புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 5:04 pm

First topic message reminder :

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Aries10

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

முன்யோசனையுடன் செயல்பட்டால், முன்னேற்றங்கள் விரைவில் வரும்!

எந்தத் துறையில் ஈடுபட்டால் வெற்றி கிட்டும் என்பதை எளிதில் அறிந்து கொண்டு செயல்படும் மேஷ ராசி நேயர்களே!

விக்ருதி ஆண்டு முடிந்து, "கர'' வருடம் தொடங்குகிறது. வரப்போகும் கர வருடம் வாழ்க்கையை வசந்தமாக்குமா? வருங்காலத்தை செழிப்படைய வைக்குமா? வரங் கொடுக்கும் தெய்வங்களை வழிபட்டதன் பலன் இனியாவது நமக்கு கிடைக்குமா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சீரும், சிறப்பும், செல்வாக்கும், பேறு பதினாறும் பெற வைக்கும் ஆண்டாக இந்த கர வருடம் உங்களுக்கு பலன் களை அள்ளி வழங்கப் போகிறது.

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இரண்டு, ஏழுக்கு அதிபதியான சுக்ரன் அதைப் பார்க்கிறார். தன ஸ்தானாதிபதியின் பார்வை, பஞ்சம ஸ்தானத்தில் பதிந்து கர வருடம் தொடங்குவதால், உங்கள் கரங்களிலே பொருள் வந்து சேரும். கல்யாண கனவு முதல் கப்பலில் ஏறி கடல் தாண்டும் கனவு வரை எல்லாம் கை கூடப் போகிறது.

ஆயினும், வருடத் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து, சனியால் பார்க்கப் படுகிறார். எனவே, இனம்புரியாத கவலை இதயத்திற்குள் நுழைந்து கொண்டே இருக்கும். எதையும் சிந்திக்காமல் உங்கள் முன்னேற்றத்திலேயே அக்கறை செலுத்துங்கள். விரயாதிபதி வியாழன் ஆண்டின் தொடக்கத்திலேயே விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

எனவே, நீங்கள் ஒரு காரியத்தை தொடங்கும் முன்பு ஏன் தொடங்கு கிறோம்? எதற்காக தொடங்குகிறோம்? இதனால், என்ன பலன் கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து தொடங்கினால் தான், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

வருடத் தொடக்கத்தில் வக்ரச் சனியின் இயக்கம், எதிலும் அக்கறை காட்டினால் தான் ஆதாயத்தைக் கொடுக்கும். அடுத்து வரும் குருப்பெயர்ச்சி கொடுக்கல் - வாங்கல்களை ஒழுங் காக்கும். வைகாசியில் வரும் ராகு-கேதுப் பெயர்ச்சி வருங்காலத்திற்காக தீட்டிய திட்டத்தை வெற்றி பெற வைக்கும். வருடக் கடைசியில் வரும் சனிப்பெயர்ச்சி இட மாற்றத்தை இனிமையாக்கும்.

ஆவணி 24-ம் தேதி முதல் ஐப்பசி 18-ம் தேதி வரை நீச்ச செவ்வாயின் ஆதிக்க காலத்தில் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. நிச்சயிக்கப் பெற்ற காரியத்தை திடீர் திடீரென மாற்றியமைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

சமயோசித புத்தியால் சாதனை நிகழ்த்துபவர்கள்!


மனக்கலக்கம் இல்லாதவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள் நீங்கள்தான். எதிரியை நினைத்து முதலில் பயப்படுவீர்கள். பிறகு, தன்னம்பிக்கையையும், தைரியத்தை யும் வரவழைத்துக் கொண்டு, என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று எடுத்துச் சொல்வீர்கள்.

சுக்ரபலத்தைப் பொறுத்தே உங்களுக்கு வாழ்க்கைத்துணை அமை கிறது. சனியின் பலத்தைப் பொறுத்தும், புதனின் பலத்தைப் பொறுத்தும் உங்களுக்கு தொழில் வளர்ச்சியும், உத்யோக முன்னேற்றமும் ஏற்படு கிறது. கிரகங்களின் பலம் குறைகிற பொழுதெல்லாம், அதற்குரிய வழிபாடுகளை முறையாக வைத்துக் கொள்வதன் முலமும், எண்கணித அடிப் படையில் தொழில் நிலையங்களின் பெயர்களை அமைத்துக் கொள்வதன் மூலமும், பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இயலும்.

குருபார்க்க கோடி நன்மை!


கர வருட தொடக்கத்தில் சித்திரை 25-ம் தேதி (8.5.2011) அன்று உங்களது ஜென்ம ராசியில் குருபகவான் சஞ்சரிக்கப் போகிறார். `ஜென்மகுரு வந்து விட்டதே' என்று நீங்கள் பயப்பட வேண்டாம். நம் வீடு தேடி வரும் விருந்தினர்களை நாம் வரவேற்று, உபசரித்தால், அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு, நாம் கேட்கும் போது உதவிக் கரமும் நீட்டுவர்.

