ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!

4 posters

Go down

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! Empty இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!

Post by முரளிராஜா Fri Apr 22, 2011 9:17 pm

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! 22-halwa200
நன்றி தட்ஸ் தமிழ்

நெல்லை: திருநெல்வேலி யில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வா பெயரில் போலி கடைகள் நடத்தவும், இந்தப் பெயரை வேறு யாரும் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


நெல்லை என்றவுடனே அல்வாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். திருநெல்வேலிக்கே அல்வாவா என்ற வழக்குச் சொல்லே உண்டு.

இதற்கு முக்கிய காரணம், திருநெல்வேலியில் உள்ள இருட்டுக் கடைதான். நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ளது இந்த இருட்டுக்கடை. அல்வா என்றாலே இந்த இருட்டுக்கடைதான்.

இந்த கடையில் 45 வாட்ஸ் பல்பு மட்டுமே போடப்பட்டுள்ளதால் வெளிச்சம் குறைவாக இருக்கும். இதனால் இதற்கு இருட்டுக்கடை என்ற பெயர் ஏற்பட்டது. எத்தனையோ நவீன வசதிகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும், இந்தக் கடை இன்னமும் 40 வாட்ஸ் பல்புடன் இருட்டாகத்தான் இருக்கிறது. பெயர் காரணம் சரியாக இருக்கவேண்டுமல்லவா... அதனால் இப்படி.

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையே திறக்கப்படும் இந்த இருட்டுக்கடையில் அல்வா வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். கடை திறக்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் கூடி விடுவார்கள்.

இந்த இருட்டுக்கடை அல்வாவை நெல்லையில் அறிமுகப்படுத்தியவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல குடும்பத்தினர் பிழைப்பு தேடி நெல்லைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சொக்கப்பட்டி அரண்மனையில் பணிக்கு சேர்ந்தனர். அவர்களில் ஒருவர்தான் 1882-ம் ஆண்டு வந்த ஜகன்சிங். ராஜஸ்தான் இனிப்பு வகைகள் செய்வதில் ஜகன்சிங் நிபுணர். ராஜஸ்தான் வகை இனிப்புகள் தயாரித்து நெல்லையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

ராஜஸ்தான் இனிப்பு வகையில் ஒன்றான அல்வாவையும் தயாரித்து தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று விற்று வந்தார். ஜகன்சிங்கின் புது வகை இனிப்பான அல்வா மிகவும் பிடித்து விட்டது. இதனால் அல்வாவுக்கு தனி மவுசு ஏற்பட்டது. இதனால் அல்வா வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது.

ஜகன்சிங் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதில் ஈடுபடுத்தி வியாபாரத்தை பெருக்கினார். அவர்களின் வழி தோன்றல்கள் தான் நெல்லை பகுதியில் இனிப்பு பட்சணக் கடைகளை நடத்தி வருகின்றனர்.

அல்வாவுக்கே அல்வா

ஆனால் மற்ற கடைகளுக்கு கிடைக்காத புகழும் வர்த்தகமும் இருட்டுக்கடைக்கு மட்டும் கிடைத்தது. இதனால் அங்கு அல்வா விற்பனை நாளுக்கு நாள் அமோகமாக நடந்தது. அல்வா என்றாலே இருட்டுக்கடைதான் என்ற நிலை மக்கள் மனதில் ஏற்பட்டது.


இதனால் நெல்லையின் பல இடங்களில் இருட்டுக் கடை என்ற பெயரில் புதிய கடைகள் முளைத்தன. பஸ்,ரெயில் நிலையங்களிலும் பலர் இருட்டுகடை அல்வா என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகளில் தரம் குறைந்த அல்வா விற்று வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகுகின்றனர்.

இந்தநிலையில் நெல்லை டவுனில் இருட்டுக்கடை (ஒரிஜினல் கடை) நடத்தி வரும் சுலோசனா பாய் , நெல்லை முதலாவது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், "நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே 1900-ஆண்டில் இருந்து என்னுடைய மாமனார் கிருஷ்ணசிங் லாலா கடை நடத்தி வருகிறார். அதில் அல்வா மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த கடையில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடையில் 45 வாட்ஸ் மின்சார பல்ப் மட்டுமே எரிய விடப்படும். வெளிச்சம் குறைவாக இருப்பதால் இந்த கடையை இருட்டுக்கடை அல்வா கடை என்று மக்களால் அழைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பில் 'திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா 'என்ற பெயரில் அந்த பகுதியை சேர்ந்த செய்யது முகைதீன் என்பவர் கடந்த 22-6-2007 முதல் கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இருட்டுக்கடை என்ற பெயரில் அவர் கடை நடத்துவதால் என் வியாபாரம் பாதிக்கிறது. எனவே இருட்டுக்கடை பெயருக்கு முன்போ, பின்போ வேறுவார்த்தைகளை சேர்த்து அல்வா கடை நடத்தக்கூடாது என்று உறுத்துக்கட்டளை பிறப்பிக்க வேண்டும். பை, பேக்குகளில் இந்த பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. 2007-க்கு பிறகு விற்பனைக் கணக்குகளையும் லாபத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,' என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் 27 சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இருட்டுக்கடை என்ற பெயரை அவர் வணிக சின்னமாக பதிவு செய்திருப்பதையும் காட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ், "மனுதாரரின் கடையை பிரதிபலிக்கும் படியாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று அச்சடித்தோ, விளம்பரம் செய்யவோ கூடாது. இருட்டுக்கடை என்ற வார்த்தையுடன் முன்போ, பின்போ வேறு வார்த்தைகள் சேர்த்து அந்த முகவரியில் அல்வா வியாபாரம் செய்யக்கூடாது," என உத்தரவிட்டார்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! Empty Re: இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!

Post by கலைவேந்தன் Fri Apr 22, 2011 9:20 pm

இப்ப அங்கபாருங்க முரளி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! Empty Re: இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!

Post by அசுரன் Fri Apr 22, 2011 9:34 pm

இருட்டுக்கடை மேட்டர் வெளிச்சத்துக்கு வந்த கதை அருமை முரளி. பகிர்வுக்கு நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! Empty Re: இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 9:37 pm

இருட்டு கடை அல்வா உங்க திருமண நாளுக்கு ட்ரீட்டா வாங்கி தாங்க இனியா...

அன்பு நன்றிகள் முரளி பகிர்வுக்கு.....

அன்பு நன்றிகள் கலை படம் பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! Empty Re: இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!

Post by அசுரன் Fri Apr 22, 2011 9:38 pm

மஞ்சுபாஷிணி wrote:இருட்டு கடை அல்வா உங்க திருமண நாளுக்கு ட்ரீட்டா வாங்கி தாங்க இனியா...

அன்பு நன்றிகள் முரளி பகிர்வுக்கு.....

அன்பு நன்றிகள் கலை படம் பகிர்வுக்கு....
அக்கா கொடுத்த அல்வாவுக்கு நன்றிகள். ப்ளான் பண்ணி செய்யுறாங்கடோய் அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை! Empty Re: இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகள் என்ற பெயரை விடுத்து வேறு பெயரில் இயங்குகிறார்கள் - ஜலியா
» வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
» நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் திடீர் தற்கொலை: கொரோனா உறுதி ஆனதால் விபரீதம்
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» குறுக்கெழுத்துப் போட்டி – (காலணியின் வேறு பெயரில் கை உண்டு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum