ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலிகளின் தந்திரம்!

5 posters

Go down

எலிகளின் தந்திரம்! Empty எலிகளின் தந்திரம்!

Post by தாமு Wed Apr 20, 2011 8:06 am

எலிகளின் தந்திரம்! Ratsஒரு காட்டில் ஒரு குள்ள ஓநாய் வாழ்ந்து வந்தது. அது உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதனுடைய கொடூரத்தினால் மற்ற விலங்குகளை மிகவும் பயமுறுத்தி வைத்திருந்தது. குறிப்பாக சுண்டெலிகளைக் கண்டால் அதற்கு சுத்தமாய்ப் பிடிக்காது. அவற்றை விரட்டி விரட்டித் துன்புறுத்துவதில் அந்த ஓநாய்க்கு அளவிலா திருப்தி.
ஒரு நாள் சுண்டெலிகள் பைகளையும் கயிறுகளையும் எடுத்துக் கொண்டு கூட்டமாக ஒரு மரத்தை நோக்கி வெகு விரைவாய் ஓடியதைக் கண்ட ஓநாய் விஷயம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் அவற்றைப் பின் தொடர்ந்தது. மரத்தை அடைந்த எலிகள், “பையின் வாயில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டுங்கள். கயிற்றின் அடுத்த முனையை மரக்கிளையின் மேல் எறியுங்கள்.
ம்ம்…. சீக்கிரம் ஆகட்டும்” என்று ஒருவரை ஒருவர் விரட்டிக் கொண்டு அவசரகதியில் இயங்கின. ஒன்றும் புரியாத ஓநாய், “உதவாக்கரைகளே, இன்றைக்கு என்ன மடத்தம் செய்யப் போகிறீர்கள்? எதற்கு இந்தப் பைகளும் கயிறுகளும்?” என்றது ஏளனமாய்.
எலிகள் பதிலொன்றும் சொல்லாமல் தம் வேலையில் கவனமாக இருந்ததைக் கண்ட ஓநாய், தன் கூர்மையான பற்களைக் கடித்து, “இப்போது பதில் சொல்லாவிட்டால், நீங்கள் அத்தனை பேரும் ரணப்பட்டுப் போய்விடுவீர்கள்” என்று பயமுறுத்தியது. பயந்து நடுங்கிய எலிகள், “பெரிய பெரிய ஆலங்கட்டிகளோடு புயல் வரப் போகிறதல்லவா? அதிலிருந்து தப்பிப்பதற்காக நாங்கள் இந்தப் பைகளில் புகுந்து கொண்டு கயிற்றின் மறுமுனையை இழுத்து மரத்தின் கிளைகளில் மறைந்து கொள்ளப்போகிறோம்” என்று விளக்கின.
“என்ன? ஆலங்கட்டி மழை வரப்போகிறதா?” என்று அதிர்ந்த ஓநாய், “நானும் மரக்கிளையில் ஒளிந்து கொள்ள வேண்டும். எனக்கும் ஒரு பையும் கயிறும் கொண்டு வாருங்கள்” என்று கட்டளை இட்டது.”உன் உருவத்திற்கேற்ற பை எங்களிடம் இல்லை” என்று பரிதாபமாகச் சொல்லின சுண்டெலிகள் “சரி, நான் போய் என் உருவத்திற் கேற்ற பையையும் கயிறையும் எடுத்து வருகிறேன். அதுவரை எனக்காகக் காத்திருங்கள்.”
என்று கூறிவிட்டு வேகமாகக் கிளம்பியது ஓநாய் “ஏற்கெனெவே புயல் சின்னம் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னும் தாமதித்தால் நாங்கள் ஆலங்கட்டி மழையில் மாட்டி உயிரிழப்போம். அதனால் நாங்கள் இப்போதே பைகளில் ஏறிக் கொண்டு மரக் கிளைகளில் ஒளிந்து கொள்கிறோம். நீ வந்ததும் கயிறை நீயே இழுத்துக் கொண்டு மரக்கிளைக்கு வந்துவிடு” என்றன எலிகள்.
அதைக் கேட்டுக் கோபம் கொண்ட ஓநாய், “என்ன விளையாடுகிறீர்களா? என் எடைக்கு நான் மட்டும் எப்படி கயிறை இழுத்து என்னை மேலே தூக்க முடியும்? நீங்களெல்லோரும் கீழிருந்து கயிறை இழுத்து என்னை மேலேற்றிவிட்டுப் பின்பு மேலேறி வாருங்கள். இல்லையேல், உங்களனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவேன்” என்று மிரட்டியது. அரண்டு போனதாக நடித்த எலிகள், ஒநாய் பை எடுத்து வர அகன்றதும், விழுந்து விழுந்து சிரித்தன. ஓநாய் தங்களின் தந்திரம் புரியாமல் தங்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதை எண்ணி கைகொட்டி நகைத்தன.
தன் உருவத்திற்கேற்ற பெரிய பையையும் கயிறையும் எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் திரும்பிய ஓநாய், காலத்தைக் கடத்தாமல், பையினுள் ஏறி அமர்ந்து கொண்டது. சிறிய கல்லொன்றை எடுத்து ஓநாய் அமர்ந்திருந்த பையின் மேல் எறிந்தது ஒரு சுண்டெலி. “ஐயோ… வலிக்கிறதே! ஆலங்கட்டி மழை ஆரம்பமாகிவிட்டது போலும். ஆகட்டும், கயிறை இழுத்து என்னை உடனே மேலே ஏற்றுங்கள்” என்று எலிகளைப் பார்த்துக் கட்டளை இட்டது ஓநாய். எலிகளும் அவ்வாறே செய்தன.
மரத்தின் கிளையிலிருந்து தொங்கிய பையில் ஓநாய் ஒளிந்திருக்க, கீழிருந்து பெரிய பெரிய கற்களை எடுத்து பையின் மேல் எறிந்தன எலிகள் “ஆ… ஐயோ… என் தலை, என் கை… என் வயிறு….வலிக்கிறதே! இப்போது என் முதுகில் விழுகிறதே! இந்த ஆலங்கட்டி மழை இவ்வளவு பொல்லாததாய் இருக்கிறதே!” என்று கதறியது ஓநாய்.
தங்கள் ஆசை தீர கல்லெறிந்த பின், மெதுவாக பையை கீழே இறக்கின சுண்டெலிகள். பையிலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் இறங்கிய ஓநாய், தரையில் மழை பெய்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததைக் கண்டு திகைத்தது. இறைந்து கிடந்த கற்களும், எலிகளின் முகத்திலிருந்த எள்ளலும் ஓநாய்க்கு நடந்ததை உணர்த்த, அவேசமடைந்த ஓநாய், “”உங்களை என்ன செய்கிறேன், பாருங்கள்” என்று அவற்றின் மேல் பாய முற்பட்டது.
ஏற்கெனவே ரணமாக இருந்த உடல் அதன் ஆத்திரத்திற்கு ஒத்துழைக்காமல் போக ‘சொத்’ என கீழே விழுந்தது ஓநாய். ஓநாயின் மேல் ஏறிக் குதித்த எலிகள், “இன்றைக்கு உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நடக்கும் போது பார்த்துக் கொள்வோம்” என்று கூறிவிட்டு வளைகளில் சென்று மறைந்தன.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எலிகளின் தந்திரம்! Empty Re: எலிகளின் தந்திரம்!

Post by மகா பிரபு Wed Apr 20, 2011 8:33 am

யானைக்கும் அடி சறுக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எலிகளின் தந்திரம்! Empty Re: எலிகளின் தந்திரம்!

Post by கலைவேந்தன் Wed Apr 20, 2011 10:52 am

சிங்கம் சிதைஞ்சு போனா சில்வண்டுகள் கைகொட்டுமாம்... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எலிகளின் தந்திரம்! Empty Re: எலிகளின் தந்திரம்!

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 7:29 pm

அருமையான கதை......

அன்பு நன்றிகள் தாமு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எலிகளின் தந்திரம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எலிகளின் தந்திரம்! Empty Re: எலிகளின் தந்திரம்!

Post by positivekarthick Mon Apr 25, 2011 9:24 pm

மகிழ்ச்சி


எலிகளின் தந்திரம்! Pஎலிகளின் தந்திரம்! Oஎலிகளின் தந்திரம்! Sஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Tஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Vஎலிகளின் தந்திரம்! Eஎலிகளின் தந்திரம்! Emptyஎலிகளின் தந்திரம்! Kஎலிகளின் தந்திரம்! Aஎலிகளின் தந்திரம்! Rஎலிகளின் தந்திரம்! Tஎலிகளின் தந்திரம்! Hஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Cஎலிகளின் தந்திரம்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எலிகளின் தந்திரம்! Empty Re: எலிகளின் தந்திரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum