்கிறார்.
ஆமாம், இவர்தான் குளோசப்பின் புதிய பிராண்ட் அம்பாசிடர். பல் தேய்க்கிற சமாச்சாரம் மட்டுமின்றி அந்நிறுவனத்தின் பல்வேறு பொருட்ஙகளை வாங்கச் சொல்லியும் விளம்பரத்தில் வற்புறுத்துவாராம்.
நாராயணா.... தாங்க முடியலையேப்பா
TMT
ரங்கநாதன்தெரு துணிக்கடை தொடங்கி நெஸ்காபி வரை எந்த விளம்பரம் கிடைத்தாலும் ஓடிப்போய் நடிக்கிறார் சூர்யா. சம்பளம் மட்டும் லம்பாக இருக்கணும் என்பது ஒன்றே கண்டிஷன்.
சூர்யாவின் புதிய அவதாரம் குளோசப். குளோசப்பில் பல் தேய்தால் முதல் மார்க் வாங்கலாம், கோடீஸ்வராகலாம் என தினம் தினம் இனி டிவியில் நம்மை உசுப்பேத்தயிருக்கிறார்.
ஆமாம், இவர்தான் குளோசப்பின் புதிய பிராண்ட் அம்பாசிடர். பல் தேய்க்கிற சமாச்சாரம் மட்டுமின்றி அந்நிறுவனத்தின் பல்வேறு பொருட்ஙகளை வாங்கச் சொல்லியும் விளம்பரத்தில் வற்புறுத்துவாராம்.
நாராயணா.... தாங்க முடியலையேப்பா
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
ர***ஜினிக்காக காத்திருக்கும் ராணா
இரண்டாவது முறை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ர***ஜினி அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரண வைரஸ் காய்ச்சல்தான், பயப்பட***த் தேவையில்லை என மருத்துவர்களும், அவரது குடும்பத்தினரும் சமாதானம் கூறியிருப்பது ஆறுதல்.
ராணா படப்பிடிப்பு தொடங்கிய நாள்தான் முதல் முறை ர***ஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக படப்பிடிப்பு ஒரு வார காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என கூற முடியாத நிலை.
ஏவிஎம்மில் போடப்பட்டிருக்கும் பிரமாண்ட அரங்கை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, ர***ஜினி பூரண நலத்துடன் திரும்பி வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் வரை அரங்கு அப்படியே இருக்கட்டும் என கூறியிருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.
TMT
இரண்டாவது முறை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ர***ஜினி அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரண வைரஸ் காய்ச்சல்தான், பயப்பட***த் தேவையில்லை என மருத்துவர்களும், அவரது குடும்பத்தினரும் சமாதானம் கூறியிருப்பது ஆறுதல்.
ராணா படப்பிடிப்பு தொடங்கிய நாள்தான் முதல் முறை ர***ஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக படப்பிடிப்பு ஒரு வார காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என கூற முடியாத நிலை.
ஏவிஎம்மில் போடப்பட்டிருக்கும் பிரமாண்ட அரங்கை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, ர***ஜினி பூரண நலத்துடன் திரும்பி வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் வரை அரங்கு அப்படியே இருக்கட்டும் என கூறியிருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
அடுத்து போடா போடி - சிம்பு உறுதி
வானம் நன்றாகப் போவதில் சிம்புவுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி. ஃபேஸ்புக்கில் கடவுள் இருக்கிறாரப்பா என்று பொங்கியிருக்கிறார்.
ச***ரி, வானத்துக்கு அப்புறம்?
போடா போடி படம் தொடங்கப்பட்டு அப்படியே நிற்கிறது. வேட்டை மன்னன் படத்தை அறிவித்து ஷூட்டிங்கும் போனார். மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சிம்புவை வைத்து படமெடுப்பவர்களுக்கே குழப்பம், அடுத்து எந்தப் படம்?
தெ***ளிவாக பதிலளித்திருக்கிறார் சிம்பு. அடுத்து போடா போடிதான்.
பல வருடங்களாக காத்திருக்கும் தயா***ரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரும் மகிழ்ச்சி.
TMT
வானம் நன்றாகப் போவதில் சிம்புவுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி. ஃபேஸ்புக்கில் கடவுள் இருக்கிறாரப்பா என்று பொங்கியிருக்கிறார்.
ச***ரி, வானத்துக்கு அப்புறம்?
போடா போடி படம் தொடங்கப்பட்டு அப்படியே நிற்கிறது. வேட்டை மன்னன் படத்தை அறிவித்து ஷூட்டிங்கும் போனார். மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சிம்புவை வைத்து படமெடுப்பவர்களுக்கே குழப்பம், அடுத்து எந்தப் படம்?
தெ***ளிவாக பதிலளித்திருக்கிறார் சிம்பு. அடுத்து போடா போடிதான்.
பல வருடங்களாக காத்திருக்கும் தயா***ரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரும் மகிழ்ச்சி.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
இன்றைய சினிமாச்செய்திகளுக்கு மிக்க நன்றி கார்த்தி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
நன்றி அண்ணா எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் :suspect:கலைவேந்தன் wrote:இன்றைய சினிமாச்செய்திகளுக்கு மிக்க நன்றி கார்த்தி..!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 33 of 43 • 1 ... 18 ... 32, 33, 34 ... 38 ... 43
Similar topics
» கார்த்தியின் மகிழ்ச்சி …(சினி செய்திகள்)
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள்..
» சினிமா செய்திகள்...
» சினிமா செய்திகள்....
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள்..
» சினிமா செய்திகள்...
» சினிமா செய்திகள்....
Page 33 of 43
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|