புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 10:32 am

First topic message reminder :

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Large_230600
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக
கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட
புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு
காலமானார். இவருக்கு வயது 85 .
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி
மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும்
உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில்
பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட
சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு
பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும்,
டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை
வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள்
மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து
வந்தனர். பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல்
இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர்
கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது.
இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி
கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள்
புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய
சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில்
பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ
ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே
பார்க்கின்றனர்.
ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக்
கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது
வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய
நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல்
இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி
தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது.
இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து
சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர்
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள்
உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர்.
1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து
கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்''
என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான்
சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி
சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம்
வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு
முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட
தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள்
வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது.
இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா,
அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி
அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா
பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில்
உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா
அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா.
லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை
ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும்
வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி
நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது.
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல்
சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில்
சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் ¬முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா,
நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான்,
சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப
மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி
பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும்
இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில்
6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால்
சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும்
உயர்த்தியுள்ளன.


சமூகத்தொண்டு:
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய
கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் ¬முடிவுக்கு
வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர்.
இத்திட்டம் 9 மாதங்களில் ¬முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர
குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று
நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன.
இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு ¬முன்வந்தபோதும் பாபா
மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும்
தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200
சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின்
குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை
திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
பொன் மொழிகள்
* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால்
ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.
பாபாவின் சேவைகள்...
* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக
விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு
தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள்
உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும்
வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி
மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வந்தார்.

* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய்
மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும்
இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்
மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில்
இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை
சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள்
உள்ளனர்
நன்றி தினமலர்


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 24, 2011 11:02 am

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். நானும் இறைவனை வேண்டுகிறேன்.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 24, 2011 11:48 am


மரணம் தவிர்க்க இயலாதது. ஆனாலும் அது ஒவ்வொரு முறை நிகழும் போதும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் போகும். எனக்கு சாய்பாபா அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. மேடைகளில் நிறைய விமர்சனம் செய்திருக்கிறேன். இனியும் தேவைப் படும் போதெல்லாம் செய்யவே செய்வேன். அவரது பெயரால் குவிக்கப் பட்ட சொத்துக்கள், அங்கு உள்ளே நடந்த திறை மறைவு வேலைகள், ஏற்கனவே அவரைக் கொல்ல நடந்ததாக சொல்லப்பட்ட முயற்சி, அது அப்படியே மறைக்கப் பட்டதின் பின்னே உள்ள அரசியல், இந்திய ஜனாதிபதி வரை அவரது காலடியில் கிடந்த கீழ்மை, அவரது மந்திரங்கள் என இவை அனைத்தும் குறித்து எப்போதும் போலவே இனியும் தேவைப் படும் இடங்களில் விமர்சிப்பேன்.


ஆனாலும் அவர் தன்னை ஒரு தெலுங்கராய் உணர்ந்து வைத்திருந்ததும் தன் தாய் மொழியை பிற மொழிக்காரனும் பிழையாக உச்சரித்து விடக் கூடாது என்பதில் அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றிற்காக அவரை நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன். உணர்ச்சி வசப்படாமல், ஆரவாரமில்லாமல், மொழிமீது பற்று வைக்கவும் கவனம் குவிக்கவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது.


அவருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய “பகவான் தாய் மொழி தெலுங்கு” என்ற கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.




சற்றே சமீபத்தில் புட்டபர்த்தி சென்று சாய்பாபா முன்னிலையில் பாடிய தனது அனுபவத்தை “கல்கி” யில் பதிந்திருக்கிறார் டி.எம்.கிறிஷ்ணா.சிலாகிப்பினை ஊன் உருக, உயிர் உருகப் பதிந்திருக்கிறார் என்பதே உண்மை.

சற்றேரக் குறைய எழுபது நிமிடங்கள் பாடிய அவரை அழைத்து, காற்றிலே விரல் சொடுக்கி, வலது கை விரலில் ஒன்றும் இடது கை விரலில் ஒன்றும் ஆக இரண்டு மோதிரங்களை சாய்பாபா அவர்கள் அணிவித்ததாக பக்தி கசியக் கசியச் சொல்கிறார் கிறிஷ்ணா.

இது மூட நம்பிக்கையா? மோசடியா? நிறைய பேர் நிறைய எழுதிவிட்டார்கள். எனவே அதற்குள் போக நான் அக்கறைப் படவில்லை.

“தெலுங்கு வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்” என்று தன்னிடம் சாய்பாபா அவர்கள் சொன்னதாய் போகிற போக்கில் கிருஷ்ணா சொல்லிச் சென்றுள்ள விஷயத்தில்தான் நாம் கூடுதல் கவனம் குவிக்க வேண்டும் என்று படுகிறது.

கிருஷ்ணா அவர்கள் தெலுங்கு உச்சரிப்பில் ஏதோ பிசகியிருக்க வேண்டும். அதைத் திருத்தும் விதமாகத்தான் சாய்பாப அவர்கள் மேலே சொன்னதை சொல்லியிருக்கக் கூடும்.

இதில் ஒன்றும் பிழை இருப்பதாகப் படவில்லை. பகவானேயாயினும் சாய்பாபா அவர்கள் ஒரு தெலுங்கர். அவரது தாய் மொழி தெலுங்கு. கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரக் கொண்டாடினாலும் தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும் , தனது தாய் மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையை நாம் போற்றுகிறோம்.

இன்னுஞ்சொல்லப் போனால் எல்லா விஷயங்களிலும் அவரோடு முரண்படுகிற நாம் , அவரது மொழிப் பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்.

அவர் தெலுங்கர். அவரது தாய்மொழி தெலுங்கு. அவரும் அதை உணர்ந்திருக்கிறார். தலை தாழ்த்திப் போற்றுகிறோம்.

நாம் த்மிழர். நமது தாய்மொழி தமிழ்.

இதை நாமெப்போது உணரப் போகிறோம்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 38691590

இரா.எட்வின்

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 9892-41
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 24, 2011 12:01 pm

அவரது ஆத்மா நித்திய மோட்சத்தை அடைய என் பிரார்த்தனைகள்!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 12:05 pm

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 24, 2011 12:07 pm

அருண் wrote: அவரது ஆத்மா நித்திய மோட்சத்தை அடைய என் பிரார்த்தனைகள்!

அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 38691590

இரா.எட்வின்

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 2:24 pm

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Saibabaprayer295ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார்.

இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 85 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காலமானார்.

இவருக்கு உலகெங்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் கடந்த மார்ச் மாதம் 28 -ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை.

இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் போது மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Sai_pg_1

இவரது உடல் நிலை குறித்து சாயி மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தார்.

அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Saiii75

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாயி மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Sai_570473f

இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் இலட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஆந்திர முதல்வர்,அமைச்சர்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி செய்தி கேட்டு புட்ட பர்த்தியில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Sai2

மரணத்தின் தொடர்ச்சியாக புட்டபர்த்தியில் கடும் பதற்றம் நிலவுகின்றது.

ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

சத்ய சாயி பாபா செய்த சமூக சேவைகள் தொடர்பான விபரங்கள் வருமாறு,

சத்ய சாயிபாபாவுக்கு ஏறத்தாழ 1200 சத்ய சாயி அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது. சத்திய சாயி பாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை நிறுவனங்கள் எனப பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுக்கல்வி (Educare), விழுமிய மருத்துவம் (Medicare) விழுமிய குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. இவரது நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.

இறந்த செய்தி கேட்டவுடன் பக்தர் ஒருவரின் அதிர்ச்சி அதிர்வலைகளை கீழே உள்ள படத்தில் காணுகின்றீர்கள்..

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Sai

Medicare - எனப்படும் விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாகச் சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.

Aquacare எனும் தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுதீககரீக்கப்பட்ட குடிநீரை சத்திய சாயி மத்திய அறக்கட்டளை வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர் பிரச்னை சுதந்திர காலத்த்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாதது.

இதனை சத்திய சாயி பாபா சாதனை காலத்தில் அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல கூடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். சென்னை மக்களின் தாகத்தை தீர்கக தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கை திட்டத்தினை சீர் செய்து சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வழங்கியது சத்திய சாயி மத்திய அறக்கட்டளை.

அது தவிர, மக்களின் மனங்களில் இவ்வாறான மேலான சேவை அல்லது தொண்டு எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவனங்கள் பல ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர சங்கீர்த்தனம்,மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வுவட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன.

உலகெங்கிலும் உள்ள சாயி நிறுவனத்தினர், தங்கள் பகுதிகளில் நிகழும் இயற்கைப் பேரிடர் சமயங்களில் உதவிகளைச் செய்துள்ளனர். இவ்வாறான பல சமூக சேவைகளைச் செய்த பெருந்தகையின் மரணத் துயரைத் தாங்காது பக்த கோடிகள் கண்ணீர் சிந்துகின்றனர்

நன்றி இலங்கை செய்திகள்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 2:32 pm

சோகம் பகிர்ந்து கொண்ட மஞ்சுவுக்கு அன்பான நன்றிகள்.. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 2:48 pm

கலைவேந்தன் wrote:சோகம் பகிர்ந்து கொண்ட மஞ்சுவுக்கு அன்பான நன்றிகள்.. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்..!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் பிரார்த்தனைகள்



நேசமுடன் ஹாசிம்
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 24, 2011 2:54 pm

பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின்
புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது
பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர்.

1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து
கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.


நன்றி தினகரன்.




பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Tபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Hபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Iபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Rபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 24, 2011 2:58 pm

* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப் பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும்
வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ மனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.




பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Tபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Hபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Iபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Rபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக