புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்புமுனைத் தீர்ப்பு
Page 1 of 1 •
டாக்டர் விநாயக் சென்னின் மீது சுமத்தப்பட்டிருக்கும் தேசத்துரோகக் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பதும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதும் இந்தியா முழுவதும் இன்று அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநில விசாரணை நீதிமன்றத்தால் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக டாக்டர் விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதும், அந்தத் தீர்ப்பை பிலாஸ்பூர் நீதிமன்றம் உறுதி செய்ததும், உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
டாக்டர் விநாயக் சென் செய்த குற்றம் என்ன தெரியுமா? சத்தீஸ்கர் மாநிலத்தில் கனிமச் சுரங்கங்களை ஏற்படுத்த முனையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகத் தங்களது வாழ்வாதாரமான காடுகளை அழிக்கக்கூடாது என்று போராடும் ஆதிவாசிகளுக்குத் துணை நின்றது. ஆதிவாசிகளின் சார்பில், அவர்களைக் கூண்டோடு அழிக்கக் கிளம்பிய அரசாங்கத்தின் கூலிப்படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் மாவோயிஸ்ட் தலைவரான நாராயண் சன்யாலை சிறைச்சாலையில் சந்தித்தது.
டாக்டர் விநாயக் சென்னைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று ஒரே வரிக் கட்டளை பிறப்பித்திருக்கும் உச்ச நீதிமன்றம், விசாரணையின்போது எழுப்பி இருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றும், சத்தீஸ்கர் அரசும், கீழ்நிலை நீதித்துறையும் எந்த அளவுக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலும், பொறுப்பில்லாமலும் நடந்து கொள்கின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகப் பிட்டுப் பிட்டு வைக்கின்றன. நீதிபதிகள் எச்.எஸ். பேடியும், சி.கே. பிரசாத்தும் விசாரணையின்போது மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான விநாயக் சென் மீது வலுவில்லாத வழக்குத் தொடர்ந்து சத்தீஸ்கர் அரசு அவரை வஞ்சம் தீர்த்துக்கொள்ள முயன்றிருப்பதைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள்.
அரசுத் தரப்பின் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் உடைத்தெறிந்து விட்டனர். விநாயக் சென்மீது சாட்டப்பட்ட முதல் குற்றச்சாட்டு, அவரிடம் மாவோயிஸ்ட் தொடர்புடைய பிரசுரங்களும், புத்தகங்களும் இருந்தன என்பது. ""மகாத்மா காந்தி பற்றிய புத்தகங்களோ, அவர் எழுதிய "சத்திய சோதனை' புத்தகமோ வைத்திருப்பதாலேயே எப்படி ஒருவர் காந்தியவாதியாகிவிட முடியாதோ, அதேபோல மாவோயிஸ்ட், தீவிரவாதம் போன்றவை பற்றிய புத்தகங்களும், துண்டுப் பிரசுரங்களும், ஏன் ஆவணங்களும் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் தேசத்துரோகக் குற்றம் செய்ததாகக் கூறிவிட முடியாது என்று அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்து விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
டாக்டர் விநாயக் சென் மீது சாட்டப்பட்டிருக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு, சிறைச்சாலையில் இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யாலைச் சந்தித்து அளவளாவிய டாக்டர், அவரிடமிருந்து சில முக்கியமான கடிதங்களையும், ஆவணங்களையும் கடத்திச் சென்றார் என்பது. சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலையில் நாராயண் சன்யாலைச் சந்தித்த விநாயக் சென் எதையும் கடத்திச் செல்ல வாய்ப்பில்லை என்பதுடன், சிறைச்சாலையில் கைதியாக அடைபட்டிருக்கும் ஒருவரிடம் எந்தவித ஆவணங்களும் இருக்கவும் வாய்ப்பில்லை என்றுகூறிக் குற்றச்சாட்டை நிராகரித்து விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அடிப்படை ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளைக் கீழமை நீதிமன்றமும், பிலாஸ்பூர் உயர் நீதிமன்றமும் நிராகரித்திருந்தால் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருக்க வேண்டியதும் இல்லை. ஒரு நல்ல மனிதர், மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பொறுப்புள்ள மருத்துவர் காராகிரகத்தில் அடைபட்டுக் கிடக்க வேண்டிய அவசியமும் இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல வட மாநிலங்களில் இதுபோல பல மனித உரிமை மீறல்கள் மாநில அரசுகளாலும், அரசின் ஆதரவில் செயல்படும் கூலிப்படைகளாலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறோம் என்று அரசு ஆதரவுடன் சுரங்க முதலாளிகளின் கூலிப்படையினர் கொன்று குவித்துவரும் ஆதிவாசிகளின் எண்ணிக்கை ஆயிரங்களில். ஆதிவாசிகளைக் காட்டிலிருந்து அகற்றினால்தான், காடுகளை அழித்துச் சுரங்கங்களை நிறுவ முடியும் என்பதால் அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கூட்டம் களமிறங்கி இருக்கிறது.
அரசுதான், பன்னாட்டுச் சுரங்க முதலாளிகளின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தொழில்வளம் என்கிற சாக்கில் தேசத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளை கொள்ள உதவி புரிகிறது என்றால், நீதிமன்றங்களும் பழிவாங்கும் எண்ணத்துடன் அரசு தொடரும் வழக்குகளின் பின்னணியை உணராமல் தீர்ப்பளித்தால் எப்படி? உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் பொறுப்புணர்வு ஏன் கீழமை நீதிமன்றத்துக்கும், பிலாஸ்பூர் உயர் நீதிமன்றத்துக்கும் இல்லாமல் போனது?
அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினால், ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் களமிறங்கினால் அது தேசத்துரோகம் என்கிறார்கள். சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். மக்களின் வாக்குகளைப் பெற்று, ஒவ்வொரு குடிமகனின் ஜீவாதார உரிமையையும் பாதுகாப்பதாக அரசியல் சட்டத்தின் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் ஆட்சியாளர்கள் செய்வது மட்டும் தேசத்துரோகம் இல்லையா?
வரவர, எதற்கெடுத்தாலும் நாம் உச்ச நீதிமன்றத்துக்குப் போய்தான் நீதிபெற வேண்டும் என்கிற துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறதே, அது நல்ல அறிகுறியாகப்படவில்லை. கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு வழக்கு உச்ச நீதிமன்றம்வரை எடுத்துச் செல்லப்பட்டதே தவறு. தீவிரவாதம் தீவிரமடைவதன் அடிப்படைக் காரணமே, தாமதிக்கப்படும் நீதி என்பதுதான் உண்மை!
நன்றி: தினமணி தலையங்கம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான வழக்கு. உச்ச நீதிமன்றத்துக்கு பாராட்டுக்கள். இப்போதெல்லாம் மாநிலங்களில் உள்ள கீழ் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்றெ சொல்லலாம். உதாரணம் ஜான் டேவிட் வழக்கு. அருமையான விழிப்புணர்வு மிக்க பதிவை தந்தமைக்கு பாராட்டுக்கள் நண்பரே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்லத் தீர்ப்பு.
நல்லத் தகவல்.
நல்லத் தகவல்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான் தீர்ப்பு
நல்ல தீர்ப்பு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|