Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
+2
மகா பிரபு
தாமு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
கழுகார் உள்ளே நுழையும்போது சிறகுகளிலும் அனல் தெறித்தது!
''அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெப்பம் தகிக்கிறது. அதற்குப் போட்டியாக அரசியலும் கனகனக்கிறது!'' என்றார் கழுகார்.
''எதிர்பார்த்தது மாதிரியே தி.மு.க. உயர் நிலைச் செயல் திட்டக் குழுவில் எதுவும் நடந்துவிடவில்லை,
''அவர் எங்கே, இதில் வந்தார்?''
''தயாநிதி மாறன், கனிமொழியை மாட்டிவிடக்கூடிய காரியங்களை டெல்லியில் இருந்து பார்த்தார் என்று நினைத்துவிட்டாராம் ராஜாத்தி. இதற்கிடையே, டெல்லி நிலவரம் தொடர்பாகப் பேச, கருணாநிதியை சந்திக்க தயாநிதி முயற்சித்தாராம். அதை கருணாநிதி தவிர்த்துவிட்டார். விஷயம் செல்விக்குப் போனது. அவர் உடனே கருணாநிதியிடம் பேசினார். 'ஆரம்பத்திலேயே தயாநிதியிடம் இந்த விஷயத்தை ஒப்படைத்து இருந்தால், டெல்லியில் இவ்வளவு பிரச்னை வந்து இருக்குமா? நீங்க தேவையில்லாமல் சந்தேகப்பட்டு ஒதுக்கிவைத்த பிறகு அவர் எதிலுமே தலையிடவில்லை. இப்போதாவது முக்கியத்துவம் கொடுத்து வழி விட்டால், டெல்லி விஷயங்களைக் கவனிச்சு, கஷ்டத்தைக் குறைக்கலாம்’ என்று செல்வி சொல்ல.... கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி - தயாநிதி சந்திப்பு நடந்தது.''
''என்ன சொல்கிறார் தயாநிதி?''
''டெல்லி நிலவரத்தை சொல்லி இருக்கிறார் தயாநிதி! 'தாத்தா சொல்றது மாதிரி நாங்க ராஜினாமா செய்துவிடுகிறோம். ஆனால், அடுத்து என்ன செய்யப் போகிறோம்? காங்கிரஸ் இல்லாம ஆட்சி அமைக்க முடியாதுங்கிற நிலைமை வந்துச்சுன்னா... என்ன பண்ணுவீங்க?’ என்று லாஜிக்கான கேள்வி கேட்க, கருணாநிதி யோசிக்க ஆரம்பித்தாராம். கட்சியின் அவசரக் கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகனும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டிலேயே இறுக்கமாக இருந்துவிட... வேறு வழி இல்லாமல் மே.வீ.கல்யாணசுந்தரம் மட்டும்தான், கட்சியின் அவசரக் கூட்டத்தில் கருணாநிதியின் கோபமான கருத்தைப் பிரதிபலித்தார்.''
''எமது நிருபர் அதை லைவ் ரிப்போர்ட் செய்துள்ளாரே?''
''கூட்டத்தில் ஒருவர் சொன்ன தகவல்தான் அத்தனை பேரையும் கலங்க வைத்ததாம். 'தேர்தலில் நாம் அனைத்துத் தொகுதிகளுக்கும் தாராளமாகச் செலவு செய்தோம். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் பணம் கொடுத்தோம். அப்போது எல்லாம் காரணம் கேட்காதவர்கள், நம் மீது நடவடிக்கை எடுக்க மட்டும் பாய்வது ஏன்?’ என்று கேட்டாராம். எப்படி இருக்கிறது நியாயம்?''
''கருணாநிதியின் பேச்சிலும் ஏதோ சில சந்தேக ரேகைகள் படர்ந்து இருந்ததே?''
''கனிமொழி, கட்சிக்காக எப்படி எல்லாம் பாடுபடுகிறார் என்பதை விளக்கிய கருணாநிதி, 'எனக்குள்ள சங்கடங்களைப் பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னார். கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்வதற்கும், கட்சியைக் காட்டிக்கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தி.மு.க-வினரே குழம்பித் தவிக்கிறார்கள். தேர்தலுக்குத்தான் செலவு செய்தோம் என்று ஒருவர் சொல்ல.... கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கருணாநிதி விளக்கம் அளிக்க... இந்தப் பேச்சுகள் தொண்டனைத்தான் அதிகமாகக் குழப்புகின்றன. பொதுவாக இதுபோன்ற இன்கேமரா மீட்டிங்கில் கருணாநிதி பேசுவதைப் பத்திரிகைகளுக்குத் தர மாட்டார்கள். ஆனால், அந்த நடைமுறையை மீறி கருணாநிதியின் பேச்சுகள்... அதுவும் கனிமொழியைப் புகழ்பாடும் வரிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு நாளிதழ்களுக்குத் தரப்பட்டன.''
''அதற்கு என்ன காரணம்?''
''கொதிநிலையில் இருக்கும் ராஜாத்தி அம்மாளைத் திருப்திப்படுத்துவதுதான் இதன் முதல் நோக்கம். 'அவங்களை விட்டுட்டு என் மகளை மட்டும் பிடிப்பாங்களா?’ என்று ராஜாத்தி சொல்லி வருவதை சமாதானப்படுத்த, இந்த உரையைக் கருணாநிதி பயன்படுத்திக்கொண்டார். 'என் மீதான வழக்கை சட்டப்பூர்வமாக சந்திப்பேன்’ என்று கனிமொழி சொன்னார் அல்லவா? அதற்கான வக்கீல் குழாம் இப்போதே கூடிவிட்டது. அதில் ஒருவர் சொன்ன வாதம் என்ன தெரியுமா? '60 சதவிகிதம் பங்கு உள்ளவரை விட்டுவிட்டு 20 சதவிகிதப் பங்கு உள்ளவர் மீது வழக்குப் போடுவதை எளிதாக உடைத்துவிடலாம்’ என்று ஒரு வக்கீல் சொல்ல, அதையே ராஜாத்தி அம்மாளும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறாராம். கருணாநிதியைக் கிலி ஏற்படுத்தி இருப்பது இந்த வாசகங்கள்தான். இந்நிலையில், சில கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன் காலை முதல் ராஜாத்தி அம்மாள் சாப்பிடாமல் இருப்பதாக செய்தி கிளப்புகிறார்கள் சிலர்!''
''பிரச்னை முற்றுகிறதா?''
''அதுதான் நடக்கிறது. இரண்டுக்கும் மத்தியஸ்தம் செய்யக்கூடிய ஆட்கள் யாரும் இல்லை! எல்லாச் சிக்கல்களையும் தீர்த்துவைக்கும் மனிதராக இருந்த ஆற்காடு வீராசாமி உடல்நிலையும் இப்போது அதற்கு இடம் கொடுக்கவில்லை. இவர்களும் அவரை ஒதுக்கிவைக்க ஆரம்பித்தார்கள். அன்பழகன் இதில் எல்லாம் எப்போதும் தலையிட மாட்டார். அழகிரி, ஸ்டாலின், ராஜாத்தி ஆகிய மூவரையும் காம்ப்ரமைஸ் செய்து விஷயத்தை விவகாரம் ஆகாமல் தடுக்கும் மனிதர்கள் இப்போதைக்கு தி.மு.க-வில் இல்லை என்பதுதான் நிஜம்!''
''கனிமொழி விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்?''
''மே 6-ம் தேதி அவரை ஆஜராகச் சொல்லி இருக்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டவர்களில் கனிமொழியும் 'கலைஞர் டி.வி.’ சரத்குமாரும் தவிர மற்றவர்கள் அனைவரும் கைதாகிவிட்டார்கள். எனவே இவர்கள் இருவரும் அடுத்தடுத்துக் கைதாகலாம் என்றும் பேச்சுகள். அதைவிட முக்கியமானது என்ன தெரியுமா?''
''சொல்லும்!''
''2ஜி ஊழலில் சிக்கி இருக்கும் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளை முடக்கும் காரியங்களை சி.பி.ஐ. பார்த்து வருகிறது. அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு கவரை ஒப்படைத்துள்ளார். 'டெலிகாம் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெயர்கள்தான் அதில் உள்ளன. கலைஞர் டி.வி-யின் பெயரை ஒருவேளை சி.பி.ஐ. குறிப்பிட்டு இருந்தால், அதுவும் முடக்கப்படலாம்’ என்று டெல்லியில் இருந்து சொல்கிறார்கள்!'' என்றபடி கழுகார் எழுந்தார்... பறந்தார்!
படங்கள்: கே.கார்த்திகேயன், 'ப்ரீத்தி’ கார்த்திக்
சிறுபான்மை சிக்கல்!
'வாக்குப் பதிவுக்குப் பிறகு எடுத்த சர்வேயின்படி 130 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்!’ என உளவுத்துறை கொடுத்த அறிக்கையைத்தான் கருணாநிதி நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டு இருந்தார். வெற்றி நிலவரம் மீடியாக்களில் மாறி மாறி அடிபட, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வாக்குகள் யாருக்கு சாதகமாக விழுந்திருக்கின்றன என்பது பற்றி தனியார் நிறுவனம் மூலம் சர்வே எடுக்கச் சொன்னாராம். 'கடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு விழுந்த சிறுபான்மை வாக்குகள் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தலைகீழாக மாறி அ.தி.மு.க-வுக்கு சாதகமாகிவிட்டன!’ என சர்வே சொல்ல... முதல்வரின் முகம் வாடிவிட்டதாம்.
ஜீனியர் விகடன்
04-மே -2011
Re: மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
பகிர்வுக்கு நன்றி தாமு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
60 வதா , 20 வதா இப்ப பிரச்சனை...
ராஜாவின் நேரடி தொடர்பில் இருந்தவர் கனிமொழி அதனால்தான் . உங்கள் பெயர் குற்றபத்திரிகையில் இடம் பெற்று உள்ளது.......
ராஜாவின் நேரடி தொடர்பில் இருந்தவர் கனிமொழி அதனால்தான் . உங்கள் பெயர் குற்றபத்திரிகையில் இடம் பெற்று உள்ளது.......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
தாமு wrote:
எதுக்கு இந்த முழி,,,, அனைத்து பண பரிமாற்றகளிம் கனிமொழிக்கும் பங்கு உண்டு என்பதை சொன்னேன்.....
நீங்க வேற எதையாவது நினைச்சிங்கல...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
தாமு இப்படி முழிக்கறது இது ஒன்னும் புதுசல்ல பாலாஜிதாமு wrote:
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
முரளிராஜா wrote:தாமு இப்படி முழிக்கறது இது ஒன்னும் புதுசல்ல பாலாஜிதாமு wrote:
Re: மிஸ்டர் கழுகு: 60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா?
பேசிகிட்டிருக்கும்பொழுது அடிக்கற வேலையெல்லாம் வேண்டாம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மிஸ்டர் கழுகு: அம்மாவுக்காக ‘கோ’ தானம்!
» மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!
» மிஸ்டர் கழுகு: ராஜினாமா! தயங்கிய தயாநிதி
» மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்..
» குதித்து வருது குஜராத் கரன்ட்! ( மிஸ்டர் கழுகு )
» மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!
» மிஸ்டர் கழுகு: ராஜினாமா! தயங்கிய தயாநிதி
» மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்..
» குதித்து வருது குஜராத் கரன்ட்! ( மிஸ்டர் கழுகு )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|