ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இதயத்துக்குக் கவலை இல்லை

2 posters

Go down

இனி இதயத்துக்குக் கவலை இல்லை Empty இனி இதயத்துக்குக் கவலை இல்லை

Post by தாமு Fri Apr 29, 2011 9:31 am

து ஒரு காலம். இதயத்தில் பிரச்னை என்றால், நோயாளிகள் கண் கலங்குவார்கள், எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவார்கள். டாக்டர்களும் தயக்கத்துடனே வைத்தியத்தைத் தொடங்குவார்கள். ஆனால் இன்று, 'இதயமும் ஓர் உறுப்புதான்’ என்ற ரீதியில் மருத்துவம் வளர்ந்துவிட்டது. அதனால், இதய நோய் குணமடையும் விகிதமும் பெருமளவு அதிகரித்துவிட்டது. இதனை நவீன கருவிகளும், சிகிச்சை முறைகளும்தான் சாதித்துக் காட்டி இருக்கின்றன.

இனி இதயத்துக்குக் கவலை இல்லை P41a

சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூத்த கார்டியாலஜிஸ்ட் டாக்டர்கள் ஆர்.ரவிகுமார் மற்றும் என்.கே.கபாடியாவிடம் பேசினோம்...
இனி இதயத்துக்குக் கவலை இல்லை P40''இதயத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் கடந்த 10 ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, ஓட்டைகளை மூடுதல், வால்வு மாற்று அறுவை சிகிச்சை போன்றவை இப்போது மிகவும் எளிதாகிவிட்டன.
முன்பெல்லாம், இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், மார்புப் பகுதியில் நீளமாக அறுத்து, மார்பு எலும்புகளைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். இதனால், தொண்டைக்குக் கீழே தொடங்கி வயிறு வரை தழும்பு ஏற்படும். இந்தத் தழும்பு, தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனரீதியான பிரச்னையை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக, பெண்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். நீளமாக வெட்டப்படும் காரணத்தால் ஏற்படும் புண் ஆறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.
இந்த சிகிச்சையின்போது இதயத்தை நிறுத்திவிட்டு, இதயத்தின் வேலையை செயற்கையாகச்







செய்வதற்காக ஹார்ட் லங் இயந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதால், ரத்தக் கசிவுக்கான வாய்ப்பு அதிகம். மேலும் எமர்ஜென்ஸி வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாறுவதற்கே நீண்ட நாட்கள் ஆகும்.

நீண்ட தழும்பு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சைக்கும் ஹார்ட் லங் இயந்திரத்தின் பயன்பாட்டை நீக்குவது குறித்தும் இதய நோய் மருத்துவர்கள் நீண்ட காலமாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, 'கீ ஹோல் அண்ட் ஹைபிரீட் ஹார்ட் சர்ஜரி’ முறை அறிமுகம் ஆனது.
சாவித் துவார அறுவை சிகிச்சையில், 3 முதல் 6 இன்ச் அளவுக்கு மட்டுமே மார்புப் பகுதியில் துவாரம் இடப்படும். சிறப்பு டியூப் போன்ற அமைப்புக்குள் டெலஸ்கோப், போர்ட் ஆக்சஸ் கருவிகள், அசோஸியேடட் ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவை ஒன்றிணைந்து செலுத்தப்பட்டு, அவை இதயத்துக்கு அருகில் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த ஆக்சஸ் கருவிகள் மூலம் பார்க்கையில், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு இதயம் மிகவும் தெளிவாகவும், விசாலமாகவும் தெரியும். அதனால், அவர்களால் எளிதில் நோய்க் குறிகளைக் கண்டு அறியவும், சிகிச்சை அளிக்கவும் எளிதாக இருக்கும். இதயம் துடித்துக்கொண்டு இருக்கும்போதே, அறுவை சிகிச்சை நடத்துவதற்கு வசதியாக, ஸ்டார் பிஷ் இனி இதயத்துக்குக் கவலை இல்லை P41கருவி, ஸ்பெஷல் ஸ்டெப்லைசர் கருவி மூலம் தேவையான பகுதிகள் இடம் நகர்ந்துவிடாதபடி இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர், பிரத்யேகக் கருவிகள்கொண்டு மருத்துவ நிபுணர் அறுவை சிகிச்சை செய்வார். ஒரே நேரத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு வசதியாக, அறுவை சிகிச்சைக் கூடத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே சினி ப்ளோரோஸ்கோபி மற்றும் இன்ட்ரா ஆபரேட்டிவ் எகோகார்டியோகிராபி உள்ளிட்ட கருவிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.
பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்கவும் முடியும்.
இந்த அறுவை சிகிச்சை காரணமாக, சிறிய அளவே தழும்பு ஏற்படும். இது எல்லா நோயாளிகளுக்கும் மிகுந்த பயன் உள்ளது என்றாலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. புண் ஆறும் காலம் குறைவதால், தொற்று நோய் ஆபத்தும் குறைவே. குறைந்த ரத்தக் கசிவு என்பதால், வேறு நபர்களிடம் இருந்து ரத்தம் பெற்று செலுத்த வேண்டிய தேவையும் குறைந்துவிடுகிறது. அதனால் இந்த சிகிச்சை இப்போது அனைவராலும் விரும்பி ஏற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் புகழ்பெற்று விளங்கும் ரோபாடிக் அறுவை சிகிச்சையில் எல்லாவிதமான இதய அறுவை சிகிச்சைகளையும் செய்துவிட முடியாது. குறிப்பாக, ரத்தக் குழாயில் அதிக எண்ணிக்கையில் அடைப்புகள் இருந்தால், அதை ஒரே நேரத்தில் சரிசெய்துவிட முடியாது. இந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பிரச்னையும் இல்லை. செலவும் குறைவு!'' என்கிறார்கள்.
இதய நோயாளிகளுக்கு, இது நல்ல செய்தி!


ஜீனியர் விகடன் 01-மே -2011 இனி இதயத்துக்குக் கவலை இல்லை 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இனி இதயத்துக்குக் கவலை இல்லை Empty Re: இனி இதயத்துக்குக் கவலை இல்லை

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 9:46 am

பகிர்ந்த தாமுவுக்கு என் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum