Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
+10
Aathira
கார்த்திநடராஜன்
கலைவேந்தன்
ARR
gnanammm
அருண்
அப்துல்
Manik
நவீன்
ரபீக்
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பொன்னர் சங்கர் பட அழைப்பிதழுக்கு விருது-கருணாநிதியிடம் காட்டிய பிரஷாந்த்
First topic message reminder :
பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
'பொன்'னர் சங்கர் மின்னும் ரகசியம்
'பொன்னர் சங்கர்’ வரலாற்றுப் படத்தில் பெண் பாத்திரங்கள் மட்டுமல்ல... ஆண் பாத்திரங்கள் அணிந்து வரும் நகைகளும் அத்தனை அழகு, நேர்த்தியுடன் பாரம்பரியமும், கம்பீரமும் காட்டி அனைவரையும் ஈர்க்கின்றன.
பாராட்டுக்குரிய அந்த மூளைக்குச் சொந்தக்காரர்... ப்ரீத்தி! இவர்... படத்தின் இயக்குநர் தியாகராஜனின் மகள், படத்தின் ஹீரோ பிரசாந்தின் தங்கை!
ஃபிலிம் காஸ்ட்யூம் டிசைனர், ஜெம்மாலஜிஸ்ட், பிஸினஸ் உமன் என இவருக்கான அடையாளங்களின் வரிசையில்... இப்படத்தின் மூலம் இப்போது 'ஜூவல்லரி டிசைன’ரும் சேர்கிறது!
ஒரு மதிய வேளையில் சென்னையில் இருக்கும் தன் வீட்டில், ''இதுதான் என் கன்னிப் பேட்டி...'' என்று சிரித்தபடியே வந்தமர்ந்தார் ப்ரீத்தி!
''சில வருஷங்களுக்கு முன்ன தி.நகர்ல ஜுவல்லரி ஷாப்களுக் காக 'பிரசாந்த் கோல்ட் டவர்' கட்டினாங்க அப்பா. அந்த சமயத்துலதான் நகைகள்ல பயன்படுத்தற கற்களைப் பத்தி படிக்கறதுக்காக அமெரிக்காவில இருக்கற 'ஜெம்மாலஜி இன்ஸ்டிடியூட்’க்கு போனேன். கற்களோட இயல்பு, சிறப்பு என்ன, அதுல ஒரிஜினலை எப்படி கண்டுபிடிக்கறது, எப்படி பராமரிக்கறதுனு ஆழமான அறிவியல் படிப்பு அது. அப்புறம் 'ஜுவல்லரிக்கான டிசைனிங்’ கோர்ஸ் படிச்சேன்.
இப்ப 'பிரசாந்த் கோல்ட் டவர்’ல இருக்கற என் ஜெம் ஸ்டூடியோவுல குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டும் கன்சல்டேஷன் பண்றேன். அந்த டவர்ல இருக்கற அஞ்சு ஃப்ளோர்ல இருக்கிற ஷாப்களுக்குமே நான்தான் மேனேஜிங் அத்தாரிட்டி'' என்பவரின் இந்தப் பின்புலம்தான் 'ஜூவல்லரி டிசைனர்’ அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது!
''ஏற்கெனவே அப்பாவோட 'மன்னவா’, 'ஜெய்’, 'ஷாக்’ படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனரா, போஸ்ட் புரொடக்ஷன் சைட்லனு வேலை பார்த்த அனுபவம் இருக்கு. 'பொன்னர் சங்கர்’ படத்துக்கான ஜுவல்லரி டிஸைனர் வேலையை அப்பா எங்கிட்ட அப்பா கொடுத்தப்போ சந்தோஷத்தைவிட பொறுப்புதான் அதிகமா தெரிஞ்சுது. ஏன்னா, நகை அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கற படமாச்சே! கிட்டத்தட்ட என்னோட ரெண்டரை வருஷ உழைப்பை இதுக்குக் கொடுத்திருக்கேன்'' என்றவர், அதற்கான தன் மெனக்கெடல்களைப் பேசினார்.
''பொன்னர் - சங்கர் புத்தகத்துலயே நகைகள் பத்தின பல விவரங்கள் இருந்தாலும், அதோட நின்னுடாம பல கோயில்கள், சிற்பங்கள், நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள்னு அலைஞ்சு, தகவல்களைத் திரட்டினேன். பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
பொதுவா... அந்தக் காலத்துல பெண்களோட நகைகள், அவங்க வாழற சமுதாயப் பிரிவை பிரதிபலிக்கற மாதிரி இருந்திருக்கு. நம்ம தென்னிந்திய நகைகள்ல மாங்கா மாலை, நாத ஜடை, வங்கி, ஒட்டியாணம், கால்ல போடுற தண்டை... இதெல்லாம்தான் முக்கிய நகைகளா இருந்திருக்கு. அதைப் பத்தி எல்லாம் முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் காலத்துல பெண்கள் ஒட்டியாணத்தை எப்பவும் இடுப்போட ஒரு உடை மாதிரி அணிஞ்சிருந்திருக்காங்க. அவங்க போட்டுக்கிட்ட ரவிக்கை நழுவிடாம பிடிக்கத் தான் கையில வங்கி போட்டு இருந்திருக்காங்க. இப்படி அழகுக்காக மட்டுமில்லாம, அவசியத் தேவைக்காகவும் ஆபரணங்களை அணிஞ்சிருக்காங்க நம்ம பூட்டிகள்...'' என்று ரசிக்க ரசிக்கப் பேசியவர்,
''படத்தைப் பொறுத்தவரைக்கும் காட்சியோட ஒன்றிப்போற நகைகளைத்தான் டிசைன் பண்ணினேன். உதாரணமா, கதை நாயகிகளா வர்ற முத்தாயி, பவளாயிக்கு நகைகள் எப்பவும் கிராண்டா இருக்கணும். ஆனா, செல்வந்தர் வீட்டு மகளா வந்த தாமரை நாச்சியாருக்கு (குஷ்பூ), பல காட்சிகள்ல நகைகளே தேவைப்படல.
சிறப்பு என்னனா... கோரல், மூன் ஸ்டோன், ரூபி, முத்து, ஜிர்கான்னு ஒரிஜினல் ஜெம் ஸ்டோன்களைத்தான் படத்துல பயன்படுத்தினேன். ரிஸ்க்தான். இதனால டிசைனிங் மட்டுமில்லாம, அந்த நகைகளோட பாதுகாப்புக்கும் நான் பொறுப்பேற்க வேண்டியதாச்சு. இப்ப, 'ரொம்ப தீர்க்கமா இருந்துச்சு அந்த நகைகள்’னு எல்லாரும் பாராட்டறப்போ... ஏக சந்தோஷம்! குறிப்பா, 'ம்ம்ம்... படத்துல உன் வேலையை நீ சூப்பரா பண்ணியிருக்கியாம்... எல்லாரும் சொல்றாங்க... நானும்!’னு என் அப்பா சிரிச்சப்போ, அவ்ளோ பெருமையா இருந்துச்சு. இதுக்கான பரிசுதான் அப்பாவோட அடுத்த படமான 'மம்பட்டியான்’ல நான்தான் ஜுவல்லவரி டிசைனர். எல்லா உழைப்புக்கும் இந்த அங்கீகாரம்தானே முதல் முக்கிய ஊதியம்!''
- சின்ன சிரிப்பு உதிர்த்து காற்றில் பறந்த கூந்தலை கைகோதி முடித்தார் ப்ரீத்தி தியாகராஜன்!
அவள் விகடன்
பாராட்டுக்குரிய அந்த மூளைக்குச் சொந்தக்காரர்... ப்ரீத்தி! இவர்... படத்தின் இயக்குநர் தியாகராஜனின் மகள், படத்தின் ஹீரோ பிரசாந்தின் தங்கை!
ஒரு மதிய வேளையில் சென்னையில் இருக்கும் தன் வீட்டில், ''இதுதான் என் கன்னிப் பேட்டி...'' என்று சிரித்தபடியே வந்தமர்ந்தார் ப்ரீத்தி!
''சில வருஷங்களுக்கு முன்ன தி.நகர்ல ஜுவல்லரி ஷாப்களுக் காக 'பிரசாந்த் கோல்ட் டவர்' கட்டினாங்க அப்பா. அந்த சமயத்துலதான் நகைகள்ல பயன்படுத்தற கற்களைப் பத்தி படிக்கறதுக்காக அமெரிக்காவில இருக்கற 'ஜெம்மாலஜி இன்ஸ்டிடியூட்’க்கு போனேன். கற்களோட இயல்பு, சிறப்பு என்ன, அதுல ஒரிஜினலை எப்படி கண்டுபிடிக்கறது, எப்படி பராமரிக்கறதுனு ஆழமான அறிவியல் படிப்பு அது. அப்புறம் 'ஜுவல்லரிக்கான டிசைனிங்’ கோர்ஸ் படிச்சேன்.
இப்ப 'பிரசாந்த் கோல்ட் டவர்’ல இருக்கற என் ஜெம் ஸ்டூடியோவுல குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டும் கன்சல்டேஷன் பண்றேன். அந்த டவர்ல இருக்கற அஞ்சு ஃப்ளோர்ல இருக்கிற ஷாப்களுக்குமே நான்தான் மேனேஜிங் அத்தாரிட்டி'' என்பவரின் இந்தப் பின்புலம்தான் 'ஜூவல்லரி டிசைனர்’ அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது!
''ஏற்கெனவே அப்பாவோட 'மன்னவா’, 'ஜெய்’, 'ஷாக்’ படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனரா, போஸ்ட் புரொடக்ஷன் சைட்லனு வேலை பார்த்த அனுபவம் இருக்கு. 'பொன்னர் சங்கர்’ படத்துக்கான ஜுவல்லரி டிஸைனர் வேலையை அப்பா எங்கிட்ட அப்பா கொடுத்தப்போ சந்தோஷத்தைவிட பொறுப்புதான் அதிகமா தெரிஞ்சுது. ஏன்னா, நகை அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கற படமாச்சே! கிட்டத்தட்ட என்னோட ரெண்டரை வருஷ உழைப்பை இதுக்குக் கொடுத்திருக்கேன்'' என்றவர், அதற்கான தன் மெனக்கெடல்களைப் பேசினார்.
''பொன்னர் - சங்கர் புத்தகத்துலயே நகைகள் பத்தின பல விவரங்கள் இருந்தாலும், அதோட நின்னுடாம பல கோயில்கள், சிற்பங்கள், நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள்னு அலைஞ்சு, தகவல்களைத் திரட்டினேன். பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
பொதுவா... அந்தக் காலத்துல பெண்களோட நகைகள், அவங்க வாழற சமுதாயப் பிரிவை பிரதிபலிக்கற மாதிரி இருந்திருக்கு. நம்ம தென்னிந்திய நகைகள்ல மாங்கா மாலை, நாத ஜடை, வங்கி, ஒட்டியாணம், கால்ல போடுற தண்டை... இதெல்லாம்தான் முக்கிய நகைகளா இருந்திருக்கு. அதைப் பத்தி எல்லாம் முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் காலத்துல பெண்கள் ஒட்டியாணத்தை எப்பவும் இடுப்போட ஒரு உடை மாதிரி அணிஞ்சிருந்திருக்காங்க. அவங்க போட்டுக்கிட்ட ரவிக்கை நழுவிடாம பிடிக்கத் தான் கையில வங்கி போட்டு இருந்திருக்காங்க. இப்படி அழகுக்காக மட்டுமில்லாம, அவசியத் தேவைக்காகவும் ஆபரணங்களை அணிஞ்சிருக்காங்க நம்ம பூட்டிகள்...'' என்று ரசிக்க ரசிக்கப் பேசியவர்,
''படத்தைப் பொறுத்தவரைக்கும் காட்சியோட ஒன்றிப்போற நகைகளைத்தான் டிசைன் பண்ணினேன். உதாரணமா, கதை நாயகிகளா வர்ற முத்தாயி, பவளாயிக்கு நகைகள் எப்பவும் கிராண்டா இருக்கணும். ஆனா, செல்வந்தர் வீட்டு மகளா வந்த தாமரை நாச்சியாருக்கு (குஷ்பூ), பல காட்சிகள்ல நகைகளே தேவைப்படல.
சிறப்பு என்னனா... கோரல், மூன் ஸ்டோன், ரூபி, முத்து, ஜிர்கான்னு ஒரிஜினல் ஜெம் ஸ்டோன்களைத்தான் படத்துல பயன்படுத்தினேன். ரிஸ்க்தான். இதனால டிசைனிங் மட்டுமில்லாம, அந்த நகைகளோட பாதுகாப்புக்கும் நான் பொறுப்பேற்க வேண்டியதாச்சு. இப்ப, 'ரொம்ப தீர்க்கமா இருந்துச்சு அந்த நகைகள்’னு எல்லாரும் பாராட்டறப்போ... ஏக சந்தோஷம்! குறிப்பா, 'ம்ம்ம்... படத்துல உன் வேலையை நீ சூப்பரா பண்ணியிருக்கியாம்... எல்லாரும் சொல்றாங்க... நானும்!’னு என் அப்பா சிரிச்சப்போ, அவ்ளோ பெருமையா இருந்துச்சு. இதுக்கான பரிசுதான் அப்பாவோட அடுத்த படமான 'மம்பட்டியான்’ல நான்தான் ஜுவல்லவரி டிசைனர். எல்லா உழைப்புக்கும் இந்த அங்கீகாரம்தானே முதல் முக்கிய ஊதியம்!''
- சின்ன சிரிப்பு உதிர்த்து காற்றில் பறந்த கூந்தலை கைகோதி முடித்தார் ப்ரீத்தி தியாகராஜன்!
அவள் விகடன்
பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதான்..........
முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் பொன்னர் - சங்கர். நடிகர் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து, அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இப்படம் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார். அதில், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லையென்று சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள். என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். இப்போது படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நான் எழுதி வெளிவந்துள்ள "பொன்னர் சங்கர் திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும். கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர் திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்டார்கள், என்று கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
பொன்னர் சங்கருக்கு சில வாரங்கள் முன்பு நடிகர் விஜய் நடித்த காவலன் படம் ரீலிஸ் ஆனது. அந்த படத்தை ரீலிஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் ரொம்பவே திணறினார். அப்படியே கிடைத்த தியேட்டர்களிலும் படம் ரீலீஸ் ஆகி ஓரிரு நாட்களில் படத்தை தூக்கச் சொல்லி சிலர் நிர்பந்தித்தார்கள். இதேநிலைதால் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டப்படி குற்றம் படத்திற்கும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர் என்று விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய கதை, வசனத்தில் உருவான பொன்னர் - சங்கருக்கும் தியேட்டர் கிடைக்காத நிலைமையும், தியேட்டரில் இருந்து கட்டாயப்படுத்தி தூக்கி விட்ட நிலையும் ஏற்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை என்னவென்று சொல்வது?
TMT
பொன்னர் சங்கருக்கு சில வாரங்கள் முன்பு நடிகர் விஜய் நடித்த காவலன் படம் ரீலிஸ் ஆனது. அந்த படத்தை ரீலிஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் ரொம்பவே திணறினார். அப்படியே கிடைத்த தியேட்டர்களிலும் படம் ரீலீஸ் ஆகி ஓரிரு நாட்களில் படத்தை தூக்கச் சொல்லி சிலர் நிர்பந்தித்தார்கள். இதேநிலைதால் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டப்படி குற்றம் படத்திற்கும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர் என்று விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய கதை, வசனத்தில் உருவான பொன்னர் - சங்கருக்கும் தியேட்டர் கிடைக்காத நிலைமையும், தியேட்டரில் இருந்து கட்டாயப்படுத்தி தூக்கி விட்ட நிலையும் ஏற்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை என்னவென்று சொல்வது?
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
கண்டிப்பா இந்த படம் பார்க்கணும்......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
நானும் ஆவலோடு உள்ளேன் இந்த படத்தை பார்க்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» பொன்னர் சங்கர் தரவிறக்கம் கிடைக்குமா??
» இளையராஜாவின் இன்னிசையில் பொன்னர் சங்கர் திரைப்படப் பாடல்கள் MP3 தரவிறக்கம்
» இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்
» தபு சங்கர்
» அறிமுகம் --சங்கர்.ப
» இளையராஜாவின் இன்னிசையில் பொன்னர் சங்கர் திரைப்படப் பாடல்கள் MP3 தரவிறக்கம்
» இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்
» தபு சங்கர்
» அறிமுகம் --சங்கர்.ப
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|