Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
+2
balakarthik
மஞ்சுபாஷிணி
6 posters
Page 1 of 1
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
நலம், நலமறிய ஆவல்.
மாடியில் இருந்து இறங்கி வரும்போது மகளா, அம்மாவா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் வந்ததும்தான் தெரிகிறது... அதே லக்ஷ்மிகரமான முகம்; அதே ஐஸ்வர்யம் பொங்குகிற சிரிப்பு!
தேகத்தைக் காக்கும் வித்தைகளை இங்கே விவரிக்கிறார், நடிகை லட்சுமி.
''தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்னு சொல்லுவாங்களே... அதுமாதிரி, நம்ம உடம்பு பட்டுப்போல இருக்கணும்னா, பாரம்பரியத்தை விடவே கூடாது.
சமைக்கிறது, சாப்பிடறதோட வேலை முடிஞ்சுடறது இல்ல. சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்றதுங்கறது மிகப்பெரிய கலை. குத்துக்காலிட்டு உக்கார்ந்துண்டு, லேசா தண்ணியைத் தெளிச்சு, தரையில கைவைச்சு, அப்படியே சாப்பிட்ட இடத்துல இருக்கிற பருக்கைகளை லாகவமா சேர்த்துக்கிட்டே வந்து, மொத்தமா எடுத்து முடிச்சதும், திரும்பவும் கொஞ்சம் தண்ணிவிட்டுப் பளிச்சுனு துடைக்கணும். அப்படி நேர்த்தியா துடைக்கிறதை வைச்சே, புகுந்த வீட்ல அந்தப் பொண்ணு எப்படி இருப்பா; மாமியார், நாத்தனார்கிட்டே நல்லபேர் வாங்குவாளாங்கறதையெல்லாம் பெத்தவ ஆரூடமாச் சொல்லிடுவா! அதே நேரம், அப்படிக் குனிஞ்சு, கையை ஊனி, வளைஞ்சு துடைக்கறது, அந்தக் கால எக்ஸர்சைஸ்! இதை இன்னி வரைக்கும் கடைப்பிடிச்சுக்கிட்டு வரேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் லட்சுமி.
''அடுத்தாப்ல உணவு. 'ஒரே சமயத்துல அதிகமா சாப்பிட்டா, கலோரி அதிகமாகி, உடம்புக்கு பிரச்னையைக் கொடுக்கும். அதனால, மூணு வேளைங்கறதுக்குப் பதிலா, ஆறு வேளையாப் பிரிச்சுக்கிட்டுச் சாப்பிடுங்க’ன்னு இன்னிக்கு நிறையப் பேர் சொல்றாங்க. ஒருவகையில பார்த்தா, இதுவும் அந்தக் காலத்து வழக்கம்தான்! காலைல எட்டு மணிக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி சாம்பார், ரசம், மோர்னு சாப்பாடு; மத்தியானம் இட்லியோ, தோசையோ டப்பால அடைச்சுக் கொடுப்பாங்க. அப்புறம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு உணவு; விளையாடிட்டு வந்ததும், கைகால் அலம்பிட்டு ஸ்லோகம், ஸ்கூல் பாடம்; முடிஞ்சதும் இரவு உணவுன்னு அழகாத் திட்டமிட்டிருந்தாங்க, வாழ்க்கையை!
இன்னிக்கு, ஏழாவது படிக்கிற என் மகள் சம்யுக்தாவை ஸ்கூலுக்கு அனுப்பறபோது, இதையெல்லாம்தான் மனசுல வைச்சுக்கிட்டு ஒவ்வொண்ணாப் பண்றேன். அதேபோல, காலை உணவு எட்டு மணிக்குள்ள கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும், எனக்கு! குறைச்சலா, அதே நேரம் அதிக சத்துக்கள் இருக்கிற உணவா சாப்பிடுறதுதான் என் உணவுக் கொள்கை. இதை சினிமா, ஷூட்டிங்னு பரபரப்பா இருந்தபோதும் கடைப்பிடிச்சேன்'' என்கிறார் லட்சுமி.
''அப்புறம் இன்னொரு விஷயம்... தினமும் யோகா பண்றேன். சாயந்திரமானா, கண்டிப்பா எங்க ஏரியாவுல நான் வாக்கிங் போறதைப் பார்க்கலாம். காலைல குளிச்சு முடிச்சதும், பூஜையறைல அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பூஜை பண்ணுவேன்; பிராணா யாமம் செய்வேன்; மனசுல இருக்கிற மொத்தப் பிரச்னை களையும், 'இந்தாப்பா... உங்கிட்டக் கொடுத்துட்டேன்; நீதான் பாத்துக்கணும்’னு பாபாகிட்ட மானசீகமாப் பேசுவேன். இது எல்லாமே, உடம்பையும் மனசையும் மலர்ச்சிப்படுத்தற அற்புதமான விஷயங்கள்!
ஒருமுறை, ஷூட்டிங் இடைவெளியில், கொஞ்சம் ரிலாக்ஸ்டா, முதுகை நல்லாச் சாய்ச்சு உட்கார்ந்திருந்தேன். இதைப் பாத்துட்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் எங்கிட்ட வந்து, 'நல்லா நிமிர்ந்து, முதுகை நேராக்கி உட்காரப் பழகு. சுவாசம் சீராகும்; அப்படிச் சீரான சுவாசம் இருக்கும் போது, சிந்திக்கிறது எதுவுமே தப்பாது; ஒழுங்காச் செயல் படுத்த முடியும். அதுமட்டுமில்லாம, தப்பா எதையுமே சிந்திக்கத் தோணாது’ன்னு அட்வைஸ் பண்ணினார். இதோ... இப்பக்கூட பாருங்க, நிமிர்ந்துதான் உட்கார்ந் திருக்கேன்'' என்று சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார், லட்சுமி.
''நம்ம வாழ்க்கைல எத்தனையோ சம்பவங்கள்; எத்தனையோ மனிதர்கள்; வெற்றிகள், தோல்விகள், சந்தோஷங்கள், காயங்கள்... நம்மளைக் கைதூக்கிவிட்ட வங்களுக்கு நன்றியைச் சொல்லியிருப்போமா? இந்த உலகத்துல நம்மைப் படைச்ச கடவுளுக்கும், நம்மை அடையாளப்படுத்திய நல்ல மனிதர்களுக்கும், தினமும் இரவுப் படுக்கைக்குப் போகும்போது மனசார நன்றி சொல்லிட்டுத் தூங்குவோமே!
அதுல நமக்கு கிடைக்கிற ஆத்மதிருப்தி, நம்ம உடம் பையும் மனசையும் லேசாக்கிடும்; அழகாக்கிடும். முக்கியமா, நம்மளை இத்தனை நெடுங்காலத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கிற நம்ம உடம்புக்கும் அப்படியே தினமும் தேங்க்ஸ் சொல்லுவோம்.
படுத்த உடனே தூங்கறவங்க அதிர்ஷ்டசாலிங்கன்னு சொல்லுவாங்க. அவங்க ஆரோக்கியசாலிகளும் கூடத்தான்! அந்த வகையில நான் அதிர்ஷ்டம் ப்ளஸ் ஆரோக்கியசாலி!'' என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்தபடி சொல்கிறார் லட்சுமி; ஆரோக்கியலட்சுமி
நன்றி விகடன்
நலம், நலமறிய ஆவல்.
மாடியில் இருந்து இறங்கி வரும்போது மகளா, அம்மாவா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் வந்ததும்தான் தெரிகிறது... அதே லக்ஷ்மிகரமான முகம்; அதே ஐஸ்வர்யம் பொங்குகிற சிரிப்பு!
தேகத்தைக் காக்கும் வித்தைகளை இங்கே விவரிக்கிறார், நடிகை லட்சுமி.
''தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்னு சொல்லுவாங்களே... அதுமாதிரி, நம்ம உடம்பு பட்டுப்போல இருக்கணும்னா, பாரம்பரியத்தை விடவே கூடாது.
சமைக்கிறது, சாப்பிடறதோட வேலை முடிஞ்சுடறது இல்ல. சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்றதுங்கறது மிகப்பெரிய கலை. குத்துக்காலிட்டு உக்கார்ந்துண்டு, லேசா தண்ணியைத் தெளிச்சு, தரையில கைவைச்சு, அப்படியே சாப்பிட்ட இடத்துல இருக்கிற பருக்கைகளை லாகவமா சேர்த்துக்கிட்டே வந்து, மொத்தமா எடுத்து முடிச்சதும், திரும்பவும் கொஞ்சம் தண்ணிவிட்டுப் பளிச்சுனு துடைக்கணும். அப்படி நேர்த்தியா துடைக்கிறதை வைச்சே, புகுந்த வீட்ல அந்தப் பொண்ணு எப்படி இருப்பா; மாமியார், நாத்தனார்கிட்டே நல்லபேர் வாங்குவாளாங்கறதையெல்லாம் பெத்தவ ஆரூடமாச் சொல்லிடுவா! அதே நேரம், அப்படிக் குனிஞ்சு, கையை ஊனி, வளைஞ்சு துடைக்கறது, அந்தக் கால எக்ஸர்சைஸ்! இதை இன்னி வரைக்கும் கடைப்பிடிச்சுக்கிட்டு வரேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் லட்சுமி.
''அடுத்தாப்ல உணவு. 'ஒரே சமயத்துல அதிகமா சாப்பிட்டா, கலோரி அதிகமாகி, உடம்புக்கு பிரச்னையைக் கொடுக்கும். அதனால, மூணு வேளைங்கறதுக்குப் பதிலா, ஆறு வேளையாப் பிரிச்சுக்கிட்டுச் சாப்பிடுங்க’ன்னு இன்னிக்கு நிறையப் பேர் சொல்றாங்க. ஒருவகையில பார்த்தா, இதுவும் அந்தக் காலத்து வழக்கம்தான்! காலைல எட்டு மணிக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி சாம்பார், ரசம், மோர்னு சாப்பாடு; மத்தியானம் இட்லியோ, தோசையோ டப்பால அடைச்சுக் கொடுப்பாங்க. அப்புறம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு உணவு; விளையாடிட்டு வந்ததும், கைகால் அலம்பிட்டு ஸ்லோகம், ஸ்கூல் பாடம்; முடிஞ்சதும் இரவு உணவுன்னு அழகாத் திட்டமிட்டிருந்தாங்க, வாழ்க்கையை!
இன்னிக்கு, ஏழாவது படிக்கிற என் மகள் சம்யுக்தாவை ஸ்கூலுக்கு அனுப்பறபோது, இதையெல்லாம்தான் மனசுல வைச்சுக்கிட்டு ஒவ்வொண்ணாப் பண்றேன். அதேபோல, காலை உணவு எட்டு மணிக்குள்ள கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும், எனக்கு! குறைச்சலா, அதே நேரம் அதிக சத்துக்கள் இருக்கிற உணவா சாப்பிடுறதுதான் என் உணவுக் கொள்கை. இதை சினிமா, ஷூட்டிங்னு பரபரப்பா இருந்தபோதும் கடைப்பிடிச்சேன்'' என்கிறார் லட்சுமி.
''அப்புறம் இன்னொரு விஷயம்... தினமும் யோகா பண்றேன். சாயந்திரமானா, கண்டிப்பா எங்க ஏரியாவுல நான் வாக்கிங் போறதைப் பார்க்கலாம். காலைல குளிச்சு முடிச்சதும், பூஜையறைல அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பூஜை பண்ணுவேன்; பிராணா யாமம் செய்வேன்; மனசுல இருக்கிற மொத்தப் பிரச்னை களையும், 'இந்தாப்பா... உங்கிட்டக் கொடுத்துட்டேன்; நீதான் பாத்துக்கணும்’னு பாபாகிட்ட மானசீகமாப் பேசுவேன். இது எல்லாமே, உடம்பையும் மனசையும் மலர்ச்சிப்படுத்தற அற்புதமான விஷயங்கள்!
ஒருமுறை, ஷூட்டிங் இடைவெளியில், கொஞ்சம் ரிலாக்ஸ்டா, முதுகை நல்லாச் சாய்ச்சு உட்கார்ந்திருந்தேன். இதைப் பாத்துட்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் எங்கிட்ட வந்து, 'நல்லா நிமிர்ந்து, முதுகை நேராக்கி உட்காரப் பழகு. சுவாசம் சீராகும்; அப்படிச் சீரான சுவாசம் இருக்கும் போது, சிந்திக்கிறது எதுவுமே தப்பாது; ஒழுங்காச் செயல் படுத்த முடியும். அதுமட்டுமில்லாம, தப்பா எதையுமே சிந்திக்கத் தோணாது’ன்னு அட்வைஸ் பண்ணினார். இதோ... இப்பக்கூட பாருங்க, நிமிர்ந்துதான் உட்கார்ந் திருக்கேன்'' என்று சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார், லட்சுமி.
''நம்ம வாழ்க்கைல எத்தனையோ சம்பவங்கள்; எத்தனையோ மனிதர்கள்; வெற்றிகள், தோல்விகள், சந்தோஷங்கள், காயங்கள்... நம்மளைக் கைதூக்கிவிட்ட வங்களுக்கு நன்றியைச் சொல்லியிருப்போமா? இந்த உலகத்துல நம்மைப் படைச்ச கடவுளுக்கும், நம்மை அடையாளப்படுத்திய நல்ல மனிதர்களுக்கும், தினமும் இரவுப் படுக்கைக்குப் போகும்போது மனசார நன்றி சொல்லிட்டுத் தூங்குவோமே!
அதுல நமக்கு கிடைக்கிற ஆத்மதிருப்தி, நம்ம உடம் பையும் மனசையும் லேசாக்கிடும்; அழகாக்கிடும். முக்கியமா, நம்மளை இத்தனை நெடுங்காலத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கிற நம்ம உடம்புக்கும் அப்படியே தினமும் தேங்க்ஸ் சொல்லுவோம்.
படுத்த உடனே தூங்கறவங்க அதிர்ஷ்டசாலிங்கன்னு சொல்லுவாங்க. அவங்க ஆரோக்கியசாலிகளும் கூடத்தான்! அந்த வகையில நான் அதிர்ஷ்டம் ப்ளஸ் ஆரோக்கியசாலி!'' என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்தபடி சொல்கிறார் லட்சுமி; ஆரோக்கியலட்சுமி
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
இத இவுங்க ஊருக்கு சொல்லுறது இருக்கட்டும் மொத்தல இவுங்க பொண்ணுக்கு சொல்லசொல்லுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
எந்த லட்சுமி...?
பாரம்பரிய முறைப்படி 3 கணவர்களை மாற்றினாங்களே.. அவங்களா..?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
ARR wrote:எந்த லட்சுமி..?''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
பாரம்பரிய முறைப்படி 3 கணவர்களை மாற்றினாங்களே.. அவங்களா..?
ஏன் கலைஞர் மூணு பொண்டாட்டி கட்டும் போது ஒரு பெண் மூணு கல்யாணம் பண்ண கூடாதா? அது என்ன கலைஞருக்கு ஒரு ஞாயம் மற்றவருக்கு ஒரு ஞாயமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
பிச்ச wrote:ARR wrote:எந்த லட்சுமி..?''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
பாரம்பரிய முறைப்படி 3 கணவர்களை மாற்றினாங்களே.. அவங்களா..?
ஏன் கலைஞர் மூணு பொண்டாட்டி கட்டும் போது ஒரு பெண் மூணு கல்யாணம் பண்ண கூடாதா? அது என்ன கலைஞருக்கு ஒரு ஞாயம் மற்றவருக்கு ஒரு ஞாயமா?
அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
நல்லதை யார் சொன்னாலும் அதில் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக்க தோணலையே யாருக்குமே
நோ கமெண்ட்ஸ் நோ கம்ப்ளெயிண்ட்ஸ்
அன்பு நன்றிகள் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்....
ஒருத்தர் தன் பர்சனல் வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் அது அவங்க உரிமை..... அதை விமர்சிக்க கண்டிப்பா நமக்கு ரைட்ஸ் இல்லை தானே?
நல்லதை சொல்லி இருக்காங்க... எடுத்துக்க இஷ்டம் இருந்தால் எடுத்துக்கலாம் இல்லைன்னா விட்ரலாம்... ஆனால் கேவலப்படுத்தவேண்டாமே வேண்டாத சொற்களால் ப்ளீஸ்
நோ கமெண்ட்ஸ் நோ கம்ப்ளெயிண்ட்ஸ்
அன்பு நன்றிகள் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்....
ஒருத்தர் தன் பர்சனல் வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் அது அவங்க உரிமை..... அதை விமர்சிக்க கண்டிப்பா நமக்கு ரைட்ஸ் இல்லை தானே?
நல்லதை சொல்லி இருக்காங்க... எடுத்துக்க இஷ்டம் இருந்தால் எடுத்துக்கலாம் இல்லைன்னா விட்ரலாம்... ஆனால் கேவலப்படுத்தவேண்டாமே வேண்டாத சொற்களால் ப்ளீஸ்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடிகை லட்சுமி நன்றி!
» மீண்டும் தயாரிப்பாளரான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
» பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?
» இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
» சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் மீண்டும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!
» மீண்டும் தயாரிப்பாளரான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
» பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?
» இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
» சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் மீண்டும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|