புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
51 Posts - 44%
heezulia
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
49 Posts - 42%
mohamed nizamudeen
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
3 Posts - 3%
prajai
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
2 Posts - 2%
Balaurushya
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
417 Posts - 49%
heezulia
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
285 Posts - 33%
Dr.S.Soundarapandian
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
28 Posts - 3%
prajai
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
கங்கை இல்லாத காசி I_vote_lcapகங்கை இல்லாத காசி I_voting_barகங்கை இல்லாத காசி I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை இல்லாத காசி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:23 am

- பாஸ்டன் பாலாஜி

காதல் என்கிற வார்த்தையைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ரொம்பப் பேர் அந்த வார்த்தையை கேட்கறதே பாவங்கிறது போல முகத்தை வைச்சுப்பாங்க. ஆனா, ரகசியமா செக்ஸ் ஜோக்கை ரசிக்கிறதும், மனசாலே சோரம் போகிறதும்... அது ஒருத்தருக்கும் தெரியாதில்லையா? நான் சொல்லும் காதல் அது இல்லே!

அட, காதலைப் பத்திப் பேசறானே! இள ரத்தம்னு கணக்குப் போட்டா உங்க கணக்கு தப்பு. முதுமையில் இளமைம்பாங்களே? அந்த நாற்பது வயசைக் கடந்தாச்சு. இந்த வயசிலே காதலாங்கறீங்களா? காதலுக்கு வயசு ஏது சார்? பழுத்த பழம்தானே ருசிக்கும்!

சரி, கலியாணமாகாமலே காலத்தைக் கழிச்சவன் போல இருக்கு. போனாப் போகட்டும்னு நினைச்சா, அங்கேயும் தப்பு பண்றீங்க. எனக்கு இருபதிலேயே கலியாணமாகி என் மகளுக்கு இந்த வருஷம் தலை தீபாவளி. அடுத்த பையன் ப்ளஸ்-2 படிக்கிறான். அடுத்தது நாலாம் வகுப்பு.

அட, சண்டாளா... இன்னுமென்னடா காதல்னு திட்டறீங்களா? அவசரப்படாதீங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்லே என் காதல்; தெய்வீகக் காதல்! மண்ணாங்கட்டிங்கறீங்களா? பொறுங்க சார்!

எத்தனை ஆழ்வார்கள் இறைவன் மேலே காதலாகி கசிந்துருகி இருக்காங்க? பெம்மான் அவனுக்கே பிச்சியான கதை எத்தனை, எத்தனை?

இங்கிலீஷ்லே லவ்லி சைல்டுன்னா சந்தோஷப்படறீங்க... 'காதலிக்கிற குழந்தை'ன்னா 'அர்த்தம்' பண்ணிக்கிறோம்!

காதல்னதும் ஏன் சார் படுக்கை அறை வரை போறீங்க?

அம்பிகாபதி - அமராவதி மாதிரி உயிரை விட்டாதான் காதலா? நளன் - தமயந்தி மாதிரி கலியாணம் பண்ணிக்கிறதுதான் காதலா?

ரொம்பக் குழப்பறேனா? சரி, முதல்லேயிருந்து சொல்றேன். நான் அவளை எங்கே எப்படி சந்திச்சேன்; எப்படிப் பழகினோம்; எல்லாம் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க!

என் பேரு செல்வம். நான் ஏதோ ஒரு ஆபீஸிலே, ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் நடத்தறதுக்கு தேவையான சம்பளம் வாங்கிண்டு இருக்கேன். அது இந்தக் கதைக்கு அவ்வளவு முக்கியமில்லே! அப்பப்போ பத்திரிகைகளுக்குக் கதை எழுதி அனுப்புவேன். முக்கால்வாசி திரும்பி வந்துடும்; இல்லே அந்தர் தியானமாயிடும். குறிஞ்சி மலர் மாதிரி ஒண்ணு ரெண்டு அச்சுக்கும் போயிடும்! அவ்வளவுதான். காலரை இழுத்து விட்டுண்டு ட்ரிம்மா ஷேவ் பண்ணி, லோஷன், பவுடர் எல்லாம் போட்டுண்டு கையிலே கதை வந்த புஸ்கத்தோட கிளம்பிடுவேன்.

எவனாவது 'என்ன சார், எங்க இப்படீ'ன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உடனே கதையைக் காட்டி பெருமை அடிச்சுக்க வேண்டியது. அவன் 'எப்படி சார், நீங்க ஆபீஸ் வேலையையும் செய்துண்டு, இந்த மாதிரி உபரி வருமானத்துக்கும் வழி பண்ணிண்டு! அசாத்திய சாமர்த்தியம்; அசுர சாதகம்'ன்னு எல்லாம் ஆச்சரியப்பட வைத்துவிட்டு, அது ஒரு தனிக்கதை. இப்போ ஆரம்பிச்ச கதைக்கே வரேன்.

ஒரு தடவை ஒரு பிரபலப் பத்திரிகையிலே என் கதை வந்துவிட்டது. ஒரு வேளை ஆசிரியர் ஊருக்குப் போய், அந்த இடத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த 'அரைகுறை' ஏதாவது செலக்ட் பண்ணி இருக்க வேண்டும்.

அதை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் என் சினேகிதன் பஸ்கரை சந்திக்கப் போயிருந்தேன். அவன் யுஷுவல் டைப். ஏதோ எனக்கு கற்பனை காட்டாற்று வெள்ளமாகப் பெருகி ஓடுகிறதா, என்னை மதிச்சிருந்த ஒரே ஆள். வாங்குகிற இடத்திலேதானே விற்க முடியும். எனக்குத்தான் கால் தரையிலேயேப் படலியே! கதையை அச்சிலே பார்த்ததும் வானத்திலே பறக்கிறதாய் நினைத்துக் கொண்டு; நல்ல வேளையாய் ஆக்ஸிடெண்ட் ஆகாமல், நண்பன் வீடு வந்து சேர்ந்தேன்.

பாரதியார் வீடு மாதிரி அவனுது. அதாவது ஏகப்பட்ட குடித்தனம். அந்த சமயம் பக்கத்துப் போர்ஷனில் யாரோ ஒரு பெண் வயசுக்கு வந்ததை அலங்காரம் செய்து உட்காரவைத்து பாடி விளம்பரம் செய்தார்கள்.

எது எப்படியோ! இனிமையான சங்கீதம். சொல்ல மறந்து விட்டேனே... நான் கொஞ்சம் கீதப்பிரியன். வந்த வேலை மறந்து விட்டது. என் கை தாளம் போடவில்லை. தலை அசையவில்லை. மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அந்த காரை பெயர்ந்த செங்கல் சுவற்றில் சாய்ந்தது சாய்ந்தபடி இருந்தேன்.

"முந்திப் பிறவிகளில் உன்னை நான் முறையினில் மணந்தேன்... எந்தன் உயிரல்லவோ - கண்மனி!" நிஜமாகவே இந்த வரிகளுக்கு இத்தனை அர்த்தமா? இதென்ன குழைவு? இப்படிக்கூட பாட்டால் உருக முடியுமா? யார் யாரோ இதைப்பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏன், நானே பாடி இருக்கிறேன். இப்படி ஒரு பாவத்தை உணர்ந்ததில்லை.

முந்தையப்ப் பிறவிகளில் மணந்த காதலி எதிரே வந்து நின்றிருந்தால் வேலவன் கூட இப்படிக் கொஞ்சி இருக்கமாட்டார்!

ஷ்ரேயா கோசலின் குரல் இனிமை; ஸ்னேஹாவின் குரல் வசீகரம்; ஹரிணியின் கம்பீரம்; எம்.எஸ்ஸின் மதுரம்; எல்லாம் கலந்து இது என்ன குரல்? அட, குரல் கிடக்கட்டும்! இதென்ன உணர்ச்சி மயக்கமான சொற் பிராவகம்...

கனவு கண்டு விழிக்கும் வரை நானும் சொப்பன உலகிலேயே இருந்தேன்.

"பாட்டு நல்லா இருந்தது இல்லே?" நண்பனின் குரல் என்னை உசுப்பியது.

"மடையன்... நல்லா இருந்தோமே! நளன் சமையல், ஊட்டியில் பட்டு மெத்தையில் அழகியோடு வாசம், குற்றால அருவியில் பணக்கார மமதையோடு நிற்கிறது; இப்படி எதையுமே ஈடு சொல்ல முடியாத இதைப் போய்... சரி, சரி. நீ ஒரு சராசரி! பாடினவங்களை நான் பார்க்க முடியுமா? ஒரு வார்த்தையாவது பாராட்டத்தான்", அவள் போய் விடப் போகிறாளே என்ற அவசரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:24 am

இனிமையானப் பாடல்களை கேட்பது ஒரு சுகம். அவ்வாறே பாடுபவர்களோடு அளவளாவதும் ஒரு சுகம். அதற்காகத்தான் பாஸ்கரிடம் ஆசையாகக் கேட்டேன்.

பாஸ்கரோ சிரித்தான். "அது அந்த கொத்தவால் சாவடி கிராக்கிதான்! இரு, கூப்பிடறேன்".

"வத்சல், வத்சல்... கொஞ்சம் பிருந்தாவைக் கூட்டிண்டு வாயேன். உங்க ரசிகர் ஒருத்தர் பாரட்டணுங்கறார்னு சொல்லு. 'விருட்'னு வந்துடுவா"!

கூப்பிட்டு கால் மணி நேரம் கழித்து, ஏற்கனவே எண்ணெய் குடுத்தியாக இருந்த முகத்தை, மேலும் சுருக்கிக் கொண்டு வந்தாள் நண்பனின் மனைவி. நண்பனுக்குக் கோபம் வந்தால் வத்தல் என்று கத்துவான்; பொருத்தமான பெயர்.

வத்சலாவுக்கு என் மேல் நல்ல அபிப்ராயம் கிடையாது. கதைக்குதவாத நண்பன். வெட்டித் தண்டம். காலணாவுக்குப் பிரயோஜனமில்லை; என்பதெல்லாம், அவள் உரகல். பின்னே! மாசத்திலே ரெண்டு சம்பளமா தருகிறார்கள்? இருபது தேதிக்கு மேல் இவர்களுக்குக் கடன் கொடுக்க? நானும் அந்த வர்க்கம்தானே! முந்திக் கொள்வேன்.

"உனக்காவது கதைப்பணம் வரும். நான் எங்கேடா போவேன்?" பாஸ்கர் நிஜமாகவே அப்பாவி. வத்சலா நேரிடை.

"வணக்கம்".



சிந்தனைச் சுழலிலிருந்து இழுத்து வந்த குரல், மறுபடி எங்கே தள்ளுகிறது.

"இவங்கதான் பிருந்தா. இவ புருஷனுக்கு ஜவுளிக் கடையிலே வேலை. கொஞ்சம் முன்னே 'மலைப் பொழுதினிலே' பாடினவங்க. பிருந்தா, இவன் என் கூட வேலை பார்க்கிறான். கொஞ்சம் எழுத்துப் பித்து. இந்த வாரம் கூட இதிலே கதை பிரசுரமாயிருக்கு. கொஞ்சம் சங்கீதக் கிறுக்கன். உங்களைப் பார்க்கணும்னு துடிச்சான். இப்போ வெட்கப் பட்டுண்டு..."

பாஸ்கர் பேசுவது ரொம்ப தூரத்தில் இருந்து கேட்டது.

பெண்மைக்கே உரிய சாகசம். முதலில் பார்வையை இழுத்துக் கொண்டு சமாளித்தவள் அவள்தான்.

"வணக்கம்... என்ன பேர்லே எழுதுவீங்க"?

என்னமோ வாய் பதில் சொல்லியது. அர்த்தமில்லாத உதட்டசைவுகள்.

எனக்கும் அவளுக்கும் என்ன உறவு? உலகில் முந்தின நிமிடம் வரை தெரியாதிருந்து இப்போது சொந்தம் கொண்டாடத் துடிக்கும் இந்த உணர்வுக்குப் பெயரென்ன?

வீட்டுக்கு வந்தேன். பேசாமல் மொட்டை மாடியில் ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு விண்மீனை எண்ணிக் கொண்டிருந்தேன்.

நான் எதனால் அடிபட்டேன்? சினிமாவில் எட்டு வில்லன்களோடு மோதிய களைப்பு. ஏதோ மூச்சு முட்டுகிறார் போல் இருந்தது.

என் தர்மபத்தினி இருக்கிறாளே. அவளுக்கு இங்கிதம் என்றால் கிலோ என்ன விலை என்று தெரியாது.

"ஏங்க சாப்பிட வரலியா? சன்னில் 'அலைகள்' ஆரம்பிச்சாச்சே!", அவளுடைய உலகமெல்லாம் சாப்பாடு, புடவை, நகை, தெருவம்பு, பணம் இவ்வளவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் இவற்றில் இருக்கும்.

"போன இடத்திலே சாப்பிட்டுட்டேன். நீ சாப்பிடறதுதானே?"

"இதை அப்பவே சொல்றதுக்கென்ன?" முணுமுணுத்துக் கொண்டே கீழே போய் விட்டாள்.

எனக்குத் தனிமை வேண்டும். நிதானமாக எண்ணங்களைக் கோர்வைப்படுத்தி அசை போட நேரம் வேண்டும். 'செவிக்கு உணவில்லாத போதுதானே வயிற்றுக்கு ஈய வேண்டும்!'

இங்கே செவி வழி பாய்ந்த தேனருவி, எதிரில் நின்று கண்வழி பேசி, நெஞ்சில் நிறைந்து ஜீரணிக்க முடியாமல் திணறுகிற போது சாப்பிடாவது? பிருந்தா புண்ணியத்தில் கொலஸ்ட்ரால் குறையட்டும்.

நான் இப்படியெல்லாம் பினாத்துகிறதைப் பார்த்து பிருந்தாவை இருபது வயதுக் குமரி என்று முடிவுகட்டி விடாதீர்கள். அவளுக்கும் வயது முப்பத்தைந்திலிருந்து முப்பதெட்டுக்குள் இருக்கலாம். காதருகில் லேசான நரை கூட... இப்போது புரிகிறதா எங்கள் காதலின் மகத்துவம். இதென்ன கிழட்டுக் காதல் என்கிறீர்களா? அதான் காதலுக்கு கண், வயது எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டேனே!

நானென்ன பெண்களையே பார்க்காதவனா? பேசாதவனா? என் மனைவி குரூபியா? அவள் மேல் ஆசையில்லாமலா மூன்று குழந்தைகளைப் பெற்றாள்! பிருந்தாவும் தன் புருஷன் மேல் பிரியமில்லாமலா நான்கு குழந்தைகளுக்குத் தாயாயிருப்பாள்? அவள் லேட்டஸ்ட் குழந்தைக்கு வயது ஆறு. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அம்மாவை அழைக்க மூன்று தரம் வந்துவிட்டது. தாயைப் போலவே பேசும் விழிகள்.

முதலில் நின்றுகொண்டே தயங்கித் தயங்கிப் பேசியவள் அப்புறம் எதிரே சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். அந்த முகத்திற்கே விழிகள்தான் அழகு. பிரசுரமாகிறதோ, இல்லையோ நான் எழுத்தாளனில்லையா? விழிகள் பேசிய கதைகளை நான் புரிந்து கொண்டேன். சகோதர பாசம், அது இதுவென்றெலாம் சொல்லி என்னை ஏமாற்ற முடியாது.

தன் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். பெரிய பையன் ப்ளஸ் ஒன் படிக்கிறானாம். இரண்டாவது பையன் எட்டாவது. மூன்றாவது பையன் ஐந்தாம் வகுப்பு.

வெறும் சதைவெறியை காதலென்று நினைத்த காலமும் உண்டு. அப்போ எனக்கு பத்தொன்பது வயது. மீசை அரும்பத் தொடங்கி இருந்தது. பதினாலு வயது அம்புலு ஆற்றங்கரைக்கு வந்து தண்ணீர் முகர்ந்து கொண்டு போகும் போது அசட்டுப் பார்வைகள் பார்த்துக் கொள்வோம்; அசடென்று இப்போதுதான் தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:25 am

உனக்கு நான்; எனக்கு நீ என சலீம், அனார்க்கலி போல கல்யாணங்களில் சந்தனப்பேலா, கற்கண்டுத் தட்டு மாற்றிக் கொள்வது போல விரல்களைக் கிள்ளி, கோயில் மதில் சுவர் இருட்டில் கொஞ்சி, வகுப்பு முடிந்ததும் சைக்கிளில் ஒன்றாக வீடு திரும்பி, மண்டபத்தில் அவள் மருதாணி பறிக்கையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து.... வேண்டாம் அசிங்கம்!

இப்படியே இரண்டு வருஷங்கள் போன பிறகு, பம்பாயில் இருந்து ஒருத்தன் அவளை பெண் பார்க்க வந்து, அவள் தனியாக என்னிடம் மூக்கைச் சிந்திப் போட்டு, ரெண்டு பேரும் அரளி விதை அரைத்துக் குடிப்பதா, ஓடி விடுவதா என்று குழம்பி, நாங்கள் முடிவெடுப்பதற்குள் அவள் கலியாணம் நிச்சயமாகி விட்டது.

எனக்கு வேலையில்லாத படியாலும், வேறு சாதிக்காரன் ஆன படியாலும் ஓடிப்போகத் துணியவில்லை. சலீம் - அனார்கலி, லைலா - மஜ்னுவின் காதலுக்கே அமரத்துவம் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டோ ம்.

கயஸ் மாதிரி கைலாசநாதர் கோயில் குளப்படியில் நாலு நாள் தாடியோடு நான் இருக்க சந்தியாவதனம் பண்ண வந்த அம்புலுவின் தகப்பனார் "டேய் செல்வம், அம்புலு கல்யாணம் நிச்சயமாயிடுத்து; தெரியுமோன்னோ? நேரே பத்தாம் நாள் முகூர்த்தம். மாப்பிள்ளைக்கு லீவே இல்லியாம். சீக்கிரம் முடிக்கணும்னு அவசரப் படுத்தறா. இப்படிக் குரங்கு சாகக் கொடுத்த ஆண்டி மாதிரி இங்கே ஏண்டா உட்கார்ந்திடிருக்கே? மசமசன்னு இருக்காம காய்கறி, மளிகை எவ்வளவு காரியம் கெடக்கு! உக்கிராண அறைப் பொறுப்பு உன்னுதுதான்", அவர் சொல்லிக் கொண்டே போனார்.

அப்புறம் என்ன ஆச்சு? வாயிலே ஈ நுழைவது தெரியாமல் பம்பரமாய் சுற்றினேன். சரியா எட்டாம் மாசம் அம்புலு வயத்தை சரிச்சிண்டு வந்தா. நல்ல உயரம். பருமன். அடையாளம் கண்டு பிடிக்கிறதே சிரமமா இருந்தது.

பிள்ளையப் பெத்து எடுத்துண்டு போறப்ப "செல்வம், அவருக்கு மாகாணிக் கிழங்குன்னா ரொம்ப இஷ்டம்"ன்னு ஆதங்கப்பட்டு சந்தைக்கு அனுப்பி வாங்கிண்டு வரச் சொல்லி பாக் பண்ணி எடுத்துண்டு போனா.

அனார்கலிகள் சமாதியான பிறகு சலீம் ஜஹாங்கீராகி நூர்ஜஹானை நிக்கா செய்து கொண்டது முன்னே. இப்பொவெல்லாம்தான் ஆணோடு பெண் சரிசமமாச்சே! ஆணைப் பெண் தோற்கடிச்சுடறா.

உனக்கு எப்படி இந்த பிராமண பாஷை வந்ததுன்னு கேட்பா? அம்புலு, வைதேகி, இப்போ பிருந்தா... எல்லாரோடேயும் பழகிப் பேசி! சே, ப்ருந்தாவை இந்த லிஸ்டுலே சேர்த்திருக்கக் கூடாது.

அப்புறம் மனசு மாறி... அதான் மாத்திட்டாளே புண்ணியவதி. ரொம்பப் பெரிய மனுஷி மாதிரி அவ பேச்சும், அறிவுரையும் எங்க வர்க்கத்திலேயே, பெத்தவங்க சுட்டி காட்டின ஒருத்திக்கு தாலி கட்டினேன். காலத்திலே சந்தானமும் கிடைச்சது. இந்த இயந்திரமான வாழ்க்கையிலேதான் பிருந்தா குறுக்கிட்டாள்.

நாங்க பாத்துண்டப்போ கம்பர் இருந்திருந்தா புதுசா, அற்புதமா ஒரு கவிதையே பாடி இருப்பார். பாஸ்கர் அத்தனைக்கு மேதாவி இல்லையே!

"நீங்க ஏன் கச்சேரி செய்யக் கூடாது? இவ்வளவு நல்ல குரல் வளம் இருக்கறப்போ?" நான் கேட்க.

"முதல்லே எங்க ஊர் கோவில்லே நவராத்திரி கச்சேரி ஒண்ணு பண்ணினேன். அது பெரிய கதை"!

ஆமாம் இன்னிக்கு இப்படியேன் அசடு வழிஞ்சேன்! ஒண்ணரை சாண் இடத்திலே பாஸ்கர் மனைவி எழுந்து போடான்னு சொல்லாத வண்ணமா, குழந்தைகளிடம் "அவாள்ளாம் போகட்டும்; சாதம் போடறேன்"னு இதமா சொல்லி, "மணி எட்டாச்சே. சாப்பிட வேண்டாமா? நாளை ஆபீஸ் கிடையாதா?"ன்னு கத்தி, அப்புறமாதான் என் மரமண்டையில் உறைத்து நான் புறப்பட்டேன்.

அந்தக் கதையைக் கேட்கத்தான் நான் பிருந்தா வீட்டுக்குப் போயிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பான் பாஸ்கர்... மடையன்.

"எங்க வீட்டிலே அவர் இல்லே. டூர் போயிருக்கார். அங்கே வாங்களேன். கொஞ்சம் பேசிண்டிருக்கலாம்", பிருந்தா அழைக்க, "பாஸ்கர், நீ சாப்பிட்டுட்டு வா", நான் பிருந்தாவை அவளின் வீட்டுக்குள் தொடர்ந்தேன்.


அந்த சமயத்தில் அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ஜாதகம் பொருத்தமாகி பெண் பார்க்க வந்த பிள்ளை வீட்டார் அந்தப் படலம் முடிந்ததும் "போன வாரம் கோவில்லே தேங்காமூடிக் கச்சேரி பண்ணினது உங்க பெண்தானே?" என்று விசாரித்திருக்கிறார்.

பிருந்தாவுக்கு அப்பா இல்லை. தாய்மாமனிடம் வளர்ந்தவள். அவளது அம்மாவும் பயந்தபடி தலையாட்டி இருக்கிறாள். "பெண்ணை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், கச்சேரி அது, இதுவெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது. வீட்டிலே குத்து விளக்கை ஏற்றி வைத்து அம்பாள் முன் பாடத்தான் சங்கீதம். ஊரிலே உள்ள ரௌடி, போக்கிரி, வேலையத்த வெட்டித் தடியன்கள் முன் பாட அல்ல. அந்த மாதிரி எண்ணங்களை மூட்டை கட்டி வைத்து விடுவதாக ஒப்புதல் தந்தால் சம்பந்தம் பேசுவோம். எங்கள் குடும்பம் பெண்கள் சம்பாதித்து சாப்பிடுகிறதில்லை", இப்படி நிபந்தனைகள் போட்டார்களாம்.

சங்கீதத்தைப் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம். கச்சேரி கேட்க வருகிற எல்லாருமா போக்கிரிகள்? கணவன் ரசிக்க மட்டும் அலங்காரம் என்றால், பெண்கள் கோவிலுக்கு, விழாக்களுக்கு, மற்றபடி வெளியில் வரும்போது அலங்கரித்துக் கொள்வானேன்? இன்னும் சொல்லப்போனால், முக்கால் வாசிப் பெண்கள் வெளியில் புறப்படும் போதுதான் அழகாக அலங்கரித்துக் கொள்கிறார்கள்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். மாப்பிளையும் பிடித்து, மற்ற ஐயிட்டங்களும் ஒத்து வந்ததால் சுலபமாக வாக்குறுதி கொடுத்து விட்டாள், ப்ருந்தாவின் தாயார்.

பிருந்தாவுக்கு பைத்தியம் பிடித்தாற் போல் இருந்ததாம். அப்படியென்ன இவர்கள் கண்டிஷன் போடுவது என்ற எரிச்சல். ஒரு சினேகிதியின் கல்யாண மேடையில் அவள் பாட்டைக் கேட்ட கிளப் செக்ரடரி, ஒரு விழாவில் அவள் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தாராம். முன்பே ஒப்புக் கொண்ட கச்சேரி ஆனபடியால் அது மட்டும் நடந்ததாம்.

இவ்வளவையும் சொல்லி முடிப்பதற்குள் ப்ருந்தா பலமுறை கண் கலங்கி விட்டாள். சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு பெண்களை அடிமை கொள்ளும் ஆண் வர்க்கத்தைச் சாடினாள். கூச்சத்திரை கிழிந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:25 am

நெஞ்சில் இத்தனை காலம் சுமையாய் கருவுற்றிருந்த குமுறல்கள் பிரசவிக்கட்டும் என நான் பொறுமையாய் இருந்தேன்.

'இப்போது சான்ஸ் கிடைத்தால் கச்சேரி செய்கிறீர்களா? நிஜமான மேதைகள் ஒளிந்து கொண்டிருக்கக் கூடாது", என்று நான் கேட்டேன்.

எது எப்படியோ பொது ஜனத் தொடர்பு எனக்கு அதிகம். சில சபா காரியதரிசிகள் என் நண்பர்கள். என் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பார்கள். பிருந்தாவின் வேகங்களுக்கு வடிகால் வேண்டுமென்று நினைத்தேன்.

"வாக்குக் கொடுத்தவர்களும் இல்லை. வாங்கிக் கொண்டவர்களும் இல்லை", விரக்தியாகச் சொன்னாள். இதற்குள் கொரிப்பதற்கு தேன்குழலும், குடிப்பதற்கு காபியும் வந்தன.

"உங்கள் கணவர் எப்படி?"

"பணம்! பணம் ஒண்ணுதான் அவர் லட்சியம். தவறான பாதையை நீக்கி அது அப்படி வந்தாலும் சரி. தனி வீடு, ஃப்ரிட்ஜ், டிவி, இப்படி வசதிகளின் மீது ஆசை கொண்டவர். அவர் சம்பளத்தில் அதெல்லாம் நிறைவேறுவது எந்தக் காலம்? 'உன்னை விட மட்டமான குரல். அவள் கச்சேரிக்கு பத்து வாங்குகிறாள். மாசத்தில் ரெண்டு கச்சேரி வந்து விடுகிறது' என்று அங்கலாய்ப்பார். 'நமக்கு யோகமில்லை. அந்த நாளிலிருந்து கச்சேரி தொடர்ந்திருந்தால் இப்போ ஃபேமஸ் ஆகியிருப்பாய்' என்று பொருமுவார். நான் நவராத்திரி, நலுங்கு, ஊஞ்சல் இதில் எல்லாம் விடாமல் பாடி ஆத்மதிருப்திப் பட்டுக் கொள்கிறேன்".

அவ்வளவுதான். முதல் நாள் இதற்கு மேல் சுமக்க என் நெஞ்சிலும் இடமில்லை. நேரமும் ஒத்து வரவில்லை.

பேராசைப்பட்ட மனம் மறுபடி அவளை சந்திக்க வேண்டும் என்று கூச்சலிட்டது. பண்பாடவெல்லவென்று அடக்கினேன். இருவருமே சமூகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டவர்கள். தவிர என் மனம்தான் இப்படித் துடிக்கிறது. பிருந்தாவின் மனசு புரியாமல் அலைந்தால் எப்படி? நானாவது ஆண்மகன். என் வேகங்கள், அவளுக்கு வேதனையை ஏற்படுத்தி விட்டால்?

உணர்ச்சிகளுக்குக் கடிவாளமிட்டேன். அடம் பிடிக்கும் குழந்தையை சமாதானப்படுத்துவது போல் சினிமா, நாடகம், ஷேத்ராடனம் என்று தீனி போட்டுப் பார்த்தேன். ஊஹும்... ஒன்றும் சரிபட்டு வரவில்லை.

சீ... வீடாவது? குடும்பமாவது? எல்லாரையும் உதறித் தள்ளிவிட்டு அவளுடன் உலகத்தின் எந்த மூலைக்காவது ஓடி விட்டால் என்ன என்று கூட எண்ணினேன். இளைஞனின் வேகமல்ல இது. நான் சம்பாதிக்கத் தெரிந்தவன். அவளைப் பட்டினி போடமாட்டேன்.

என் குடும்பத்துக்கும் ஓரளவு சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனால், என் நீட்டிய கரங்களைப் பற்ற அவளுக்குத் துணிச்சல் இருக்குமா? அவள் குழந்தைகள், இத்தனை காலமும் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயர், இதைத் தாண்டி வருவாளா? எந்த தைரியத்தில் இப்படி எல்லாம் சிந்திக்கிறேன்?

கேவலம் ஒரு நாள் பழக்கம்! சர்க்கஸ் பாரில் நீட்டிய கையை எதிர் ஊஞ்சல் ஆள் பிடிக்காமல் விட்டு விட்டால் அவன் கதி என்ன ஆகும்? அவளைப் பார்க்கவில்லையே தவிர விழித்திருந்தாலும், தூங்கினாலும், சாப்பிட்டாலும், வேலை செய்தாலும், சினிமா பார்த்தால் கூட அவள் நினைவுதான்!

அது ஏன் அப்படி என்றுதான் புரியவில்லை? இது அவளுக்குப் பிடிக்குமா? இதை ரசிப்பாளா? அவளைப் பற்றி நான் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. வழிதான் தெரியவில்லை.

இந்த சமயம் ஒரு சபா நண்பர் குறுக்கிட்டார். 'டிசம்பர் கச்சேரியில் பெயர் போட்டிருந்த ஒரு பாடகிக்கு உடம்பு சரியில்லை. வேறு ஆளை ஏற்பாடு செய்யப் போகிறேன். இது ஒரு அவஸ்தை' என்று அவர் புலம்ப, நான் ப்ருந்தா பெயரை சிபாரிசு செய்ய, 'ஆளை அழைத்துக் கொண்டு வந்து விடு' என்று அட்வான்ஸைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

இந்த முறை ப்ருந்தாவின் கணவரும் இருந்தார். அட்வான்ஸை கையில் வாங்கினதும் சிரித்தார். 'எனக்கு வர முடியாது. உங்க பொறுப்பு' எனக் கைகழுவியும் விட்டு விட்டார்.

என் ப்ருந்தா... ஆம்...


அவள் கண்கள் என் உணர்ச்சிகள் தவறில்லை என்று சொல்லியது.

கச்சேரிக்குப் போனோம். 'இரண்டு பாட்டுக் கேட்டுவிட்டுப் போய் விடுவேன்' என்றுதான் ப்ருந்தாவிடம் சொன்னேன். வேறோரு முக்கியமான வேலை இருந்தது. என் மைத்துனன் ஊரில் இருந்து வந்திருந்தான்.

"முடிந்தால் போங்கள்", என்றால் அவள் புன்னைகையுடன். நிஜமாகவே முடியவில்லை. அவள் என்னை எவ்வளவு தூரம் உணர்ந்து கொண்டிருக்கிறாள்!

சாகித்யங்களை பக்தி பூர்வமாக வார்த்தைகளை சிதைக்காமல் பாடிய விதம் என்னை சிலிர்க்க வைத்தது.

பாரதியாருக்கும் ஒரு காதலி இருந்திருப்பாளோ என்று எனக்கு சந்தேகம்.

'கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடிலோ... கண்ணம்மா"

நானே அவளால் தழுவப்பட்டேன்.

கச்சேரி முடிந்து வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசிக் கொள்ள வில்லை. டாக்ஸியிலிருந்து இறங்கியதும் சன்னமான குரலில் கேட்டாள்.

"நீங்கள் ரொம்ப நல்லவர் என்று கேள்விப்பட்டேன்."

"உங்க கேள்வி பங்கப் படுறாப் போல நான் என்ன செய்தேன்?"

"கச்சேரியைப் பத்தி ஒரு வார்த்தை சொல்லலே?"

"தன்னைத் தானே புகழ்ந்துக்கறது முகஸ்துதி"

"மறுபடி எப்போ?" அவள் துனிசல் என்னை திகைக்க வைத்தது.

"கச்சேரி சான்ஸ் கிடைச்சா தான் பார்க்க வரணுங்கறதில்லை... இந்த மனசு எப்பவும் உங்களை வரவேற்க காத்திண்டு இருக்கும்".

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:26 am

ப்ருந்தா உள்ளே போய் விட்டாள். அதற்குள் ஐன்னல்களில், வராண்டாக்களில் ஏகப்பட்டத் தலைகள். உள்ளே போய் அவள் கணவனின் சம்பிரதாயமான நன்றியை பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

அதே விதமாய் என் சிந்தனைகள் ஒடினாலும் அதன் எதிரொலியின் அதிர்ச்சி ஒரு வாரத்துக்கு என்னை விடவே இல்லை.

முதலில் அவள் வீட்டை மாற்றி ஆக வேண்டும். இதை எப்படிச் சொல்வது, அவள் கணவன் ஒப்புக் கொள்ள வேண்டும். கடைக்குப் போக அவனுக்கு வசதியாக அந்த ஏரியாவில் அமைய வேண்டும். அவர்கள் வரும்படியில் வாடகை கொடுக்க வசதிப்பட்ட இடமாகவும் இருக்க வேண்டும். ஒரே குழப்பம்.

அடுத்த சான்ஸோடு நான் ப்ருந்தாவை சந்திக்கப் போகையில் இந்த யோசனையை அவளே சொன்ன போது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி! எண்ணங்கள் கூடவா ஒத்துப்போகும்?! இறைவன் செய்த தவறு... மனம் சேராத இருவருக்கு முடிச்சு போடுவது... சொர்க்கத்தில் எங்கள் திருமணங்கள் நிச்சயிக்கப்படும் போது இறைவனுக்கு தூக்கக் கலக்கமாக இருந்திருக்குமோ?

அப்பப்பா... "வீட்டுக்காக செல்வம் அலைகிறானே தெரியுமோ" என நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் பிரபலப்படுத்தி பேசும் அளவு அலைந்து அந்த வீட்டை பிடித்தேன். அது ஒரு அவுட்ஹவுஸ், முந்தைய வீட்டை விட வாடகை அதிகம் தான். ஆனாலும் ஒரு சௌகரியம். காம்பவுண்டுகள் உள்ள பணக்கார லொகாலிடி பங்களாக்கள். மற்றவர்களைப் பற்றிக் கேட்பது அநாகரீகம் என்ற கௌரவப் போர்வைக்குள் புகுந்து கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள்.

வீட்டு சொந்தகாரர்கள் ஹிந்தி ஃபிலிம் வினியோகஸ்தர். பாஷை தெரியாதது முதல் லாபம் என்றால், கார் வந்து நிற்பது சர்வ சாதாரணம். வருவோரும் போவோருமாய் இருபதால் என் வருகை ஒரு பொருட்டல்ல! என் பிருந்தாவைப் பார்க்க ஒரு வழி செய்தாகி விட்டது.

இதை அவள் கணவன் எப்படி எற்பானோ என்று நான் தயங்கிக் கொண்டே போக, "சீக்கிரமாய் ஒரு வீடு பார்க்க வேண்டும் செல்வம்... இங்கே இருக்கிறதுகள் பொறாமைப் பிண்டங்கள். ஒருத்தன் நாலு காசு வந்து வெள்ளையும், சொள்ளையுமாய் இருக்கக் கூடாதே? இவளுக்கோ எப்படியும் மாசம் இரண்டு சான்ஸ் கிடைக்கிறது..."

பிருந்தாவின் கணவன் அடுக்கிக் கொண்டே போக எங்கள் பரிபாஷையில் நான் பிருந்தாவைப் பார்க்க, என் ஆச்சரியத்துக்கு விடை அங்கே கிடைத்தது.


இப்போதெல்லாம் பிருந்தாவின் குடும்பத்தில் நானும் ஒருவனாகி விட்டேன். "உங்களைப் பார்க்காத நாளைக்கு சூரியன் உதிக்கிறதே அனாவசியம்னு படறது" ஒரு தடவை ஆபீஸ் டூர் விஷயமா ரெண்டு நாள் போன போது பிருந்தா வெளிப்படையாக இப்படிச் சொன்னது என் நினைவின் பிரதிபலிப்பா இருந்தது.

"தீர்த்தக் கரையினிலே, செண்பகத்தோட்டத்திலே காத்திருந்தேன்" அவள் மேடையில் பாடினாள். நான் அந்த இடத்துக்கே போய் விடுவேன்.

'காருலாவும், சீருலாவும் மிதிலையில் கன்னி மாடம் தன்னில்' சீதையாக அவள் காட்சி தந்தாள்.

'அந்த நாளின் சொந்தம் போல உருகுகிறார்', அவள் பாட்டாலேயே எனக்கு பதில் தருகிறாளோ?

ஐயத்தேவரின் கீத கோவிந்தங்களில் லயித்தாள். லயிக்க விட்டாள். அவள் ராதையாகலாம்! நான் கோவிந்தனுக்கு ஈடாவேனா?

ஒரு நாள் ஒரு பொழுதும் அவளின் விரல் நகத்தைக் கூட நான் ஸ்பரிசித்ததில்லை. ஆனால், மனத்தால் நெருங்கி... நெருங்கி... நெருங்கி... அங்கே இடைவெளியெ இல்லை!

அன்றைக்கு பிருந்தாவின் வீட்டிலிருந்து புறப்படும் போது செருப்பு அறுந்து விட்டது. சனியன்... கழிவு குப்பை ஒதுக்கி இருந்த இடத்தில் தூக்கி எறிந்தேன்.

மறுநாள் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்படும் சமயம் "இது சரியாயிருக்கிறதா என்று பாருங்கள்" பெட்டியிலிருந்த புதுச் செருப்புக்கள் பிருந்தா நீட்டினாள். ஒரே திகைப்பு! மலைப்பு!

இது நாள் வரை எனக்காக யாரும் எதையும் வாங்கித் தந்ததே இல்லை. என்னிடமிருந்து பற்றி கொண்டவர்கள் உண்டே தவிர இந்தா என்று தந்தவர் இல்லை!

ஆமாம், என் அளவு; நான் உபயோகிக்கும் அதே ரகம்; இதை எப்படி அவள் கண்டு பிடித்தாள்? என் ஒவ்வொரு அசைவையும் அவள் கண்காணிக்கிறாள். இருவர் கண்களிலும் ஒரே ஜலம்!

"சார், புதுச் செருப்பு வாங்கி இருக்கிறார். நன்னாயிருக்கிறது. உங்களுக்கும் இந்த மாதிரி வாங்கினால் உழைக்காது?"

ஓ, அவள் கணவன் வருகிறானோ!

"அதெல்லாம் அவருக்குத் தாங்கும். நமக்கு கட்டுமா? விலை என்ன... அம்மாடி இருநூறா?" என்று சம்பிரதாயத்துக்குப் பின் விஷயத்துக்கு வந்தான்.

"ஏன் சார்... இனி மேல் ரேட்டைக் கொஞ்சம் உசத்தினாலென்ன? அது தான் நிறையக் கச்சேரி வருதே! அந்த கல்யாணக் கச்சேரியும், சபா கச்சேரிக் காரங்களும் ஒரே டேட் கேட்கறாங்களே... சபாக்காரங்களை வேற தேதிக்கு மாத்திக்கச் சொல்லப்படாதா?" அவர் உலகமே வேற! அன்பால் தடைப்பட்டிருந்த என் நா எதையும் பேச விரும்பவில்லை. தலையை அசைத்து விட்டுப் புறப்பட்டேன்.

"அம்மா, அப்பா புதுச்செருப்பு வாங்கி இருக்காங்க, பார்த்தியா?" பொங்கலுக்கு வந்திருந்த என் மூத்த மகள் தான் கேட்டாள்.

"அதிசயமா இருக்குதே! உங்கப்பாவுக்கு ஒரு பொருளை துப்பா வாங்கத் தெரியாது. தனக்குன்னு சிகரெட் பாக்கெட்டைத் தவிர ஒண்ணு வாங்கிட்டது கிடையாது..." அவள் கண்களில் சந்தேகச் சாயல்.

இதிலே ஒரு சௌகரியம் என்னவென்றால் கதைப் பணம் எவ்வளவு என்றோ, அது எப்போ வந்தது என்றோ அவளிடம் சொல்வது இல்லை. அது என் பெர்சனல். அதனால் செருப்பு வாங்க பணம் எப்படி வந்தது என்ற கேள்வியிலிருந்து தப்பினேன்.

சொல்ல மறந்துட்டேனே! பிருந்தாவை சந்தித்த முகூர்த்தமோ என்னவோ ஆபிஸில் ஒரு பிரமோஷன். கதைகளும் கொஞ்சம் தாராளமாக வெளி வர ஆரம்பித்திருந்தது. ஒரு வேளை உண்ர்ச்சிகளுக்கு இப்போது தான் உயிர் வந்திருக்கிறதோ?

மலேயா சினேகிதன் ஒருத்தன் கூட வந்து வாங்கித்தந்ததாக சொல்லி சமாளித்தேன்.

"செருப்பு நிஜமாகவே பளபளான்னு நல்லா இருக்குப்பா. மாப்பிள்ளைக்கும், உங்களுக்கும் ஒரே அளவு தான்! அவுங்களும் இதே போல வாங்கணுமின்னு சொல்லிட்டிருந்தாங்க... நீங்க வேறே வாங்கிக்குங்களேன்! அவுங்க போட்டுக்கட்டம் இதை"

"அப்பா மாட்டேன்னா சொல்லப் போறாங்க! இதையெல்லாம் போய் கேட்டுக்கிட்டு? இவருக்கென்ன... மருமகன் தான் போட்டுக்கட்டமே" என் மனைவியின் தீர்ப்பு இது.

செருப்பின் பளபளப்பும், விலையும் இவர்கள் கண்ணில் படுகிறது! அதில் தெரியும் அன்பு, கரிசனம், விலை கொடுத்து வாங்கக் கூடியதா? தணிந்தே போய் கொண்டிருந்த எனக்கு அப்படி ஒரு ஆக்ரோஷம் எப்படி வந்தது?

"மனுஷன் ஒரு நல்ல பொருள் வைச்சிருக்கப்படாதே! கண்ணிலே உறுத்திடுமே? இதை யாரும் தொடப்படாது... மருமகப் பிள்ளைக்கு வேணாமின்னா இதுலே அம்பது ரூபா இருக்கு. வாங்கிக் கொடு" கவரை அலமாரியில் தூக்கி எறிந்தேன். அதைத் துடைத்து பெட்டியில் வைத்தேன். அது தேய்ந்து போவதா என்று நான் நினைத்தேன்.

திருவையாற்றுக் கச்சேரிக்குப் போய் வந்த பின் பிருந்தாவைப் பார்க்கவே இல்லை. இந்த மூன்று நாளும் மூன்று யுகமாக இருந்தது.

கச்சேரிகள் பண்ண மற்ற பாடகர்களின் கச்சேரிகளையும் நிறையக் கேட்க வேண்டும். பிருந்தாவின் கணவரின் அனுமதியோடு நிறைய டிக்கட்டுகளை பிருந்தாவுக்கு கொடுத்தேன். எல்லாம் ஓசி என்று அவரிடம் சொன்னாலும் உண்மை என் பிருந்தாவுக்குத் தெரியும்.

கச்சேரி ஆரம்பிக்க அரை மணி நேரம் முன்னாலேயே போய் விடுவோம். கச்சேரி ஆரம்பித்ததும் நாங்கள் புறப்பட்டு விடுவோம்.

என்ன பேசுவோம்... என்னவோ, போங்கள்!

வம்பில்லை...
அரசியலில்லை...
விளையாட்டில்லை...

ஆனாலும் விஷயமிருந்தது...!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:26 am

எவ்வளவு வெயிலானாலும் தாங்கிக் கொள்ளலாம். குடை கொண்டு வராமல் மழை காலத்தில் வெளியே புறப்பட்டு மாட்டிக் கொள்ளும் அவஸ்தை இருக்கிறதே... அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். சரி, இத்தனைப் படுகிறோமே... குடை எடுத்துக் கொண்டு போவோம் என்றால் ஞாபகமாக போன இடத்தில் மறந்து விடுவேன். நண்பர்கள் வீடானால் திரும்பி விடும். விழாக்களில் தொலைத்த கணக்குத் தெரிய வேண்டுமானால் என் மனைவியிடம் தான் கேட்க வேண்டும்.

அடடா... அடிக்கடி விஷயத்தை விட்டு விலகுகிறேன்... இல்லே...

எங்கே விட்டேன்... ஆ, மழையில் நனைகிறதைப் பற்றி சொன்னேனா? ஒரு தடவை சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு வந்தேனா? "ஏன் ஒரு குடை எடுத்துண்டு வரக்கூடாது? இப்படித் தான் மழையிலே நனைகிறதா? காலையிலேயே மேகமூட்டமாய் இருந்துதே" என்று கண்கலங்கினாள் பிருந்தா. எனக்கு ரொம்ப சங்கடமாய் ஆகி விட்டது. என் மறதியைப் பற்றி சொன்னேன்.

மறுநாள் புத்தம் புதிய குடை ஒன்றை வாங்கி இருந்தாள்.

"அன்பு மனசில் இருந்தால் அதெப்படி மறந்து போகும்?" இந்த அடை மொழியோடுதான் கொடுத்தாள்! என்ன அன்பு இது! இதற்கு எனக்கு அருகதை உண்டா? இதற்கு என்ன ஈடு செய்யப் போகிறேன்?

இதிலே ஆச்சரியம் என்னவென்றால் குடையை எங்கு கொண்டு போனாலும் நான் மறப்பதே இல்லை. பேச்சிலே ஒரு கண்ணும், குடையிலே ஒரு கண்ணுமாகவே இருந்தேன். அன்புப் பரிசில்லையா?

"இதென்ன? வரவர தாம் தூம்னு செலவு பண்ண ஆரம்பிச்சுட்டீங்க? வீட்டிலே மூணு கொடை இருக்கிறப்போ புதுசா எதுக்கு இன்னொண்ணு? இதெல்லாம் யார் கத்துக் குடுத்தது? இதை மறந்து எங்க தொலைச்சுட்டு வரப் போறீங்களோ?" இப்படி அன்றைக்கு என் மனைவி ஆடிய ஆட்டம்!

"நாளைக்கு எங்க மேறேஜ் ஆனிவர்சரி டே. எங்க வீட்டிலே தான் உங்களுக்கு சாப்பாடு" என் பிருந்தாவின் ஆணை இது.

"உன் பர்த்டே எப்போ?" நாங்கள் தனியாக இருக்கும் போது அவளை ஒருமையிலேயே அழைப்பேன். மற்றவர்கள் முன்னிலையில்தான் மரியாதை!

"நான் பிறந்ததே வேஸ்ட்!" நான் எப்படியெல்லாமோ கேட்டும் அவள் சொல்ல மறுத்து விட்டாள்.

"சரி, குடை, செருப்பு எல்லாம் வாங்கி தந்தியே... உனக்குப் பணம் ஏது?"

"என் கணவருக்கு சில சமயங்களில் நல்ல மூடு வரும். ஒரு கச்சேரி பணம் உனக்கு... வெளியே நாலு இடத்துக்குப் போய் வரணும். 'பளிச்'சுனு ரெண்டு புடவை எடுத்துக்கோ" ண்னு தருவார்.

"அதுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டாம்" முந்திய நாள் நிகழ்ச்சிகள் போல் நெஞ்சில் ஓடின.

எதிரே ஜவுளிக் கடையில் கண்ணாடிக் கேஸுக்குள் இருந்த நாரீமணிகள் பளபளப்பான புடவைகளில் ஆசையூட்டினார்கள்.

'பளீரெ'ண்று ஒரு யோசனை. 'ஏன் பிருந்தா தான் வாங்கித் தர வேண்டுமா? என் கை முடங்கி விட்டதா?' 'ஸ்டாப், ஹோல் டான்' என்றபடியே நகரும் பஸ்ஸிலிருந்து குதித்தேன்.

'இவ்வளவு நேரம் நின்னிட்டிருக்கிறப்போ இன்ணா சார் செஞ்சிட்டிருந்தீங்க? பஸ்ஸுலே ஏறினா இறங்கற ஸ்டாப்பு நினைப்பு வச்சிக்கிறதில்லே! ஒடற பஸ்லேருந்து நீங்க குதிச்சு மண்டையை ஒடைச்சுக்குங்க. இருக்கறவங்க எங்க தலையை உருட்டட்டும்" இதற்கு மேல் அவன் பேச்சு கேட்காத தூரத்துக்கு பஸ் போய் விட்டது.

நிறையக் கட்டங்கள், கோடுகள் போட்ட புடவை விலை ரெண்டாயிரம் சொன்னாள். எடுத்து விட்டேன்.

நான் போய் நின்ற போது வீட்டில் பிருந்தா மட்டுமே இருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டும். கணவனின் சக ஊழியன் ஒருத்தன் செத்து விட்டானாம். இழவு வீட்டுக்குப் போயிருக்கிறதாக சொன்னாள்.

புடவையைக் கொடுத்தேன். " இதெல்லாம் என்ன இது?"

"ஏன், நீ கொடுத்து நான் வாங்கலாமென்றால் நான் தந்து நீ கட்டிக் கொள்ளக் கூடாதா? தப்பிதமாக எடுத்துக் கொள்வாரோ உன் அவர்...?"

மென்மையாகப் புன்னகைத்தாள்.

"எப்படி எடுத்துக் கொள்வாரோ, தெரியாது எதற்கு ரிஸ்க்? அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இருங்கள்"

மல்லிகை, ஜாதி என்றால் எனக்குக் கொள்ளப் பிரியம். என் முதல் இரவன்று கூட ஏகமாக வாங்கித் தூவி இருந்தேன். என் மனைவி ஒரு ஜடம். அதையெல்லாம் ரசிக்க மாட்டாள். அவளுக்குப் பிடித்தது கனகாம்பரம், டிசம்பர்.

பூவையும், புடவையையும் வாங்கிக் கொண்டு உள்ளே போன பிருந்தா வெளியே வந்ததும் நான் மயங்கினேன். பூவின் வாசனையும், அதை வைத்திருந்த பாங்கும்... இறைவனுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை! எனக்குள்ளதை பறித்து எங்கேயோ நட்டு விட்டு இன்று ஏன் கண்ணில் காட்டி வதைக்கிறார்? நான் பிருந்தாவை சந்திக்காமலே இருந்திருக்கக் கூடாதா?

என் ஆண்மை தடுமாறியது. கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க இதழ்கள் துடித்தன. என் பக்கத்தில் பஞ்சணையில் சாய்த்துக் கொண்டு என் ரசனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மனசு கெஞ்சியது. இந்த உலகில் இவள் என் பக்கத்தில் இருந்தால் காலம் ஓடுவதே தெரியாது. வாழ்க்கை ஆனந்தப் பூங்காவாக, இன்பபுரியாக இருக்கும்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:27 am

பெண்களை சோகத்தில் தன்வயபடுத்தலாம். அல்லது நக்ஷத்ரா வைரம் கொடுத்து கமல்ஹாசனாக மாற முயற்சிக்கலாம். ப்ருந்தாவை துன்பத்தில் ஆற்றுபடுத்தி அடைவதற்கு இதுவரை யோகம் அமையவில்லை. இப்போதோ 'R' சான்றிதழ் வழங்கப்பட்ட ஆங்கிலப்லட நாயகனாக நாயகியை கரைக்கும் நேரம்.

இப்படியெல்லாம் தடுமாறிய மனசுக்கு எவ்வளவோ லகான் போட்டேன். 'ஆனாலும் ஒரே ஒரு முறை தொடேன்' என்று உணர்ச்சிகள் கெஞ்சின.

நமஸ்கரித்து எழுந்தவளின் பின்னலைப் பிடித்திழுத்து பூவை முகர்ந்தேன், திரும்பினாள்.

"மூடிய கதவு. தனி வீடு. நமது தனிமை. அவரோ, குழந்தைகளோ இப்போதைக்கு வரமாட்டார்கள். இந்த உடலுக்கு அவர் சொந்தம், மனசு...? அதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? தவறு செய்வதற்கு வினாடிகள் போதும். செய்யத்தான் வேண்டுமா? நீங்கள் எது செய்தாலும் நான் தடுக்கப் போவதில்லை.

ஆனால் அதற்குப் பிறகு நாம் நிச்சியம் சந்திக்க மாட்டோ ம். ஆணின் பார்வைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியும். நிச்சயம் நான் உங்களை சகோதரனாக நினைப்பதாக சொல்லி ஏமாற்ற விரும்ப வில்லை. ஆனால் சமூக விதிகளை மதிக்கிறேன். உன் குழந்தைகளும், என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகின்றன என்ற மேனாட்டு வாக்கியத்தை அருவருக்கிறேன்.

நமது நாட்டுப் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி. அதை மதிப்போம். உங்கள் துணையில்லாவிட்டால் நான் அதிலிருந்து வழுவி விடலாம். தவிர மது, மாது இரண்டும் இருக்கிறதே... ஒரு நாளோடு தீர்ந்து போவதில்லை! அனுபவிக்கும் நேரத்தில் திருப்தி தரும்... பிறகு யார் இருந்தாலும், பார்த்தாலும் லட்சியம் செய்யாமல் போதை வசப்படுத்தும். மானம், மரியாதையெல்லாம் காற்றில் பறக்கும். பிறகு நம் நிம்மதி கானல் நீராகிவிடும். அந்த நிலை நமக்குத் தேவைதானா?"

நான் பின்னலை விட்டு விட்டேன். தலை குனிந்திருந்தேன்.

"ஏன் இப்படி தப்பு செய்து விட்டது போல்? என் செல்லத்திடம் இது தான் எனக்குப் பிடிக்கவில்லை! இந்த மிட்டாய் பிங்க் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்! என் ப்ரெண்ட்ஸெல்லாம் எப்போதிருந்து ரசனையை மாற்றிக் கொண்டாய் என்று கேலி செய்யப் போகிறார்கள்!" வழக்கமான குறும்பு அவள் குரலில்.

"அப்போ புடவை பிடிக்கலையா?" எனக்கு ஏனோ என் மனைவியின் நினைவு வந்தது.

"பிடிக்கலையா? சரியாப் போச்சு... இதிலேயுள்ள உங்கள் ஆசையைப் பார்க்கிறேன். உங்களை திருப்திப் படுத்த, உங்கள் ரசனைக்கு வளைந்து கொடுக்க எனக்குத் தெரிந்ததும் என் கையாலாகாத்தனத்தை நினைத்து வேதனைப் படுகிறேன். நாம் ஏன் ஒரு பறவையாய் விலங்காய் பிறந்திருக்கக் கூடாது?" கண்கலங்கினாள் பிருந்தா. அவள் தாபங்களைத் தூண்டி விட்டு விட்டேனோ?

"சே, எனக்கு புத்தி சொல்லி விட்டு நீ ஏன் கலங்குகிறாய்! நாளும் கிழமையுமாய், கண்ணைத் துடைத்துக் கொள்"

அவள் கணவன் வந்ததும் இருவருமாய் சாப்பிட்டோ ம். புடவையைக் காட்டினாள். "எப்போ எடுத்தாய்?"

"மேரேஜ் ஆனிவர்ஸரி டேயில்லையா? நான் ட்யூஷன் சொல்லிக் கொடுக்கிற இடத்திலே கொஞ்சம் பணம் கொடுத்தா. நீங்க 'சாரி' வாங்கிக்க சொல்லி கொடுத்த பணம் கொஞ்சம் இருந்த்து. எல்லாத்தையும் போட்டு எடுத்தேன்."

"சரி தான்... இதென்ன ஜமுக்காள கட்டம்? கலரும் அடிக்க வராப் போல..."

"எனக்குப் பிடிச்சிருக்கு! இன்னிக்கு கச்சேசிக்கு இது தான்... மேடையிலே பளிச்சினு தெரியாது?"

"உனக்குப் பிடிச்சிருந்தா சரி... செல்வம் நீங்க என்ன சொல்றீங்க? புடவை நல்லாவா இருக்கு?"

மௌனமாக அவர்கள் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஏன் இழுக்கிறார்?

"எனக்கு புடவையெல்லாம் வாங்கத் தெரியாது. பணத்தைக் கொடுத்துடுவேன். அவங்களே வாங்கிப்பாங்க!"

"நான் கூட அப்படித்தான். ஆனா இவ இருக்காளே... என்ன பணத்தைக் கொடுத்தாலும் கூடவே வந்தாதான்னு கழுத்தை அறுப்பா! அவளோட போய் போயி ஓரளவு டேஸ்ட் வந்துட்டது".

"உங்களுக்கு வாங்கத் தெரியாது. பணத்தைத் தாங்க... நாங்க வாங்கிக்கறோம்" என்று மண்டையில் தட்டும் என் மனைவிக்கும் பிருந்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்? மனைவி அமைவது இறைவன் கொடுத்த பரிசுதான்! எனக்குப் பரலோக பரமபிதா பரிசு கொடுக்கவில்லை.

அன்று மேடையில் பிருந்தா அதைத்தான் கட்டிக் கொண்டு பாடினாள். என் காது படவே பலர் புடவையை கேலி செய்தனர். ஆனால், பிருந்தா... என் அன்பை மட்டுமே அதில் பார்த்திருக்கிறாள். எனக்கு அது போதும்!

முதன் முதல் ஆசையாய் வாங்கிக் கொண்டு வந்த புடவையை என் மனைவி எப்படியெல்லாம் கேலி செய்தாள்! அதோடு போச்சா? குழந்தைகளுக்கு எடுத்தாலும், "ஐயே, இது என்ன கலரு குழம்பிப் போய்! இதை யாரு கட்டுவா? வேலைக்காரி கூட எம்புட்டு நாகரிகமா எடுக்கறா? உங்கப்பாவுக்கு ஒரு ஃபாஷனும் தெரியலை..." இப்படிச் சொல்லிச் சொல்லியே நான் வீட்டுக்காக துணி எடுப்பது துப்புரவாக நின்றுவிட்டது.

மனிதன் நிம்மதியே உணவு, உடை, உறையுள் மூன்றிலும் அடக்கம். நாலாவது தான் முக்கியம். இந்த மூன்றையும் இணைப்பது துணை. நல்ல நண்பர்கள், மனைவி. நண்பர்கள் விஷயத்தில் பாக்கியம் செய்த நான் இரண்டாவதில் தரித்திரனாகி விட்டேன். சரி, விடுங்கள்... அதையே பேசிக் கொண்டு! பிருந்தாவைப் பார்க்கும் போதெல்லாம் இந்த நினைப்பு தோன்றுகிறதே! நான் என்ன செய்யட்டும்!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மல்லி, ஜாதியை எங்கே பார்த்தாலும் அவள் என்னைப் பார்ப்பாள். நான் பர்ஸை திறப்பேன். என் மனதை மலர வைக்க அவள் தான் எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறாள்?

வெளியில் போகாத நாட்களிலும் 'தலையில் கட்டுமல்லியோடுதான் என்னை வரவேற்பாள். என் ரசனைகள், வெறுப்புகள் எல்லாம் அவளுக்கு அத்துப்படி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:27 am

என் பிருந்தாவுக்கு என்ன உடம்பு?

டாக்டரிடம் போகலாமென வற்புறுத்தினேன். மறுத்து விட்டாள். பின்னால் பார்த்துக் கொள்ளலாமென சொல்லி விட்டாள்.

எங்கேயோ இடித்தது... எங்கே என்று புரியவில்லை!

"என்ன சிந்தனை? காபி ஆறிப் போறது" என்றாள்.

"காபி வேண்டாம்... நீ குடிச்சிடு"

"ஏன்? ரொம்ப அலட்டிக்காதீங்க. உங்களாலே காபியை வேண்டான்னு சொல்ல முடியாது"

"இப்போதுதான் சொல்றேனே..."

"அதான் ஏன்கிறேன்?"

"என்னை பத்தி நீ இவ்வளவு தெரிஞ்சு வைச்சுட்டிருக்கறப்போ, உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதுன்னு என்னை முட்டாளாக்கிட்டே பாரு! அதுக்காகத்தான்..." வெடுக்கென்று எழுந்தேன்.

இதென்ன என் கைகளுக்கு மட்டும் சூடும் குளிர்ச்சியுமாய்? வெயில் காலத்தின் வெளியில் நின்ற காரின் உஷ்ணமும், விளம்பரங்களில் காண்பிக்கும் மென்தால் பபுள்கம் போட்டால் வரும் சில்லிர்ப்பும், ஒருங்கே ஏற்பட முடியுமா? நிச்சயம் முடியும். என் ப்ருந்தாவின் தொடுகை ஏற்படுத்திய குளிர்ச்சியை அவள் கண்ணீர் போக்கியது.

தானாக வந்து காதலி ஸ்பரிசித்தால், அந்த இன்பமே தனி என்று வள்ளுவரின் காமத்துப்பாலில் படித்ததுண்டு! அனுபவத்தில் இப்பொழுது உணர்ந்த போது? வள்ளுவர் இஸ் க்ரேட்.

"செல்வம்... நீங்க காபியைக் குடியுங்க. நான் சொல்றேன்..."

அந்த சங்கீதக் குரலில் முதன் முதல் என் பெயரை உச்சரிக்கிறாள். இரண்டாவது இன்பம். எத்தனையோ பேர் என்னைக் கூப்பிட்டு இருக்கிறார்கள். என் பெயர் இத்தனை அழகாகவா இருக்கிறது!?

பேசாமல் காபியைக் குடித்தேன்.

"அவர் வேலை பார்க்கிற ஜவுளிக் கடையை விற்கப் போறாங்களாம். பழைய முதலாளி சிங்கப்பூர் போறார். புது முதலாளி இவங்களுக்கு எல்லாம் மூணு மாசச் சம்பளம் கொடுத்து நீக்கிட நினைக்கிறாராம்! இவர் பழையபடி வேலை தேடணும்... அதிகம் படிப்புமில்லை. இருபத்தி நாலு மணி நேரமும் வீட்டிலே இருந்தா இவர் தொல்லை தாங்க முடியாது... அந்தக் கவலைதான்!"

இன்னும் அவள் என் கையை விடவில்லை. நானும் விடுவித்துக் கொள்ளவில்லை.

என் வைர மோதிரம் தொலைந்து விட்டதாக கேள்வி பட்டதும் என் மனைவி குய்யோ, முறையோவென்று அலறினாள். ஆனால், என் ப்ருந்தாவுக்கு அது ஜவுளிச் சரக்காக மாறி இருக்கிறது தெரிந்தால் என்னை சும்மா விடுவாளா?

எப்படியோ, ப்ருந்தா பழையபடி கலகலப்பாக இருந்தால் சரி. அவள் ஸ்பரிசம் எதிர்பாராத போனஸ். அது அடிக்கடி கிடைக்காதது.

என் கதாபாத்திரங்களை அவள் விமரிசிக்கும் கோணமே தனி.

ஆனால் இன்னொரு சுகத்தை இழக்கத் தயாராயில்லை. கண்டிப்பாய் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் என்று கட்டளை போட்டு விட்டேன்.

"ஏன் செல்வம்... வைதீக குடும்பத்தில் பிறந்தவளை ஒரு நிமிடத்தில் அந்த அனாசாரத்தோட அனுப்பிட்டேளே?" என்று கடிந்து கொள்வாள்.

"ஆனாலும் நீங்க வரவர ரொம்ப மோசம்... கல்யாணம் பண்ணிண்டு ரெண்டு குழந்தை பெத்தவ ஓடிப் போறதாவது!" என்று கோபித்துக் கொள்வாள்.

நான் புன்னகையோடு மௌனமாய் இருப்பேன்.

"இன்னிக்கு நீ கச்சேரிக்குப் போகக் கூடாது".

"இது என்ன வம்பு? அட்வான்ஸ் வாங்கிட்டு வாக்குத் தவறலாமா? அப்புறம் யார் சான்ஸ் கொடுப்பா?"

ஏடாகூடமான நேரத்தில் வந்து விட்டேனோ? கால்கள் உள்ளே போகத் தயங்கின. என் ப்ருந்தாவின் குரல் அழுவதா? அட்டகாசமாய் கொக்கரிக்கிறான் அவள் கணவன்.

"சான்ஸ் வரக்கூடாதுன்னுதானே அப்படி சொல்றேன்! அப்பதான் உன் கொட்டம் அடங்கும்..."

"நீங்க பேசறது உங்களுக்கே நன்னா இருக்கா? நான் என்ன கொட்டமடிக்கிறேன்?"

"சம்பாதிக்கற திமிர்! வாய்க்கு வாய் பதிலா கேட்கறே?"


ப்ருந்தாவுக்கு விழுந்த அடி எனக்கு உறைத்தது.

"நீங்க ரெண்டு வேஷம் போடறேள். அவர் எதிரிலே நல்லவராட்டம் நடந்துண்டு போனப்புறம்.... சே, நாக் கூசறது! கச்சேரிக்குப் போகலேன்னா பட்டினி கிடக்க வேண்டியதுதான்"

"கிடந்தா என்ன மோசம் போயிடும்? தாலி கட்டினவன் நான் சொல்றேன். பட்டினி கிட! எங்கப்பா அன்னிக்கே சொன்னார். பொம்மனாட்டியை மேடை ஏத்தி சம்பாதிக்க விட்டே, துளிர்த்துப் போயிடும். மதிக்க மாட்டேன்னார்... நான் முட்டாள். உன்னை நம்பி ஏமாந்துட்டேன்"

"நீங்க சரியான ஆம்பிளையா இருந்தா செல்வம் வந்த உடனே நேருக்கு நேர் சொல்லுங்கோ..."

"ஐயோ... அம்மா" எதனாலோ அடிக்கிறான். விறகா, கம்பா? தள்ளி பார்த்தேன். கதவு தாளிட்டு இருந்தது. தட்ட பயம்! விவாகரத்தின் காரணகர்த்தாவே நானாக இருக்கும்போது அவர்கள் முகத்தில் முழிப்பதெப்படி?

"ரத்தம் வருதா? வரட்டும்... செல்வம் என்ன பெரிய கொம்பனா? அவன்கிட்டே எனக்கென்னடி பயம்? தாராளமா சொல்றேன். தேவடியாத்தனமா பண்றே? அவன் யாருடீ உனக்குப் பூ வாங்கிக் கொடுக்க? அவன் எடுத்துக் கொடுத்த புடவையைக் கட்டிக்கறதை விட அம்மணமா இருக்கலாமே?! எதுக்காகடீ வைர மோதிரத்தை செலவு பண்றான்? சொல்லு... எனக்குத் தெரிஞ்சாகணும்!"

"சே.. முடியை விடுங்கோ. கொஞ்சம் கொஞ்சமா இப்படிக் கொல்றதை விட விஷம் கொடுங்கோ... தின்னுட்டு ஒரேயடியா ஒழிஞ்சுடறேன். சரியான சமயத்திலே செல்வம் உதவலேன்னா குழந்தைங்க படிக்கிறதேது? நடுத் தெருவில் நின்னிருப்போம்"

"படிப்பென்னடி படிப்பு? போய் மூட்டை தூக்கச் சொல்லு... ஹோட்டல்லே போய் மாவரைக்க சொல்லு... பொண்ணை எவனாவது கூலிக்காரனுக்கு, குமாஸ்தாவுக்குக் கொடு! ஐ.ஏ.எஸ். வேணுமின்னு ஏன் ஆசைப்படறே?"

"தூ... நீங்களும் ஒரு தகப்பனா? என்ன பெருந்தன்மையான நினைப்பு!"

மறுபடி அடி விழுந்த போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாங்க முடியாமல், ஆனது ஆகட்டும் என்று படபடவென்று கதவைத் தட்டி விட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:27 am

சிறிது நேரம் அசாதாரண மௌனம். கதவு தாள் நீக்கப்பட்டது.

"அட, உங்களுக்கு ஆயுசு நூறு. பிருந்தா செல்வம் சார் வந்திருக்கிரார். சூடா காபி கொண்டா... என்ன இந்த நேரத்திலே? சாயங்காலம் தானே கச்சேரி? கதை ஏதாவது பிரசுரமாகி இருக்கா?"

அற்புதமான நடிப்பு. சற்று முன் நான் கேட்டவை நாடக வசனங்களோ? இருக்க முடியாது. என் காதுகள் என்னை என்றுமே ஏமாற்றிய தில்லை!

பிருந்தா காபியுடன் வந்தாள். முகத்தைக் கழுவி, லேசான பவுடர் பூச்சுடன் திலகமிட்டிருந்தாலும் முகமும், கண்களும் லேசாக வீங்கி இருந்தன. தலை குனிந்தபடி வைத்து விட்டு புறப்பட்டாள். "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" இவள் எவ்வளவு தூரம் நடிக்கிறாள் என்று பார்ப்போம்! 'ஒண்ணுமில்லே வெங்காயம் உரிச்சேன்... அதோட லேசா ஜுரம்...' "அப்படியா? அப்படீன்னா ஏன் வெங்காயம் உரிக்கறீங்க? கச்சேரியை வேணா கேன்சல் பண்ணிடலாமா?"

அவசரமாக மறுத்தான் அந்த அயோக்கியன். "சேச்சே, அதெல்லாம் வேண்டாம். சாயங்காலத்துக்குள்ளே சரியாயிடும். வாக்கு மாறினா சான்ஸ் கிடைக்காது... ஏன் பிருந்தா, உடம்பு சரியில்லேன்னா வெங்காயம் ஏன் உரிக்கறே? வெறுங் குழம்பு வைக்கிறது? பார்த்தீங்களா சார்... உங்ககிட்டே சொல்றது எங்கிட்டே சொல்லி இருக்கக் கூடாதா? சாருக்கும் இலையைப் போட்டுடு..." நான் அவசரமாக மறுத்து விட்டு வெளியே வந்தேன். நான் வந்த காரியமே வேறே!

கொஞ்ச தூரம் வந்த பிறகு தான் செருப்பை மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாளாய் ஒதுங்கி இருந்த மறதி ஒட்டிக் கொண்டது எப்போ? மறுபடி திரும்பினேன்.

"ஏன், அவன் மடியிலே படுத்துண்டு கொஞ்சறது தானே? உடம்பு சரியில்லையோ உடம்பு... அவனாடீ உம் புருஷன்?"

"சே, நீங்க ஒரு மனுஷரே இல்லே" நான் செருப்பை எடுக்காமலே திரும்பி விட்டேன்.

"உன்னாலே இவ்வளவையும் சீரணிச்சுண்டு எப்படி வளைய வர முடிகிறது?"

இதமாக புன்னகைத்தாள் பிருந்தா.

"உங்களுக்கு பிருந்தா கதை - ஐ மீன்... துளசி கதை - தெரியுமோ?

நீங்க முழிக்கறதைப் பார்த்தா தெரியாதுன்னு நினைக்கிறேன். அவள் தன் கணவன் சங்க சூடனை உயிரா மதித்தாள். அவனைப் போரிலே தேவராலேயும், மூவராலேயும் கூட வெல்ல முடியலை... கடைசியிலே மகாவிஷ்ணு ஒரு உபாயம் செஞ்சார்."

"தெரியும்... சங்க சூடன் உருவத்திலே போய்..."

"ஆமாம்... இந்திரன் செய்த அதே தப்பு! அவன் செய்தப்போ அவனுக்கு உடம்பெல்லாம் கண்ணாச்சு. சாட்சாத் நாராயணனே செய்தப்போ..."

"அசுரனை ஒழிக்க வேற வழி தெரியலே! துளசியின் கற்பு ஒரு கவசமா இருந்த்து. அசுரன் அட்டகாசம் தாங்க முடியலே... சரி, இப்போ எதுக்கு சங்க சூடன் கதை?"

"சொல்றேன்... இன்னிக்கும் துளசி மகாவிஷ்ணுவின் மார்புலே தான் மாலையாத் தொங்கறா. அவர் பாதத் தடியிலே தான் கிடக்கா... துளசி தான் எனக்குப் பிரியம்னு அவர் வாயாலே சொல்லி இருக்கார்... ஜ, மீன்... இப்பப் புரியும்னு நினைக்கிறேன். ரெண்டாவதாக் கிடைச்ச மகாவிஷ்ணுவோட தான் அவ இணைஞ்சிருக்கா. தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு பிருந்தான்னு பேர் வைச்சதாலே! உங்க பேர்லே ஒரு மந்திர சக்தி இருக்கு. உங்க வரவுக்காக, தரிசணத்துக்காக நான் எதையும் தாங்கிப்பேன் தாங்கிக்க முடியும்."

என்னால் எதுவுமே பேச முடியவில்லை. வறியனுக்கு புதையல் கிடைத்த மாதிரி எனக்கு அவ்வளவு பாக்கியமா?

"என்ன பேசாம இருக்கேள் செல்வம்? இவ மனசாலே சோரம் போறதுக்கு 'ஒரு நாள் அறியாம தவறு நடந்துட்ட துளசியை' வக்காளத்துக்கு இழுக்களான்னு நினைக்கிறேளா?"

"இல்லை" அவசரமாக மறுத்தேன்.

மனசாலே சோரம் போகாதவா யாரு? நான் தைரியமா ஒத்துக்கறேன். ரொம்பப் பேர் அத்திக்காயா மூடி வைச்சுக்கறா... ராதா கல்யாணம் பண்றாளே! ராதா யாரு? இன்னொருத்தன் மனைவி! அது தேவலையா? மூடி மறைக்கத் தெரிஞ்சவா தான் பத்தினின்னா நான் பத்னி இல்லே..."

அந்த கோரங்களுக்குப் பிறகு நான் சில நாள் பிருந்தாவை சந்திக்கவே இல்லை. ஆமாம். சில நாள் தான்... அப்புறம் போன் பண்ணி சந்தித்த போது தான்! அவள் கொட்டி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

"செல்வம், ஒரு கதை கேட்டிருக்கேளா? புலி விரட்டிண்டு வந்ததாம் ஒருத்தனை. பாதுகாப்புக்காக மரத்தில் ஏறினால் மேலே மலைப்பாம்பாம். பயந்து போய் பிடியை விட விழுந்த இடம் ஒரு பாழும் கிணறு. இடையில் இருந்த கரட்டில் அவன் தொத்திக் கொண்டு பார்த்தால் கீழே வாயைப் பிளந்து கொண்டிருக்கும் சிங்கம். எப்படியோ தவறி விழுந்திருக்கிறது.

மேலே புலி... கீழே சிங்கம்... இந்த நிலையில் இவன் ஏறி அலைப்புண்ட வேகத்தில் மரத்தில் உடந்த தேன்கூட்டிலிருந்து தேன் துளிகள் சொட்டியதாம். அதை ருசித்த அவன் சப்புக்கொட்டினானாம். இந்தக் கதையை நான் எத்தனை முறை ரசித்திருக்கிறேன் தெரியுமா? மனிதப் பிறவிகளின் ரசனைகள் அப்படி... இதிலே உங்கள் சந்திப்பு எனக்குத் தேன் துளி! இன்னும் எப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியும்?"

"போதும் பிருந்தா... நீ சொல்லி நான் புரிந்து கொள்ள வேண்டிய உணர்ச்சியில்லை இது! ஆனாலும்..."

"அவருக்குப் பொறுப்பும், பாசமும் குறைச்சல்! ஏன் இல்லேன்னு சொன்னாக் கூடத் தப்பில்லை. என் சம்பாத்தியம் வேண்டி இருக்கற அதே சமயம் நான் சம்பாதிக்கறதும் பிடிக்கலை."

"செல்வம், ஃப்ராங்கா உங்க கிட்டே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்றேளா?"

"இது வரை மறைச்சுப் பேசியிருக்கிறதா அர்த்தமா?"

"அப்படி இல்லை... இது கொஞ்சம் அந்தரங்கமானது. சொல்லப் போனா ஒரு பெண் பேசக் கூடாதுன்னு வகுத்து வைச்சிருக்கிறது... என்னடா, இவ வெட்கமில்லாம இதெல்லாம் கேட்கிறான்னு நீங்க நினைச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லே!?"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:28 am

அப்படி என்ன கேட்கப் போகிறாள் என்று மனசு பரபரத்தது.

"என்கிட்டே உனக்கென்ன தயக்கம்?" ஆர்வத்தோடு பார்த்தேன்.

கொஞ்ச நேரத் மௌனத்துக்குப் பின் கேட்டாள்.

"கல்யாணத்தைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன? ரெண்டு பேருக்கும் சமபங்கா? இல்லே... ஆணின் சுகத்துக்காகவா?"

"எதுக்கு பீடிகை? விஷயத்துக்கு வா..."

"இல்லே... எனக்கு பதில் தெரிஞ்சாகணும்".

"நல்லா யோசிச்சு சொல்லுங்க. நீங்க எப்பவாவது மனைவிக்கு இஷ்டமில்லாத போது உங்க ஆக்கிரமிப்பைக் காட்டியதுண்டா?"

"எதுக்கு இப்போ இது?"

"இல்லை. நீங்க எங்கிட்டே பொய் சொல்ல முடியாது. அருவருக்கத் தக்கபடி பொண்டாட்டியையே பலாத்காரம் செய்கிறவங்க நிறைய பேர்..." அவளால் பேச முடியவில்லை. குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

ஆஃபிஸில் எக்கச்சக்கமான வேலை. அதோடு ஒரு மாச டூர். வந்ததும் பிருந்தாவைப் பார்க்க ஓடினேன். வீடு பூட்டி இருந்தது.

யாரிடம் கேட்பது? ஒன்றுமே புரியவில்லை. எதிரே சபாக் காரியதரிசி சபேசன் வந்தார்.

"என்ன செல்வம், ஆளையேக் காணோம்? அந்தப் பொண்ணு பிருந்தாவுக்குக் கான்சராமே! அடையாறிலே சேர்த்திருக்காமே. இப்போ எப்படி இருக்கு?"

என்ன இது? பூமி அதிர்கிறதா? கடல் கொந்தளிப்பா? இடி இறங்கியதா? திடீரென்று காது செவிடாகி, கண் குருடாகி உலகமே அஸ்தமித்து விட்டதா? விபத்து எதுவும் இல்லாமல் பஸ் ஏறி வந்து சேர்ந்தது பெரும் அதிசயம். நின்ற இடம் அடையாறு கான்சர் மையம்.

ஆஸ்பத்திரி நோயாளிகளுக்குத்தான் கிருமி தாக்குதால் என்றால், கணினிகளும் கிருமி நாசினி இல்லாததால் நோயுற்று இருந்தது. ரிசப்ஷனில் கேஸ் ஷீட்டுகளை புரட்டி, பெயர் கண்டு பிடிக்க அரை மணிக்குள்தான் ஆயிற்று. ஓடினேன்.

நல்ல வேளை... யாருமில்லை. நான் விரும்பிய தனிமை கிடைத்தது. கொஞ்ச நேரம் அவளைப் பார்த்தபடியே இருந்தேன். அது பொது இடம். ஆஸ்பத்திரி என்பதால் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.

"எப்போ வந்தீங்க செல்வம்? யார் சொன்னாங்க? ஆரம்ப நிலைதானாம். ஆபரேஷன் செய்தா சரியாயிடும்னு..." என் முகத்தைப் பார்த்து அவள் பேச்சு நின்று விட்டது.

தினம் வாக்கிங் ஆஸ்பத்திரி பக்கமாய் மாற்றிக் கொண்டேன். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயம் கூட என்னை விட்டுப் போய் விட்டது. ஷேவிங் செய்து கொள்வதில், மடிப்பு கலையாமல் ட்ரெஸ் பண்ணிக் கொள்வதில் எதிலுமே சிரத்தை இல்லை.

பணம் செலவழித்து ஸ்பெஷல் வார்டில் சேர்த்தேன்.

------ "இப்போ எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடுச்சே? என்னடி சொல்றே? உன் கள்ளப்புருஷன் தினம் வந்துட்டுப் போறானே! எதுக்கு?"

"அவரையே கேட்கிறதுதானே?"

"நீ இல்லாட்டா குடும்பமே நடக்காதுன்னு நினைச்சிண்டிருந்தியே? குழந்தைகள் மூணு வேளையும் மூக்கைப் பிடிக்கச் சாப்பிடறா; பள்ளிக்கூடம் போறா. பெரியவனுக்கு கால் செண்டர் வேலை கிடைச்சிருக்கு. மாசத்துக்கு 25,000".

"கேட்கவே சந்தோஷமாயிருக்கு. எப்படியோ என் தரித்திரம் என்னோடு ஒழிஞ்சா சரி!"

"ஆரஞ்சுப் பழத்தை உரிச்சுத் தரவா?"

"வேண்டாம். வாய்க்கு நன்னா இல்லே".

"ஏன்? அவன் வந்து ஊட்டி விட்டாதான் ருசிக்குமோ? என்ன பார்க்கிறே? கொண்டவனுக்கு துரோகம் பண்ணினே... உள்ளே புத்து புறப்பட்டுத்து! இல்லேன்னா சுத்தம் சுத்தம்னு பார்த்த உனக்கு இது வருவானேன்! என்னைப் பார்த்தியா, எப்படி இருக்கேன்?"

"நீங்கத் திருப்திப்பட்டா சரி!"

"தீசல்... இன்னும் உன் திமிர் அடங்கலியே! ஆபரேஷனில் பிழைச்சுட்டேன்னு வை... அவனோடு ஓடிடுவியா?"

"நிச்சயம் பிழைக்க மாட்டேன், டோ ண்ட் வொர்ரி."

கொலைகாரப் பாவி... ஊமை அழுகையுடன் மறுபடி வராண்டாவுக்கேத் திரும்பினேன். அவனை அப்போது சந்திக்கும் திடம் எனக்கில்லை. தான் வளர்த்த பூனையிடம் கூட பிரியம் காட்டுவார்களே! அவனுக்காகவே வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்ற அவளை; அதுவும் மரண வாசலில் இருப்பவளை; என்னமாய் வதைக்கிறான்?

"ஹலோ! செல்வம்... வந்துட்டீங்களா? ஏன் இங்கேயே நிக்கறீங்க? ரிலிவ் பண்ண ஆள் வரலியே, எப்படிப் போறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். வேணு நேத்திலேர்ந்து வேலைக்குப் போறான். உங்க பேரைச் சொன்னதுமே மறுபேச்சுப் பேசாம அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்துட்டானாம்"

"சந்தோஷம்"

"என்ன இது? பாலகுமாரன் மாதிரி தாடி வளர்த்துண்டு! இலக்கியமெல்லாம் கூட படிக்கறதுண்டா?" அட்டகாசமாய் சிரித்தான். " என்னை பார்த்தீங்களா? நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன். ஸ்டுண்ட் மாதிரி ஸ்னோ, செண்ட்ன்னு ஷோக்காயிருக்கேன் பார்த்தீரா? ட்ரிம்மா இருங்க சார்".

----- "அப்பா, இன்னிக்கு 'ஜே... ஜே' போகலாமா?"

"வேண்டாம்மா" ஜென்னி கேட்டு எதையும் நான் மறுத்ததில்லை.

"போங்கப்பா! வரவர நீங்க ரொம்ப மோசம். வெளியே கூட்டிட்டுப் போறதே இல்லே. போரடிக்குது"

உள்ளேயிருந்து ஜென்னியின் அம்மா வந்தாள். "இதை நான் சொன்னா தப்பு வரும். பணத்தைக் கொடுத்துட்டா தீர்ந்து போச்சா? ஆசை, பாசம் ஓண்ணுமில்லே... போன வாரம் சித்தப்பா வூட்டுக் கலியாணத்துக்குப் போனா ஆளுக்கு ஆள் கேள்வி கேட்கிறாங்க. ஏண்டீ, ஊரு உலகத்து ஆம்பிளைங்க வேலைக்குப் போகலியா? சம்பாதிக்கலையா? உம்புருசன்தான் அதிசயமா சம்பாதிக்கறாரா? உறவு மொறையிலே நல்லது கெட்டதுன்னா கலந்துக்கிறதில்லையான்னு? ஒங்களுக்கு என்னா வந்திச்சு? நேத்து ஒங்களுக்குப் பிடிக்குமேன்னு எறாலும், கோழியும் வறுத்திருந்தேன். தொட்டுக்கூட பார்க்கலை. ராவுக்குப் படுத்தா தூங்காம பெரள்றீங்க... கீழே கிடக்கிற சிகரெட் துண்டுங்க்ளே சொல்றதில்லே!"

"இப்ப என்ன செய்யணுங்கறே?"

"இன்னிக்கு எங்க அத்தை பேத்திக்கு மஞ்ச நீராட்டறாங்க. அதுக்கு நீங்க வரணும்".

"இவ்வளவுதானே... சரி", புறப்பட்டேன்.

டி.ஆர்.பி ரேட்டிங் உயரும்போது நீட்டிக்கப்படும் நெடுந்தொடராய், எனது நிராயுதபாணி நேரத்தை உணர்ந்து அவள் "நான் ஒண்ணே ஒண்ணு கேட்பேன். கோச்சுக்க மாட்டீங்களே?" என்றாள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக