ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்

Go down

பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்  Empty பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்

Post by தாமு Fri Apr 22, 2011 1:58 pm

அழகை விரும்பாத மனமே இல்லை. அதுவும் பெண்கள் அழகாய் இருத்தல், இன்னும் கூடுதல் அழகு. அந்த பெண்களும், தங்க நகைகள் ஜொலிக்க இருந்தா..? அப்படி பெண்களை அழகாய் மெருகூட்ட , தங்க நகைகள் உங்கள் வீட்டில் குவிய - ஒரு ஆன்மீக வழிகாட்டுதல் உண்டு என்றால்...!! அட , ஆமாங்க.அப்படியும் ஒரு வழி இருக்குதாம். எல்லாம், நேரம் தானுங்களாம் .... அந்த குறிப்பிட்ட நாளில் முறைப்படி விரதம் இருந்து , பூஜை வழிபாடு செய்ய நல்ல விதமா பொன்னும், பொருளும் சேருமாம், அழகும் , வசீகரமும் கூடுமாம்...
பெண்கள் அழகா , வசீகரமா ஆகுறதுக்கு ஒரு பூஜை , விரதமா? என்னய்யா இப்படி கிளம்பிட்டீங்க..னு கேட்குறீங்களா? என்ன விஷயம் னு படிச்சுப் பாருங்க.. உங்களுக்கு இது ஒரு புதிய விஷயமா.. இல்லையானு பின்னூட்டம் இடுங்க..

என் நண்பர் ஒருத்தர் இருந்தாரு. அவரு , கொஞ்ச வருஷம் முன்னாலே , ஒரு பெண்ணை , சின்சியரா லவ் பண்ணிக்கிட்டு இருந்தாப்ல. ... அந்த பொண்ணு கொஞ்சம் பார்க்கிறதுக்கு சுமாராத்தான் இருக்கும். வீட்டுக்கும் அரசல், புரசலா விஷயம் தெரிய வந்துச்சு.. அவங்க பாட்டி , அந்த பையனைக் கூப்பிட்டுச்சு..

" ஏண்டா... நீ அந்த தேவியை காதலிக்கிறயாக்கும்" ...
நம்ம ஆளு..." ஆமாம் பாட்டி " ..


" அவ ஒன்னும் பார்க்கிறதுக்கு அவ்வளவு நல்ல இல்லையேப்பா.. போயும், போயும் இவ தானா கிடைச்சா..?




















நம்ம ஆளு என்ன சொன்னான்னு நினைக்கிறீங்க ..?









பாட்டி , நீ உன் கண்ணிலே இருந்து இல்லே பார்க்கிறே..? என் கண்ணிலே இருந்து பாரு.. அந்த பொண்ணு எவ்வளவு க்யூட் தெரியுமா? .....னு கேட்டான்.. பாட்டி, கப் சிப். ஒண்ணுமே வாயைவே திறக்கலை, அதுக்கு அப்புறம்.
நான், பக்கத்திலே தான் நின்னுக்கிட்டு இருந்தேன்.. பய புள்ளைக, காதல் வந்துச்சுனா, என்னமா யோசிக்குதுக பாருங்க.. !!
அந்த மாதிரி , அவங்க அவங்க பார்வைக்கு - அழகு வித்தியாசப்படும்.. அழகு , நிரந்தரமும் இல்லை.பொண்ணுக்கு அழகு மட்டுமே முக்கியமும் இல்லை.... அதையும், மனசிலே வைச்சுக்கோங்க... மதர் தெரசாவை விடவா , இந்த உலகத்திலே ஒரு பெண் இருந்துவிட முடியும்..?


சரி, விஷயத்துக்கு வருவோம்...


இதோ , கிட்ட நெருங்கிடுச்சு... அட்சய திரிதியை.. இந்த நாள்லே , தங்கம் வாங்க கூட்டம் அலைமோதும் . ஒரு வேளை. நீங்க தங்கம் வாங்க முடியலையா.. இப்போ இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைங்க.. கார்த்திகை மாசம் வரும் திரிதியை பேரு.. ரம்பா திரிதியை.. அதைப் பத்தி கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள் இப்போ நீங்க பார்க்கப் போறீங்க...





பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்  Obj3067geo444p8



எல்லாருக்கும் புதிய பொருட்கள் வாங்குகிற நாளாகவும், தானம் கொடுக்கும் நாளாகவும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் த்ரிதியை நாளாகிய அட்சய த்ரிதியைதான் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையாகப் பொன் வாங்கும் நாளும், பெண்களுக்கு அழகு கூடும் நாளும் ஒன்று நமது பண்டிகைகள் பட்டியலில் வருவது ஒரு சில பிரிவினருக்கே தெரிந்திருக்கிறது..

அதுதான் ரம்பா த்ரிதியை என்னும் பொன் வாங்கும் நாள். இதை நம் தமிழ் மண்ணில் தங்கத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டியது அவசியம்..
பொங்கல் விழாவுக்கு சூரியனையும், தீபாவளிக்கு நரகாசுர வதத்தையும் மூலமாக வைத்துள்ளதைப் போல ரம்பா த்ரிதியையின் சிறப்புக்கும் ஒரு மூலக்கதை உண்டு..





ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திர சபை கூடியிருந்தது. தேவர் தலைவன் இந்திரன் அரியணையை அலங்கரித்திருக்க, தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆடிக்கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டு, தங்கள் ஆட்டமே சிறந்ததென்று பாராட்டப்படுமென்று கர்வத்துடன் ஆடிக்கொண்டிருந்தனர். ராகம், தாளம், பல்லவி, சரணங்களுக்கேற்ப தங்கள் அபிநயங்களைச் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரம்பையின் தலையிலிருந்த நெற்றிச்சுட்டியும் பிறைப் பொட்டும் கழன்று கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்டு ஊர்வசியும் மேனகையும் கலகலவென்று சிரித்துவிட்டு, "பிறகு ஆட்டத்தைத் தொடர்வோம்' என்று சென்றுவிட்டனர். இதனால் அவமானப் பட்ட ரம்பை இந்திரனை ஒரு பார்வை பார்த்தாள். கண்கள் அவமானத்தால் கலங்கியது.

மறுநாள் இந்திரனைத் தனியே சந்தித்த ரம்பை, ""தேவர் தலைவா! எனக்கு ஏன் இந்த அவமானம்? அழகில் சிறந்தவள் ரம்பைதான் என்ற பெயர் பெற்ற நான், உன் அவையில் சிரம் தாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது பெயரும் அழகின் சிறப்பும் நிலைபெற ஒரு வழியைத் தாங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று தலைவணங்கி நின்றாள்..

""தேவருலகின் முதல் அழகியே! உனது வேண்டுகோள் சரிதான். உங்கள் மூவரின் தேவையற்ற போட்டியில் வந்த வினைதான் இது. மூவருமே அழகில் சிறந்தவர்கள்தான். ஆடவருள் போட்டி வந்தால் அரசுகூட அதிருமென்பர் சான்றோர். பூவையருள் போட்டி வந்துவிட்டால் புவியும் அசைந் தாடுமாம்..

இந்திர சபை என்ன உங்களின் கலை பயிலும் கூடமா? அனந்தசேனன் என்ற தேவன் உங்களது தேவையற்ற போட்டி பற்றிக் கூறும்போது, கலைவாணியாக வீற்றுள்ள சக்தி தேவிதான் உனது சிரசிலிருந்த நெற்றியணியைக் கழற்றிவிட்டாள் என்றான்..

தாள விருத்தத்தை அபிநயிக்கும்போது மூன்று கட்டை பதங்களையும் தாண்டி ஐந்தாம் பதத்துக்குச் சென்று ஆடிவிட்டாய்! நல்ல வேளை, உனது ஆடைகளும் பொன்மணிகளும் சிதறாது போனதே என்று நினைத்துக் கொள்!'' என்றான் இந்திரன்..

""தேவேந்திரா! ஆட்டத்தின் விதிப்படி முப்பதங்களைத் தாண்டவில்லை என்பதே என்னுடைய பணிவான பதில். இந்த சம்பவத்திற்குப் பிராயச்சித்தம் கூறுங்கள்'' என்றாள் ரம்பை. ""ஐம்பதங்களைத் தாண்டிவிட்டாய் என்பதைக் கலையரசி வாணியை அழைத்துச் சொல்ல வைக்கட்டுமா? இல்லை, எம் உலக நாட்டிய தாரகை ஸ்வர்ணமுகியை விட்டுச் சொல்ல வைக்கட்டுமா?'' என்று கோபத்துடன் கேட்டான் இந்திரன்..

""தேவேந்திரா! இன்னும் என் மனதைப் புண்படுத்தும் படி செய்ய வேண்டாம். இதற்கான வழியை மட்டும் கூறுங்கள்'' என்று மன்றாடினாள் ரம்பை.. பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்  Kavya_madhavan


"பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். தேவலோக அழகியான உனக்கு சரியான ஒரு வழியைக் கூறுகிறேன். பூவுலகில் அன்னை பார்வதிதேவி கௌரியாக அவதாரம் எடுத்து ஓர் மகிழ மரத்தின் கீழ் தவம் செய்து கொண்டிருக்கிறாள். அழகன் முருகனை மடியில் வைத்தபடி அந்த அன்னை அனைவருக்கும் அருள் செய்கிறாள். கார்த்திகேயனை மடியில் வைத்துக்கொண்டிருப் பதால் கார்த்தியாயினி என்ற பெயர் அவளுக்கு வந்தது..

உனது அழகும் ஆபரணங் களும் பொன்னும் பொருளும் சேர்ந்திட அந்த தேவியை விரத மிருந்து பூஜை செய். அவளே உனக்குக் காட்சி தந்து பதிலும் சொல்வாள்'' என்றான் இந்திரன்..
கௌரியை பூஜித்த ரம்பை.

இந்திரனுடைய உபதேசத்தைக் கேட்ட ரம்பை, கார்த்திகை மாதத்தில் வரும் த்ரிதியைக்கு முதல் நாள், "திந்திரிணீ கௌரி விரதம்' இருந்து முறைப்படி பூஜை செய்தாள். "திந்திரிணீ' என்றால் மஞ்சள் நிற பதார்த்தங்களைக் குறிக்கும். அதாவது மங்களகரமான பொருட்களைக் குறிக்கும். பூஜையை முடித்து வணங்கிய ரம்பைக்கு, குழந்தை முருகனை மடியில் இருத்தியபடி கௌரி தேவி கார்த்தி யாயினியாகக் காட்சி தந்தாள். தங்கநிற மேனியளாக ஜொலித்த அன்னை ரம்பையைப் பார்த்து, ""உனது பக்தி மிகுந்த பூஜையில் மகிழ்ந்தோம். உனது அழகும் அணிகலன்களும் சேர்ந்திடவே இந்த பூஜையைச் செய்துள்ளாய். இன்று முதல் உனக்கு அழகும் பொன்னும் மிகும். "தேவருலக அழகி ரம்பையே'என்று அனைவரும் பாராட்டுவர். இன்று முதல் உன் பெயராலேயே ரம்பா த்ரிதியை என்று இந்த நாள் விளங் கட்டும்'' என்றாள். மேலும், ""இந்நாளில் வழிபடுவோர் அனைவருக்கும் பொன், பொருள் சேர்ந்து அழகும் முக வசீகரமும் ஏற்படும்'' என்றும் அருள் செய்தாள்..

சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண் களுக்கும் ஒரு வரப்பிரசாத நாளாக விளங்குவது ரம்பா த்ரிதியை நன்னாள். முதல் நாள் கௌரி தேவியைக் குறித்து விரதமிருந்து, மறுநாள் கலசத்தில் அம்பிகையை ஆவாகன பூஜை செய்து எழுந்தருளச் செய்தல் வேண்டும். வரலக்ஷ்மி விரதப் பூஜை செய்முறை போலவே கலசம் ஒன்றை வைத்து, வாசனைத் திரவியங்களோடு நீர் ஊற்ற வேண்டும். மூன்றுவகைப் பழங்க ளோடும், மஞ்சள் நிற அன்னத்தை (எலுமிச்சை சாதம், புளியோதரை) நிவேதனமாக வைத்துப் பூஜை தொடங் கலாம். மஞ்சள் கயிற்றில் மஞ்சள் நிற மலரைக் கட்டி வலக்கையில் ரட்சை யாகக் கட்டிக்கொண்டு, கலசத்திற்கு மேல் பொன் நகைகளைக் கவனமாகச் சாற்றி, முடிந்தால் தேவி முகம் செய்து அழகுபடுத்தலாம்..

தன்னை ரம்பையாக எண்ணிக் கொண்டு மனதுக்குள், "ஸ்வாகதம் ஸ்வாகதம் ரம்பாதேவி' என்று ஆவாகனம் செய்து, தலையில் மலர் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் விநாயகர் பூஜை தொடங்கி, தேவி ஆவாகனமும் செய்தபின் கௌரி அர்ச்சனையைச் செய்ய வேண்டும்.



livingextra பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum