ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்

5 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.
avatar
Guest
Guest


Back to top Go down


சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:46 pm

அதனால்தான் அச்சுக்கலையைக் கண்டுபிடித்தது ஒரு பெரும்பேறு என்பதை என்னால் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மை. என்னவென்றால், உங்கள் நாட்டில் சில விஷயங்களைப் பெண்கள் ஆண்கள் முன்னால் செய்யக்கூடாது. அதுபோல் எங்கள் நாட்டில் ஆண்களின் முன்னால் பெண் எதையம் தின்பது நாகரீகமற்ற செயலாகக் கருதப்படுகிறது. அவள் தன் சகோதரர்களின் முன்னால் சாப்பிடலாம். ஆனால் அப்போது கணவன் வந்தால் அவள் நிறுத்திவிடுவாள். கணவன் உடனே விரைந்து வெளியே போய்விடுவான். நாங்கள் மேஜையில் சாப்பிடுவதில்லை. யாருக்குப் பசிக்கிறதோ அவன் வந்து உணவை எடுத்துக் கொண்டு வெளியே போய்விடுவான். எனவே இந்துக் கணவன் தன் மனைவியை மேஜையில் தன்னோடு அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை என்றெல்லாம் சொல்வதை நம்பாதீர்கள். அவனுக்கு மேஜையே கிடையாது.

உணவில் முதற்பங்கு விருந்தினருக்கும் ஏழைகளுக்கும், இரண்டாம் பங்கு பிராணிகளுக்கு, மூன்றாம் பங்கு பிள்ளைகளுக்கு, நான்காம் பங்கு கணவனுக்கு, கடைசியாகத்தான் தாயின் உரிமை வருகிறது. சிலவேளைகளில் என் தாய் மதிய உணவு கொள்ளும்போது இரண்டு மணி கூட ஆகிவிடுவதை நான் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன். நாங்கள் பத்து மணிக்குச் சாப்பிடுவோம். அவள் உண்ணும்போது இரண்டு மணி ஆகிவிடும். ஏனெனில் அதற்கிடையில் அவளுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும். வாசலில் யாரோ வந்து கதவைத் தட்டுவார்கள், அவர்கள் விருந்தினராக இருப்பார்கள். அந்த வேளையில் அவளுக்கன்று வைக்கப்பபட்டுள்ள உணவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்காது. அவள் அதை மகிழ்வுடன் விருந்தினருக்குக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பாள். இதுதான் ஒரு தாயின் வாழ்க்கை, அவள் அதை விரும்புகிறாள். அதனால்தான் நாங்கள் தாயை தெய்வமாக வழிபடுகிறோம்.

உங்களிடமும், பிறர் நட்பு காட்டுவதைவிட, ஆதரவு காட்டுவதைவட அதிகமாக வழிபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்களும் மனித குலத்தின் ஓர் அங்கமே அல்லவா! உங்கள் இயல்பும் போக்கும் அப்பாவி இந்துவுக்குத் தெரியாது. ஆனால், ‘நாங்கள் அன்னையர், எனவே கட்டளையிடுகிறோம்’ என்று அவனிடம் சொல்லுங்கள், அவன் உடனே பணிந்து அதனை ஏற்று கொள்வான். இந்து வளர்ந்த பண்பு இது.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:46 pm

தத்துவக் கோட்பாடுகளுக்கு மீண்டும் வருவோம். பிற மதங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று கருத்திற்கு மேலைநாட்டினர் சுமார் நூறு வருடங்களுக்கு முன்புதான் வந்தார்கள். ஆனால் எங்களுக்கு தெரிந்ததோ வெறும் சகிப்புத்தன்மை அல்ல; பிற மதங்களை ஏற்றுக் கொள்வது. அதாவது சேர்த்துக்கொள்ள வேண்டம் விட்டுத்தள்ளுவது அல்ல, ணேத்துக்கொள்வது என்பதே அது. இந்தப் பல்வேறு பக்கங்களையும் இணைக்கும் போதுதான் உணைமையை உணர முடியும். ஒவ்வொரு மதமும் உண்மையின் ஒரு பக்கத்தைப் பிரதிபலிக்கிறது; எல்லாவற்றின் மொத்தத்தையும் அறியும்போதுதான் உண்மையை முழுமையாக அறிந்தவர்கள் ஆவோம். இவ்வாறே எந்த விஞ்ஞானத்தை எடுத்துக் கொண்டாலும் சேர்த்துக்கொள்தல் என்பதே நியதி.

இந்து இந்தப் பக்கத்தை வளர்த்தான். ஆனால் இது மட்டும் போதுமா? தாயாக இருக்கின்ற இந்துப் பெண் ஒரு தகுதியான மனைவியாகவும் இருக்கட்டும்; அதற்காக தாய்மைப் பண்புகளை அழித்துவிட வேண்டாம். நீங்கள் செய்யத் தகுந்த மிகச் சிறந்த காரியம் அது. உலகம் முழுவதும் சுற்றி, பலவேறு அலைந்து, எல்லோரையும் குறைகூறி, ‘ஏ கொடியவர்களே, நாடுகளில் உங்களுக்கு நெருப்பில் வறுபடுகின்ற மீளா நரகம்தான் இடம்’ என்று சொல்வதைவிட இதன்மூலம் உலகத்தைப்பற்றிய ஒரு சிறந்த கருத்தை நீங்கள் பெறலாம்.

இறைவனின் ஆட்சியிலுள்ள ஒவ்வொரு நாடும் மனித இயல்பின் ஒவ்வொரு பக்கத்தை வளர்க்கின்றன என்ற கருத்தை நீங்கள் தோல்வி அடையவில்லை. இதுவரை அவை நன்றாகவே செய்திருக்கின்ற: இனி, அதைவிட நன்றாகச் செய்ய வேண்டும். (கைதட்டல்)

இந்துக்களை ‘அஞ்ஞானிகள்’, ‘பாவிகள்’ ‘அடிமைகள்’ என்றெல்லாம் அழைப்பதை விட்டுவிட்டு, இந்தியாவுக்குச்செல்லுங்கள் அங்கு போய் அவர்களிடம், ‘இதுவரை உங்கள் பணி நன்றாகவே உள்ளது. ஆனால் அது போதாது. நீங்கள்செய்ய வேண்டியது இன்னும் ஏராளம் உள்ளது. பெண்ணில், தாய் என்ற பக்கத்தை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள், கடவுள் உங்களுக்கு அருள் வாராக. இப்போது மறுபக்கத்தை, அதவாத அவள் ஒரு மனைவி என்ற பக்கத்தை வளருங்கள்’ என்று சொல்லுங்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:46 pm

அதுபோலவே நீங்களும் உங்கள் தேசியப் பண்புடன் ஓர் இந்துத் தாய்மைப் பண்பையும் சேர்த்துக்கொள்வது நல்லது; இதை நான் நல்லெண்ணத்துடன் மட்டுமே சொல்கிறேன். நான் பள்ளிக்குச்சென்ற முதல்நாளில் ஏன், என் வாழ்நாளிலேயே முதலாவதாக எனக்குக் கற்பிக்கப்பட்ட பாடல் இது-

யார் எல்லா பெண்களையும் சொந்தத் தாயாகப் பார்க்கிறானோ,
யார் பிறர் சொத்தைத் தூசியாகக் கருதுகிறானோ,
யார் எல்லா உயிர்களையும் தன் உயிராக்க் காண்கிறானோ
அவனே அறிஞன்.

ஆண்களுடன் வேலை செய்கின்ற பெண்கள் பற்றிய கருத்தும் வருகிறது. இந்த லட்சியங்கள் எல்லாம் இந்துக்களிடம் இல்லை என்பதில்லை, ஆனால் அவர்களால் இதை வளர்க்க முடியவில்லை.

கணவனையும் மனைவியையும் சேர்த்துக் குறிப்பிட சம்ஸ்கிருத மொழியில் மட்டுமே நான்கு வார்த்தைகளைக் காண்கிறோம். எங்கள் திருமணங்களில் தான் இருவரும் சேர்ந்து, ‘எனது இதயமாக இருப்பது இப்போது உனது இதயம் ஆகட்டும்’ என்று உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள். அங்கேதான் கணவனுக்கு துருவ நட்சத்திரம் காட்டப்படுகிறது. அவன் மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘எப்படி வானத்தில் துருவ நட்சத்திரம் நிலையாக இருக்கிறதோ அப்படி உன்மீது என் அன்பும் மாறாதிருக்கும்’ என்று சொல்கிறான். மனைவியும் அவ்வாறே செய்கிறாள்.

நெறித்தவறிய ஒரு பெண்கூடத் துணிந்து நீதிமன்றம் சென்று கணவன்மீது வழக்குத் தொடர்ந்து, அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக்கொள்ளலாம்.. எங்கள் நாடு முழுவதிலும் உள்ள எல்லா நூல்களிலும் இந்தக் கருத்தின் முளை உள்ளது. ஆனால் எங்களால் அதை வளர்க்க முடியாமல் போயிற்று.

ஒன்றைப்பற்றிய சரியான முடிவுக்கு வரவேண்டுமானால் நாம் உணர்ச்சிவசப்படாதவர்களாக இருக்க வேண்டும். உணர்ச்சிகள் மட்டுமே உலகை ஆள்வதில்லை. அவற்றிற்குப் பின்னாலும் ஏதோ ஒன்று உள்ளது. நாடுகளின் வளர்ச்சியில் பொருளாதாரக் காரணங்கள், சுற்றுச்சூநிலைகள் என்று பல காரண்கள் ங்கு வகிக்கின்றன. (ஒரு பெண் மனைவியாக மலர்வதில் என்னென்ன காரங்கள் செயல்படுகின்றன என்பதை ஆராய்வது இங்கு எனது நோக்கம் அல்ல)
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:47 pm

எனவே இந்த உலகில் ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளது, தனது சொந்தப் போக்கிலேயே வளர்கிறது; இப்போது அவை எல்லாம் ஒன்றுகலக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. ‘எல்லோரையும் கொள்ளையடித்து அதை எனக்குக் கொடு’ என்பது போன்ற உதவாத தேசபக்கதி மறைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அதன்பிறகு உலகில் எந்த நாட்டிலும் ஒருபக்க வளர்ச்சி என்பது இருக்காது. ஒவ்வொரு நாடும் தான் நல்லது செய்திருப்பதையே காணும்.

எனவே நாம் சென்று இப்படி நாடுகளை ஒன்றுசேர்க்கின்ற பணியைச் செய்வோம், அதிலிருந்து புதியதொரு நாடு உதயமாகட்டும்.

எனது கருத்தைச் சொல்லட்டுமா? தனித்துவம் வாய்ந்த மனித இனம் ஒன்று இருக்கிறதே, ஆரிய இனம், அதைத்தான் சொல்கிறேன், அந்த இனத்திலிருந்துதான் இன்றைய உலகிலுள்ள நாகரீகத்தின் பெரும் பகுதியும் வந்துள்ளது.

(ஆரிய) நாகரீகம் மூன்று விதமாக உள்ளது; ரோமானிய இனம், கிரேக்க இனம், இந்து இனம், ரோமானிய இனம் நிர்வாகம், வெற்றி, உறுதி இவற்றின் பிரதிநிதியாக உள்ளது; அங்கே அழகை ஆராதிப்பது போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடு இல்லை; உயர்ந்த உணர்ச்சிப்பெருக்குகளும் இல்லை. கொடூரத்தனம் அதன் குறைபாடாக இருந்தது. கிரேக்க இனத்தினர் அடிப்படையில் அழகை ஆராதிப்பவர்களா இருந்தார்கள். ஆனால் உறதிப்ஆடற்றவர்களாக, ஒழுக்கக் கேட்டைநோக்கிச்செல்பவர்களாக இருந்தார்கள். இந்து இயல்பாகவே த்த்துவத்தையும் மத்த்தையம் சார்ந்தவன்; ஆனால் நிர்வாகம்,செயல்பாடு போன்றவற்றின் எந்த அம்சமும் இல்லாதவன்.

இன்றைய ஆங்கிலோ -சாக்சன் இனத்தினர் ரோமானிய இனத்தின் பிரதிநிதிகள்; மற்ற எந்த நாட்டையும்வட பிரெஞ்சுக்கார்ர்கள் கிரேக்க இனத்தின் அருகில் இருக்கிறார்கள். புராதன இந்துக்களைப்பொறுத்தவரை அவர்கள் சாகவே மாட்டார்கள். இனி உருவாகப் போகின்ற புதிய நாட்டில் இவர்கள் மூவருமே வளர வழி இருக்கும். ரோமானியர்களின் நிர்வாகத் திறமை, அழகை அற்புதமாக ஆராத்திக்கின்ற கிரேக்கர்களின் ஆற்றல், ஆன்மீகம் மற்றும் இறையன்பை அடிப்டையாகக் கொண்ட இந்துவின் ஆதார சக்தி இவை கலந்ததாக அந்த இனம் இருக்கும். இவர்களைக் கலந்து ஒரு புதிய நாகரீகத்தை உருவாக்குவோம்.

இதனைச் சாதிக்க வேண்டியது பெண்களே என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இறைவினி கடைசி அவதாரம், அதாவது அடுத்த அவதாரத்தில் (பத்து அவதாரங்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ) அவர் ஒரு பெண்ணின் வடிவில் வரப்போவதாக ங்கள் நூல்களுள் சில கூறுகின்றன.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:47 pm

உலகிலுள்ள எல்லா ஆற்றுல்மு பயன்படுதப்படாத்தால் பல ஆற்றல்மையங்கள் அப்படியே இருப்பதைக் காண்கிறோம். கை வேலை செய்துகொண்டிருக்கும் மற்ற அங்கங்கள் அமைதியாக இருக்கின்றன. உடம்பின் எல்லா அங்கங்கள் அமைதியாக இருக்கின்றன. உடம்பின் எல்லா அங்கங்களும் விழித்தெழட்டும், அவற்றின் இயைந்த செயல்பாட்டினால் இந்தப் புதிய ரத்தத்துடன், இந்தப் புமிய பூமியில் அந்தப் புதிய நாகரீகத்தைக் கொண்டு வாருங்கள். ஒருவேளை இந்தப் பணி அமெரிக்கப் பெண்கள் மூலமாகவே நடைபெறக்கூடும்.

இந்த உடம்பை எனக்களித்த அந்தப் பொன்னனாட்டை மிகுந்த மதிப்போடும் மரியாதையோடும் திரும்பிப் பார்க்கிறேன். பூமியிலேயே புனித நாடான அதில் பிறப்பதற்கு வாய்ப்பளித்த கருணைக்கடலான இறைவனை வணங்குகிறேன். படைபலத்திலும் பணபலத்திலும் தனது முன்னோரைத் தேடுவதற்குத்தான் இந்த உலகே முயன்றுகொண்டிருக்கிறது; அதில் இந்து மட்டுமே தான் ரிஷிகளின் வழிவந்தவன் என்பதை அறிய பெருமைப்படுகிறான்.

இந்த வாழ்க்கைப் பெருங்கடலில் ஆண்களையும் பெண்களையும் யுகயுகங்களாக் கரைசேர்த்துக் கொண்டிருக்கின்ற இந்த அற்புதமான கப்பலில் இங்குமங்குமாகச் சில ஓட்டைகள் விழுந்திருக்கலாம். இதில் யாருடைய பங்கு எவ்வளவு, இன்று உலகம் முழுவதுமே வெறுப்புடன் பார்க்கின்ற இந்துவின் பங்கு எவ்வளவு என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். அத்தகைய ஓட்டைகள் இருக்குமானால், ந்தக் கபல மூழ்குவதிலிருந்து காப்பாற்றுவதை மிகச் சிறியவனான நான் எனது கடமையாக நினைக்கிறேன்; அதற்காக என் வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டுமானால் அதற்கும் தயாராக இருக்கிறேன். ஒருவேளை எனது முயற்சிகள் எல்லாமே தோல்வியைத் தழுவலாம். ஆனாலும் இறைவனையே சாட்சியாகக் கொண்டு வாழ்கின்ற நான் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்களுடன் கூறுவேன்: ‘என் சகோதரர்களே, நீங்கள் இதுவரை நல்லதே செய்திருக்கிறீர்கள் - இல்லை இல்லை, இந்தச் சூழ்நிலையில் மற்ற எந்த இனமும் செய்வதைவிட அதிகமாகவே செய்திருக்கிறீர்கள். என்னிடமுள்ள அனைத்தையும் எனக்கு நீங்களே தந்திருக்கிறீர்கள். இறுதிவரை உங்களுடன் இருப்பதற்கான வாய்ப்பை அளியுங்கள், நாம் சேர்ந்து மூழ்குவோம்’
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:48 pm

2. இந்தியப் பெண்கள் 2



நீங்கள் அதிகப் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என் சொற்பொழிவை ஆரம்பிக்கிறேன். ஏனெனில் திருமணம் செய்துகொள்ளாத பிரிவைச்சேர்ந்தவன் நான். அதனால்தாய், மனைவி, மகள், சகோதரி என்று எந்த உறவு முறைகளிலும் சரி. பெண்களைப் பற்றிய என் அறிவு மற்றவர்களின் அறிவைப்போல் அவ்வளவு பூரணமாக இருக்காது. அத்துடன் இந்தியா ஒருநாடு மட்டும் அல்ல, ஒருபெரிய கண்டம். அதில் பல இனம மக்கள் வாழ்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஓரினத்திகும் மற்றோர் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை விட ஐரோப்பிய நாடுகள ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ளன; ஒத்தும் காணப்படுகின்றன - இந்தியாவில் எட்டு தனி மொழிகள் உள்ள என்று சொன்னால் உங்களுக்கு அதைப்பற்றி ஓரளவுக்கு புரியக்கூடும். அவை வேறான மொழிகள்; ஒரே மொழியின் கிளைமொழிகள் அல்ல: ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட இலக்கியம் உள்ளது.

இந்தி மொழியை மட்டும் 1 0 கோடிபேர் பேசுகிறார்கள். வங்காள மொழியை 6 கோடி பேர் பேசுகிறார்கள். இரண்டு ஐரோப்பிய மொழிகளுக்கிடையில் இருப்பதைவிட அதிக வேறுபாடுகள் வட இந்தியாவில் நான்கு மொழிகளுக்கும், ஏனை தென்னிந்திய மொழிகளுக்கும் இடையே உள்ளன. அவை முற்றிலும் வேறுபட்ட மொழிகள், உங்கள் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு. நான் தென்னிந்தியாவிற்குப் போனால் அங்கு சம்ஸ்கிருதம் பேசக்கூடிய யாரையாவது சந்திக்கும்வரை நான் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டியிருக்கும். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! அத்துடன் இந்தப் பல்வேறுபட்ட இன மக்களும் பழக்கவழக்கங்கள், உணவு, உடை, சிந்திக்கும் முறை என்று ஒவ்வொன்றிலும் மாறுபட்டே உள்ளனர்.

ஜாதி வேறு உள்ளது. ஒவ்வொரு ஜாதியும் ஒரு தனி இனம்போலவே உள்ளது எனலாம். இந்தியாவில் நீண்ட நாள் வாழும் ஒருவனால் ஒருவனது வெளித் தோறத்தை வைத்தே அவன் எந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லிவிட முடியும். இனி ஜாதிகளுக்கிடையே பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன. ஜாதியினரும் தங்களுக்குள் கட்டுண்டவர்கள் அதாவது வெளியே சமுதாய வாழ்வில் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள், ஆனால் சேர்ந்து உண்ணவோ பருகவோ மாட்டார்கள், திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். இவற்றில் அவர்கள் தனித்தே நிற்கிறார்கள். ஒருவரையொருவர் சந்திப்பார்கள், நண்பர்களாகப் பழகுவார்கள், அதற்குமேல் எதுவும் இல்லை.

என் நிலையிலிருந்தும், ஒரு பிரச்சாரகன் என்கிற முறையிலும பொதுவாகப் பெண்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மற்றவர்களைவிட எனக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பதால் நான் பல தரப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கிறேன். வட இந்தியாவில், ஆண்களின் எதிரே வரக்கூடாதென்ற விதிக்கு உட்பட்ட பெண்கள் கூட, பல இடங்களில் மத்த்திகாக அந்த விதிமுறைகளையும் மீறி எங்கள் சொற்பொழிவைக் கேட்க வருவார்கள்; எங்களோடு பேசுவார்கள். இருந்தும் இந்தியப் பெண்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லுவது சரியாக இருக்காது.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:48 pm

ஆகவே லட்சியத்தை மட்டும் உங்கள் முன் வைக்க முயல்கிறேன். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆணும் பெண்ணும் அறிந்தோ அறியாமலோ செயல்முறை நிலைக்கு வந்துகொண்டிருக்கின்ற லட்சியத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். உருப்பெற வேண்டிய ஒரு லட்சியத்தின் புறத்தோற்றம்தான் தனிமனிதன். இந்தத் தனிமனிதர்கள் சேர்ந்தது நாடு. நாட்டிற்கும் ஒரு பெரிய லட்சியம் உண்டு. அதை நோக்கித்தான் அந்த நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு நாட்டை அறிய வேண்டுமானால் முதலில் அதன் லட்சியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நாடும் சொந்த அளவுகோலால்தான் தன்னை அளக்க விரும்புகிறது, மற்றவர்களின் அளவுகோலால் அல்ல.

எல்லா வளர்ச்சியும், முன்னேற்றமும், நல்வாழ்வு அல்லது சீரழிவு எல்லாமும் ஒன்றைச் சார்ந்து நிற்பவை; அவை ஒரு குறிப்பிட்ட அளவுமுறையுடன் இணைத்துள்ளன. நிலைநிலையைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள அவளை வைத்தே அவரைப் புரிந்துகொள்ள வேண்டும். அளக்க வேண்டம். நாடுகளுக்கு இடையில் இது தெளிவாகத் தெரியும். ஒரு நாடு நல்லது என்று நினைப்பதை இன்னொரு நாடும் அவ்வாறு நினைக்க வேண்டும் என்பதில்லை. சகோதர்ர்களின் பிள்ளைகளுக்குள், அதேபோல் சகோதரிகளின் பிள்ளைகளுக்குள் திருமணம் இந்த நாட்டில் அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவிலோ அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல; மிகக் கொடிய முறையாகவும் கருதப்படுகிறது. விதவைத் திருமணம் இந்த நாட்டில் சட்டத்திறகு உட்பட்டது. இந்தியாவில் உயர்ஜாதியினரிடையே ஒரு பெண் மறுமணம் செய்துகொள்வதைப் போன்ற கீழ்த்தரமான செயல் வேறில்லை. இவ்வாறு நாம் பல்வேறு கருத்துக்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே ஒருவரை இன்னொருவரின் அளவுகோலால் அளப்பது நியாயமும் அல்ல, அது நடைமுறையிலும் ஒத்துவராது.

அதனால் ஒரு நாடு தனக்கென்று வகுத்துக்கொண்ட லட்சியம் எது என்பதை நாம் தெரிந்துகள்ள வேண்டம். பல நாடுகளைப்பற்றிப் பேசும்போது, எல்லா இனத்தினருக்கும் ஒரே தர்மங்கள், ஒரே வகையான லட்சியங்கள் என்ற கருத்துடன்தான் தொடங்குகிறோம். ஆனால் நடைமுறையில், பிறரை மதிப்பிடும்பொது நமக்கு எது நல்லதோ அதுதான் எல்லோருக்கும் நல்லதுந நாம் சய்வதுதான் சரி, நாம் செய்யாத்தை அவர்கள் செய்தால் அது முறைற்ற எனேற நினைக்கிறோம். குறை கூறுவதற்காக நான் இதைச் சொலவில்லை; உண்மையை உணர்த்துவதே என் நோக்கம். சீனப் பெண்கள் கால் தெரியாமல் திணித்து மறைத்துக்கொள்வதைமேலை நாட்டுப் பெண்கள் கேலிசெய்வதைக கேட்டிருக்கிறேன். ஆனால்தாங்கள் அணிகின்ற இறுக்கமான மார்புக்கச்சு அதைவிடத் தீமை செய்வது என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. இது ஒரு உதாரணம். மார்புக்கச்சுகளை இறுக்கிக் கட்டுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளில் லட்சத்தில் ஒரு பங்கு தீமைகூடக் கால்களைத் திணித்துக் கட்டுவதால் ஏற்படவில்லை. ஏற்படுவதில்லை. முன்னையதில் ஒவ்வோர் உறுப்பும் இடம்பெயருகிறது, முதுகுத்தண்டு பாம்பைப்போல் முறுக்கிக்கொள்கிறது, அளவெடுத்துப் பார்த்தால் இந்தக் கோணல் நிலையை நன்றாக அறிந்துகொள்ளலாம். இதை நான் ஒரு குற்றமாகச் சொல்லவில்லை, உள்ள நிலைமையைச் சுட்டிக் காட்டுவதற்காகச் சொல்கிறேன். நீங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்ற இனத்தினரைக் கண்டு திகைத்து நிற்காதீர்கள். ஆனால் அவர்களும் உங்களைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். உங்கள் நடை உடை பாவனைகளை அவர்கள் பின்பற்றவில்லை என்பது அதைத்தானே காட்டுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:48 pm

ஆகவே இருபக்கமும் சிறிது தவறான எண்ணம் இருக்கவே செய்கிறது. ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒரு தளம், ஒருவரையொருவர் அறிந்துகொள்ள ஓர் அடிப்படை, மனிதகுலத்திற்கே ஒரு பொதுவான இடம் உள்ளது. அதுதான் நாம் வேலை செய்வதற்கான அடிப்படையாக இருக்க வேண்டம். அங்குச் சிறிதும், இங்குச் சிறிதுமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற அந்த முழுமையான, பூரணமான மனித இயல்பைக் கண்டு பிடிக்க வேண்டும். எல்லாம் பூரணமாக அமையப் பெறும்பேறு யாருக்கும் கிடையது. நீங்கள் ஆற்ற வேண்டிய ஒரு பங்கு இருக்கிறது. எனக்குள்ள எளிய முறையில் நான் ஆற்ற வேண்டிய பங்கும் இருக்கிறது. இதோ இங்கே ஒருவர் தம் பங்கினைச் செய்கிறார். அதோ அங்கே இன்னொருவர் தம் பங்கைச் செய்கிறார். இந்த அனைத்து பங்குகளும் ஒன்றுசேர்ந்தால்தான் பூரணத்துவம் ஏற்படும்.

தனிநபர்களைப் போன்றே இனங்களும், ஒவ்வோர் இனத்திற்கும் அது ஆற்ற வேண்டிய தனிப் பங்கு இருக்கிறது. ஒவ்வோர் இனமும் மனித இயற்கையில் ஒரு பங்கை வளர்க்கிறது. இவை எல்லாவற்றையும் நாம் ஒன்றுசேர்க்க வேண்டும். ஒருவேளை பிற்காலத்தில் இந்தத் தனி இனங்கள் அடைந்த பூரண சிற்பியல்புகள் எல்லாவற்றையும் தன்னுள் கொண்ட ஒரு தனி இனம் உண்டாகலாம். இத்தகைய இனத்தை இதுவரை உலகம் கனவுக்கூட கண்டிருக்காத. இதைச் சொல்வதைத் தவிர நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. வாழ்க்கையில் நான் நிறைய பயணம் செய்திருக்கிறேன். நான் விழிப்புடனேயே இருக்கிறேன். அதிகமாகப் பயணம் செய்யச் செய்ய நான் பேசுவது குறைகிறது. நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை.

இந்தியாவில் லட்சியப் பெண் தாய்; முதலிலும் தாய், முடிவிலும் தாயே, பெண் என்ற சொல்லே ஓர் இந்துவின் மனக்கண் முன் தாயைத்தான் கொண்டு வந்து நிறுத்துகிறது. கடவுளையே தாய் என்று நாங்கள் கூறுகிறோம். சிறுவர்களாக இருந்த பொழுது, நாள்தோறும் ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு எங்கள் தாயிடம் செல்வோம். அவள் தன் கால் பெருவிரலை அதில் நனைப்பாள், நாங்கள் அந்தத் தண்ணீரை பருகுவோம்.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:49 pm

மேற்கிலோ பெண் என்றால்மனைவி, பெண்மை லட்சியம் இங்கே மனைவியில் குவிந்துள்ளது. இந்தியாவில் உள்ள சாதாரண மனிதனுக்கோ பெண்மை லட்சியம் தாய்மையில் குவிந்திருக்கிறது. மேலை வீடுகளில் மனைவி ஆள்கிறாள், இந்திய வீடுகளில் தாய் ஆட்சி புரிகிறாள். மேலை வீடுகளில் தாய் வந்தால் மனைவிக்கு அடங்கி நடக்க வேண்டும், வீடு மனைவிக்குச் சொந்தமானது. எங்கள் வீடுகளிலோ என்றும் வாழ்பவள் தாய்; மனைவி அவளுக்உ அடங்கி நடக்க வேண்டும். கருத்துக்களில் எவ்வளவு வேறுபாடு பாருங்கள்!

ஒப்பிடுவதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். இரண்டு பக்கங்களையும் அறிந்தால்தான் ஒப்புநோக்க முடியும். ஒப்பிட்டுப் பாருங்கள். ‘மனைவி என்ற முறையில் இந்தியப் பெண்ணின் நிலை என்ன?’ என்று நீங்கள் கேட்டால், ‘தாய் என்ற வகையில் அமெரிக்கப் பெண்ணின் நிலை என்ன?’ என்று இந்தியன் கேட்பான். இந்த உடலை எனக்குத் தந்த அந்தப் புண்ணியவதி என்னவாக இருக்கிறாள்? தன் உடலில் என்னை ஒன்பது மாதங்கள் வைத்துக் காப்பாற்றிய அவள் எந்த நிலையில் இருக்கிறாள்? தேவையானால் இருபுது தடவை கூடத் தன் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற அவள் எங்கே? நான் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், பொல்லாதவனாக இருந்தாலும் என்னிடம் மாறாத அன்பு வைக்கின்ற அவள் எங்கே? நான் சற்று முகம் சுளித்தாலும் விவாகரத்தைத் தேடி நீதி மன்றத்திற்கு ஓடும் மனைவியோடு ஒப்பிடும்போது அந்தத் தாய் எங்கே? அவளை நான் உங்கள் நாட்டில் காண முடியாது. தாய் முதன் முதலில் என்று நினைக்கின்ற மகனை நான் இங்கே காணவில்லை.

தாய் இறந்தாலும் அவளது இடத்தில் மனைவியையோ மக்களையோ நாங்கள் வைக்க மாட்டோம். எங்கள் தாய்! அவளுக்கு முன்பு நாங்கள் சாவோமானால், அவளது மடியில் தலைவைத்தபடி சாகவே விரும்புவோம். அவள் எங்கே? பெண் என்பவள் உடலோடு மட்டும் இணைத்துப்பார்க்க வேண்டிய பொருளோ? ஐயோ! உடலும் உடலும் ஒன்றாக வேண்டும் என்பது போன்ற கருத்துக்களைக் கண்டு இந்து உள்ளம் அஞ்சுகிறது. இல்லை, இல்லை, பெண்ணே! உடலோடு சம்பந்தப்பட்ட எதனுடனும் உன்னை இணைத்துக் கொள்ளாதே. பெண் என்றாலே புனிதம் என்பது என்றென்றைக்குமாகச் சொல்லப்பட்டு விட்டது. ஒரு போதும் காமம் நெருங்க முடியாத்தாக தாய் என்ற சொல்லைத் தவிர வேறு எது உள்ளது? அதுதான் இந்தியாவின் லட்சியம்.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:49 pm

உங்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் பிச்சை ஏற்கும் துறவிகள் (Mendicant Friars) இருக்கிறார்கள் அல்லவா, அதேபோன்ற ஓர் அமைப்பைச் சேர்ந்தவன் நான், வீடுவீடாகச் சென்று பிச்சையெடுத்து, ஆடை முதலியன அதிகமின்றி வாழ வேண்டும். மக்கள் விரும்பும்போது அவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும். கிடைத்த இடத்தில் உறங்க வேண்டும் - இதுதான் நாங்கள் பின்பற்ற வேண்டிய வழி. இந்த அமைப்பின் சட்டம் என்னவென்றால், எல்லா பெண்களையும் நாக் ‘அம்மா’ என்று அழைக்க வேண்டும்; சிறுமிகளைக்கூட அம்மா என்று தான் கூப்பிட வேண்டும். அதுதான் வழக்கம். மேலை நாட்டிலும் அந்தப் பழக்கத்தின் காரணமாக, நான் பெண்களிடம், ‘ஆம், அம்மா’ என்று சொன்னேன். அதைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டுவிட்டார்கள். அவர்கள் ஏன் திடுக்கிட வேண்டும் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது; தாய் என்றால் அவர்களைப் பொறுத்தவரை முதியவள்!

இந்தியாவில் பெண்மையின் லட்சியம் தாய்மை - அற்புதமான, தன்னலமற்ற, துன்பங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கின்ற, என்றும் மன்னிக்கும் இயல்புடைய அவள் தாயின் வாழ்க்கையைப்போல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அது அவளுடைய கடமை. ஆனால் தாயோ அன்பின் அவதாரம், அவளே குடும்பத்தை ஆள்கிறாள், குடும்பம் அவளுக்குச் சொந்தம், இந்தியாவில், குழந்தை ஏதாவது தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதோ, அடிப்பதோ தந்தை; தாய் எப்போதும் குழந்தைக்கும் தந்தைக்கும் இடையில் புகுந்து தடுக்கிறாள். இங்கேயோ நேர்மாறாக இருக்கிறது. இந்த நாட்டில் குழந்தைகளைத் தண்டிப்பது தாயின் வேலை; அப்பாவி தந்தை குறுக்கிட்டுத் தடுக்கிறான். லட்சியங்கள் மாறுபடுவதைப் பார்த்தீர்களா? இதை ஒரு குற்றமாகச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்வது சரிதான். ஆனால் பல்லாண்டு காலமாக எங்களுக்குக் கற்பிக்கப்ட்ட வழி வேறு. குழந்தையை சபிக்கின்ற தாயை ஒருபோதும் நாங்கள் காண முடியாது. அவள் மன்னிப்பவள்; எப்போதும் மன்னிப்பவள்.

‘பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதவே’ என்பதற்குப் பதிலாக ‘அம்மா’ என்றே நாங்கள் எப்போதும் சொல்கிறோம். அந்த வார்த்தையும் அந்தக் கருத்தும் ஓர் இந்துவுக்கு என்றென்றும் எல்லையற்ற அன்புடன் இணைந்தவை. இந்த நமது உலகில் இறையன்பிற்கு மிகவும் அருகில் உள்ளது தாயன்பு ‘அம்மா, ஓ என் அம்மா, கருணை காட்டு. நான் தீயவன். தீய குழந்தைகள் நிறைய உண்டு. ஆனால் தீய அன்னை ஒருபோதும் இருந்ததில்லை’ என்கிறார் பெரிய மகானான ராம்பிரசாத்.

இந்து அன்னை அதோ இருக்கிறாள். மகனின் மனைவி மகள்போல் வந்து சேர்கிறாள். அந்தத் தாயின் மகள் எப்படி மணம் செய்துகொண்டு வெளியே போகிறாளோ, அதைப்போல் மகன்மணம் செய்து இன்னொரு மகளைக் குடும்பத்திற்குக் கொண்டு வருகிறாள் அவள், அரசிக்கு அரசியான தாயின் ஆளுகைக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum