ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Page 2 of 2 Previous  1, 2

Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Empty குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by krishnaamma Wed May 04, 2011 12:41 pm

First topic message reminder :

குரு பகவானின் தன்மைகள்


ஆட்சி வீடுகள் - தனுசு, மீனம்
உச்ச வீடு - கடகம்
நீச்ச வீடு - மகரம்
உகந்த நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
தசையின் காலம் - 16 வருடங்கள்
பார்வைகள் - 5,7,9ஆம் பார்வைகள்
நிறம் - மஞ்சள்
சுவை - இனிப்பு
உலோகம் - தங்கம்
வாகனம் - யானை
நட்புக் கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
தானியம் - கொண்டைக் கடலை.
ரத்தினம் - புஷ்பராகம்
திசை - வடக்கு
பஞ்ச பூதங்களில்... - ஆகாயம்
பரிகார ஸ்தலங்கள் - ஆலங்குடி, தென்குடித் திட்டை, திருச்செந்தூர், திருப்புலிவனம், திருவலிதாயம், இலம்பையங் கோட்டூர்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - சராசரியாக ஒரு வருடம்
மலர் - முல்லை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Empty மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

Post by krishnaamma Wed May 04, 2011 1:09 pm

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Joe6515

குரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

இறைபக்தியில் ஆர்வம் கொண்ட மகரராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு தைரிய, புகழ், விரய ஸ்தான அதிபதியாகிய குருபகவான் சுக ஸ்தானமாகிய
மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இந்த அமர்வு நன்மைகளைக் குறைக்கும்
தன்மையுடையது. இருப்பினும் குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பெறுகிற
ஆயுள்,தொழில், சுபவிரய ஸ்தானங்களின் வழியாக நற்பலன் நடக்கும். மனதில்
குழப்பம் ஏற்படும். இதை சரிசெய்வதால் மட்டுமே செயலில் வெற்றி அதிகரிக்கும்.
அளவுடன் பேசுவதால் சிரமம் இல்லாத தன்மை உருவாகும்.
தைரியக்குறைவு
ஏற்படும். தம்பி, தங்கைகள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். உங்கள்
பணிகளை பிறரை நம்பாமல் நீங்களே முடிப்பது நல்லது. வீடு, வாகன வகையில்
இப்போது பெறுகிற வசதிக்கு குறைவில்லை. ஆனால்,
வாகனங்களை சரிவர
பராமரிக்க வேண்டும். பயணத்தில் வேகம் குறைப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள்
கண்டுகொள்ளாத தன்மையில் செயல்படுவர். ஆனாலும், நீங்கள் பெருந்தன்மையுடன்
நடந்துகொள்வீர்கள். புத்திரர்கள் உங்களின் சிரமம் உணர்ந்து ஆறுதல் தரும்
விதமாக நடந்துகொள்வர். அவர்களது படிப்பில் உயர்வும், வேலைவாய்ப்பில்
முன்னேற்றமும் ஏற்படும்.
எதிரிகளிடம் விலகிப் போவதால் தேவையற்ற
செலவும், விவகாரங்களும் குறையும். கணவன் மனைவி இடையே கருத்தொற்றுமை
ஏற்படும். இதனால் மனநிம்மதி உண்டு. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்வதை
தவிர்க்க வேண்டும். தந்தைவழி உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர்.
தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் திருமண வகை,
உறவினர் இல்ல விழா வகை, வீடு கட்டுமான வகைகளில் சுபவிரயம் அதிகரிக்கும்.
தொழிலதிபர்கள்:
ரியல் எஸ்டேட், கல்வி, நிதிநிறுவனம், மருத்துவமனை நடத்துவோர்,
ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், சிமென்ட், பால்பண்ணை, எலக்ட்ரானிக்ஸ், மரஆலை,
பிளாஸ்டிக், தோல், காகிதம் உற்பத்தி செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்
படுவது அவசியம். அதிக உழைப்பிலும் சுமாரான பலனே பெறுவீர்கள். மற்ற தொழில்
செய்பவர்களுக்கு அளவான உற்பத்தியே இருக்கும். லாபம் சுமார். ஒப்பந்தங்களை
பெறுவதில் பேரம் பேசவேண்டி வரும். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெற சற்று
சிரமப்பட வேண்டியிருக்கும். ஓய்வுநேரம் பெருமளவு குறையும். நிர்வாகச்செலவு
அதிகரிக்கும். நிலைமையை சரிசெய்ய கடன் வாங்க வேண்டி வரும்.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, வாகனம், மளிகை, இயந்திர உதிரிபாகங்கள், கட்டுமானப்
பொருள்,ஸ்டேஷனரி, பேக்கரி,எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் சாதனம்,
பால்பொருட்கள், காய்கறி, பூ, இறைச்சி, குளிர்பானம், அழகுசாதனம், மருந்து,
பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு போட்டி அதிகரிக்கும். லாபம் ஓரளவே
இருக்கும். பிறருக்காக பணப்
பொறுப்பு ஏற்கக்கூடாது. அளவான கொள்முதல், ரொக்கத்திற்கு விற்பனை என்கிற நடைமுறை பாதுகாப்பை ஏற்படுத்தும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள், மனச்சோர்வுக்கு உட்படுவர். புதிதாக
ஏற்படும் பணிகளால் உங்கள் வேலைப்பளு அதிகரிக்கும். வேகமாகவும்
பொறுப்பாகவும் பொறுமையாகவும் பணிகளைச் செய்து இந்த ஆண்டைக் கழியுங்கள்.
நிர்வாகத்திடம் நற்பெயர் குறையாது என்றாலும், சலுகைகள் எதிர்பார்க்க
முடியாது. வருமானம் வீட்டுச்செலவுக்கு பயன்படும் அளவே இருக்கும். சக
பணியாளர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் மனக்குழப்பத்துடன் செயல்படுவர். அதிகாரிகளை அனுசரித்து நடந்தால்
தான் சிரமம் ஏற்படாமல் தவிர்க்கலாம். சலுகைகள் பெறுவதில் தாமதம் ஏற்படும்.
குடும்பப் பெண்கள் கணவரின் சொல்லை மதித்து நடந்து குடும்பநலன் காத்திடுவர்.
வீட்டுச்செலவுக்கு சற்று சிரமமே. தாய்வழி உறவினர்களிடம் மனவேறுபாடு வந்து
சரியாகும். இரவல் நகை கொடுக்க, வாங்க கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள்
உற்பத்திக்குறைவும், விற்பனையில் கூடுதல் போட்டியையும் எதிர்கொள்வர்.
சுமாரான லாபம் இருக்கும். உபதொழில் துவங்குவதை இப்போது ஒத்திவைப்பது
நல்லது.
மாணவர்கள்: இன்ஜனியரிங்,
மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், பியூட்டிஷியன், மேனேஜ்மென்ட்,
கேட்டரிங் துறை மாணவர்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத பிற விஷயங்களில்
கவனம் கொள்வதை தவிர்க்க வேண்டும். மற்ற துறை மாணவர்களும் தேர்ச்சி பெற மிக
கவனமாக படிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் பள்ளி
துவங்கும்முன்பே பாடங்களை படிக்க ஆரம்பித்து விடுவது அதிக மார்க் பெற
உதவும். படிப்புக்கான பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக மாணவர்களிடம்
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். படித்து
முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும்.
அரசியல்வாதிகள்: எதிரான
சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். ஆதரவாளர்களின் நம்பிக்கையை தக்கவைக்க கடன்
வாங்கி செலவழிக்க வேண்டியிருக்கும். வழக்கு விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது
நல்லது. தலைமையிடம் கெட்ட பெயர் வாங்கலாம் என்பதால் சற்று
ஒதுங்கியிருப்பது நல்லது.
விவசாயிகள்:
சாகுபடிக்குரிய இடுபொருட்கள், பணம் கிடைப்பதில் தாமத நிலை இருக்கும்.
கால்நடை வளர்ப்பின்மூலம் வருகிற பணவரவு குடும்பத்தேவைக்கு உதவும். சொத்தின்
பேரில் சிலர் கடன் பெறுவர். நிலம் தொடர்பான வழக்குகள் இழுத்தடிக்கும்.

பாட வேண்டிய பாடல்
மென்னடையன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால்
என் பொருகயற்கண்ணிணை துஞ்சா
இன் அடிசிலொடு பாலமுநூட்டி
எடுத்த என் கோலக்கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன்
குயிலே! உலகளந்தான் வரக்கூவாய்.

பரிகாரம்
ஆண்டாளை வழிபடுவதால் வாழ்வில் நிம்மதியும் தொழில் சிறப்பும் ஏற்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Empty கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

Post by krishnaamma Wed May 04, 2011 1:10 pm

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Joe_6516

குரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவுகின்ற கும்பராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு தன, குடும்ப, ஆதாய ஸ்தான அதிபதியாகிய குருபகவான் தைரிய
ஸ்தானமாகிய மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளா. குருவின் 3ம் இட அமர்வு
அவ்வளவு சிறப்பானதல்ல. இருப்பினும் குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பெறுகிற
இடங்களான களத்திர, நட்பு, பிதா, பாக்ய, ஆதாய ஸ்தானங்களின் வழியாக சுபபலன்
கிடைக்கும். வீட்டிலும், வெளியிலும் நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதில் கவனம்
வேண்டும்.
புதிய முயற்சிகளை துவங்கும்போது திட்டமிடுதல் இல்லாவிட்டால்
பிரச்னைகளை சந்திக்க நேரும். திறமை குறைய வாய்ப்புள்ளது. நம்பகமானவர்களின்
ஆலோசனையுடன் எதையும் செய்யுங்கள். பேச்சில் சாந்தம் ஏற்படும். இளைய
சகோதரர்கள் அன்புடன் நடந்து கொள்வர். வீடு, வாகன வகையில் மாற்றம் செய்வதை
தவிர்ப்பது நல்லது. தாயின் ஆசி கிடைக்கும். பூர்வீக சொத்தில் கிடைக்கிற
வருமானம் குருவருளால் அதிகரிக்கும்.
புத்திரர்கள் நல்லவிதமாக படித்து
உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவர். இஷ்ட, குலதெய்வ அருள் பரிபூரணமாக
துணைநிற்கும். உடல்நலம் பேணுவதில் கவனம் வேண்டும். வழக்கு, விவகாரங்கள்
இழுத்தடிக்கும். எதிரிகளிடம் விலகிப் போவதால் சிரமம் குறையும். சேமிப்பு
பணம் குடும்பச்செலவுகளை பூர்த்திசெய்ய பயன்படும். தம்பதியர் குடும்பப்
பொறுப்பை உணர்ந்து பாசத்துடன் நடந்து கொள்வர். நண்பர்கள் முக்கிய
சூழ்நிலைகளில் தேவையான உதவியை வழங்குவர். மனைவி வழி உறவினர்களிடம்
கருத்துவேறுபாடு மறையும்.
பணவரவு அவ்வப்போது குறைந்தாலும்,
அன்றாடச்செலவுகளுக்கு சிக்கல் ஏதும் இருக்காது. சுக சவுகர்ய வாழ்க்கை சீராக
இருக்கும். தந்தைவழி சொத்தில் பங்கு கிடைக்க இது உகந்த காலம். மூத்த
சகோதரர்கள் ஒரு ஆசிரியரைப் போல் கண்டிப்புடன் நடந்தாலும், நன்மையே செய்வர்.
பாக்கிப்பணம் சிறு முயற்சியினால் வந்துசேரும். பயணங்களின் போது மிகுந்த
கவனம் தேவை.
தொழிலதிபர்கள்:
லாட்ஜ், ஓட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, டிராவல்ஸ், கல்வி,
நிதிநிறுவனம் நடத்துவோருக்கு லாபம் சுமாராக இருக்கும். ஆட்டோமொபைல்,
டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள்,
குளிர்பானம், கட்டுமானப் பொருள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள்
பொருளின் தரத்தை உயர்த்துவதிலும். நிர்வாக வகையிலும் கவனம் கொள்வது
அவசியம். மற்ற தொழில் செய்வோருக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு
கிடைக்கும். புதிய ஒப்பந்தம் பெறுவதில் குறுக்கீடு உருவாகும். லாபம்
குறையும்.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, விவசாய இடுபொருட்கள், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்,
மருந்து, கட்டுமானப் பொருட்கள், குளிர்பானம், பர்னிச்சர், இறைச்சி,
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்பவர்களுக்கு போட்டி அதிகரிக்கும்.
லாபம் சுமார். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம்
கிடைக்கும். திறமை, நேர்மையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது
அவசியம். அளவான கொள்முதல், சரக்கு பாதுகாப்பில் கவனம் வேண்டும்.
பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. வாடிக்கையாளரிடம் கொடுத்த
சரக்குக்கான பாக்கிபணம் வசூலாகி முக்கிய தேவைகளுக்கு பயன்படும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவதால் பணியில்
குளறுபடி வராத தன்மை இருக்கும். சக பணியாளர்கள் அன்பு பாராட்டுவர்.
அஷ்டமத்து சனியின் தாக்கம் இருப்பதால் அலுவலகத்தில் பெயரைக் கெடுக்கும்
சம்பவங்கள் நிகழலாம். மிகுந்த கவனமாக இருக்கவும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் குழப்பமான மனதுடன் செயல்படுவதால் பணி நிறைவேறுவதில் தாமதம்
ஏற்படும். சக பணியாளர்களின் உதவியால் நிலைமை சீராகும். பதவி உயர்வு,
சலுகைகள் பெறுவதில் நிர்வாகத்தை அவசரப்படுத்தும் போக்கு வேண்டாம்.
குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாய்வீட்டு சீர்வரிசை பெற்று சந்தோஷ
வாழ்வு நடத்துவர். ஆன்மிக சுற்றுலா சென்று வரலாம். சுயதொழில் புரியும்
பெண்கள் அளவான மூலதனமிடுவது நல்லது. எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது.
மாணவர்கள்: மருத்துவம்,
விவசாயம், இன்ஜினியரிங், சட்டம், கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி,
பயோடெக்னாலஜி, ரசாயனத்துறை மாணவர்கள் குழப்பத்துடன் செயல்படுவதால்
படிப்பில் ஆர்வம் சிறிதளவு குறையும். சக மாணவர்களின் ஊக்கத்தினை ஏற்பதால்
படிப்பில் சீரான முன்னேற்றம் கிடைக்கும். மற்ற துறை மாணவர்கள் சுமாராகப்
படிப்பர். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படித்தால்
தான் அதிக மார்க் பெறலாம். தந்தையின் சொல் கேட்டு நடந்து குடும்பத்தில்
நற்பெயர் பெறுவீர்கள். கல்விநிறுவனங்களுக்கு வாகனங்களில் செல்லும் போது
மிகுந்த கவனம் வேண்டும். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஓரளவே
அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில்
உங்களுக்கு கிடைத்த நற்பெயர் கெடலாம். அரசு தொடர்பான செயல்கள் நிறைவேற
தாமதமாகும். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளமாட்டார்கள்.
எதிரிகளிடம் இருந்து விலகுவதால் சிரமம் குறையும். அரசியல் பணிக்கு
புத்திரர் வகையில் ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகள்:
விவசாயப் பணிகளில் தேவையற்ற தாமதம் ஏற்படும். அளவான மகசூல் கிடைக்கும்.
கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் பணம் செலவுக்கு கைகொடுக்கும். சொத்து
ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது.

பாட வேண்டிய பாடல்
பாடிக் கொண்டு ஆடிடப் பணிந்து
இடும் அன்பர் தம் பாதமலர்
சூடிக் கொண்டு ஆடித் திரிந்திடவே
என்னைத் தொண்டு கொள்வாய்
தேடிக் கொண்டு ஆடி வருவோர்கள்
வல்வினைச் சிக்கை எல்லாம்
சாடிக் கொண்டு ஆடிய
வாகாழி யாபதுத் தாரணனே.

பரிகாரம்:பைரவரை வழிபடுவதால் கஷ்டங்கள் விலகி நன்மை அதிகரிக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Empty மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

Post by krishnaamma Wed May 04, 2011 1:12 pm

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Joe6517

குரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

செல்வம் சேர்ப்பதை விட நற்பெயர் பெற விரும்பும் மீனராசி அன்பர்களே!
உங்கள்
ராசிநாதனும் பத்தாம் இட தொழில் ஸ்தான அதிபதியுமாகிய குருபகவான் தன,
குடும்ப ஸ்தானமாகிய மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் இந்த
அமர்வு வாழ்வை வளமாக்கும். இதுதவிர குருவின் 5, 7, 9ம் பார்வை பெறுகிற
இடங்களான விவகாரம், ஆயுள், தொழில் ஸ்தானங்களின்வழியாகவும் அதிக நன்மை
கிடைக்கும். பேச்சில் சத்தியமும் சாந்தமும் கலந்திருக்கும். திருமணம்
மற்றும் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
பணவரவு அதிகம் பெறுவதற்கான
புதிய வழிவகை தோன்றும். இளைய சகோதரர்கள் உங்களிடம் கூடுதல் நம்பிக்கை
கொள்வர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் செயல்பட்டு நற்புகழ் பெறுவீர்கள்.
வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணிகளை சிறப்பாகச் செய்து புத்தம் புதிதாக
மாற்றுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. தாய்வழி உறவினர்கள்
மதிப்புடன் நடத்துவர். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை உணர்ந்து
செயல்படுவர். பூர்வசொத்தில் வளர்ச்சியும் தாராள பணவரவும் கிடைக்கும்.
எதிரிகளின் செயலாக்கம் குறையும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும்.
உடல்நலம் பலம் பெறும். கடன்களை திட்டமிட்ட வகையில் அடைத்து நிம்மதி
பெறுவீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களைத் தேடி வந்து நட்பு கொள்வதுடன்,
அவர்களது பிரச்னைகளுக்கும் ஆலோசனை கேட்டுப்பெறுவர். குடும்பத்தேவை
பெருமளவில் நிறைவேறும்.
சிரமம் எதுவும் அணுகாத நல்வாழ்வு அமையும்.
தந்தைவழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகி அன்பு வளரும்.
சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறி புதிய அனுபவங்களை பெற்றுத்தரும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி எளிதாக நிறைவேறும்.
தொழிலதிபர்கள்:
கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல்ஸ்
நடத்துவோர், காகிதம், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், சிமென்ட், ஐஸ்கிரீம்,
சோப்பு, பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் திறமையை பயன்படுத்தி வளர்ச்சியும்
கூடுதல் பணவரவும் பெறுவர்கள். மற்ற தொழிலில் உள்ளவர்களுக்கு இவர்களை விட
ஆதாயம் அதிகமாக கிடைக்கும். சேமிக்க வழி யுண்டு.அபிவிருத்தி பணிகள்
நிறைவேறும். உற்பத்தியும் பொருள்தரமும் பிறர் பாராட்டும் வகையில்
இருக்கும். போட்டி குறையும். பணியாளர்கள் ஒத்துழைப்புதருவர். உபதொழில்
துவங்கும் முயற்சி நிறைவேறும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, புத்தகம், சிடி, பூஜைப் பொருட்கள், வாகனம்,
உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், இறைச்சி, காய்கறி,
பழங்கள், பூ, எண்ணெய் வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து கூடுதல் லாபம்
கிடைக்கும். மற்றவர்களுக்கும் தாராள விற்பனையும் லாபவிகித அதிகரிப்பும்
உண்டு. கூட்டு வியாபாரம் துவங்க முன் வருபவர்களை தவிர்ப்பது நல்லது.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாக மனதுடன் செயல்படுவர்.
தொழில் இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். பாராட்டு, பதவி உயர்வு
பெறுவீர்கள். உடல்நல ஒத்துழைப்பால் அதிகநேரம் பணிசெய்து சலுகை பெறுவீர்கள்.
சக பணியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகி நட்பு வளரும். தாராள
பணவசதி இருக்கும்.
பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் திறமையுடன் பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர்.
எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய சலுகை தாராளமாக கிடைக்கும். குடும்பப்
பெண்கள் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவர். நகை,
சொத்து வாங்க யோகமுண்டு. கணவரின் அன்பு சீராக கிடைக்கும். குரு பார்வையால்
மாங்கல்ய பலம் அதிகரிக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும்
பெண்கள் உற்பத்தி, விற்பனையைப் பெருக்கி அதிக லாபம் காண்பர். உபதொழில்
துவங்கும் வாய்ப்பு நிறைவேறும். இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, லைப்ரரி
சயின்ஸ், பிரிண்டிங் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, வங்கியியல், வணிகவியல்,
கம்ப்யூட்டர், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் துறை மாணவர்கள் சிறப்பாகப்
படிப்பர். மற்ற துறை மாணவர்கள் இவர்களையும் விட சிறப்பாகப் படிப்பர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஆரம்பம் முதலே படிக்க ஆரம்பித்து
விட்டால், மாநில ராங்க் பெறும் யோகமுண்டு. பணவசதி சீராக கிடைக்கும். சக
மாணவர்களாலும் உதவி உண்டு. படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில்
முன்னுரிமை உண்டு. சிலர் விளையாட்டுத் துறையில் சாதனை நிகழ்த்துவர்.
பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.
அரசியல்வாதிகள்:
அரசியலில் புகழ்பெற வெகுநாள் நினைத்திருந்த திட்டங்களை எளிதாக
செயல்டுத்துவீர்கள். தாராள பணவசதி உதவிகரமாக இருக்கும். ஆதரவாளர்களின் உதவி
கிடைக்கும். புதிய பதவி கவுரவமான வகையில் வந்து சேரும். எதிரிகள்
வியப்படையும் வகையில் முன்னேறுவீர்கள்.
விவசாயிகள்: பயிர்
வளர்க்க தேவையான பொருட்கள் நேரத்திற்கு கிடைக்கும். மகசூல் சிறந்து
சந்தையில் தாராள விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் பலன் உண்டு. புதிய
நிலம் வாங்கலாம்.

பாட வேண்டிய பாடல்
செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா
நின் கோவில் வாசலில்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன்
பவளவாய் காண்பேனே.

பரிகாரம்
வெங்கடாஜலபதியை வழிபடுவதால் கடந்த காலத்தில் விரயமான பணமும் கிடைக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum