Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
+10
பாலாஜி
முரளிராஜா
உதயசுதா
ரபீக்
அப்துல்
அசுரன்
பிஜிராமன்
ரா.ரமேஷ்குமார்
Aathira
balakarthik
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
First topic message reminder :
![ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith - Page 3 30ajith2](https://2img.net/h/cinema.vikatan.com/images/articles_images/30ajith2.jpg)
இன்றய நிலமையில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் பெரிய குற்றசாட்டு மன்றங்கள் என்ற பெயரில் பல இளைங்கர்களின் வாழ்க்கையை தங்கள் சுய லாபதிர்க்காய் அழிக்கிறார்கள் என்பதுதான் ... அது உண்மையும் கூட .... எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்று இருக்கும் நண்டு சுண்டு நடிகர்கள் வரை , ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை தொடங்கி வைத்து கொண்டு , அவர்களை தங்கள் சொந்த லாபத்திர்க்கு பயன்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள் .... எம்ஜிஆர் , சிவாஜி , விஜயகாந்த் என்று சில பெரிய நடிகர்கள் அவர்கள் ரசிகர்களை பயன்படுத்தி அரசியலில் இறங்கி தனக்கும் தன் குடும்பத்திர்க்கும் லாபம் தேடி கொண்டார்கள் ... ஆனால் அவர்களை நம்பிய ரசிகர்கள் இன்னமும் மூட்டை தூக்கி கொண்டும் , கந்து வட்டிக்கு கடன் வாங்கியும்தான் பிழைப்பை ஒட்டி கொண்டு இருக்கிறார்கள் ..
நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பதான் பின்னணி என்ன? முதல் காரணம் தங்கள் படத்திர்க்கு அதிக வசூல் கிடைக்க வேண்டும் , தான் கோடிகளில் புரள வேண்டும் என்பதுதான் ... இன்று கோடிகளில் புரளும் பெரிய நடிகர்களின் முதுகெலும்பே இந்த ரசிகர்கள்தான்... அவர்கள்தான் எவ்வளவு பணம் கொடுத்தேனும் தன் தலைவனின் படத்தை பார்க்க தயாராக இருப்பார்கள் ... சொல்ல போனால் ஒரு நடிகனின் உயிர் நாடியே இந்த ரசிகர்கள்தான்.... படங்களில் கதாநாயகர்கள் பன்ச் வசனம் பேசுவது , பறந்து பறந்து சண்டை போடுவது ,எல்லாமே இந்த மாதிரியான ரசிகர்களை தனக்கென்று உருவாக்க வேண்டும் என்பதர்க்காகவே....
அடுத்தது அவர்களை வைத்து அரசியலில் காய் நகர்த்தி கோடிகோடியாய் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசை ... சமீபத்தில் ஒரு நடிகர் கூட இப்படி அரசியலுக்கு வர ஆசைபட்டு நாகபட்டினத்தில் ஒரு மீட்டிங் நடத்தியது ஞாபகத்தில் இருக்கலாம் ... அவர் ஒன்றும் பெரிய சமூக சேவகர் கிடையாது , இல்லை அவர் பரம்பரையிலும் யாரும் சமூக சேவை செய்தது கிடையாது .. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் ஊருக்கு நூறு ஒட்டாவது விழும் .. காரணம் இந்த ரசிகர் மன்றங்கள் ... இவர்களை பயன்படுத்தி அரசியல் பேரத்தில் பெரிய தொகையை உருவிவிடலாம் ...
ஆரம்ப காலகட்டதில் வெறும் ரசிகர் மன்றங்களாக உருவாகும் இவை , போக போக நற்பணி இயக்கமாக மாறும் .... அடுத்து கட்சியாக உருவெடுக்கும் .... மன்றாமாக இருக்கும் பொது ஐந்து கோடி சம்பளம் வாங்கிய அந்த நடிகர் நற்பணி இயக்கமாக மாறும் பொது பத்து கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளந்திருப்பார்... பின்னர் கட்சிக்கு தலைவனானவுடன் அவர் டீலிங் 500 கோடி 1000 கோடி என்ற அளவில்தான் இருக்கும் ... ஆனால் அவர்களின் பின்னால் கொடி பிடித்து கொண்டு அழைந்த ரசிகர்கள் நிலை? எங்கள் தெருவிலேயே ஒரு பெரிய நடிகருக்கு ரசிகராக இருந்து , அவருக்காகவே வாழ்ந்து இன்று தன்னுடய வாழ்க்கையை தொலைத்து சாப்பாட்டிற்க்கே பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் ஒருவரை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்....
ரசிகர்மன்றங்கள் ஆரம்பிக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருப்பார்கள் .. அவர்களின் அறியாமையை கிறுக்குதனத்தை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்... நான் அரசியலுக்கு நாளைக்கு வருவேன் நாளன்னைக்கு வருவேன் என்று அவர்களை உசுப்பி விட்டு கொண்டே இருப்பதும் , தடாலடியாக அரசியலுக்கு வந்து ரசிகனாக இருந்த அவனை தொண்டனாக பதவி உயர்வு அளிப்பதும் , கொடி பிடித்து மீனவர்களுக்காக உண்ணா விரதம் இருப்பதும் அவர்களின் இந்த கிறுக்குதனத்தை மேலும் அதிகரிப்பதர்க்காகவே ... தேள் கடித்த குரங்குகளுக்கு சாராயம் கொடுக்கும் வேலையைத்தான் இன்று வரை எல்லா நடிகர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...
ஆனால் இன்று முதன் முறையாக ஒரு நடிகன் யாரும் செய்ய துணியாத செய்வதற்க்கு அஞ்சிய ஒரு செயலை செய்துள்ளான் .... எனக்கு ரசிகர்மன்றமே வேண்டாம் என்று தடாலடியாக தெரிவித்துள்ளார் ... அதற்க்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இவரின் இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியது... அவர் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடும் அஜீத் குமார்... தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்மன்றங்களை கொண்டிருக்கும் நடிகர் அவர்... தன் ரசிகர்களை இதுவரை தன் சுயநலதிர்க்காக பயன்படுத்த தயங்கும் ரஜினி கூட செய்ய அஞ்சிய ஒரு செயலை சர்வ சாதாரணமாக செய்து விட்டார் தல... இதன் மூலம் தமிழ் சினிமாவில் நான் என்றுமே ஜென்டில்மென் தான் என்பதை அழுத்தமாக பதியவைத்து விட்டார்...
இப்படி செய்வதன் மூலம் அவருக்கு கிடைக்க போகும் லாபத்தை விட நஷ்டம்தான் அதிகமாக இருக்கும் .. காரணம் அவர் ரசிகர்களின் நடிகர் ... அவருக்கு இருக்கும் பெரிய பலமே அவர் ரசிகர்கள்தான்... இதன் மூலம் பல ரசிகர்கள் அவருக்கு எதிராக போக வாய்ப்பு உண்டு , அவரின் படங்களின் வசூலில் ஆப்பு வைக்க நிறைய வாய்ப்பு உண்டு .... மற்ற நடிகர்கள் எல்லாம் அஞ்சியது இதற்காக மட்டுமே ..
இன்று மற்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவையும் தாண்டி அவர்களை தன் முதல்வர் நாற்காலி ஆசைக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கும் போது அவர்களை எல்லாம் விட அதிகமான ரசிகர்களை தன் பின்னால் வைத்திருக்கும் தல , அவர்களை பயன்படுத்தி ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுக்கிறேன் லேப்டாப் கொடுக்கிறேன் என்று அரசியலுக்கு அடி போடாமல் , உங்கள் வேலையை பாருங்கள் என்று அவர்களை கட்டவிழ்த்து விட்டு இதுவரைக்கும் அவர்களை ரசிகர் மன்றங்களில் அடைத்து வைத்து தான் செய்த பாவத்தை போக்கி கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ...
குடும்பத்தை முதலில் கவனியுங்கள் மத்தத அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று மற்ற நடிகர்கள் எல்லாம் வாய்மொழியாக மட்டும் சொல்லி கொண்டு இருந்ததை இன்று தல செயலில் காட்டி விட்டார் ... தன் ரசிகர் மன்றங்களை கலைத்து இருந்தாலும் , மற்ற எந்த நடிகணும் தன் ரசிகனுக்கு கொடுக்க முடியாத சந்தோஷத்தை தல எங்களுக்கு தந்திருக்கிறார்.. ஆம் பெருமையாக சொல்லி கொள்ளுவோம் நாங்கள் இவரின் ரசிகர்கள் என்று ... மற்றவர்களை போல பன்ச் வசனம் கேட்டு ரசிகனானவர்கள் இல்லை நாங்கள் , அவரின் தைரியமான நடவடிக்கைகளுக்காக ரசிகர்கள் ஆனவர்கள் ...
எங்களுக்கு மன்றங்கள் தேவை இல்லை , தல எப்பொழுதும் இதே போல வெளிப்படையாக , நேர்மையாக இருந்தால் போதும் ...
நன்றி :- ஏபிகே ராஜா
இணயம் :- http://apkraja.blogspot.com/2011/04/hats-off-ajith.html
![ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith - Page 3 30ajith2](https://2img.net/h/cinema.vikatan.com/images/articles_images/30ajith2.jpg)
இன்றய நிலமையில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் பெரிய குற்றசாட்டு மன்றங்கள் என்ற பெயரில் பல இளைங்கர்களின் வாழ்க்கையை தங்கள் சுய லாபதிர்க்காய் அழிக்கிறார்கள் என்பதுதான் ... அது உண்மையும் கூட .... எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்று இருக்கும் நண்டு சுண்டு நடிகர்கள் வரை , ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை தொடங்கி வைத்து கொண்டு , அவர்களை தங்கள் சொந்த லாபத்திர்க்கு பயன்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள் .... எம்ஜிஆர் , சிவாஜி , விஜயகாந்த் என்று சில பெரிய நடிகர்கள் அவர்கள் ரசிகர்களை பயன்படுத்தி அரசியலில் இறங்கி தனக்கும் தன் குடும்பத்திர்க்கும் லாபம் தேடி கொண்டார்கள் ... ஆனால் அவர்களை நம்பிய ரசிகர்கள் இன்னமும் மூட்டை தூக்கி கொண்டும் , கந்து வட்டிக்கு கடன் வாங்கியும்தான் பிழைப்பை ஒட்டி கொண்டு இருக்கிறார்கள் ..
நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பதான் பின்னணி என்ன? முதல் காரணம் தங்கள் படத்திர்க்கு அதிக வசூல் கிடைக்க வேண்டும் , தான் கோடிகளில் புரள வேண்டும் என்பதுதான் ... இன்று கோடிகளில் புரளும் பெரிய நடிகர்களின் முதுகெலும்பே இந்த ரசிகர்கள்தான்... அவர்கள்தான் எவ்வளவு பணம் கொடுத்தேனும் தன் தலைவனின் படத்தை பார்க்க தயாராக இருப்பார்கள் ... சொல்ல போனால் ஒரு நடிகனின் உயிர் நாடியே இந்த ரசிகர்கள்தான்.... படங்களில் கதாநாயகர்கள் பன்ச் வசனம் பேசுவது , பறந்து பறந்து சண்டை போடுவது ,எல்லாமே இந்த மாதிரியான ரசிகர்களை தனக்கென்று உருவாக்க வேண்டும் என்பதர்க்காகவே....
அடுத்தது அவர்களை வைத்து அரசியலில் காய் நகர்த்தி கோடிகோடியாய் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசை ... சமீபத்தில் ஒரு நடிகர் கூட இப்படி அரசியலுக்கு வர ஆசைபட்டு நாகபட்டினத்தில் ஒரு மீட்டிங் நடத்தியது ஞாபகத்தில் இருக்கலாம் ... அவர் ஒன்றும் பெரிய சமூக சேவகர் கிடையாது , இல்லை அவர் பரம்பரையிலும் யாரும் சமூக சேவை செய்தது கிடையாது .. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் ஊருக்கு நூறு ஒட்டாவது விழும் .. காரணம் இந்த ரசிகர் மன்றங்கள் ... இவர்களை பயன்படுத்தி அரசியல் பேரத்தில் பெரிய தொகையை உருவிவிடலாம் ...
ஆரம்ப காலகட்டதில் வெறும் ரசிகர் மன்றங்களாக உருவாகும் இவை , போக போக நற்பணி இயக்கமாக மாறும் .... அடுத்து கட்சியாக உருவெடுக்கும் .... மன்றாமாக இருக்கும் பொது ஐந்து கோடி சம்பளம் வாங்கிய அந்த நடிகர் நற்பணி இயக்கமாக மாறும் பொது பத்து கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளந்திருப்பார்... பின்னர் கட்சிக்கு தலைவனானவுடன் அவர் டீலிங் 500 கோடி 1000 கோடி என்ற அளவில்தான் இருக்கும் ... ஆனால் அவர்களின் பின்னால் கொடி பிடித்து கொண்டு அழைந்த ரசிகர்கள் நிலை? எங்கள் தெருவிலேயே ஒரு பெரிய நடிகருக்கு ரசிகராக இருந்து , அவருக்காகவே வாழ்ந்து இன்று தன்னுடய வாழ்க்கையை தொலைத்து சாப்பாட்டிற்க்கே பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் ஒருவரை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்....
ரசிகர்மன்றங்கள் ஆரம்பிக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருப்பார்கள் .. அவர்களின் அறியாமையை கிறுக்குதனத்தை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்... நான் அரசியலுக்கு நாளைக்கு வருவேன் நாளன்னைக்கு வருவேன் என்று அவர்களை உசுப்பி விட்டு கொண்டே இருப்பதும் , தடாலடியாக அரசியலுக்கு வந்து ரசிகனாக இருந்த அவனை தொண்டனாக பதவி உயர்வு அளிப்பதும் , கொடி பிடித்து மீனவர்களுக்காக உண்ணா விரதம் இருப்பதும் அவர்களின் இந்த கிறுக்குதனத்தை மேலும் அதிகரிப்பதர்க்காகவே ... தேள் கடித்த குரங்குகளுக்கு சாராயம் கொடுக்கும் வேலையைத்தான் இன்று வரை எல்லா நடிகர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...
ஆனால் இன்று முதன் முறையாக ஒரு நடிகன் யாரும் செய்ய துணியாத செய்வதற்க்கு அஞ்சிய ஒரு செயலை செய்துள்ளான் .... எனக்கு ரசிகர்மன்றமே வேண்டாம் என்று தடாலடியாக தெரிவித்துள்ளார் ... அதற்க்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இவரின் இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியது... அவர் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடும் அஜீத் குமார்... தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்மன்றங்களை கொண்டிருக்கும் நடிகர் அவர்... தன் ரசிகர்களை இதுவரை தன் சுயநலதிர்க்காக பயன்படுத்த தயங்கும் ரஜினி கூட செய்ய அஞ்சிய ஒரு செயலை சர்வ சாதாரணமாக செய்து விட்டார் தல... இதன் மூலம் தமிழ் சினிமாவில் நான் என்றுமே ஜென்டில்மென் தான் என்பதை அழுத்தமாக பதியவைத்து விட்டார்...
இப்படி செய்வதன் மூலம் அவருக்கு கிடைக்க போகும் லாபத்தை விட நஷ்டம்தான் அதிகமாக இருக்கும் .. காரணம் அவர் ரசிகர்களின் நடிகர் ... அவருக்கு இருக்கும் பெரிய பலமே அவர் ரசிகர்கள்தான்... இதன் மூலம் பல ரசிகர்கள் அவருக்கு எதிராக போக வாய்ப்பு உண்டு , அவரின் படங்களின் வசூலில் ஆப்பு வைக்க நிறைய வாய்ப்பு உண்டு .... மற்ற நடிகர்கள் எல்லாம் அஞ்சியது இதற்காக மட்டுமே ..
இன்று மற்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவையும் தாண்டி அவர்களை தன் முதல்வர் நாற்காலி ஆசைக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கும் போது அவர்களை எல்லாம் விட அதிகமான ரசிகர்களை தன் பின்னால் வைத்திருக்கும் தல , அவர்களை பயன்படுத்தி ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுக்கிறேன் லேப்டாப் கொடுக்கிறேன் என்று அரசியலுக்கு அடி போடாமல் , உங்கள் வேலையை பாருங்கள் என்று அவர்களை கட்டவிழ்த்து விட்டு இதுவரைக்கும் அவர்களை ரசிகர் மன்றங்களில் அடைத்து வைத்து தான் செய்த பாவத்தை போக்கி கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ...
குடும்பத்தை முதலில் கவனியுங்கள் மத்தத அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று மற்ற நடிகர்கள் எல்லாம் வாய்மொழியாக மட்டும் சொல்லி கொண்டு இருந்ததை இன்று தல செயலில் காட்டி விட்டார் ... தன் ரசிகர் மன்றங்களை கலைத்து இருந்தாலும் , மற்ற எந்த நடிகணும் தன் ரசிகனுக்கு கொடுக்க முடியாத சந்தோஷத்தை தல எங்களுக்கு தந்திருக்கிறார்.. ஆம் பெருமையாக சொல்லி கொள்ளுவோம் நாங்கள் இவரின் ரசிகர்கள் என்று ... மற்றவர்களை போல பன்ச் வசனம் கேட்டு ரசிகனானவர்கள் இல்லை நாங்கள் , அவரின் தைரியமான நடவடிக்கைகளுக்காக ரசிகர்கள் ஆனவர்கள் ...
எங்களுக்கு மன்றங்கள் தேவை இல்லை , தல எப்பொழுதும் இதே போல வெளிப்படையாக , நேர்மையாக இருந்தால் போதும் ...
நன்றி :- ஏபிகே ராஜா
இணயம் :- http://apkraja.blogspot.com/2011/04/hats-off-ajith.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
பூஜிதா wrote:வருங்கால முதல்வர் தல வாழ்க
ஆனால் இது கொஞ்சம் அதிகமாக தெரியுதே....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
வை.பாலாஜி wrote:பூஜிதா wrote:வருங்கால முதல்வர் தல வாழ்க
ஆனால் இது கொஞ்சம் அதிகமாக தெரியுதே....
ஆமாம் எதிர்கால ஜனாதிபதின்னு சொல்லணும்
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
maniajith007 wrote:வை.பாலாஜி wrote:பூஜிதா wrote:வருங்கால முதல்வர் தல வாழ்க
ஆனால் இது கொஞ்சம் அதிகமாக தெரியுதே....
ஆமாம் எதிர்கால ஜனாதிபதின்னு சொல்லணும்
சரி வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
வை.பாலாஜி wrote:
சரி வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
ஹாலிவுட் நடிகைகளை ஆட சொல்லி பாராட்டு விழா எடுப்பீங்களா
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
maniajith007 wrote:வை.பாலாஜி wrote:
சரி வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
ஹாலிவுட் நடிகைகளை ஆட சொல்லி பாராட்டு விழா எடுப்பீங்களா
கஜத்ரட்ஜகன் குருப்பா நீங்க......
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
வை.பாலாஜி wrote:
கஜத்ரட்ஜகன் குருப்பா நீங்க......![]()
![]()
![]()
இது தெரிய இவ்வளவு நாளா ஆச்சு
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
maniajith007 wrote:வை.பாலாஜி wrote:
சரி வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
ஹாலிவுட் நடிகைகளை ஆட சொல்லி பாராட்டு விழா எடுப்பீங்களா
ஆம் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
பூஜிதா wrote:
ஆம் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா
இதுல வஞ்ச புகழ்ச்சி எதும் இல்லையே
Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith
இல்ல நேரடி புகழ்ச்சி தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விஜய் வியூகம்... அஜீத் காயம்!
அமைதிக்கும் அதிரடிக்கும் பிரபலமான அஜீத்தின் அடுத்த சரவெடி... ரசிகர் மன்றங் கள் கலைப்பு!
'மே-1 'தல’ பிறந்த நாளை’ கொண்டாடக் காத்திருந்த ரசிகர்கள், நிச்சயம் அஜீத்திடம் இருந்து இப்படி ஓர் அறிவிப்பை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், 'எனது ரசிகர் மன்றங்களை நான் கலைக்கிறேன்!’ என்று அஜீத் அறிவிக்கக் காரணமும் அந்த ரசிகர்கள்தான்!
''என்னதான் நடந்தது?''
''அஜீத் எப்பவும் கேமரா முன்னாடி மட்டும்தான் 'ஹீரோ’வா நடிக்கணும் என்பதில் தெளிவாக இருப்பவர். அதிலும் சமீப காலமாக 'அல்டிமேட் ஸ்டார்’ பட்டம் துறந்தது, பஞ்ச் வசனங்கள் தவிர்த்தது, பில்டப் கதைகளை நிராகரித்தது, இயல்பான நரைத்த முடியுடன் நடிப்பது என்று ஸ்க்ரீனிலும் ஹீரோ பிம்பத்தைக் கலைத்துக்கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்டவர், தனக்குப் பின் ஒரு கும்பல் திரண்டு நிற்பதையோ, தனக்காக அவர்கள் சொந்த வேலைகளைக் கெடுத்துக்கொள்வ தையோ எப்போதும் விரும்பியதே இல்லை.
அஜீத் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராகச்சேரும் போதே, 'நான் எந்த சாதி, மதச் சங்கங்களிலோ, அரசியல் கட்சியிலோ அடிப்படை உறுப்பினர் கிடையாது. எந்தப் பதவியிலும் நான் இல்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் கையெழுத்து வாங்குவோம். ஆனால், இதையும் தாண்டி சமீபத்தில் முடிந்த தேர்தலில், சில மாவட்ட மன்ற நிர்வாகிகள் தங்கள் போக்கில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க-வுக்குச் சார்பாக எடுத்த ஆதரவு நிலைப்பாடுகள்தான் சில தீர்க்கமான முடிவுகளை நோக்கி அவரை நகர்த்தி இருக்கிறது.
தேர்தல் சமயத்தில் 'எடுப்பார் கைப்பிள்ளை’யாக மன்றத்தை இரு கழகங்களும் பயன்படுத் திக்கொண்டதில் அவருக்கு உடன்பாடு இல்லை. இத்தனைக்கும் 'நீ கட்சி சார்போடு இரு. பிரசாரம் செய். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அங்கு மன்ற பேனரைப் பயன்படுத்தாதே’ என்று கிட்டத்தட்ட வேண்டுகோளாகவே தனது ரசிகர் மன்றத்தினரிடம் கேட்டுக்கொண்டார் அஜீத்.
ஒவ்வொரு தொகுதியாகச் சென்று மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளை போலீஸ்போல் கண்காணிப்பதும் சாத்தியம் இல்லாத ஒன்று என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் அஜீத். ஆனால், தன் ரசிகர்கள் தன் குரலுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆனால், தேர்தல் சமயம் அந்த நம்பிக்கையில் விழுந்த அடிதான், அவரை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது.
கமலைப்போலவே அஜீத்தும், 'அரசியலுக்கு வரும் ஐடியா தனக்கு இல்லை’ எனப் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே தெளிவாகக் கூறிவிட்டார். மேலும், ரசிகர் மன்றத்தை 'அஜீத் குமார் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றி, மக்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் உதவிகளைச் செய்யவும் திட்டமிட்டு இருந்தார். வழக்கமான இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கு வது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவதுபோன்றசெயல் களைத் தாண்டி, தமிழகம் முழுக்க மரம் நடும் திட்டத்தை ஆர்வமாகத் தொடங்கினார் அஜீத். ஆனாலும், அந்த ஆர்வம் ரசிகர்களிடம் பற்றிப் படரவில்லை. அப்படி நல்ல காரியத்துக்கு உதவாத ரசிகர் பலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்விக்கான விடை, அவருக்குத் தெரியாமலேயே இருந்தது.
இந்நிலையில், சில மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளால் அவருக்குக் கெட்ட பெயர் வரலாம் என உணர்ந்ததால், உஷாராகித்தான் இந்த அதிரடி முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார்!'' என்கிறார்ரசிகர் மன்றங்களை வழிநடத்துவதில் அஜீத்துக்கு உதவியாக இருக்கும் அவருடைய நண்பர்.
விஜய் 'காவலன்’ படத்தை வெளியிட முடியாமல் தடுமாறியபோது, தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவருக்கு ஆளும் கட்சித் தரப்பில் இருந்து ஏகப்பட்ட பிரஷர் குவிந்ததாகச் செய்திகள் உண்டு. விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன் திடீரென்று விஜய்க்கு எதிராகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் போர்க் கொடி தூக்கினார். அவரது அரசியல் கனவுக்கு அடிப்படையான ரசிகர் மன்ற பலமே கிடுகிடுத்தது. அந்தச் சமயம் விஜய்க்கு ஆதரவாகப் பேச, எதிர்க் கட்சி முகாமும் முன்வராததால், தேர்தலில் தன் பங்கு என்ன என்பதை விஜய் புரிந்துகொள்வதற்குள் தேர்தலே முடிந்துவிட்டது. ஆங்காங்கே மன்றங்கள் கலைக்கப்பட்டன, சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர் என்பது தவிர, தேர்தலால் விஜய் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை. சொல்லப் போனால், இன்னும் தன்மையாகத் தன்னை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். அந்த வியூகம்தான் இப் போது அஜீத்துக்கு எதிராகவும் வகுக்கப் பட்டதோ என்றும் ஒரு பேச்சு உலவுகிறது கோடம்பாக்க வட்டாரத்தில்.அஜீத்தின் வழிகாட்டுதல்படிதான் அவரது ரசிகர்கள், கழகங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நினைத்தால், தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, ஆரம்பத்திலேயே அலாரம் அடித்ததுபோல உஷார் ஆகிவிட்டார் அஜீத். இதனால் இனி தனக்கும் தனது ரசிகர்களின் அரசியல் நடவடிக்கை களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே அஜீத், 'சிலருக்கு’ப் புரியவைக்க விரும்பும் சேதி!
விகடன்
'மே-1 'தல’ பிறந்த நாளை’ கொண்டாடக் காத்திருந்த ரசிகர்கள், நிச்சயம் அஜீத்திடம் இருந்து இப்படி ஓர் அறிவிப்பை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், 'எனது ரசிகர் மன்றங்களை நான் கலைக்கிறேன்!’ என்று அஜீத் அறிவிக்கக் காரணமும் அந்த ரசிகர்கள்தான்!
''என்னதான் நடந்தது?''
''அஜீத் எப்பவும் கேமரா முன்னாடி மட்டும்தான் 'ஹீரோ’வா நடிக்கணும் என்பதில் தெளிவாக இருப்பவர். அதிலும் சமீப காலமாக 'அல்டிமேட் ஸ்டார்’ பட்டம் துறந்தது, பஞ்ச் வசனங்கள் தவிர்த்தது, பில்டப் கதைகளை நிராகரித்தது, இயல்பான நரைத்த முடியுடன் நடிப்பது என்று ஸ்க்ரீனிலும் ஹீரோ பிம்பத்தைக் கலைத்துக்கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்டவர், தனக்குப் பின் ஒரு கும்பல் திரண்டு நிற்பதையோ, தனக்காக அவர்கள் சொந்த வேலைகளைக் கெடுத்துக்கொள்வ தையோ எப்போதும் விரும்பியதே இல்லை.
அஜீத் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராகச்சேரும் போதே, 'நான் எந்த சாதி, மதச் சங்கங்களிலோ, அரசியல் கட்சியிலோ அடிப்படை உறுப்பினர் கிடையாது. எந்தப் பதவியிலும் நான் இல்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் கையெழுத்து வாங்குவோம். ஆனால், இதையும் தாண்டி சமீபத்தில் முடிந்த தேர்தலில், சில மாவட்ட மன்ற நிர்வாகிகள் தங்கள் போக்கில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க-வுக்குச் சார்பாக எடுத்த ஆதரவு நிலைப்பாடுகள்தான் சில தீர்க்கமான முடிவுகளை நோக்கி அவரை நகர்த்தி இருக்கிறது.
தேர்தல் சமயத்தில் 'எடுப்பார் கைப்பிள்ளை’யாக மன்றத்தை இரு கழகங்களும் பயன்படுத் திக்கொண்டதில் அவருக்கு உடன்பாடு இல்லை. இத்தனைக்கும் 'நீ கட்சி சார்போடு இரு. பிரசாரம் செய். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அங்கு மன்ற பேனரைப் பயன்படுத்தாதே’ என்று கிட்டத்தட்ட வேண்டுகோளாகவே தனது ரசிகர் மன்றத்தினரிடம் கேட்டுக்கொண்டார் அஜீத்.
ஒவ்வொரு தொகுதியாகச் சென்று மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளை போலீஸ்போல் கண்காணிப்பதும் சாத்தியம் இல்லாத ஒன்று என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் அஜீத். ஆனால், தன் ரசிகர்கள் தன் குரலுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆனால், தேர்தல் சமயம் அந்த நம்பிக்கையில் விழுந்த அடிதான், அவரை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது.
கமலைப்போலவே அஜீத்தும், 'அரசியலுக்கு வரும் ஐடியா தனக்கு இல்லை’ எனப் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே தெளிவாகக் கூறிவிட்டார். மேலும், ரசிகர் மன்றத்தை 'அஜீத் குமார் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றி, மக்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் உதவிகளைச் செய்யவும் திட்டமிட்டு இருந்தார். வழக்கமான இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கு வது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவதுபோன்றசெயல் களைத் தாண்டி, தமிழகம் முழுக்க மரம் நடும் திட்டத்தை ஆர்வமாகத் தொடங்கினார் அஜீத். ஆனாலும், அந்த ஆர்வம் ரசிகர்களிடம் பற்றிப் படரவில்லை. அப்படி நல்ல காரியத்துக்கு உதவாத ரசிகர் பலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்விக்கான விடை, அவருக்குத் தெரியாமலேயே இருந்தது.
இந்நிலையில், சில மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளால் அவருக்குக் கெட்ட பெயர் வரலாம் என உணர்ந்ததால், உஷாராகித்தான் இந்த அதிரடி முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார்!'' என்கிறார்ரசிகர் மன்றங்களை வழிநடத்துவதில் அஜீத்துக்கு உதவியாக இருக்கும் அவருடைய நண்பர்.
விஜய் 'காவலன்’ படத்தை வெளியிட முடியாமல் தடுமாறியபோது, தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவருக்கு ஆளும் கட்சித் தரப்பில் இருந்து ஏகப்பட்ட பிரஷர் குவிந்ததாகச் செய்திகள் உண்டு. விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன் திடீரென்று விஜய்க்கு எதிராகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் போர்க் கொடி தூக்கினார். அவரது அரசியல் கனவுக்கு அடிப்படையான ரசிகர் மன்ற பலமே கிடுகிடுத்தது. அந்தச் சமயம் விஜய்க்கு ஆதரவாகப் பேச, எதிர்க் கட்சி முகாமும் முன்வராததால், தேர்தலில் தன் பங்கு என்ன என்பதை விஜய் புரிந்துகொள்வதற்குள் தேர்தலே முடிந்துவிட்டது. ஆங்காங்கே மன்றங்கள் கலைக்கப்பட்டன, சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர் என்பது தவிர, தேர்தலால் விஜய் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை. சொல்லப் போனால், இன்னும் தன்மையாகத் தன்னை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். அந்த வியூகம்தான் இப் போது அஜீத்துக்கு எதிராகவும் வகுக்கப் பட்டதோ என்றும் ஒரு பேச்சு உலவுகிறது கோடம்பாக்க வட்டாரத்தில்.அஜீத்தின் வழிகாட்டுதல்படிதான் அவரது ரசிகர்கள், கழகங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நினைத்தால், தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, ஆரம்பத்திலேயே அலாரம் அடித்ததுபோல உஷார் ஆகிவிட்டார் அஜீத். இதனால் இனி தனக்கும் தனது ரசிகர்களின் அரசியல் நடவடிக்கை களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே அஜீத், 'சிலருக்கு’ப் புரியவைக்க விரும்பும் சேதி!
விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்
» மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
» - ரசிகர் விமர்சனத்துக்கு வெங்கட்பிரபு விளக்கம்
» ஹாலந்து நாட்டிலிருந்து ஒரு சமஸ்கிருத ரசிகர்
» பாலாவின் ரசிகர் அல்லு அர்ஜுன் !
» மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
» - ரசிகர் விமர்சனத்துக்கு வெங்கட்பிரபு விளக்கம்
» ஹாலந்து நாட்டிலிருந்து ஒரு சமஸ்கிருத ரசிகர்
» பாலாவின் ரசிகர் அல்லு அர்ஜுன் !
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|