அதேபோல, உங்கள் ராசிக்கு வந்த குருவை, வரும் முன்னதாகவே வரவேற்று, ஹோமங்கள் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டால், பூ மகளும், நா மகளும் உங்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பர்.

"ஜென்ம குரு வந்தால்,
சிறப்புகளே அதிகரிக்கும்!
பொன் பொருள்கள் வாங்குவதும்,
பூமிகளின் சேர்க்கைகளும்,
மன்பதையில் மேற்கொண்டால்,
மனம் இனிக்கும் வாழ்வமையும்!
வந்திணைந்த குருவை
வழிபட்டால் வளர்ச்சி வரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே, பொருளாதார நிலை உயரும். புனித காரியங்கள் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

கொடிகட்டி பறந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். கல்யாண கனவுகள் நனவாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த ஒத்துழைப்புகள் கிடைத்து, தக்க விதத்தில் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

நல்ல காரியங்கள் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி காலம்!


மே மாதம் 16-ம் தேதி விருச்சிக ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

அஷ்டமத்து ராகு ஆதாயத்தை வரவழைத்துக் கொடுத்தாலும், அடுத்த நிமிடமே விரயத்தை யும் கொடுத்து விடும். எனவே, பணம் வரும் பொழுதெல்லாம் அதை பாதுகாப்பதை விட, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செலவிடுவது நல்லது. "பின்நோக்கி நகரும் கிரகம்'' என்று வர்ணிக்கப்படும் இந்த பாம்பு கிரகங்கள் தான் உங்களை முன்நோக்கி செல்லவும் வைக்கும். முயற்சியில் தடையையும் உருவாக்கும். சர்ப்ப சாந்தி பரிகாரம் சந்தோஷத்தை வழங்கும்.

இரண்டாமிடத்து கேது எதிர்பாராத மாற்றங்களை உங்களுக்கு வழங்கும். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், குடும்ப உறுப்பினர்களை நீங்கள் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதே நல்லது. பெண்வழி பிரச்சினைகள் தலைதூக்கலாம். மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால், அனுகூலம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் முன் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.

ஏழாமிடத்துச் சனியால் இனிய பலன் ஏற்படுமா?


உங்கள் ராசிக்கு 10, 11-க்கு அதிபதியான சனிபகவான் இதுவரை ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். இந்த ஆண்டு, மார்கழி மாதம் 5-ம் தேதி (21.12.2011) அன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அப்போது சனி உங்கள் ராசியை அல்லவா பார்க்கப் போகிறார். இது கண்டகச் சனியாக இருக்கிறதே என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். சனிக்கிழமைதோறும் சனிபகவானை கொண்டாடி கும்பிட்டால், மணியான வாழ்க்கை மலரும்.

வாழ்க்கைத் துணை வழியே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையலாம். வரவு செலவு களை கவனித்து வந்த நண்பர்களில் ஒருசிலர் விலகலாம். சனியின் பார்வை பலத்தால், வாகன பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த உடன்பிறப்புகள் இனி ஒத்துவந்து உதவிக்கரம் நீட்டுவர். சுயஜாதகத்தில் சனி இருக்கும் இடமறிந்து அதன் பாதசார பலமறிந்து, அதற்குரிய வழிபாடுகளும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு களையும் சனி பெயர்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே செய்தால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளிலும் வெற்றி கிடைக்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

வருடத் தொடக்கத்திலேயே சனி வக்ரமடைகிறார். 14.4.2011 முதல் 9.6.2011 வரை சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். மீண்டும் 4.2.2012 முதல் 25.3.2012 வரை துலாம் ராசியில் வக்ரம் பெற்று, அதன் பிறகு 26.3.2012 முதல் 12.4.2012 வரை கன்னி ராசியில் சனி வக்ரமாகி, பின்நோக்கிச் செல்கிறார்.

இக்காலத்தில் தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. யாருக்கும் பொறுப்பு சொல்வதை தவிர்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் வருவது போல் தோன்றி மறையும். சனி வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

குருவின் வக்ர காலம் 31.8.2011 முதல் 15.12.2011 வரை. இக்காலத்தில் பயணங்களில் கவனம் தேவை. திடீர் இடமாற்றங்களால் தொல்லைகள் வந்து சேரலாம். உடன்பிறப்பு களோடு இருந்த ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தென்முகக் கடவுள் வழிபாடு நன்மைகளை வழங்கும்.

பலன்தரும் பரிகாரம்!

செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து, முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், செல்வ நிலை உயரும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று யோக பலம் பெற்ற நாளில் வைத்தியநாதர், தையல் நாயகி வழிபாட்டோடு, பஞ்ச அர்ச்சனை செய்து வந்தால், காரியங் களில் வெற்றி கிட்டும்.



”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 5:36 pm

என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி நன்றி தல



ஈகரை தமிழ் களஞ்சியம் ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 5:42 pm

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Capricorn

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

தொழிலில் வளர்ச்சி கூடிவரும்! தொல்லைகள் அனைத்தும் ஓடிவிடும்!

வேகத்தைக் காட்டிலும், விவேகம் அதிகம் கொண்ட மகர ராசி நேயர்களே!

சுக்ர பலத்தோடும், குருமங்கள யோகத்தோடும் பிறக்கும் இந்த புத்தாண்டில், உங்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக அமையும். புகழ் மேலோங்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறாரே என்று கவலைப்பட வேண்டாம். அதுமட்டுமல்லாமல், தொடக்கத்திலேயே ராசிநாதன் சனி வக்ரம் பெற்று செவ் வாயால் பார்க்கப்படுகிறார். மனிதர்கள் பலம் இழக்கும் பொழுது, மருந்துகளையும், மாத்திரைகளையும் சாப்பிட்டு உடலை தேற்றிக் கொள்வது போல, கிரகங்கள் பலம் இழக் கும் பொழுது, அதற்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, அர்ச்சனைகள் செய்து வழி பட்டால் நிச்சயம் நற்பலன்களை வழங்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

ஆண்டின் தொடக்கத்தில் நவக்கிரகங்களில் மூன்று கிரகங்கள் உங்களுக்கு நற்பலன் களைத் தரும் விதத்திலும், மற்ற ஆறு கிரகங்கள் வழிபட்டால் வளர்ச்சியைக் கொடுக்கும் விதத்திலும் உலா வருவதால், ஆண்டின் தொடக்க நாளிலேயே விநாயகப் பெருமானையும் வழிபட்டு, நவக்கிரகத்தையும் வழிபட்டு வாருங்கள்.

சந்திராஷ்டமத்தோடு ஆண்டு பிறப்பதால், வரவைக் காட்டிலும் செலவுகள் கொஞ்சம் கூடலாம். எனவே, ஆதாயம் வரும்பொழுதெல்லாம் அதை பொருட்களாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேகநலனுக்காக செலவிடும் சூழ்நிலையை வக்ரச்சனி கொடுக்கலாம்.

குருப்பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மூடிக் கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா காண்பீர்கள். முன்னோர்களின் சொத்துக்களால் ஒருசிலருக்கு முறையான வருமானம் கிடைக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு விலகிய பின்னர் சேமிப்புகள் அதிகரிக்கும். திடீர் திடீரென வரவுகள் வந்து சேரும்.

விருச்சிக ராகு சஞ்சரிக்கும் நேரம், ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவின் ஆதிக்கத் தில் பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். கேது ப்ரீத்தியை முறையாகச் செய்தால் வாதிட்டவர்கள் கூட வந்து நின்று சரணடைவர்.

சனியின் வக்ர இயக்கம் மாறினால் உடல்நலம் சீராகும். அதுவரை மருத்துவச் செலவுகள் கூடுவதைத் தவிர்க்க இயலாது. அந்த ராசிநாதன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக் கும் போது தொழில் வளம் மேலோங்கும்.

உதவிக்கரம் நீட்ட ஓடோடி வருபவர்கள்


பதவிக்கு ஆசைப்படாமல் உதவிக்கு ஆசைப்படுபவர்கள் நீங்கள். பக்கபலமாக இருப்பவர் களை பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். இருந்தாலும், பக்கத்து வீட்டார்களுடன் பகை திடீர் திடீரென வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் ராசிநாதனாக சனி அமைகிறார். அவரை மந்தன் என்று அழைப்பது வழக்கம். எனவே, நீங்கள் மந்தகதியில் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் மகத்தாக முடித்துக் காட்டுவீர்கள்.

அர்த்தாஷ்டமக் குருவின் சஞ்சாரம்


கர வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கப் போகிறார். அது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களையும், வாகனத்தால் தொல்லைகளையும் வழங்குமிடம் தான் என்றாலும், அதன் பார்வை பதியும் இடங்களான 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன அல்லவா?

எனவே, குருவின் பார்வை பதியும் இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் நற்பலன்களைப் பெறப்போகின்றன. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் அனைத்தும் செலவாகி விட்டதே! சேமிப்பு அனைத்தும் கரைந்து விட்டதே! என்று கவலைப்பட்டவர்கள் இனி மகிழ்ச்சியடையும் விதத்தில் இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் உருவாகும்.

தொழில் வளர்ச்சி கூடும். தொழில் நடைபெறப் போதிய மூலதனம் தர யாரும் முன் வரவில்லையே என்று ஏங்கியவர்கள் அரசு வழி அனுகூலம் பெறுவர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். போட்டியின்றி தொழில்கள் நடைபெறும்.

"நான்கினில் குருதான் வந்தால்
நடந்திடும் தொழில்கள் மாறும்!
வீண்பழி சிலருக்குச் சேரும்
வியாதிகள் அகன்று ஓடும்!
தூணெனத் தோள் கொடுத்தோர்
தொடர்பிலே மாற்றம் காண்பர்!
வானவருக்கு அரசை நீங்கள்
வழிபட்டால் வளர்ச்சி கூடும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும்போது, அர்த்தாஷ்டம சனிக்கு என்ன பலன் ஏற்படுமோ அதைப் போலவே தான் அர்த்தாஷ்டம குருவிற்கும் பலன்கள் ஏற்படும்.

தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை. வீண்பழி ஏற்படாமல் இருக்க பிறரை விமர்சிக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய குறைபாடு அகலும். நண்பர்களில் சிலர் உங்களை விட்டுப் பிரியலாம். புதியவர்கள் வந்திணைவர். மன அமைதி கிடைக்கவும், மகிழ்ச்சியான வாழ்வு அமையவும் தென்முகக் கடவுளை திருப்தியாக வழிபாடு செய்வது நல்லது. மஞ்சள் வண்ண வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ சூட்டி, சுண்டல் நைவேத்தியம் இட்டு, குருவை கொண்டாடினால் அதன் அருட்பார்வையால் அனைத்துக் காரியங்களும் துரிதமாக நடைபெறும்.

ராகு, கேது பெயர்ச்சிக் காலம்!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இனி லாப ஸ்தானத்திலும், இதுவரை ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது, இனி 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த நிகழ்வு மே மாதம் 16-ம் தேதி நிகழவிருக்கிறது.

ராகுவைப் போல கொடுப்பானும் இல்லை என்பது பழமொழி. அப்படி கொடுக்கும் ராகு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இனி கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொகை வந்து கொண்டே இருக்கும். எப்படி தொழிலை விரிவு படுத்துவது என்று நினைத்திருந்த உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.

ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவின் பலத்தால் பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். மண், பூமி வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆலய திருப்பணி செய்ய முன்வருவீர்கள்.

ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ராகு-கேதுக் களால் நற்பலன் பெற நாக வழிபாடும், சர்ப்ப சாந்தியும், தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோவில்களில் செய்வது நல்லது.

சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!


இதுவரை ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் 21.12.2011 அன்று பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ராசி நாதன் பத்தில் சஞ்சரிக் கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நட்பு வட்டாரத்தில் நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு கைகொடுத்து உதவுவர்.

உடல் சோர்வும், மனச் சோர்வும் அகலும். எதிர்பார்த்திருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், உத்யோக உயர்வும் அது வந்து சேரும். வி.ஆர்.எஸ்.பெற்றுக் கொண்டு விருப்ப ஓய்வில் தொழில் தொடங்குவோர் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், தொடங்கலாம். பத்தாமிடம் கர்ம ஸ்தானம் என்பதால், பத்தில் சனி வரும் பொழுது, பெற்றோர்களின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சனி வழிபாடு சஞ்சலம் தீர்க்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!


ஆண்டின் தொடக்கத்தில் சனி வக்ரம் பெறுகிறார். அதன்பிறகும் தை மற்றும் பங்குனி மாதத்திலும் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர இயக்கம் அவ்வளவு நல்லதல்ல. ராசிநாதன் வக்ரம் பெறும்பொழுது, உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ் நிலை உருவாகும். மருத்துவச் செலவு கூடும். இடமாற்றம், வீடுமாற்றம், இலாகா மாற்றம் போன்றவைகள் ஏற்படும்.

என்ன மாற்றம் வந்தாலும், அதை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. சகோதரர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். 31.8.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரம் பெறும் பொழுது ஓரளவு நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். 3, 12-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது, முன்னேற்றத்தின் முதல்படிக்கு கொண்டு போய் சேர்க்கும். சனியின் வக்ர காலத்தில் சனி பகவானையும், குருவின் வக்ர காலத்தில் தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வருவது நல்லது.

பலன்தரும் பரிகாரம்!

சனிக்கிழமை தோறும் ஆனை முகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் நாமக்கல் ஆஞ்சநோயர் கோவிலுக்குச் சென்று வயதிற்கேற்ற மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள். வளர்ச்சி கூடும்.



”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 6:07 pm

அமோகமா இருக்கு சிவா..... நல்ல பலன்களையே அள்ளி தருகிறது இந்த வருடம்..... அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 6:15 pm

ஜோசியர் சிவாவுக்கு என் நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 16, 2011 6:18 pm

ஆவலா படித்து ...ஏண்டா படித்தோம் என்று நொந்து கொண்டு..

இருந்தாலும் இந்த கெரகமெல்லாம் நம்மள என்ன செஞ்சிடும் மிஞ்சி மிஞ்சி போனா... ..பாத்துருவோம்!

நன்றி சிவா..



”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 A”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 A”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 T”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 H”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 I”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 R”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 A”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 6:38 pm

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Aquarius

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

வழிபாட்டால் வளர்ச்சி வரும்! வருடக் கடைசியில் வரவும் வரும்!

தான் மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று நினைக்கும் கும்ப ராசி நேயர்களே!

விக்ருதி ஆண்டு முடிந்து, கர வருடம் தொடங்குகிறது. கர வருடம் பிறப்பதற்கு முன்னாலேயே இந்த புத்தாண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை வழங்குமா என்று நீங்கள் சிந்திப்பீர்கள். கடந்த காலத்தில் அஷ்டமத்துச் சனியின் பிடியில் சிக்கியிருந்த நீங்கள் இந்த கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி வரை அதே அஷ்டமத்துச் சனியின் ஆதிக் கத்தில் தான் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், பன்னிரெண்டுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றாலும், வீண் அலைச் சலும், அகால நேரத்தில் சாப்பிடும் சூழ்நிலையும், தன்னம்பிக்கை குறைவும் ஏற்படலாம். பிறரை விமர்சிப்பதன் மூலம் வீண் விவாதங்கள் வரலாம்.

வருடத் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுவதாலும், அதை செவ்வாய் பார்ப்பதாலும், நிம்மதி குறைவு நிலைத்து விடாமல் இருக்க, பொன்னான நேரத்தில் ஒரு சில நிமிடங் களையாவது இறை வழிபாட்டிற்கென்று செலவிட வேண்டும். செவ்வாய், சனி பார்வை ஏற்படும் பொழுதெல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சகோதர ஸ்தானம் புனிதமடைவதால் உடன் பிறப்புகளால் உங்கள் கடன் சுமை குறையும். குருவின் பார்வை பலத்தால் கல்யாணக்கனவுகளும், வீடுகட்டுவ தில் இருந்த தொய்வு நிலையும் அகலும்.

தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு தொழில் வளத்தைப் பெருக்கும். வேலைப்பளு கூடினாலும், உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் அப்போதைக்கப்போது சுகக்கேடுகள் வந்து அகலும்.

மார்கழி மாதத்தில் வரும் சனிப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு மகத்தான பெயர்ச்சியாகும். அதன்பிறகு நீங்கள் தொட்ட காரியங்கள் துலங்கும். தொல்லைகள் விலகும். மணவாழ்க் கையும், மழலைப் பேறும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். துயரங்கள் துள்ளி ஓட, துணையாக நண்பர்கள் வந்து சேர, திருநள்ளாறு சென்று காக வாகனத்தானை கைகூப்பி வழிபட்டு வருவது நல்லது.

மேலும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கண்டர மாணிக்கம் அருகில் பெரிச்சிக் கோவில் என்ற பிரபலமான தலம் உள்ளது. அதில் உள்ள வன்னிமரத்தடி சனீஸ்வரர் நீங்கள் எண்ணிய காரியங்களை எல்லாம் எளிதில் முடிக்க அருள் தருவார். யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வருவது நல்லது.

சிக்கனத்தால் சிறப்படைந்தவர்கள்!

பணப்புழக்கம் அதிகரித்தாலும் சரி, ஓரளவு வந்தாலும் சரி சிக்கனத்தைக் கடைபிடிப் பவர்கள் நீங்கள். தக்க தருணத்தில் நண்பர்கள் உங்களுக்குக் கைகொடுத்து உதவ வேண்டுமானால் நீங்கள் அனுசரித்துத்தான் செல்ல வேண்டும். எதிரிகளை உதிரியாக்கும் தன்மை உங்களிடம் உண்டு. ஆனால், மன்னிக்கும் குணம் உங்களிடம் இல்லை. குண்டூசி அளவுள்ள விஷயத்தை யானை அளவு மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் தான் பிரச்சினைகளை அதிகம் நீங்கள் சந்திக்கிறீர்கள். குருவும், சூரியனும் இருக்கும் நிலையறிந்துதான் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நேரம்!

கர வருடத்தின் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப்போகிறது. தன லாபாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் பொழுது, முன்னேற்றங்கள் ஏற்பட தன்னம்பிக்கைதான் உங்களுக்கு தேவை.

குருவின் பார்வைபலம் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. "குரு பார்க்க கோடி நன்மை'' என்பதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து பொன்னான வாய்ப்புகளை அள்ளி வழங்கப் போகின்றன. குறிப்பாக கல்யாண கனவுகள் நனவாகும். கடல்தாண்டிச் செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

"மன்னவன் மூன்றில் நிற்க
மாபெரும் மாற்றம் தோன்றும்!
எண்ணிய காரியங்கள்
எல்லாமே வெற்றி பெறும்!
தன்னம்பிக்கையுடன்
தைரியமும் இணைந்திருக்கும்!
மண்ணில் புகழ் பரவும்
மகத்தான வாழ்வு வரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மூன்றில் சஞ்சரிக்கும் குரு உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தவர்களை அகற்றும். அசையாச் சொத்துக் கள் ஒரு சிலவற்றை விற்க நேரிட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே புதிய சொத்துக் களை வாங்கும் அமைப்பு கிட்டும். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும்.

வாழ்க்கைத் துணை வழியே வருமானங்கள் வந்து சேரும். தந்தை வழித் தகராறுகள் அகலும். புதிய இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் ஒருசிலருக்கு மேலோங்கும். வீடு கட்டிக் குடியேறலாமா, அல்லது கட்டிய வீடாக வாங்கலாமா என்பதை அறிந்து சுயஜாதகத்தைப் பார்த்துச் செயல்பட்டால் வாங்கிய வீடு நிலைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

பாம்புக்கிரகம் என்றும், பின்னோக்கி நகரும் கிரகம் என்றும் வர்ணிக்கப் படும் ராகுவும், கேதுவும் மே மாதம் 16-ம் தேதி பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

தொழிலை வளப்படுத்தும் பத்தாமிடத்து ராகு என்றும், தொகைகளைச் செலவிட வைக்கும் நான்காமிடத்து கேது என்றும் வர்ணிப்பது வழக்கம். ராகு பலத்தால் தொழில்வளம் பெருகும். நல்லவர்களின் நட்பால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். கேதுவின் பலத்தால் ஆரோக்கியக் குறைவுகள் அடிக்கடி ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. வாகனப் பழுதுச் செலவுகள் கூடும். காலையில் வரும் வரவு மாலையில் செலவாகி விடும். நீண்டதூரப் பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. முறையாக யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி களைச் செய்து கொண்டால் கும்ப ராசிக்காரர்கள் குழப்பத்தில் இருந்து விடுபட இயலும்.

சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!

சனிப்பெயர்ச்சி 21.12.2011 அன்று நிகழ இருக்கிறது. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு அற்புதமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்புகள் கைகூடி வரும் நேரமிது. ஆனால் விலகிய சனியை விரும்பிச் சென்று முன்னதாகவே நீங்கள் வழிபட வேண்டியது அவசியமாகும்.

சனி திசை விலகிய பின்னர், நள மகாராஜாவிற்கு சாம்ராஜ்யத்தையும், சகல யோகத்தை யும் வழங்கிய சனி பகவான் திருநள்ளாற்றில் வீற்றிருந்து அருள் வழங்குவதால் அவரைச் சென்று தரிசித்து வர வேண்டியது அவசியமாகும். ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு வந்து சேரும். இழந்த பொன், பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அஷ்டமத்துச் சனியால் ஏற்பட்ட பகைமாறும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாறும். வாகன மாற்றமும், வீடு மாற்றமும் செய்ய உகந்த நேரமிது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுகிறார். அதற்குப் பின்னால் இரண்டு முறை மீண்டும் வக்ரம் பெறுகிறார். ராசிநாதனான சனி வக்ரம் பெறும்பொழுது, ஆரோக் கியத்தில் மட்டுமல்ல, அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அக்கறை அதிகம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நன்மை ஏற்படும் என்று நீங்கள் நினைத்துச் செய்த காரியம் வேறுவிதமாக முடிவடையும்.

இதேபோல, 31.8.2011 முதல் 15.12.2011 வரை குருவின் வக்ர காலமாகும். தனாதிபதி வக்ரம் பெறும் இந்த நேரத்தில் பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். கொடுக்கல்-வாங்கல்கள் ஸ்தம்பிக்கலாம். உடன்பிறப்புகள் உங்களை உதாசீனப்படுத்தலாம். பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நேரமிது. லாபாதிபதியாகவும் குரு விளங்குவதால், "வானவருக்கு அரச ரான வளம் தரு குருவே'' என்ற குரு கவசத்தைப் பாடி குருவின் சந்நிதியில் வழிபட்டால் குழப்பங்கள் தீரும்.

பலன்தரும் பரிகாரம்!

சனிக்கிழமைதோறும் விரதமிருந்து சனீஸ்வரர் வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும் முறையாக மேற்கொள்வது நல்லது. கும்ப கோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள விஷ்ணுவையும், லட்சுமியையும், மாருதியையும் வழி பட்டு வாருங்கள். வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும்.



”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 16, 2011 6:42 pm

அணைத்தும் அருமை அண்ணா! நம்ம ராசிக்கு நல்லாத்தான் சொல்லிருக்கு பார்ப்போம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 6:42 pm

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Pisces


பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

காக வாகனம் கொண்டவனை கனிந்தே தொழுதால் குறை தீரும்.


எவரிடமும் எளிதாக நெருங்கிப்பழகும் இயல்பைப் பெற்ற மீன ராசி நேயர்களே!

விக்ருதி வருடம் முடிந்து கர வருடம் தொடங்கப்போகிறது. வியாழன் உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்குவதால், ஆண்டின் தொடக்கத்தில் சகட யோகமும், குரு மங்கள யோகமும் ஏற்படுவதால், சென்ற ஆண்டைக்காட்டிலும் சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகிறது.

ராசிநாதன் உச்சம் பெற்றிருந்தால் அல்லது ஆட்சி பெற்றிருந்தால் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் போது, உங்கள் ராசி நாதன் குரு பலம் பெற்று விளங்கினாலும், மாபெரும் கிரகம் சனி யல்லவா உங்கள் ராசியைப் பார்க்கிறது. கண்டகச் சனியாக விளங்கி கவலைகளைக் கொடுக்கும் சனி வக்ரம் அடையும் காலத்தில் மட்டும் வாழ்க்கைப் பாதையில் நல்லதைச் செய்யும்.

இந்த ஆண்டு முறையான குருப் பெயர்ச்சி நடைபெறப்போகிறது. தன ஸ்தானத்தை குரு பார்க்கப் போகிறார். எனவே பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். இனம் புரியாத கவலை இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும்.

ராகு-கேது பெயர்ச்சியும் ஓரளவு நற்பலன்களையே வழங்கும். பொதுவாக 10 ல் வந்த ராகு, இனி 9 ல் சஞ்சரிக்கப் போகிறார். 4 ல் உள்ள கேது இனி 3 ல் சஞ்சரிக்கப் போகிறார். இவை எல்லாம் உங்களுக்கு நற்பலன்களைக் கொடுத்தாலும், மார்கழி மாதம் பெயர்ச்சியாக போகும் சனி உங்களுக்கு அஷ்டமத்துச் சனியாக அல்லவா மாறப்போகிறார்.

எனவே மார்கழிக்கு முன்னால் மனதிற்கினிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றாலும், மார்கழிக்குப்பிறகு எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்வதே நல்லது. திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் உருவாகலாம். அந்நியர்களின் தொல்லை அதிகரிக்கும் இந்த நேரத்தில் அடுக்கடுக்காக வரும் சிக்கல்களைப் போக்க ஆனைமுகனையும், ஆஞ்ச நேயரையும், சனீஸ்வரரையும் விடாது வழிபட்டு வருவது நல்லது. பொதுவாக விடிந்தால் விக்னேஸ்வர வழிபாடு என்று வைத்துக்கொண்டவர்களுக்கு சனி பகவானால் சஞ்சலங்கள் ஏற்படாது.

இல்லத்தில் காகத்திற்கு தினமும் சோறு வைப்பதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மனமுவந்து உதவி செய்வதன் மூலமும், தல யாத்திரைகளை மேற்கொண்டு ஆண்டவ னின் சந்நிதியில் அதிக நேரம் வழிபாடு செய்வதன் மூலமும் அஷ்டமத்துச் சனியின் வலிமையை குறைக்க முடியும்.

சனி ஆதிக்கம் நடைபெறும் போது நம்பிக்கைக்குரியவர்கள் கூட விட்டுவிலகலாம். எனவே, எல்லோரிடமும் அன்புகாட்டி அரவணைத்துச் செல்வதன் மூலமும், கோபத்தை தவிர்த்துக் குணத்தோடு செயல்படுவதன் மூலமுமே தொல்லைகளில் இருந்து விடுபட இயலும்.

விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பவர்கள் நீங்கள்

வந்தவர்களை உபசரிப்பதில் உங்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை. சொந்தம், சுற்றம் என்று பாசம் காட்டுவதில் 12 ராசிகளிலும் நீங்கள் தான் முதன்மையானவர். குரு என்பவர் நவ கிரகத்தில் சுப கிரகமாக வர்ணிக்கப்படுபவர். அவரது சொந்த வீடு உங்களுக்கு ராசியாக அமைவதால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகம் பெற்றவர்களாக விளங்குவீர்கள்.

நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக இருக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளைப் பெருந்தன்மையோடு மன்னிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. கற்ற கல்வியைக் காட்டிலும் பெற்ற அனுபவங்கள் தான் பெரிதும் வழிநடத்திச் செல்கின்றன.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சி

கர வருடத் தொடக்கத்திலேயே 8-5-2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப்போகிறது. இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. பொதுவாக ராசி நாதனாகவும், 10 க்கு அதிபதியாகவும் விளங்கும் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப்போகின்றன.

"இரண்டில் குரு வந்தால்
இல்லத்தில் மகிழ்ச்சி வரும்
திரண்ட செல்வமுடன்
தேனான வாழ்வமையும்
உறவினர் பகைமாறி
உற்சாகம் குடிகொள்ளும்
குருவின் வழிபாட்டால்
குதூகலமாய் வாழ்ந்திடலாம்''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் இரண்டா மிடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வர். பங்காளிப்பகை மாறும். தங்கு தடையின்றி தனவரவு வந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கொடி கட்டிப்பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறத் தொடங்கும். தெய்வத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். அரசு அதிகாரிகளும், மேல் அதிகாரி களும் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாளில் திசை மாறிய தெட்சிணா மூர்த்தியை வழிபட்டு வந்தால் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

பாம்புக் கிரகம் என்று வர்ணிக்கப் படும் ராகுவும்,கேதுவும் மே மாதம் 11-ந் தேதி பெயர்ச்சியாகிறார்கள். இந்த அரவு கிரகப்பெயர்ச்சியால் ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கப்போகிறது. உடன்பிறப்புகளும் ஒத்துழைப்புச் செய்வர். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர். வள்ளல் தன்மை மிக்கவர்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்து குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்வர்.

9 ல் சஞ்சரிக்கும் ராகு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடுவார். பொன், பொருட்களை வாரி வழங்குவார். புதிய திருப்பங்களை ஏற்படுத்துவார். அன்புத் தந்தையின் பாசத்தை அதிகரிக்க வைப்பார். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது முன்னேற்றத்தில் சில இடை யூறுகளைக் கொடுத்துத் தான் நிவர்த்தி செய்வார். எந்தக் காரியமும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. இடையில் தடை ஏற்பட்டுத்தான் முடியும். பாகப்பிரி வினைகள் சுமூகமாக முடியும். யோக பலம் பெற்ற நாட்களில் சர்ப்ப சாந்திகளையும், யாகங்களையும் செய்தால் தேக நலனும் சீராகும், செல்வ நிலையும் உயரும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்


இதுவரை 7 ம் இடத்தில் இருந்த சனிபகவான் 21-12-2011 முதல் 8 ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். உங்கள் ராசியைப் பொறுத்த வரை 12 ம் இடத்திற்கு சனி அதிபதியாவதால், அது 8 ல் சஞ்சரிக்கும் போது விபரீத ராஜ யோகத்தை உருவாக்கலாம். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது பழமொழி.

எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குத் திடீர் திடீரென்று உதவ முன்வருவார்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. விழிப்புணர்ச்சி கூடுதலாக இல்லாவிட்டால் பங்குதாரர் களிடம் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். மருத்துவச் செலவு கூடும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேற சனிக்கவசம் பாடிச்சனீஸ்வரரை முறையாக வழிபாடு செய்யுங்கள்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுகிறார். அதற்குப் பின்னால் மீண்டும் இரண்டு முறை வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவதே நல்லது. பொதுவாக லாபம் வருவதில் தடைகள் ஏற்படலாம். பயணங்கள் அதிகரித்தாலும் அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. பிறருக்குப் பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

31-8-2011 முதல் 15-12-2011 வரை குருவின் வக்ர காலம். இக்காலத்தில் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். ரண சிகிச்சைகள் ஒரு சிலருக்கு உருவாகலாம். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது. நண்பர்களை நம்பிச் செய்யும் காரியங்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். உறவினர் வழியில் பகை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. குடும்பச் செலவுகள் கூடும்.

பலன்தரும் பரிகாரம்!

வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தென்முகக்கடவுளை இன்முகத்தோடு வழிபட்டு வருவது நல்லது. தஞ்சை மாவட்டம் திருக்கடையூருக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று கள்ளவாரணப் பிள்ளையார், அபிராமி அம்மன், அமிர்த கடேஸ்வரரை வழிபட்டு வந்தால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக மாறும்.

நன்றி: தினதந்தி
கணித்தவர் : 'ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்




”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 6:55 pm

சிவா உங்க ராசி நட்சத்திரம் பிறந்த தேதி டைம் எல்லாம் சொல்லுங்க உங்களுக்கு ஜாதகம் பார்க்க சொல்றேன் ஊர்ல அம்மா போகும்போது சரியா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 6:56 pm

மஞ்சுபாஷிணி wrote:சிவா உங்க ராசி நட்சத்திரம் பிறந்த தேதி டைம் எல்லாம் சொல்லுங்க உங்களுக்கு ஜாதகம் பார்க்க சொல்றேன் ஊர்ல அம்மா போகும்போது சரியா?

மகர ராசி, கடக லக்கனம், திருவோணம் நட்சத்திரம்! ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 1772578765



”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக