ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல் விமர்சனங்கள் :இரா இரவி

Page 2 of 2 Previous  1, 2

Go down

நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Empty நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Mon Aug 02, 2010 9:51 pm

First topic message reminder :

நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


தொகுப்பாசிரியர் : கவிஞர் மணிமேகலை நாகலிங்கம்
“இந்நூல்
உணர்வுகளை புரிந்து கொள்ளும் உயரிய உள்ளங்களுக்கு” என்று காணிக்கை
செய்துள்ளார். உண்மை தான் மனைவி இறந்த வீட்டிலேயே மறுமணத்திற்கு பெண்
தேடும் மாப்பிள்ளைகள் மலிந்து விட்ட காலம் இது. ஆனால் எங்கோ பிறந்து,
வளர்ந்து, வந்து, கணவன், குழந்தைகள் என தியாக வாழ்க்கை வாழ்ந்து மறைந்த
மனைவியின் நினைவாக கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் தொகுத்து உள்ள ஹைக்கு கவிதை
நூல். முன்னனி ஹைக்கூ கவிஞர்களின் தலா மூன்று கவிதைகள் நூலில் உள்ளது. தலா
ஒரு ஹைக்கூ மட்டும் தங்களின் ரசனைக்காக எழுதி உள்ளேன்.
என்னைப்
பொருத்தவரை ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் அவளுக்கு மறுமணம் அவசியம்.
ஆனால் ஓர் ஆண், குழந்தைகள் இருக்கும் போது மனைவி இறந்து விட்டால், மறுமணம்
செய்யாமலே அவரின் நினைவாகவே வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. குழந்தைகளுடன்
ஒரு தந்தை மறுமணம் செய்யும் போது குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி
விடுகின்றது. தந்தையின் மறுமணத்தின் காரணமாக அல்லல்பட்ட குழந்தைகள்
எண்ணிலடங்காதவை.என் வாழ்வில் நடந்த உண்மை. என் தாத்தா மறுமணம் செய்து
கொண்டதால் பேரனாகிய என் வாழ்க்கை வரை அந்த பாதிப்பு தொடர்ந்தது. அந்த வலி
என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. மறுமணம் செய்யும் ஆண்களையே வெறுத்தேன்.
ஹைக்கூ கவிதை சிறந்த வடிவம் என்பதை உணர்த்திடும் நூல். மனைவியின் மேன்மையை
மகாகவி பாரதி சொன்ன வைர வரிகள் நூலின் பின் அட்டையில் உள்ளது.
ஓ மனிதர்களே மண்ணுக்குள் எல்லா உயிர்களும்
தெய்வமென்று பேசுகிறீர்கள் அது உண்மையென்றால்
நீங்கள் மாலையிட்டு கைபிடித்த மனைவியும் ஒரு தெய்வமில்லையா?
கவிஞர்
மணிமேகலை நாகலிங்கம் மறைந்து விட்ட மனைவியின் நினைவாக இந்த கணவன்
கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது. மனைவியின் நினைவு நாட்களில் ஏதாவது
தொண்டு செய்யுங்கள்.
புத்தகம்
உள்ளே மயிலிறகு
கண்ணாய் நீ – ஒவியக்கவிஞர் அமுதபாரதி
உதிரும் ஒவ்வொரு பொழுதும்
மீண்டும் வரப் போவதில்லை
உன்னை மாதிரி – வண்ணை சிவா
வருடங்கள் கழிந்தும்
சரியாய் அடையாளம் சொன்னது
அவளின் ஓரப்பார்வை – ஜி.மாஜினி
மரணம் செத்துப் போனது
காதல் முன்னே
யமுனைக்கரை தாஜ்மகால் – துறவி
ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிந்திருக்கிறாள்
மனதுக்குள் அவள்-சிவபெருமான்
உளி வடிக்கா
உயிர் சிலை
இதயத்தில் அவள் – உ.பாலஹாசன்
எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் ரேகை -அறிவுமதி
நானும் அவளும்
பிரிவதில்லை
புகைப்படத்திலிருந்து – அய்யப்பன்
அறைகிறேன் என்னையே
ஆனந்தமாய் உன்
ஞாபகச் சிலுவையில் – கோ.பாரதி மோகன்
கனவைக் கிள்ளிப் போனாய்
வலிக்கத்தான் செய்கிறது
நீயில்லாத பகல் – மு.முருகேஷ்
உள்ளதை நேசிக்காமல்
உள்ளத்தை நேசிப்பவள்
மனைவி – எஸ்.பி.என்
சமாதியும்
சன்னதி தான்
தெய்வமாய் மனைவி – கலையருவி
எனக்குப் பயன்படாது
எதற்கும் என்னிடம் இருக்கட்டும்
உன் ஒட்டுப்பொட்டு – ஆர். எஸ்.நாதன்
இதயத்தில் இன்னும்
ஈரமாய்
அவள் தந்த முத்தம் – பாலபாரதி
என் பாதங்கள்
சுவடு பதிக்கும்
உன் பாதையில் – தமிழ்நெஞ்சன்
கண்மூடி ரசித்தேன்
உருண்டு விளையாடும்
அவள் விழியை – பா.உதயக்கண்ணன்
வீடு நிறைந்திருந்தும்
மனம் காலியாகவே
அவள் இல்லாமல் – முகவை முனியாண்டி
நீ ஒருமுறை இறந்தாய்
நான் தினம் தினம்
புதைக்கப்படாமல் – ச.காவியன்
காலி செய்த வீடு
மறக்காமல் எடுத்து வந்தேன்
பழகிய நாட்களை – நா.கவிக்குமார்
அடையாளம் தெரியும்
தூரமாய் இருந்தாலும்
அவளின் நடை – ஆலா
சோகம்
அதுவும் சுகம் தான்
நினைவில் நீ – மணிமேகலை நாகலிங்கம்
ஒவ்வொரு
ஹைக்கூ கவிதையும் ஒவ்வொரு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. மலரும் நினைவுகளை
உருவாக்குகின்றன. இந்த ஹைக்கூ கவிதைகளைப் படிக்கும் போது வாசகர்களின்
நினைவிற்கு காதல் மனைவியின் நினைவு வருவது நிச்சியம். இந்நூல் பற்றி
கவிஞர் வெண்ணிலா ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று குறை சொல்லி
உள்ளார். அதுவும், அதற்கான மறுப்பும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு. இன்று
விமர்சனங்களை ஜீரணித்து கொள்ளும் பண்பு பலருக்கு இருப்பதில்லை. ஆனால்
தொகுப்பாசிரியருக்கு இப்பண்பு நிறையவே உள்ளது என அறிய முடிகின்றது.
காதலியை, மனைவியே வெறும் போகப் பொருளாகப் பார்க்காமல் உயிருள்ள சக மனுசியாக
மதித்து அவளது உழைப்பை, தியாகத்தை உணர்ந்து அவளின் நினைவாக வாழ்வதே
வாழ்க்கை.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down


நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Empty பொற்றாமரை நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Apr 24, 2011 6:10 pm

பொற்றாமரை

நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை விலை ரூ 955

தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது .
சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று .உலக அதிசயமாக உள்ளது .ஆனால்
உலகில் எந்தக் கோயிலிலும் இல்லாத அளவிற்கு கற்ச்சிலைகளும் ,சுதைச்
சிற்பங்களும் நிறைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை உலக
அதிசயமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது வருத்தம்தான் அறிவிக்க இவர்கள்
யார் ?உலகத் தமிழர்கள் நாம் அறிவிப்போம் .
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலக அதிசயம்தான் என்று .

இந்த நூலை படித்து முடித்தவுடன் இந்த நிலைக்குதான் நான் வந்தேன் .
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது .ஆனால் உலகின் முதல் மொழியான தமிழ்
பேசிய தமிழன் உலகம் வியக்கும் வண்ணம் ,கல்லிலே கலை வண்ணம் கண்ட திறனைக்
கண்டு வியந்து போனேன் .மீனாட்சி கோயில் பற்றி பல நூல்கள் வந்துள்ளன .ஆனால்
இந்த நூல் MASTER PEICE என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற நூல் இதற்கு முன் வரவில்லை .
இனி வரப்போவதுமில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம் .
பிரமாண்டமான நூல் .பிரமிக்க வைக்கும் நூல் .வாங்கிப் படித்துப் பார்த்தால்
நீங்களும் உணர்வீர்கள் .வண்ணப் புகைப் படங்கள் வளமான கலை நுட்பத்தைப் பறை
சாற்றுகின்றன .
நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மேலூர் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் .மீனாட்சி கோயில் பற்றிய தகவல் களஞ்சியமாக ,ஆய்வு நூலாக மலர்ந்து உள்ளது .சங்கம்
வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிலிருந்து வெளிவந்துள்ள நூல் .கலைக்
களஞ்சியமாக வந்துள்ள இந்த நூல், எ .ஆர்.பதிப்பகம் மூலம் வெளியிட்ட மருத்துவர் பொற்றாமரை கொண்டான் திரு .சீனிவாசன் ,அவரது அன்பு மனைவி திருமதி மல்லிகா
இருவரும் பாராட்டுக்குரியவர்கள் .மிகப் பெரிய தொகையை இந்த நூலிற்காக
முதலீடு செய்த தொண்டுள்ளத்தைப் பாரட்ட வேண்டும் .டாக்டர் ராதா தியாகராஜன்
அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .அவரதுஅணிந்துரையில் சிறு துளி

சுருங்கக் கூறின் ஒரு வாரம் முழுவதும் கண்டறிந்து வணங்கிப் போற்றத்தக்க
இவ்வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாபெருந்திருக் கோயிலின் அனைத்துப்
பகுதிகளையும் மாபெரும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அறிந்து கொண்ட மனநிறைவு
,இந்நூலினைப் படிப்பவர்களுக்கு உண்டாகும் .இவ்வரலாற்றை நுண்ணரிதின்
நோக்கித் தெள்ளிதின் வரைந்த டாக்டர் அம்பை மணிவண்ணனை மனமாரப்
பாராட்டுகின்றேன் .


நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மணியான மொழியில் ,அற்புத
வர்ணனைகளுடன் ,அழகு தமிழில் அற்புதமாக .மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்
.மீனாட்சி கோயில் பற்றிய முழுமையான நூல் .உலகில் எல்லா நூலகத்தில் இருக்க
வேண்டிய நூல் .வெறும் புகழ்ச்சி அல்ல உண்மை என்பதை வாங்கிப் படித்துப்
பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள்.296 பக்கங்களும் புகைப்படங்களும்
எழுத்து மட்டுமல்ல ,தமிழர்களின் திறமை உழைப்பு ,கலை ,பண்பாடு ,நாகரீகம்
,விழாக்கள் அனைத்துத் தகவல்களின் சுரங்கமாக உள்ளது
.இந்நூலில்
புகைப்படங்கள் சிறப்பா? கருத்துக்கள் சிறப்பா ?எனப் பட்டிமன்றமே நடத்தலாம்
.நடத்தினாலும் நடுவரால் தீர்ப்புச் சொல்ல முடியாது . அந்த அளவிற்கு
புகைப்படங்களும் ,கருத்துகளும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கின்றன .நூலில்
விமானத்தில் இருந்து எடுக்கப் பட்ட புகைப்படம் ,செயற்கைக்கோள் வரைபடம்
மீனாட்சி கோயிலில் உள்ள அனைத்துப் பகுதிகளின் புகைப்படங்கள் சிலைகள்
அதற்க்கான விளக்கங்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .
இந்த நூலைப் படித்துவிட்டு மீனாட்சி கோயில் சென்றுப் பார்த்தேன் .நான்
மட்டுமல்ல இந்த நூல் படிக்கும் அனைவருக்கும் தோன்றும் மீனாட்சி கோயிலை
கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்று .இந்நூலை அயல்நாட்டில் உள்ள
நண்பர்களுக்குப் பரிசாகத் தந்து மகிழலாம் .மீனாட்சி கோயிலின் கலை
நுட்பத்திற்காகவே உலகில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு தமிழனும் பெருமை
கொள்ளலாம் .வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் தமிழன் பிரமாண்டமாக கலை
அம்சத்துடன் கட்டி எழுப்பிய கோயில் ,காலத்தால் அழியாத கலைச் சின்னமாக
உள்ளதை நூல் விளக்குகின்றது .
விழிகளுக்கு விருந்தாக கலை உள்ளது .கருத்து மனதிற்கு இனிமையாக உள்ளது
.மிகச் சிறப்பாக அச்சிட்ட மதுரை விநாயகா அச்சகதாரும் பாராட்டுக்கு
உரியவர்கள்மீனாட்சி கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள சிலைகளைப்
பார்த்தால் உண்மையில் மனிதர்கள் நிற்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன .சிலைகளின்
புகைப்படங்கள் ,விளக்கங்கள் ,இசை எழுப்பும் தூண்கள் பற்றிய தகவல்கள்
,மதுரையின் வரலாறு .கோயிலின் தோற்றம் ,வளர்ச்சி ,பிரகார ஓவியங்கள்
,கோபுரங்கள் பற்றிய விபரங்கள் ,திருமலை நாயக்கர் வரலாறு,தங்கக் கோபுரம்
,சிற்ப அமைப்பு ,வாயிற்க் காவலர்கள் சிலைகள் இப்படி பல்வேறு தகவல்கள்
நூலில் உள்ளது .

புதுமண்டபத்தில் உள்ள 34 சிலைகளின் பெயர்கள் அதன் விளக்கங்கள் நம்மை
வியப்பில் ஆழ்த்துகின்றன .கள்ளழகர் திருவிழா தகவல்கள் ,தேரின் கலைநய
வேலைப்பாடு எல்லாம் நூலில் உள்ளது.இந்நூலைப் படித்து முடித்தவுடன் நாமக்கல்
கவிஞர் பாடிய வைர வரிகள்தான் என் நினைவிற்கு வந்தது .

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !


--

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum