புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_m10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10 
37 Posts - 82%
heezulia
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_m10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_m10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_m10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_m10தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 21 Apr 2011 - 13:51

தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம்




தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் P56a
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் P56


ளமையான நுளம்பாடி (மீனவர்கள் வாழும் பகுதி) அது. நுளையர் தலைவர், சிறந்த சிவபக்தர். படகுகள் பல இயக்கி, நுளையர்கள் பல திசைகளுக்கும் செல்வார்கள்; மீன் கொண்டு வருவார்கள்; மீன் தொழிலின் செழிப்பால், நுளம்பாடியே செழித்தது.
நுளையர் தலைவருக்கு ஒரு வழக்கம் உண்டு. வலை வீசிப் பிடித்து வரும் மீன்களிலேயே எது தலை மீனோ, (அளவிலும் செழிப்பிலும் பெரியதான மீன்) அதனை 'நட்டம் ஆடிய நம்பருக்கு’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் கடலில் விட்டுவிடுவார். அந்தத் தலை மீன், நடராஜரான சிவபெருமானுக்கு என்பது கணக்கு.

வாகுசேர் வலைநாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர் தம் கழற்கு எனவிடும் இயல்பால்
ஆகும் நாள்களில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையின் பட விட்டு வந்தார்

சில நாட்களில், வலையில் ஒரேயரு மீன் மட்டுமே கிட்டும். அப்போதும், அதனை இறைவருக்கு என்று விட்டு விடுவார். இவ்வாறு தொடர்ந்து நடைபெற, வருமானம் குறைய, நுளம்பாடியின் செல்வமும் செழிப்பும் குன்றின. நுளையர் தலைவரும் அவர்தம் மனைவியும் பிள்ளைகளும் உணவின்றிப் பல நாள் கழிக்க நேர்ந்தது. இருப்பினும், இறைவர்பால் அவர்கொண்ட அன்பு கிஞ்சித்தும் தளரவில்லை. இத்தகு நிலையில், ஒரு நாள் வலையில் கிட்டியது அற்புத மீன் ஒன்று.

ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்
தூ நிறப் பசுங்கனக நல்சுடர் நவமணியால்
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலை ஆம்
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்
உடலெல்லாம் ஆடகப் பொன்னால் ஆக்கப்பட்டிருக்க, நவரத்தினங்கள் பதித்தாற்போல் பொலிவு தோன்ற, அற்புத மீனாக அது காட்சியளித்தது. பல நாட்களாகப் பரிதவித்துக் கொண்டிருந்த நுளையரெல்லாம் வந்து, 'மீன் ஒன்று கிடைத்தது’ என்று தலைவரிடம் தெரிவித்தனர். அவரும் வந்து பார்த்தார்.

தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் P57

ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்
சென்று பொன்கழல் சேர்க எனத் திரையடும் திரிந்தார்
'அடடா, இந்த அழகு மீன் என்னை ஆளுடைய நாயகராம் இறைவனார்க்கு ஆகும்!’ என்று, கிடைத்தற்கரிய அந்த ஒற்றை மீனையும் கடலில் விட்டார்.

துன்பத்தில் வாட நேர்ந்தாலும் கொண்ட கொள்கையை விடாது, இறைத்தொண்டையும் விடாது செய்த அந்த நுளையர் தலைவர்- அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார். அதிபத்தர் அவதரித்து வாழ்ந்த திருத்தலம்- திருநாகைக் காரோணம்!

மன்னி நீடிய செங்கதிரோன் வழி மரபின்
தொன்மை ஆம் முதல் சோழர்தம் திருக்குலத்து உரிமைப்
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகப்பட்டினத் திருநகரம்
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் P56bஅங்கம், அருணம், கலிங்கம், கௌசிகம், காம்போஜம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திராவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம் ஆகிய 18 நீடுபுகழ் நிலங்களின் வளமையையும் ஒன்றாகப் பிரதிபலிக்கும் சிறப்புடன் இந்தத் திருநகரம் திகழ்ந்ததாம். நாகப்பட்டினம் என்று இப்போது நாம் அழைக்கும் இந்தத் தலத்தின் இலக்கிய- ஆன்மிகப் பெயர், நாகைக் காரோணம். நாகை நகர்நாடிப் புறப்படுவோமா?
கடற்கரை நகரமான நாகப்பட்டினம், சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த பதி. வெளிநாட்டவரோடு சோழ மன்னர்கள் கடல் வணிகம் செய்த துறைமுகப் பட்டினம்.
நாகர் இன மக்கள் நிரம்ப வாழ்ந்ததால், இப்பெயர் பெற்றது என்றும், நாகராஜன் வழிபட்டதால் நாக பட்டினம் ஆனது என்றும் இருவிதமாகக் கூறப்படுகிறது.
நகரின் நடுநாயகமாக விளங்குகிறது திருக்கோயில். ஊர் பெயர் நாகப்பட்டினம்; கோயில் பெயர் காரோணம். காரோணத்தார் கோயில் அல்லது சிவன் கோயில் என்று விசாரிப்பதைவிட, நீலாயதாக்ஷி திருக்கோயில் என்று கேட்பது நலம். காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி எனும் வரிசையில், நாகை நீலாயதாக்ஷியும் வெகு விசேஷம்! நவீனத்தின் செல்வாக்கை அம்மன் பெயரிலும் காணமுடிகிறது. நீலாயதாக்ஷி என்னும் திரு நாமம் 'நீலா’ என்று சுருக்கமுற்று, நீலா கீழவீதி, நீலா சந்நிதி என்றே பெயர்கள் வழங்கப்படுகின்றன. வழி கேட்கும்போது, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் வெகு உரிமையாக 'ஓ, நீலா கோயிலா?’ என்று கேட்டு, வழி சொன்னார். எந்தப் பெயர் சொன்னாலும், தாய்க்கு அது சம்மதம்தானே!

நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவம்சூடி
மறையலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில்கொண்ட
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பமாமே
- என்று அப்பர் பெருமான் பணிந்து போற்றிய காரோணத்தார் கோயிலின் கிழக்கு வாசலில் நிற்கிறோம். முகப்பு வாயில் மட்டுமே இருக்கிறது; கோபுரம் இல்லை. கோயிலைப் பார்த்து நிற்க, நமக்கு இடது பக்கத்தில் சற்றே தள்ளி இன்னொரு வாயிலும் உள்ளது. 'நீலா சந்நிதி’ என்று எழுதி, அம்புக்குறியும் போட்டிருக்கிறது. ஆனால், அந்த வழியும், இப்போது நாம் நுழையும் வழியும் கோயிலின் விசாலமான உள்ளிடத்துக்கு தான் போய்ச் சேருகின்றன.
உள்ளே நுழைந்ததும், நாகாபரண விநாயகர் சந்நிதி. நாகராஜன் வணங்கிய தலமாதலால், நாகாபரண விநாயகர் விசேஷமானவர். அடுத்து பலிபீடம்; பெரிய நந்தியும் நந்தி மண்டபமும். சுதை நந்தி. வலப் பக்கத்தில் நிர்வாக அதிகாரியின் அறை; இடப் பக்கத்தில் கோயில் அலுவலகம்; அருகில், பக்கவாட்டு வாயில். அடுத்தாற்போல, புண்டரீக முனிவர் சந்நிதி. இந்தத் தலத்தின் சிறப்புப் பெருமை பெற்றவர் இவர்தாம். இவராலேயே, இங்கெழுந்தருளிய சுவாமிக்குக் 'காயாரோகணேஸ்வரர்’ என்று திருநாமம் ஏற்பட்டதாம்! அதென்ன வரலாறு?

தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் P58
புண்டரீகர் என்றொரு முனிவர் தவம் இயற்றினார். அவருடைய யாகத்தைத் தடுத்து, அதன் அவிர்பாகத்தை அக்னிதேவன் ஏற்க முடியாதவாறு அரக்கர்கள் இடையூறு செய்தனர். ஆனால், தமது பக்தியால், அரக்கர்களை திசை மாறச் செய்து யாகத்தை நிறைவேற்றினார் புண்டரீகர். பக்தியிலும் தர்மத்திலும் சிறந்த அவரை, மனித உடலோடு சேர்த்து ஏற்றுக்கொண்டார் சிவனார். காயத்தோடு ஆரோகணித்துக்கொண்டார் என்பதால், காய ஆரோகணேஸ்வரர்; அதுவே காலப்போக்கில் காரோணேஸ் வரர் ஆகிவிட்டது. காயாரோகணம் என்பது காரோணம் ஆனது. புண்டரீக முனிவரின் அன்பை எண்ணியபடியே, உள் வாயிலை அடைகிறோம். இதுவே ஐந்து நிலை கோபுரம் கொண்ட ராஜவாயில். கோபுரத்தை வணங்கியபடி நின்றால், நமக்கு வலப்பக்கத்தில் மற்றொரு வாயில். இதுவே அம்மன் சந்நிதிக்குச் செல்லும். அம்மன் சந்நிதி வடக்குப் பகுதியில் இருக்க, வெளியில் தெற்குப் பக்கத் துணை வாசலில் (நாம் பார்த்த அம்புக்குறி வாசல்) ஏன் நீலா சந்நிதி என்று அம்புக்குறி போட்டார்கள் என்று வியந்தபடியே உள்ளே நுழைகிறோம்.
நேர் எதிரே பெரிய மண்டபம்; சுவாமி சந்நிதி, அம்மன் சந்நிதி இரண்டுக்கும் சேர்ந்தாற்போல் முகப்பில், சற்றே நீண்ட முன்விரிவோடு உள்ளது. இதற்கு 'ராஜதானி மண்டபம்’ என்று பெயர். இறை வன் அருளால் பக்தர்களை ஆள, பக்தர்கள் தமது அன்பால் இறைவனை ஆள, சிவனாரின் அருளாட்சி நடை பெறும் இடமல்லவா..! இந்தத் தலத்துக்கே சிவராஜதானி என்றொரு பெயருண்டு. இந்த மண்டபத்தில், அழகான நெடிதுயர்ந்த கொடிமரம், பலிபீடம், நந்தி. இந்த மண்டபம் இருப் பதே வெளிப் பிராகாரமும் ஆகும். வலம் தொடங்குவோமா?
வலம் தொடங்குகிற இடத்தில், கிழக்குச் சுற்றிலேயே அதிபத்தர் சந்நிதி. தென் கிழக்கு மூலையில், முன்னர் யாக சாலை இருந்த இடமும் மண்டபமும். அடுத்தது ஆஞ்சநேயர் சந்நிதி. விசாலமான பிராகாரத்தில் நடந்து தென்மேற்கு மூலையை அடைந்தால், ஸ்ரீவல்லப கணபதி சந்நிதி. உடனுறை பத்ரகாளி. மேற்குச் சுற்றில் சந்நிதிகள் ஏதுமில்லை; கோயிலின் மேற்கு வாயில் மட்டும் உண்டு.
வடமேற்கு மூலையில், அகோர வீரபத்திரர். வடக்குச் சுற்றில் நடந்து, வடகிழக்குப் பகுதியில் ராஜதானி மண்ட பத்துக்குள் நுழைகிறோம். பிராகாரத்தின் வட கிழக்குப் பகுதியில், ராஜதானி மண்டபத்தின் அங்கமாகவே அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அம்மன் சந்நிதிக்கு அப்பால், வடகிழக்கு மூலையில் அழுகுணிச் சித்தர் சந்நிதி. அம்மன் சந்நிதியைச் சுற்றி, ஆங்காங்கே வாகனங்கள். அப்படியே சுற்றி வந்து, சுவாமி சந்நிதி முகப்பை அடை கிறோம். உள்ளே நுழைவதற்கு முன்னால், இந்த வாயிலில் உள்ள விநாயகரையும் சுப்ரமணியரையும் வழிபடுகிறோம். உள்புகும் வழியில், ஒருபுறம் விநாயகர்; மற்றொரு புறம் அதிகார நந்தி. தொடர்ந்து உள்புகுந்தால், உள் பிராகாரம். பிராகார வலத்தைத் தொடங்குகிறோம்.
தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் P59உமா சகிதமாகச் சிவனார், சூரியன் என்று தரிசித்துவிட்டு, தெற்குச் சுற்றில் நடந்தால் அறுபத்து மூவர்- மூலச் சிலா ரூபங்கள்; தொடர்ந்து, நால்வர் பெருமக்கள்.
அடுத்து அஸ்திரதேவர். பல்வேறு வகை யான ஆயுதங்களையும் இவர் மீது ஆரோகணித்து, அவற்றின் அதிபதியாக இவரை வணங்குவது முறை. தென்மேற்கு மூலையில் மாவடிப் பிள்ளையார். இவரே, இந்தத் தலத்தின் விநாயகர்.
நாகைக்காரோணத் தின் தலமரம் மா; ஆகவே, அதன் அடியில் எழுந்தருளிய விநாயகர் மாவடிப் பிள்ளையார். இப்போது இந்த இடத்தில் தல மரம் இல்லை. விநாயகரைத் தொடர்ந்து வரிசையாகக் கார்முகீஸ்வரர், பஞ்சலிங்கங்களைத் தரிசிக்கலாம். அடுத்து, வள்ளி- தெய்வானை உடனாய சுப்ரமணியர்; மயில்மீது சாய்ந்து நின்ற கோலத்தில் அருள்கிறார். இவரை அருணகிரிநாதர் பாடிப் பரவுகிறார்.

வாலை துர்க்கை சத்தியம்பி லோககத்தர் பித்தர்பங்கில்
மாது பெற்றெடுத்து உகந்த சிறியோனே
வாரிபொட்டு எழ கிரவுஞ்சம் வீழ நெட்டயிற்றுரந்த
வாகை பொற்புய பிரசண்ட மயில்வீரா
ஞால வட்ட முற்றவுண்டு நாகமெத்தையில் துயின்ற
நாரணற்கு அருள்சுரந்த மருகோனே
நாலு திக்கும் வெற்றிகொண்ட சூரபத்மனைக் களைந்த
நாகபட்டினத் தமர்ந்த பெருமாளே
அருணகிரியாரின் அற்புதத் திருப்புகழ் நாயகரான ஆறுமுகரை வணங்குகிறோம். இவர், நின்றகோல முருகர்; ராஜதானி மண்டபத்தில் மயில்மீதமர்ந்த பெருமான் இருக்கிறார். எனவே அவரைத்தான், 'நாகப்பட்டினத்தமர்ந்த பெருமானே’ என்று திருப்புகழ் குறிப்பிடுகிறது என்கிறார்கள். அதனாலென்ன? 'வாகை பொற்புய பிரசண்ட மயில்வீரா’ என்றழைத்துக்கொண்டே அடுத்த சந்நிதி நோக்கி நகர்கிறோம்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீபைரவர் என்று தொடர்ந்து, வடமேற்கு மூலையில் ஸ்ரீமகாலட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில் வாகனங்கள் வைக்கப்பட்டுள் ளன. நவக்கிரகங்களின் சந்நிதியை அடைகிறோம். சனி பகவான் தனிச் சந்நிதியும் கொண்டுள்ளார். தசரதச் சக்ரவர்த்தி சனியால் பீடிக்கப்பட்டு, அந்த தோஷம் நிவர்த்தியாவதற்காக, நாகைக்கு வந்து நீராடி, சிவனாரை வழிபட்டு, சூரியனுடைய பரிபூரண அருளையும் சனியின் நன்மைகளையும் பெற்றதாக வரலாறு. அதை நினைவுகூறும் வகையில், இங்கே சனிக்குத் தனிப் பிரதிஷ்டை. அடுத்துள்ள நவக்கிரகச் சந்நிதியில், கோள்கள் ஒன்பது பேரும் ஒரே திசை நோக்கியவாறு (சுவாமியை நோக்கியவாறு) எழுந்தருளியுள்ளனர். நடராஜ சபை தொழுது, பைரவரையும் வணங்கி, வலத்தை நிறைவு செய்கிறோம்.

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேவாரத் திருவுலா! - நாகப்பட்டினம் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக