புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_m10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10 
6 Posts - 67%
heezulia
இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_m10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_m10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_m10இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 11:23 am

இப்போதெல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஜோதிடம், இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Bld130005
சாஸ்திரமென்று மூடநம்பிக்கையான செயல்பாடுகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஒரு ஆணும், பெண்ணும் இணையும் உடலுறவு விஷயத்திலும் கூட சில மூட நம்பிக்கைக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

  • அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்ததி போன்ற நாட்களில் உடலுறவு கூடாது.
  • ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்தரம், சதயம் நட்சத்திரங்கள் உடலுறவுக்கு ஆகாது.
  • மாதப்பிறப்பு, வருசப் பிறப்பு, விரததினம், விரதத்துக்கு முந்தைய, பிந்தைய தினங்கள், தீட்டு நாட்கள், ஞாயிற்றுக் கிழமை, கிரகணம் போன்ற நாட்களிலும் உடலுறவு கொள்ளக் கூடாது.
  • இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை), அதிகாலை நான்காம் ஜாமத்திலும் (அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை) உடலுறவு கொள்ளக் கூடாது.
- என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், மகிழ்வான மனநிலையில் அவர்களுக்குக் கிடைக்கும் உடலுறவும் அதன் மூலம் கிடைக்கும் இன்பமும் இந்த ஜோதிட சாஸ்திரங்களால் தள்ளிப் போடப்படுகின்றன. இதனால் அவர்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதுடன் மன அழுத்தங்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.

ஆண் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்கிற தவறான கருத்தும் தமிழ்நாட்டில் இருக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும், உடலுறவு கொள்வதற்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் ஒரு ஆணையும், பெண்ணையும் பிரிந்திருக்கவே வலியுறுத்துகின்றனர். இது ஒரு தவறான செயலாகும்.

மேலும் நண்பகல் 12 மணி, இரவு 12 மணி ஆகிய நேரங்களில் உடலுறவு கொள்ளக்கூடாது என்கிறார்கள். இந்த நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் ஏதாவது தீமைகள் ஏற்படும் என்று எந்த மருத்துவச் செய்திகளும் இல்லை. இருப்பினும் இந்த நேரங்களைத் தவிர்த்து விடுகிறார்கள்.

ஆடி மாதம் உறவு வைத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். இப்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். இதற்கு அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. இருந்தாலும் புதுமணத் தம்பதிகளை ஆடி மாதங்களில் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. உலகில் எத்தனையோ குழந்தைகள் சித்திரை மாதத்தில் பிறக்கின்றன. அந்தக் குழந்தைகளின் தந்தைகளுக்கெல்லாம் பாதிப்புகளா வந்துவிட்டது?

ஒரு ஆண் மாதவிடாய் ஆன பெண்ணுடன் மாதவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் வரை உடலுறவு கொள்ளக் கூடாது. பெண்ணுக்கு மாதவிடாய் ஆன நாள் முதல் 6, 8, 10, 12, 14, 16 ஆகிய இரட்டை வரிசை நாட்களில் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தையும், 5, 7, 9, 11, 13, 15 ஆகிய ஒற்றை வரிசை நாட்களில் உடலுறவு கொண்டால் பெண் குழந்தையும் பிறக்கும் என்கிறார்கள். இதில் சிறிது கூட உண்மையில்லை. மாதவிலக்கான நாட்களில் உடலுறவு கொள்வதால் இருவருடைய உடலுக்கும் மருத்துவ ரீதியாக எவ்வித நோய்களும், தொல்லைகளும் வரப் போவதில்லை. மாதவிலக்கான நாட்களில் பெண்களுக்கு மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எவ்வித பிரச்சனையுமில்லாவிடில் தாராளமாக உடலுறவு கொள்ளலாம். தவறில்லை என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். மேலும் ஒற்றை வரிசை, இரட்டை வரிசை நாட்களுக்கும் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இருந்தாலும் இதையும் சிலர் நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்த ஜோதிட சாஸ்திரங்கள் தவிர, உடல் ரீதியாகவும் சில மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. உடல் ரீதியான நம்பிக்கைகளில் நிறம், உடல் பருமன், உயரம் போன்றவை குறித்து பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. பொதுவாக நிறம், பருமன, உயரம் போன்றவைக்கும் உடலுறவுக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை. இருந்தாலும் இவைகள் குறித்த தவறான கருத்துக்களில் பலர் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளாகவே தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? Indian-couple-199x300
மேலும் சிறிய மார்பகங்களுடைய பெண்களுடன் உடலுறவு கொள்வதில் ஆண்களுக்கு திருப்தி இருப்பதில்லை என்கிற தவறான கருத்தும் இருக்கிறது. மார்பகங்கள் பெரியதாகவோ, சிறியதாகவோ இருப்பது உடலுறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆண்தான் பெண்ணின் மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். உண்மையில் சிறிய மார்பகங்களுடைய பெண்கள்தான் வேகமாகக் கிளர்ச்சியடைந்து உடலுறவில் ஆணுக்கு அதிகமான இன்பத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்ணின் மார்பகங்களின் அளவுக்கும் உடலுறவுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

தொந்தியுடையவர்களால் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாது என்கிற எண்ணமும் சிலரிடம் இருக்கிறது. இதுவும் தவறான ஒன்றுதான். உடலுறவில் தொந்தியுடையவர்களுக்கு சற்று சிரமங்கள் இருந்தாலும் உடலுறவுக்கென்று எத்தனையோ முறைகள் இருப்பதால் அவர்களுடைய இணைகளுக்கேற்றபடி சரியான முறையைத் தேர்வு செய்து, உடலுறவு கொள்ளும் போது இருவருமே இன்பமடையலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இப்படி ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவில் உடலுறவு குறித்து தனித்தனியான கருத்து வேறுபாடுகள் எத்தனையோ இருக்கிறது. இந்த கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். உடலுறவில் ஈடுபட விரும்பும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அவர்களுக்குள்ள நெருக்கமும் விருப்பமும்தான் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் உடலுறவில் அதிகமான இன்பத்தை அள்ளித் தருகிறது.

எனவே ஜோதிடம் மற்றும் உடல் வழியிலான தவறான எண்ணம் போன்ற மூட நம்பிக்கைகளைத் தூக்கி வீசுங்கள். உங்கள் ஜோடிக்கு உங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கி மகிழுங்கள்.


இரவு நேரத்தில் இன்பமடைய

  • படுக்கையறைக்குச் செல்லும் போது உங்கள் அனைத்துக் கவலைகளையும் கதவுகளை மூடும் போதே மூடிப்போட்டு விடுங்கள்.
  • இன்றைய இரவு நாளை கிடைக்காமல் போகலாம் என்கிற எண்ணத்துடன் ஒவ்வொரு நாள் இரவையும் உல்லாசமாக்கிக் கொள்ளுங்கள்.
  • உடல்நிலை, மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் கருதினால் உங்கள் துணையிடம் சொல்லி நாளை இரவை நமதாக்கிக் கொள்வோம் என்று நம்பிக்கையூட்டுங்கள்.
  • புத்தகத்தில் படித்தது, படங்களில் பார்த்தது, பிறரிடம் கேட்டது என்று சொல்லி உங்கள் துணையிடம் எதிர்பார்த்து அது அமையாமல் ஏமாற்றமானால் அதை அடைய அடுத்தடுத்து முயற்சிக்கும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
  • உங்கள் படுக்கையறை உங்களுக்கான இன்பக் களமாக இருக்க வேண்டுமே தவிர இருவருக்கிடையிலான கருத்து மோதல் களமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கிடையிலான உறவுகள் உல்லாசமான இரவுகளாக வாழ்த்துக்கள்!

-வி.பி.மணிகண்டன். இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக