Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters
Page 32 of 43
Page 32 of 43 • 1 ... 17 ... 31, 32, 33 ... 37 ... 43
சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 11:56 am; edited 1 time in total
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
சரி அக்கா இனி மேல் அவ்வாறு செய்கிறேன் . இதை சினிமா பகுதியில் சேர்த்து விடுங்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் விஜய், அசின், மித்ரா, வடிவேலு, ராஜ்கிரண், ரோஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டைரக்டர் சித்திக் இயக்கி இருந்தார். பல்வேறு பிரச்சனைகள***ை கடந்து காவலன் படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கும் உலகப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
சீனாவின், ஷாங்காய் நகரில் 14வது உலக திரைப்பட விழா நடக்கிறது. உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட படங்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறது. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வாகியுள்ளது. காவலன் படம் பனோரமா பிரிவில் தேர்வாகியுள்ளது. இத்தகவலை விஜய்யின் பி.ஆர்.ஓ. செல்வக்குமார் தெரிவித்தார். வருகிற ஜூன் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கும் இவ்விழாவிற்கு, விஜய்யையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் விழாக்குழுவினர்.
TMT
சீனாவின், ஷாங்காய் நகரில் 14வது உலக திரைப்பட விழா நடக்கிறது. உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட படங்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறது. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வாகியுள்ளது. காவலன் படம் பனோரமா பிரிவில் தேர்வாகியுள்ளது. இத்தகவலை விஜய்யின் பி.ஆர்.ஓ. செல்வக்குமார் தெரிவித்தார். வருகிற ஜூன் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கும் இவ்விழாவிற்கு, விஜய்யையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் விழாக்குழுவினர்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
நடிகர் சிம்புவின் கட்-அவுட்டை அவமதித்த பாரதிய ஜனதா கட்சி, சிம்புவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கட்சியான பா.ஜ.க., சிம்புவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் கோஷமிட்டதை பார்த்து தலையில் அடித்து நொந்து கொண்டனர் அவ்வழியாக சென்ற ***பொதுமக்கள். நடிகர் சிம்பு - அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் புதிய படம் வானம். இப்படம் சென்னை தாம்பரத்தில் ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக சிம்பு ரசிகர்கள் பிரமாண்ட கட்-அவுட்டை தியேட்டர் முன்பு கட்டியிருந்தனர். இந்நிலையில் அந்த கட்-அவுட்டை அகற்றிவிட்டு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி தொடர்பான கட்-அவுட் ஒன்றை அமைத்தனர்.
இதுபற்றி கேள்விப்பட்ட சிம்பு ரசி்கர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். தங்கள் தலைவரின் கட்-அவுட்டை அகற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். கட்-அவுட்டை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், மன்னிப்பு கேள்... மன்னிப்பு கேள்... பாரதிய ஜனதா கட்சியே சிம்புவிடம் மன்னிப்பு கேள்... என்றும் கோஷமிட்டனர். ஒரு நடிகரின் ரசிகர்கள், கட்-அவுட் தகராறுக்காக நடத்தும் போராட்டத்தில், ஒரு தேசிய கட்சியை*** மன்னிப்பு கேட்கச் சொன்னதை, அதுவும் சிம்பு போன்ற நடிகர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி கோஷமிட்டதை பார்த்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நொந்து கொண்டனர்.
இதற்கிடையில் சிம்பு ரசிகர்கள் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
TMT
இதுபற்றி கேள்விப்பட்ட சிம்பு ரசி்கர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். தங்கள் தலைவரின் கட்-அவுட்டை அகற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். கட்-அவுட்டை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், மன்னிப்பு கேள்... மன்னிப்பு கேள்... பாரதிய ஜனதா கட்சியே சிம்புவிடம் மன்னிப்பு கேள்... என்றும் கோஷமிட்டனர். ஒரு நடிகரின் ரசிகர்கள், கட்-அவுட் தகராறுக்காக நடத்தும் போராட்டத்தில், ஒரு தேசிய கட்சியை*** மன்னிப்பு கேட்கச் சொன்னதை, அதுவும் சிம்பு போன்ற நடிகர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி கோஷமிட்டதை பார்த்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நொந்து கொண்டனர்.
இதற்கிடையில் சிம்பு ரசிகர்கள் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
த்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளார் அவரது தாயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திருமணம் ***குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந்தை இருக்கிறது என்று செய்திகள் வந்தது. இதற்கு த்ரிஷா மிகுந்த கோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழிலதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. இந்தமுறை இந்த வதந்தி கிளம்பி இருப்பது தமிழ்நாட்டில் அல்ல ஆந்திராவில்.
தற்போது ஐதராபாத் சென்றுள்ள த்ரிஷா விவல் கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். த்ரிஷா ஏற்கனவே இந்த கம்பெனியின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் இந்த வதந்தி குறித்து அவரிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை காரணம், இதுபோன்ற வதந்திகளுக்கு தேவையில்லாமல் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.
TMT
கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந்தை இருக்கிறது என்று செய்திகள் வந்தது. இதற்கு த்ரிஷா மிகுந்த கோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழிலதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. இந்தமுறை இந்த வதந்தி கிளம்பி இருப்பது தமிழ்நாட்டில் அல்ல ஆந்திராவில்.
தற்போது ஐதராபாத் சென்றுள்ள த்ரிஷா விவல் கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். த்ரிஷா ஏற்கனவே இந்த கம்பெனியின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் இந்த வதந்தி குறித்து அவரிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை காரணம், இதுபோன்ற வதந்திகளுக்கு தேவையில்லாமல் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் நான் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். நட்சத்திர ஹேட்டலில் நிர்வாண குளியல் சர்ச்சையில் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்த நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது வரை எக்கச்சக்க சர்ச்சைகளில் சி்க்கியவர் நடிகை த்ரிஷா. எந்தவொரு சர்ச்சையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத த்ரிஷா, அவ்வப்***போது அதிரடி பேட்டியளித்து தடாலடி கருத்துக்களையும் சொல்லி வருகிறார்.
இப்போது ஐதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது. எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும். படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்று கூறியுள்ளார்.
TMT
இப்போது ஐதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது. எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும். படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்று கூறியுள்ளார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
இந்த புகழ் மைனாவால் கிடைத்தது!- தம்பி ராமையா
நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சில படங்களில் நடித்திருந்தாலும் என்னை பெரிதாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. மைனாவில் நடித்த பிறகுதான் நான் பிரபலம் ஆனேன், என்கிறார் தம்பி ராமையா.
மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. ஆனால் இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும்.
ஆனால் மைனாவில் நடித்த பிறகு படத்தின் ஹீரோவுக்கு இணையாக பேசப்பட்டார் தம்பி ராமையா. படத்தைப் பார்த்த ரஜினியே, தம்பி ராமையாவை பெரிதும் பாராட்டியிருந்தார்.
சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னை பற்றி பேச வைத்தது 'மைனா' படம்தான் என நகைசுவை நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கூறினார்.
தம்பி ராமையா, இயக்குனர் தருண் கோபி ஆகியோர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நேற்று நடைபெற்ற மகா யாகத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
யாகாத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதுவரை 50 க்கும் மேற்பட்ட சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் தம்பி பிரபு சாலமன்வின் மைனா படத்தில் நடித்ததுதான் என்னை சினிமா உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டது.
இந்த படத்திற்கு பின் அதிகளவு ரசிகர்கள் என்னை தொலைபேசி மூலமும், நேரடியாகவும் வாழ்த்து தெரிவிக்கின்றர் ரசிகர்கள். இப்போது கழுகு, கள்ள சிரிப்பழகா, வாகை சூடவா, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்து வரும் பேச்சியக்கா மருமகன் என்ற படத்திலும் நடிக்கிறேன்," என்றார்.
தட்ஸ் தமிழ்
நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சில படங்களில் நடித்திருந்தாலும் என்னை பெரிதாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. மைனாவில் நடித்த பிறகுதான் நான் பிரபலம் ஆனேன், என்கிறார் தம்பி ராமையா.
மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. ஆனால் இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும்.
ஆனால் மைனாவில் நடித்த பிறகு படத்தின் ஹீரோவுக்கு இணையாக பேசப்பட்டார் தம்பி ராமையா. படத்தைப் பார்த்த ரஜினியே, தம்பி ராமையாவை பெரிதும் பாராட்டியிருந்தார்.
சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னை பற்றி பேச வைத்தது 'மைனா' படம்தான் என நகைசுவை நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கூறினார்.
தம்பி ராமையா, இயக்குனர் தருண் கோபி ஆகியோர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நேற்று நடைபெற்ற மகா யாகத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
யாகாத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதுவரை 50 க்கும் மேற்பட்ட சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் தம்பி பிரபு சாலமன்வின் மைனா படத்தில் நடித்ததுதான் என்னை சினிமா உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டது.
இந்த படத்திற்கு பின் அதிகளவு ரசிகர்கள் என்னை தொலைபேசி மூலமும், நேரடியாகவும் வாழ்த்து தெரிவிக்கின்றர் ரசிகர்கள். இப்போது கழுகு, கள்ள சிரிப்பழகா, வாகை சூடவா, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்து வரும் பேச்சியக்கா மருமகன் என்ற படத்திலும் நடிக்கிறேன்," என்றார்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
தமிழில் நம்பர் ஒன் ஹீரோயின் என்று கூறப்பட்டு வந்த தமன்னாவுக்கு தமிழில் இப்போது ஒரேயொரு தமிழ்ப் படம்தான் உள்ளது. அது வேங்கை!
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. 2009-ல் 5 படங்களில் அவர்தான்ஹீரோயின். 2010-ல் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் நடித்திருந்தார் தமன்னா.
ஆனால் 2011-ல் இதுவரை அவர் நடித்து 1 படம்தான் வந்துள்ளது. இன்னும் வரவேண்டியிருப்பது தனுஷுடன் அவர் நடித்துள்ள வேங்கைதான்.
வேறு தமிழ்ப் படங்களே அவர் கைவசம் இல்லை. அமலா பால் போன்ற புதிய நடிகைகள் வரவால் இந்த நிலை என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணம் வேறாம்.
தமிழ் சினிமா ஹீரோ ஒருவருடன் அவருக்கிருந்த நெருக்கமான காதல் முறிந்து போனதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்த மனக் காயத்தை மறக்கவே தமிழ் சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு, தெலுங்குப் பக்கம் ஒதுங்கிவிட்டாராம்!
தட்ஸ் தமிழ்
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. 2009-ல் 5 படங்களில் அவர்தான்ஹீரோயின். 2010-ல் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் நடித்திருந்தார் தமன்னா.
ஆனால் 2011-ல் இதுவரை அவர் நடித்து 1 படம்தான் வந்துள்ளது. இன்னும் வரவேண்டியிருப்பது தனுஷுடன் அவர் நடித்துள்ள வேங்கைதான்.
வேறு தமிழ்ப் படங்களே அவர் கைவசம் இல்லை. அமலா பால் போன்ற புதிய நடிகைகள் வரவால் இந்த நிலை என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணம் வேறாம்.
தமிழ் சினிமா ஹீரோ ஒருவருடன் அவருக்கிருந்த நெருக்கமான காதல் முறிந்து போனதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்த மனக் காயத்தை மறக்கவே தமிழ் சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு, தெலுங்குப் பக்கம் ஒதுங்கிவிட்டாராம்!
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
ரஜினியின் வாழ்க்கை சினிமாவாகிறது!
இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது, தமிழில் அல்ல இந்தியில்! இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை. ரஜினியின் அனுமதியுடன் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதுல் அக்னிஹோத்ரி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர். இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினியின் உடல்மொழி, மேனரிஸங்கள் யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம். படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம். இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை.
TMT
இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது, தமிழில் அல்ல இந்தியில்! இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை. ரஜினியின் அனுமதியுடன் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதுல் அக்னிஹோத்ரி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர். இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினியின் உடல்மொழி, மேனரிஸங்கள் யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம். படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம். இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
நடிகர் பிரபுக்கு டாக்டர் பட்டம்!
நடிகர் பிரபுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு இதுவரை 200 படங்களில் நடித்திருக்கிறார். அவரது கலைச்சேவையை பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. வரும் 12ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் ***நடைபெறும் விழாவில் பிரபுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவ்விழாவில் நடிகர் பிரபு கலந்து கொண்டு டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்கிறார்.
TMT
நடிகர் பிரபுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு இதுவரை 200 படங்களில் நடித்திருக்கிறார். அவரது கலைச்சேவையை பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. வரும் 12ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் ***நடைபெறும் விழாவில் பிரபுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவ்விழாவில் நடிகர் பிரபு கலந்து கொண்டு டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்கிறார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
ஆடையில்லாமல் நடிக்கிறார் ஷம்மு!
தசாவதாரம் படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, காஞ்சிவரம் மூலம் நாயகியாக பளிச்சிட்ட நடிகை ஷம்மு, சங்க கால படமொன்றில் வனப்பகுதி சூட்டிங்கில் ஆடையில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் அறிமுக இயக்குனர் ம.செந்தமிழன் இயக்கும் புதிய படம் பாலை. வரலாற்றுப் படம் என்றாலே ***மன்னர், அரண்மனை, போர்க்களம் என்ற நிலைமையை மாற்றும் வகையில் அதற்கும் முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களை படமாக்கி, பதிய வைக்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணத்துடன் பாலை படத்தினை இயக்கி வருகிறார் செந்தமிழன்.
அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல் கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம். இது பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறேன், என்று சொல்லும் செந்தமிழன், இந்த படம் தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வைத்திருக்கிறாராம்.
படத்தின் நாயகியாக நடிகை ஷம்மு நடிக்கிறார். நாயகனாக சுனில் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்கள் தவிர படத்தில் தோன்றும் பாத்திரங்களில் பல பேர் புதுமுகங்கள் என்பதையே ஹைலைட்டாக சொல்கிறது பாலை படக்குழு. கதைப்படி நடிகை ஷம்மு ஆடை எதுவும் அணிந்திருக்க மாட்டாராம். சங்க காலத்து ***பெண்கள் மானத்தை காக்க அணிந்திருந்த இலை தழைகளையே ஷம்மு ஆடையாக அணிந்திருக்கிறார். தஞ்சை பகுதியில் இப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. சூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் செந்தமிழன். நாட்டுப்புற பாடல், முதுமக்கள் தாழி, கல் கத்திகள் என பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட அத்தனை விஷயங்களையும் படத்தில் புகுத்தியிருக்கும் டைரக்டர் செந்தமிழ், இந்த படத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக பழந்தமிழர்கள் வாழ்க்கை பற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதோடு, படத்தின் வசனங்களிலும் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்து தேடிப்பிடித்து வார்த்தைகளை கோர்த்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
வரலாற்றுப் படம் என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் செலவழித்து பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி மக்களின் வாழ்கையை படமாக்க அந்த காலத்து கிராமத்தை நவீன யுத்தியுடன் செட் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கும் புதுமுகம் செந்தமிழுக்கு உரிய மரியாதை பாலை ரீலிசுக்கு பிறகு கிடைக்கும் என நம்புவோம்.
TMT
தசாவதாரம் படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, காஞ்சிவரம் மூலம் நாயகியாக பளிச்சிட்ட நடிகை ஷம்மு, சங்க கால படமொன்றில் வனப்பகுதி சூட்டிங்கில் ஆடையில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் அறிமுக இயக்குனர் ம.செந்தமிழன் இயக்கும் புதிய படம் பாலை. வரலாற்றுப் படம் என்றாலே ***மன்னர், அரண்மனை, போர்க்களம் என்ற நிலைமையை மாற்றும் வகையில் அதற்கும் முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களை படமாக்கி, பதிய வைக்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணத்துடன் பாலை படத்தினை இயக்கி வருகிறார் செந்தமிழன்.
அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல் கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம். இது பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறேன், என்று சொல்லும் செந்தமிழன், இந்த படம் தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வைத்திருக்கிறாராம்.
படத்தின் நாயகியாக நடிகை ஷம்மு நடிக்கிறார். நாயகனாக சுனில் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்கள் தவிர படத்தில் தோன்றும் பாத்திரங்களில் பல பேர் புதுமுகங்கள் என்பதையே ஹைலைட்டாக சொல்கிறது பாலை படக்குழு. கதைப்படி நடிகை ஷம்மு ஆடை எதுவும் அணிந்திருக்க மாட்டாராம். சங்க காலத்து ***பெண்கள் மானத்தை காக்க அணிந்திருந்த இலை தழைகளையே ஷம்மு ஆடையாக அணிந்திருக்கிறார். தஞ்சை பகுதியில் இப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. சூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் செந்தமிழன். நாட்டுப்புற பாடல், முதுமக்கள் தாழி, கல் கத்திகள் என பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட அத்தனை விஷயங்களையும் படத்தில் புகுத்தியிருக்கும் டைரக்டர் செந்தமிழ், இந்த படத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக பழந்தமிழர்கள் வாழ்க்கை பற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதோடு, படத்தின் வசனங்களிலும் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்து தேடிப்பிடித்து வார்த்தைகளை கோர்த்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
வரலாற்றுப் படம் என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் செலவழித்து பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி மக்களின் வாழ்கையை படமாக்க அந்த காலத்து கிராமத்தை நவீன யுத்தியுடன் செட் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கும் புதுமுகம் செந்தமிழுக்கு உரிய மரியாதை பாலை ரீலிசுக்கு பிறகு கிடைக்கும் என நம்புவோம்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 32 of 43 • 1 ... 17 ... 31, 32, 33 ... 37 ... 43
Similar topics
» கார்த்தியின் மகிழ்ச்சி …(சினி செய்திகள்)
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள்....
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள்....
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
Page 32 of 43
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|