புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_vote_lcapரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_voting_barரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_vote_lcapரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_voting_barரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_vote_lcapரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_voting_barரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 16 of 43 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 29 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:59 am

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு காணாமல் போனவர் நடிகை ரீமா சென். சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் நள்ளிரவு பார்ட்டியில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு ரீமா நடிப்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அவரது திருமணமே நின்று விட்டதாம். இதனால் சோகமான ரீமா, இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகூட மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம். ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார். இதில் மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் ஹீரோயினாம்.

இதுபற்றி ரீமா அளித்துள்ள பேட்டியில், மீண்டும் பிஸியான நடிகையாக வேண்டும் என திரும்பி வந்துள்ளேன். மலையாளப் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 8:04 am

கோ படத்தின் தாறுமாறான வெற்றியால் ஏக சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் ஜீவா, தனது அடுத்தடுத்த படங்களை மெருகேற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். கோ படத்தை பார்த்த ரசிகர்கள், அடுத்த படத்திலும் அதை விட அதிகமாக எதிர்பார்ப்பார்கள்; அவர்களை ஏமாற்றி விடக் கூடாது என்ற சினிமா அனுபவஸ்தரான ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரியின் ஆலோசனையின் பேரில் ரவுத்திரம் படத்தில் இடம்பெறும் சிலபல காட்சிகளை ரீ-சூட்டிங் செய்யயும்படி அதன் டைரக்டரிடம் கேட்டிருக்கிறார் ஜீவா. படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிதான் என்பதால் பட்ஜெட்டில் எந்தவித பிரச்னையும் இல்***லை. இதனால் ரீ-சூட்டிங்கிற்கு தயாராகி விட்டார்களாம்.

தற்போது அந்தமானில் இருக்கும் ஜீவா, அங்கிருந்து திரும்பியதும் ***ரவுத்திரம் பட ரீ-சூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். ரவுத்திரம் ரீ-சூட்டிங் தகவல் கிடைத்ததால் வந்தான் வென்றான் படக்குழுவினரும் சில காட்சிகளை ரீ-சூட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 8:05 am

சிம்புவின் கெட்டவன் படத்தில் பாவனாவை நடிக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் பாவனாவோ நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சிம்புவுடன் நான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அது உண்மையில்லை. இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதே சிம்பு தான். நான் அவருடன் சேர்ந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் சிம்புவுக்கு இப்போது நன்மதிப்பு இல்லை. நயன்தாராவுடன் சிம்பு ஒன்றாக இருந்தபோது இருவருக்குமிடையேயான முத்தக்காட்சி சம்பந்தப்பட்ட போட்டோக்கள் வெளியாகி தன்னுடைய பெயரை கெடுத்து கொண்டார் சிம்பு. அப்போதே அவருடைய தரம் குறைந்துவிட்டது. இந்தகாலத்தில் ஒருவர் நல்ல பெயர் எடுப்பது மிக கஷ்டம். ஆனால் அதேசமயம் கெட்டபெயரை சம்பாதித்து கொள்வது சுலபம். சிம்பு தனது பெயரை கெடுத்து கொண்டு, இப்போது நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்கிறார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 8:06 am

தொடங்கிய வேகத்திலேயே முற்றுப்புள்ளி விழும் போலிருக்கிறது, மணிரத்னத்தின் மெகா பட்ஜெட் படமான கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு!


படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் முடிவாகி, ஆளாளுக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கப் புள்ளிகள் கூறுகிறார்கள்.

காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.

இதுகுறித்து எதுவும் பேசவும் மறுக்கின்றனர் தொடர்புடைய டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்கள்.

ஏற்கெனவே இந்தக் கதையை மாபெரும் படமாக எடுக்க முயன்றவர் அமரர் எம்ஜிஆர். இயக்கநர் மகேந்திரனை வைத்து திரைக்கதையை முழுமையாக அவர் உருவாக்கிய நிலையில் தமிழக முதல்வராகிவிட, பொன்னியின் செல்வன் நாவல் வடிவிலேயே தொடர்ந்தது.

அதற்குப் பிறகு இந்த முயற்சியில் இறங்குவதா அறிவித்தார் கமல்ஹாஸன். ஆனால் அதுவும் அறிவிப்புடன் நின்றுவிட்டது.

ஆனால் மணிரத்னம், ஷூட்டிங் லொகேஷன்கள் கூட முடிவு செய்து வைத்திருந்த நிலையில் இப்படி செய்தி வந்துள்ளது. இது செய்தியா வதந்தியா... பொறுத்திருந்து பார்ப்போம்!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 8:07 am

'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஹீரோ உதயநிதி & '1305' என்ற ஆங்கில மாத இதழ் ஆசிரியர் கிருத்திகா ஜோடிக்கு, தாங்கள் எதிர்பார்த்தது போன்றே பெண் குழந்தை பிறந்ததில் ஏக சந்தோஷம்.


இப்போது அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தீவிரமாக பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஆண் குழந்தை பிறந்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. குடும்ப வழக்கப்படி தமிழ்ப் பெயருடன் 'நிதி' சேர்த்து வேலையை சுலபமாக்கிவிடலாம். அந்த வகையில்தான் தன் மூத்த மகனுக்கு ‘இன்பநிதி’ சுருக்கமாக ‘இன்பா’ என பெயர் வைத்தனர்.

பெண் குழந்தை என்பதால் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் இருந்தும் என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை கேட்டு வாங்கியபடி இருக்கிறார்களாம். குழந்தையின் தாத்தா ஸ்டாலினும் சில பெயர்களைச் சொல்லியிருக்கிறாராம்.

அநேகமாக ஒன்றிரண்டு நாட்களில் பெயர் தேர்வு இறுதிகட்டத்தை எட்டி அந்தப் பெயர் குடும்பத் தலைவர் கருணாநிதியால் சூட்டப்படும் என்று தெரிகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 8:09 am

"காவலன்" படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற மே 14ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், "ஜெயம்" ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்***க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். படத்தில் பால்காரன் வேலுவாக வருகிறார் விஜய். இந்தபடம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. அந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாகவும், புதுவிதமாகவும் சொல்லியிருக்கிறார் டைரக்டர் ராஜா. இப்படத்தின் 80சதவீத சூட்டிங் முடிவ***டைந்த நிலையில், மீதி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் பிறந்தநாளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக "சட்டபடி குற்றம்" படத்தின் ஆடியோ ரிலீசுக்கே ஜெயலலிதாவை, எஸ்.ஏ.சந்திரசேகர் அழைத்தாராம். ஆனால் அப்போது தேர்தல் பிஸியில் இருந்ததால் மறுத்து விட்டாராம். கூடவே இன்னொரு விழாவில் நிச்சயம் பங்கேற்கிறேன் என்று உறுதியளித்தாராம். இப்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், "வேலாயுதம்" படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெ., கூறியதுபோல் நிச்சயம் "வேலாயுதம்" ஆடியோ விழாவில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க., தரப்பில் இருந்து இன்னும் உறுதியான தகவல் ஏதும் வரவில்லை.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 8:11 am

லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் "வேட்டை". இப்படத்தின் கதை பற்றியும் மாதவனின் ரோல் பற்றியும் ரகசியமாக இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் காரைக்குடியில் நடந்த சூட்டிங்கின் போது மாதவனை சிலர் போலீஸ் அதிகாரி வேடத்தில் பார்த்திருக்கின்றனர். இதனால் படத்தில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம் என்பது தெளிவாகியுள்ளது. போலீஸ் வேடம் ஏற்பது மாதவனுக்கு இதுதான் முதல்முறை.

இதுகுறித்து மாதவன் கூறியதாவது, வேட்டை படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடிப்பது உண்மை தான். ஆனால் அந்த கேரக்டர் குறித்தும், படத்தின் கதை குறித்தும், என்னால் இப்போது எதுவும் கூற முடியாது. படத்தை பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். காரைக்குடியில் நடந்த வேட்டை பட சூட்டிங்கை என்னால் மறக்கவே முடியாது. படத்தில் நடித்த ஆர்யா, சமீரா, அமலாபால், லிங்குசாமி, தயாரிப்பாளர் மற்றும் மற்ற டெக்னீசியன்கள் வரை அனைவரும் ஒரு குடும்பமாக பழகினோம். குறிப்பாக ஆர்யாவை என்னுடைய உடன்பிறவா சகோதரனாக பார்க்கிறேன். ரன் படத்திற்கு பிறகு லிங்குசாமியும், நானும் இணையும் இரண்டாவது படம் இது. நிச்சயம் இந்தபடம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 Scaled.php?server=706&filename=purple11
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 10:50 am

ஆணவம் கொஞ்சம் ரொம்பவே அதிகமான குடும்பத்துக்கு சொந்தக்காரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 10:57 am

ரீமா மட்டுமா காணாமல் போனால் செல்வராகவனின் படமும் ஆயிரத்தில் ஒருவன் படமும் தானே காணாம போயிடுச்சி.. சரி கையில டப்பு காலியாயிருக்கும். அதான் அம்மணி திரும்ப வந்துட்டாங்க புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 10:59 am

அட விடுங்கப்பா தமிழ் சினிமாவுல இதெல்லாம் சகஜம் தானே இன்று இப்படி நாளை எப்படியோ



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 16 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 16 of 43 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 29 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக