Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்
Page 1 of 1
பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம்
அழகை விரும்பாத மனமே இல்லை. அதுவும் பெண்கள் அழகாய் இருத்தல், இன்னும் கூடுதல் அழகு. அந்த பெண்களும், தங்க நகைகள் ஜொலிக்க இருந்தா..? அப்படி பெண்களை அழகாய் மெருகூட்ட , தங்க நகைகள் உங்கள் வீட்டில் குவிய - ஒரு ஆன்மீக வழிகாட்டுதல் உண்டு என்றால்...!! அட , ஆமாங்க.அப்படியும் ஒரு வழி இருக்குதாம். எல்லாம், நேரம் தானுங்களாம் .... அந்த குறிப்பிட்ட நாளில் முறைப்படி விரதம் இருந்து , பூஜை வழிபாடு செய்ய நல்ல விதமா பொன்னும், பொருளும் சேருமாம், அழகும் , வசீகரமும் கூடுமாம்...
livingextra
பெண்கள் அழகா , வசீகரமா ஆகுறதுக்கு ஒரு பூஜை , விரதமா? என்னய்யா இப்படி கிளம்பிட்டீங்க..னு கேட்குறீங்களா? என்ன விஷயம் னு படிச்சுப் பாருங்க.. உங்களுக்கு இது ஒரு புதிய விஷயமா.. இல்லையானு பின்னூட்டம் இடுங்க.. என் நண்பர் ஒருத்தர் இருந்தாரு. அவரு , கொஞ்ச வருஷம் முன்னாலே , ஒரு பெண்ணை , சின்சியரா லவ் பண்ணிக்கிட்டு இருந்தாப்ல. ... அந்த பொண்ணு கொஞ்சம் பார்க்கிறதுக்கு சுமாராத்தான் இருக்கும். வீட்டுக்கும் அரசல், புரசலா விஷயம் தெரிய வந்துச்சு.. அவங்க பாட்டி , அந்த பையனைக் கூப்பிட்டுச்சு.. " ஏண்டா... நீ அந்த தேவியை காதலிக்கிறயாக்கும்" ... நம்ம ஆளு..." ஆமாம் பாட்டி " .. " அவ ஒன்னும் பார்க்கிறதுக்கு அவ்வளவு நல்ல இல்லையேப்பா.. போயும், போயும் இவ தானா கிடைச்சா..?
அந்த மாதிரி , அவங்க அவங்க பார்வைக்கு - அழகு வித்தியாசப்படும்.. அழகு , நிரந்தரமும் இல்லை.பொண்ணுக்கு அழகு மட்டுமே முக்கியமும் இல்லை.... அதையும், மனசிலே வைச்சுக்கோங்க... மதர் தெரசாவை விடவா , இந்த உலகத்திலே ஒரு பெண் இருந்துவிட முடியும்..? சரி, விஷயத்துக்கு வருவோம்... இதோ , கிட்ட நெருங்கிடுச்சு... அட்சய திரிதியை.. இந்த நாள்லே , தங்கம் வாங்க கூட்டம் அலைமோதும் . ஒரு வேளை. நீங்க தங்கம் வாங்க முடியலையா.. இப்போ இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைங்க.. கார்த்திகை மாசம் வரும் திரிதியை பேரு.. ரம்பா திரிதியை.. அதைப் பத்தி கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள் இப்போ நீங்க பார்க்கப் போறீங்க...
எல்லாருக்கும் புதிய பொருட்கள் வாங்குகிற நாளாகவும், தானம் கொடுக்கும் நாளாகவும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் த்ரிதியை நாளாகிய அட்சய த்ரிதியைதான் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையாகப் பொன் வாங்கும் நாளும், பெண்களுக்கு அழகு கூடும் நாளும் ஒன்று நமது பண்டிகைகள் பட்டியலில் வருவது ஒரு சில பிரிவினருக்கே தெரிந்திருக்கிறது.. அதுதான் ரம்பா த்ரிதியை என்னும் பொன் வாங்கும் நாள். இதை நம் தமிழ் மண்ணில் தங்கத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டியது அவசியம்.. பொங்கல் விழாவுக்கு சூரியனையும், தீபாவளிக்கு நரகாசுர வதத்தையும் மூலமாக வைத்துள்ளதைப் போல ரம்பா த்ரிதியையின் சிறப்புக்கும் ஒரு மூலக்கதை உண்டு.. ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திர சபை கூடியிருந்தது. தேவர் தலைவன் இந்திரன் அரியணையை அலங்கரித்திருக்க, தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆடிக்கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டு, தங்கள் ஆட்டமே சிறந்ததென்று பாராட்டப்படுமென்று கர்வத்துடன் ஆடிக்கொண்டிருந்தனர். ராகம், தாளம், பல்லவி, சரணங்களுக்கேற்ப தங்கள் அபிநயங்களைச் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரம்பையின் தலையிலிருந்த நெற்றிச்சுட்டியும் பிறைப் பொட்டும் கழன்று கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்டு ஊர்வசியும் மேனகையும் கலகலவென்று சிரித்துவிட்டு, "பிறகு ஆட்டத்தைத் தொடர்வோம்' என்று சென்றுவிட்டனர். இதனால் அவமானப் பட்ட ரம்பை இந்திரனை ஒரு பார்வை பார்த்தாள். கண்கள் அவமானத்தால் கலங்கியது. மறுநாள் இந்திரனைத் தனியே சந்தித்த ரம்பை, ""தேவர் தலைவா! எனக்கு ஏன் இந்த அவமானம்? அழகில் சிறந்தவள் ரம்பைதான் என்ற பெயர் பெற்ற நான், உன் அவையில் சிரம் தாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது பெயரும் அழகின் சிறப்பும் நிலைபெற ஒரு வழியைத் தாங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று தலைவணங்கி நின்றாள்.. ""தேவருலகின் முதல் அழகியே! உனது வேண்டுகோள் சரிதான். உங்கள் மூவரின் தேவையற்ற போட்டியில் வந்த வினைதான் இது. மூவருமே அழகில் சிறந்தவர்கள்தான். ஆடவருள் போட்டி வந்தால் அரசுகூட அதிருமென்பர் சான்றோர். பூவையருள் போட்டி வந்துவிட்டால் புவியும் அசைந் தாடுமாம்.. இந்திர சபை என்ன உங்களின் கலை பயிலும் கூடமா? அனந்தசேனன் என்ற தேவன் உங்களது தேவையற்ற போட்டி பற்றிக் கூறும்போது, கலைவாணியாக வீற்றுள்ள சக்தி தேவிதான் உனது சிரசிலிருந்த நெற்றியணியைக் கழற்றிவிட்டாள் என்றான்.. தாள விருத்தத்தை அபிநயிக்கும்போது மூன்று கட்டை பதங்களையும் தாண்டி ஐந்தாம் பதத்துக்குச் சென்று ஆடிவிட்டாய்! நல்ல வேளை, உனது ஆடைகளும் பொன்மணிகளும் சிதறாது போனதே என்று நினைத்துக் கொள்!'' என்றான் இந்திரன்.. ""தேவேந்திரா! ஆட்டத்தின் விதிப்படி முப்பதங்களைத் தாண்டவில்லை என்பதே என்னுடைய பணிவான பதில். இந்த சம்பவத்திற்குப் பிராயச்சித்தம் கூறுங்கள்'' என்றாள் ரம்பை. ""ஐம்பதங்களைத் தாண்டிவிட்டாய் என்பதைக் கலையரசி வாணியை அழைத்துச் சொல்ல வைக்கட்டுமா? இல்லை, எம் உலக நாட்டிய தாரகை ஸ்வர்ணமுகியை விட்டுச் சொல்ல வைக்கட்டுமா?'' என்று கோபத்துடன் கேட்டான் இந்திரன்.. ""தேவேந்திரா! இன்னும் என் மனதைப் புண்படுத்தும் படி செய்ய வேண்டாம். இதற்கான வழியை மட்டும் கூறுங்கள்'' என்று மன்றாடினாள் ரம்பை.. ![]() "பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். தேவலோக அழகியான உனக்கு சரியான ஒரு வழியைக் கூறுகிறேன். பூவுலகில் அன்னை பார்வதிதேவி கௌரியாக அவதாரம் எடுத்து ஓர் மகிழ மரத்தின் கீழ் தவம் செய்து கொண்டிருக்கிறாள். அழகன் முருகனை மடியில் வைத்தபடி அந்த அன்னை அனைவருக்கும் அருள் செய்கிறாள். கார்த்திகேயனை மடியில் வைத்துக்கொண்டிருப் பதால் கார்த்தியாயினி என்ற பெயர் அவளுக்கு வந்தது.. உனது அழகும் ஆபரணங் களும் பொன்னும் பொருளும் சேர்ந்திட அந்த தேவியை விரத மிருந்து பூஜை செய். அவளே உனக்குக் காட்சி தந்து பதிலும் சொல்வாள்'' என்றான் இந்திரன்.. கௌரியை பூஜித்த ரம்பை. இந்திரனுடைய உபதேசத்தைக் கேட்ட ரம்பை, கார்த்திகை மாதத்தில் வரும் த்ரிதியைக்கு முதல் நாள், "திந்திரிணீ கௌரி விரதம்' இருந்து முறைப்படி பூஜை செய்தாள். "திந்திரிணீ' என்றால் மஞ்சள் நிற பதார்த்தங்களைக் குறிக்கும். அதாவது மங்களகரமான பொருட்களைக் குறிக்கும். பூஜையை முடித்து வணங்கிய ரம்பைக்கு, குழந்தை முருகனை மடியில் இருத்தியபடி கௌரி தேவி கார்த்தி யாயினியாகக் காட்சி தந்தாள். தங்கநிற மேனியளாக ஜொலித்த அன்னை ரம்பையைப் பார்த்து, ""உனது பக்தி மிகுந்த பூஜையில் மகிழ்ந்தோம். உனது அழகும் அணிகலன்களும் சேர்ந்திடவே இந்த பூஜையைச் செய்துள்ளாய். இன்று முதல் உனக்கு அழகும் பொன்னும் மிகும். "தேவருலக அழகி ரம்பையே'என்று அனைவரும் பாராட்டுவர். இன்று முதல் உன் பெயராலேயே ரம்பா த்ரிதியை என்று இந்த நாள் விளங் கட்டும்'' என்றாள். மேலும், ""இந்நாளில் வழிபடுவோர் அனைவருக்கும் பொன், பொருள் சேர்ந்து அழகும் முக வசீகரமும் ஏற்படும்'' என்றும் அருள் செய்தாள்.. சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண் களுக்கும் ஒரு வரப்பிரசாத நாளாக விளங்குவது ரம்பா த்ரிதியை நன்னாள். முதல் நாள் கௌரி தேவியைக் குறித்து விரதமிருந்து, மறுநாள் கலசத்தில் அம்பிகையை ஆவாகன பூஜை செய்து எழுந்தருளச் செய்தல் வேண்டும். வரலக்ஷ்மி விரதப் பூஜை செய்முறை போலவே கலசம் ஒன்றை வைத்து, வாசனைத் திரவியங்களோடு நீர் ஊற்ற வேண்டும். மூன்றுவகைப் பழங்க ளோடும், மஞ்சள் நிற அன்னத்தை (எலுமிச்சை சாதம், புளியோதரை) நிவேதனமாக வைத்துப் பூஜை தொடங் கலாம். மஞ்சள் கயிற்றில் மஞ்சள் நிற மலரைக் கட்டி வலக்கையில் ரட்சை யாகக் கட்டிக்கொண்டு, கலசத்திற்கு மேல் பொன் நகைகளைக் கவனமாகச் சாற்றி, முடிந்தால் தேவி முகம் செய்து அழகுபடுத்தலாம்.. தன்னை ரம்பையாக எண்ணிக் கொண்டு மனதுக்குள், "ஸ்வாகதம் ஸ்வாகதம் ரம்பாதேவி' என்று ஆவாகனம் செய்து, தலையில் மலர் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் விநாயகர் பூஜை தொடங்கி, தேவி ஆவாகனமும் செய்தபின் கௌரி அர்ச்சனையைச் செய்ய வேண்டும். |
![பெண்கள் அழகாக இருக்க பூஜாயாம் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகாக இருக்க!- 12 வழிகள்!
» இளமையாக... அழகாக... ஆரோக்கியமாக இருக்க
» குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» இளமையாக... அழகாக... ஆரோக்கியமாக இருக்க
» குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|