புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
25 Posts - 38%
heezulia
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
4 Posts - 6%
prajai
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
2 Posts - 3%
Raji@123
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
1 Post - 2%
Barushree
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
8 Posts - 2%
prajai
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வசூலுக்குக் கூடவா? Poll_c10வசூலுக்குக் கூடவா? Poll_m10வசூலுக்குக் கூடவா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூலுக்குக் கூடவா?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:19 pm


யாரும் விரும்பி அழைக்காமலே எல்லோர் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும்
அடிக்கடி வந்துவிடுகிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. விரும்புவது
விரும்பாதது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவரது வருகையை எரிச்சலோடும்
அருவருப்போடும்தான் எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். அவர் உள்ளே வந்தால்
வீடுகளில் உள்ளவர்கள் வெளியே மரத்தடிக்கு வந்து விடுகிறார்கள். ஏறத்தாழ
புழுக்கத்தின் குறியீடாகவே மாறிப் போய்விட்டார். ஆனால் இவற்றில்
எதனையும் அவர் பொருட் படுத்துவதாகவோ, இல்லை கவலைப் படுவதாகவோ
தெரியவில்லை.

இவ்வளவு எதிர்ப்பலை வீசுகிறது. இது குறித்து அக்கறையே இல்லையா என்றால்
“அடப் போங்கப்பா, எனக்கு சீட்டே இல்லை. நீங்க என்னமோ கரண்ட் இல்லாதத
பெரிசாப் பேச வந்துட்டீங்க” என்றும் அவர் சொல்லக் கூடும். அவரது கட்சி தோற்கிற
பட்சத்தில் அதற்கான காரணங்களுள் ஸ்பெக்ட்ராமிற்குப் பிறகு
இவராகத்தானிருப்பார். இதை இவர் மறுக்க மாட்டார் என்பதை விட அவரே ஒரு முறை
ஒருக்கால் தனது கட்சி தோற்றுப் போனால் அதற்குத் தானும் தனது துறையும்தான்
காரணமென்று பேசியிருக்கிறார். அந்தப் பெருமையில் பெரும் பகுதியை ராஜா
அள்ளிக் கொண்டு போய்விட்டார் என்பது வேறு விஷயம்.

அன்று காலையும் யாரும் அழைக்காமலே எங்கள் ஊருக்கு வந்துவிட்டார். அந்த
நேரம் பார்த்து கிஷோர் அவனது துணிகளைத் தேய்த்துக்
கொண்டிருந்தான். ஏகத்துக்கும் கடுப்பானப் பிள்ளை திட்டித்
தீர்த்துவிட்டான்.

இனி சுத்தி வளைத்துப் பேசுவதில் பயனில்லை. என்னைப் பொருத்தவரை ஆற்க்காடு
வீராசாமி வேறு மின் தடை வேறு என்று கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இதை
ஆற்காடு வீராசாமி அவர்களே மறுக்க மாட்டார்.

வழக்கமாக எரிச்சலையும் கோபத்தையும் அறுவறுப்பையுமே ஏற்படுத்தும் அவரது
வருகை அன்று ஒரு நல்ல விளைவியும் தந்தது.

“இவனுங்க உறுப்படவே மாட்டானுங்க. எப்ப உடுவானுங்க எப்ப
நிறுத்துவானுங்கன்னே தெரியல,” என்று கொதிக்கத் தொடங்கியவன் “ஆனா ஆயிரம்,
ஆயிரத்தி ஐனூறுன்னு பில்ல மட்டும் தீட்டிப் புடறானுங்க” என்று சத்தமாய்த்
தொடரவே விக்டோரியாவிற்குப் பொறித் தட்டி விட்டது.

"ஏண்டா தம்பி, இன்னிக்கு கடைசி நாளுடா. கொஞ்சம் கோவிச்சுக்காமப் போயி
கரண்டு பில்ல கட்டிட்டு வந்துடுடா”

ஆஹா! ஆர்காடு வீராசாமி (மின் தடை) மட்டும் வராது போயிருந்தால் இன்று
கடைசி நாள் என்பது மறந்து போயிருக்கும். உடனே கட்டயப் புடுங்கிட்டுப்
போயிருப்பாங்க. அந்த வகையில எங்க வீட்டுக் கட்டயக் காப்பாத்துனது ஆற்காடு
வீராசாமி (மின் தடை) தான்.

“ போம்மா, இன்னைக்கு மேச் இருக்கு. அப்பாவ கட்டச் சொல்லு.”

“ அப்பாவுக்கு பள்ளிக்கூடம்டா. பில்லு கட்டுறதுக்காக லீவு போட சொல்றதாடா?”

“எதுக்கும்மா லீவு?. அதான் பள்ளிக்கூடத்துக்குப் போறாங்கள்ள. இப்பத்தான்
எந்த வகுப்பும் இல்லையே. இடையில போயி கட்டச் சொல்லும்மா.”

“ ஏண்டா, கிறுக்காடா நீ?. பெரம்பலூரு பில்ல சமயபுரத்துல எப்படிடா கட்ட
முடியும், கட்டையில போறவனே?”

“அதெல்லாம் நாம வாங்குறப்பதான் சரியா அந்தந்த ஊருக்கு அலஞ்சு வாங்கனும்.
கட்டுறதுன்னா தமிழ் நாட்டுல எங்க வேனாலும் கட்டலாம். வசூல்
மன்னனுங்கம்மா,” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டான்.

அப்புறமென்ன? கட்டணம் கட்ட வேண்டிய பொறுப்பு நம் தலையில். சரி என்று,
மறக்காமல் நம்பரைக் குறித்தெடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

இவ்வளவு ஆன் லைன் வசதி வந்த பிறகும் எந்தக் காவல் நிலையத்தில்
வேண்டுமானாலும் புகாரைப் பதியலாம் என்றாகவில்லை. நாட்டில் எந்த ஊரில்
வேண்டுமானாலும் உரிய ஆவணங்களைக் காட்டி ஏதேனும் சான்றிதிழ்களை வாங்கலாம்
என்ற நிலை வரவில்லை. ஆனால் அரசுக்கு கட்டவேண்டிய பணத்தை மட்டும் தமிழ்
நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்.

ஏறத்தாழ எல்லா வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில்
அவ்வளவாய் வேலையுமில்லை.எனவே சுந்தரமூர்த்தியை அழைத்துக் கொண்டு மின்சார
வாரிய அலுவலகத்திற்கு சென்றேன். ஒரே கூட்டம். வரிசை இருக்கிற நிலையைப்
பார்த்தால் மூன்று மணிக்கும் மேலாகும் போல இருந்தது. என்ன செய்வது என்று
குழம்பிக் கிடந்தபோது “ ஏறுங்க சார், பேசாமப் போய் போஸ்ட் ஆபீஸ்ல
கட்டிட்டுப் போயிடலாம்.” என்கிறார் சுந்தரமூர்த்தி.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா மின்சார அலுவலகங்களிலும் கட்டணம் கட்டலாம்
என்பதே அன்றுவரை எனக்குத் தெரியாத நிலையில் இது நம்பவே முடியாத
ஆச்சரியத்திற்குரிய செய்தியாயிருந்தது. அது குறித்துக் அவரிடமே கேட்டேன்.

“ கட்டலாம் சார். சேவைக் கட்டணமாக ஐந்து ரூபாய் மட்டும் சேர்த்துக் கட்ட
வேண்டும்.” அவ்வளவுதான் என்பதுமாதிரியாகப் பேசினார். அப்படியே அதிர்ந்து
போனேன். மாநில அரசின் கஜானாவை நிரப்புவதற்காக மத்திய அரசு
அலுவலகங்களில் வசூலா?, என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே தபால்
நிலையம் வந்து சேர்ந்திருந்தோம். இங்கும் ஒரே கூட்டம். அவரது மனைவி
பக்கத்து தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் இங்குள்ள
அலுவலர் பணத்தையும் எண்ணையும் பெற்றுக் கொண்டு கூட்டம் குறைகிறபோது
ரசீதினைப் போட்டு வைப்பதாக சொன்னார். சரி என்று நன்றி சொல்லித்
திரும்பினோம்.

மின்சாரக் கட்டணத்தை தபால்அலுவலகத்தில் கட்ட வேண்டிய நிலை ஏன் வந்தது?

இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். ஆள் பற்றாக் குறை. எனில் , தபால்
நிலையங்களில் போதுமான அளவு ஆள் இருக்கிறார்களா?

அவர்கள் பணியோடு கூடுதலாக, மாநில அரசுக்கான வேலையை மத்திய அரசு ஊழியர்கள்
பார்க்கிறார்களே, குறைந்த பட்சம் கூடுதலாக வசூலிக்கப் படுகிற சேவைக்
கட்டணத்திலிருந்து ஏதேனும் அவர்களுக்கு வழங்கப் படுகிறதா?

விசாரித்த வகையில் அப்படி எதுவுமில்லை.

எல்லா ஊர்களிலும்தான் புதுப் படத்திற்கு டிக்கெட் வாங்க அலைவது போல்
கட்டணத்தைக் கட்டுவதற்கு இத்தனைக் கூட்டம் அலைமோதுகிறதே!

சேவைக்குத்தான் ஆள் எடுக்க மாட்டீர்கள். வசூலுக்குக் கூடவா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:25 pm

தல நமிதா படாத எதிர்பார்த்து அலையும் ரசிகர்கள் மாதிரி ஏற்கனவே அவுங்க எது போராட்டம் நடத்தலாமுனு இருக்காங்க இதுல நீங்க வேற பாயிண்ட எடுத்துகொடுதுட்டா சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வசூலுக்குக் கூடவா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:28 pm

balakarthik wrote:தல நமிதா படாத எதிர்பார்த்து அலையும் ரசிகர்கள் மாதிரி ஏற்கனவே அவுங்க எது போராட்டம் நடத்தலாமுனு இருக்காங்க இதுல நீங்க வேற பாயிண்ட எடுத்துகொடுதுட்டா சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி கார்த்திக். ஆமாம் அது யாரு நமிதா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:31 pm

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:தல நமிதா படாத எதிர்பார்த்து அலையும் ரசிகர்கள் மாதிரி ஏற்கனவே அவுங்க எது போராட்டம் நடத்தலாமுனு இருக்காங்க இதுல நீங்க வேற பாயிண்ட எடுத்துகொடுதுட்டா சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி கார்த்திக். ஆமாம் அது யாரு நமிதா?

குட் கொஸ்டின் ஐ லைக் இட்
இவன் :- ஏழுலக நமிதா மச்சான் சங்கம் - ஓமன் கிளை
அகில உலக கைக்குட்டை சிறுவியாபாரிகள் சங்கம்
கலைஞ்சர் பாராட்டுவிழா சிறப்பு கமிட்டி




ஈகரை தமிழ் களஞ்சியம் வசூலுக்குக் கூடவா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 10:36 pm

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:தல நமிதா படாத எதிர்பார்த்து அலையும் ரசிகர்கள் மாதிரி ஏற்கனவே அவுங்க எது போராட்டம் நடத்தலாமுனு இருக்காங்க இதுல நீங்க வேற பாயிண்ட எடுத்துகொடுதுட்டா சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி கார்த்திக். ஆமாம் அது யாரு நமிதா?
நமிதா யாரா?

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:39 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:தல நமிதா படாத எதிர்பார்த்து அலையும் ரசிகர்கள் மாதிரி ஏற்கனவே அவுங்க எது போராட்டம் நடத்தலாமுனு இருக்காங்க இதுல நீங்க வேற பாயிண்ட எடுத்துகொடுதுட்டா சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி கார்த்திக். ஆமாம் அது யாரு நமிதா?

குட் கொஸ்டின் ஐ லைக் இட்
இவன் :- ஏழுலக நமிதா மச்சான் சங்கம் - ஓமன் கிளை
அகில உலக கைக்குட்டை சிறுவியாபாரிகள் சங்கம்
கலைஞ்சர் பாராட்டுவிழா சிறப்பு கமிட்டி

கார்த்திக் நான் ரொம்ப சின்னப் பையன். இப்பத்தான் இருபது ஆகுது இருபத்தி ஆறு முடிஞ்சு. அதனால விவரமா சொல்லுங்கப்பா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:40 pm

முரளிராஜா wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:தல நமிதா படாத எதிர்பார்த்து அலையும் ரசிகர்கள் மாதிரி ஏற்கனவே அவுங்க எது போராட்டம் நடத்தலாமுனு இருக்காங்க இதுல நீங்க வேற பாயிண்ட எடுத்துகொடுதுட்டா சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி கார்த்திக். ஆமாம் அது யாரு நமிதா?
நமிதா யாரா?

ஆமா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? 9892-41
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 10:43 pm

பாலா தாத்தா எட்வின் நமிதா யாருனு கேட்கறார்
விளக்கம் சொல்லுங்க
இவன்
எட்வினை விட வயதில் சிறியவன்
முரளிராஜா ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:44 pm

முரளிராஜா wrote:பாலா தாத்தா எட்வின் நமிதா யாருனு கேட்கறார்
விளக்கம் சொல்லுங்க
இவன்
எட்வினை விட வயதில் சிறியவன்
முரளிராஜா ஜாலி

தல இருக்கும் போது வாலாடலாமா தல நீயே சொல்லுதல



ஈகரை தமிழ் களஞ்சியம் வசூலுக்குக் கூடவா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:46 pm

முரளிராஜா wrote:பாலா தாத்தா எட்வின் நமிதா யாருனு கேட்கறார்
விளக்கம் சொல்லுங்க
இவன்
எட்வினை விட வயதில் சிறியவன்
முரளிராஜா ஜாலி

எழுதுவாங்களா முரளி?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? 9892-41
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக