Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
+4
பூஜிதா
மகா பிரபு
இரா.எட்வின்
சிவா
8 posters
Page 1 of 1
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
புது டெல்லி,ஏப்.22 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை வரும் திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரது பெயர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே மிகப் பெரிய ஊழலாக வர்ணிக்கப்படுவது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். காரணம், இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் தெரிவித்தார். ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, பின்னர் அதை ஒப்புக் கொண்டார்.
இதனிடையே அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. மேலும் முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பாக அவரிடம் சி.பி.ஐ. பல கட்ட விசாரணைகளை நடத்தியது. அந்த விசாரணைக்கு பிறகே ஆ. ராசா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, மற்றொரு உதவியாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவன முக்கிய நிர்வாகி ஷாகித் பல்வா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத் துறையால் நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த 2 ம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் ஆ. ராசா, சந்தோலியா, சித்தார்த்த பெகுரா, பல்வா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் 2 வது குற்றப்பத்திரிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரமும் அம்பலமானது. அதைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் சி.பி.ஐ. யால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இப்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை வரும் திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி, ஸ்வான் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பல்வாவின் சகோதரர் ஆகியோரது பெயர்கள் இடம்பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, சோனியா மற்றும் சிலரது பெயர்களும் கூட சேர்க்கப்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறி வருகிறார். இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இதனிடையே அடுத்த மாத வாக்கில் இந்த ஊழல் தொடர்பாக 3 வது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று முன்தினம் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 5 நிறுவனங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது முன் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இவர்களும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திங்களன்று தாக்கலாகும் 2 வது குற்றப்பத்திரிக்கையில் சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தினபூமி
உலகிலேயே மிகப் பெரிய ஊழலாக வர்ணிக்கப்படுவது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். காரணம், இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் தெரிவித்தார். ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, பின்னர் அதை ஒப்புக் கொண்டார்.
இதனிடையே அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. மேலும் முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பாக அவரிடம் சி.பி.ஐ. பல கட்ட விசாரணைகளை நடத்தியது. அந்த விசாரணைக்கு பிறகே ஆ. ராசா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, மற்றொரு உதவியாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவன முக்கிய நிர்வாகி ஷாகித் பல்வா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத் துறையால் நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த 2 ம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் ஆ. ராசா, சந்தோலியா, சித்தார்த்த பெகுரா, பல்வா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் 2 வது குற்றப்பத்திரிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரமும் அம்பலமானது. அதைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் சி.பி.ஐ. யால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இப்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை வரும் திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி, ஸ்வான் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பல்வாவின் சகோதரர் ஆகியோரது பெயர்கள் இடம்பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, சோனியா மற்றும் சிலரது பெயர்களும் கூட சேர்க்கப்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறி வருகிறார். இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இதனிடையே அடுத்த மாத வாக்கில் இந்த ஊழல் தொடர்பாக 3 வது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று முன்தினம் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 5 நிறுவனங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது முன் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இவர்களும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திங்களன்று தாக்கலாகும் 2 வது குற்றப்பத்திரிக்கையில் சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தினபூமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
ஒரே ஒரு கேள்விதான் மிச்சம். ராசாத்தி அம்மாளும் கருணாநிதியும் எப்படி விடுபடலாம்?
Last edited by இரா.எட்வின் on Fri Apr 22, 2011 12:06 pm; edited 2 times in total
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
சிவா wrote: மனைவி தயாளுஅம்மாள்,
இனி நாம் கூறலாம் அண்ணா நாம் பணத்தை ஊழல் செய்த அவரை அம்மாள் என்று நாம் கூறக்கூடாது......
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
பல நாள் திருடர்கள் ஒரு நாள் அகப்படுவார்கள் !!!!
robinhood- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
robinhood wrote:பல நாள் திருடர்கள் ஒரு நாள் அகப்படுவார்கள் !!!!
அங்கு கூட திருட்டு திருடனது தொழில்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
இன்னும் வலிமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெரிய பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கும் ஓட்டைகளை அடைத்து தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
திருடனாயி பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
விஞ்ஞான ரீதியில் தவறுகளை செய்பவர்கள்.
- சர்க்காரியா கமிஷன்
- சர்க்காரியா கமிஷன்
paarthaa077- பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
Re: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?
கலை wrote:இன்னும் வலிமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெரிய பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கும் ஓட்டைகளை அடைத்து தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்..!
ஆமாம் கலை. இருப்பதை ஒழுங்காகப் பயன் படுத்தினாலே யாரும் தப்பிக்க முடியாது என்றேப் படுகிறது
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Similar topics
» 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|