புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
70 Posts - 53%
heezulia
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_m10அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த முதல்வர் யார்?- ரஜினி


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 14, 2011 7:23 pm

தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.


ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும், ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த், இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார்.

நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!

ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.
இந்த நிலையில், நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்: "படம் ஆரம்பிக்குமுன், அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம், 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?", என்று முதல்வர் கேட்க, இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினி, படம் முடிந்த கையோடு, காரில் ஏறிப் பறந்தாராம்!

ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்!

ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
நன்றி TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 14, 2011 7:33 pm

நாடு முழுவதும் விலைவாசி உயர்வால் ஏழைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் அடுத்து யார் முதல்வராக வந்தாலும் அதை முதலில் தீர்க்க வேண்டும் என்று நடிகர் ரஜினி கூறினார்.


இந்த தேர்தலில் ரஜினிகாந்த்தின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு பலமாகவே இருந்தது. இருப்பினும் அவர் வெளிப்படையாக எதையும் பேசவில்லை. இருப்பினும் அவரை திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆசி பெற்றனர். அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் சந்தித்துப் பேசினார். அதேபோல பாஜக தலைவர் நிதின் கத்காரியும் போய்ப் பார்த்தார்.

இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

காலை 10.45 மணிக்கு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு காரில் வந்தார். அந்த கல்லூரி வளாகத்தில் வேறு, வேறு இடங்களில் 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 167, 168, 169 ஆகிய எண் கொண்ட அந்த மூன்று வாக்குச் சாவடிகளும் பொது வாக்குச் சாவடிகளாகும். நடிகர் ரஜினி வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி 169வது எண் ஓட்டுச்சாவடி யாகும். இது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி போர்டிகோ பகுதியில் இருந்தது.

அலைக்கழிப்பு...

ரஜினியின் காரும் மிகச்சரியாக அந்த வாக்குச்சாவடி அருகில் வந்து நின்றது. கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி அந்த ஓட்டுச் சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167-வது ஓட்டுச் சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169-வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர்.

இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169-வது வாக்குச் சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப் போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை போட்டோகிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார்.

வாக்களித்த கையோடு மின்னல் வேகத்தில் அவர் புறப்பட, அவரிடம் தேர்தல் தொடர்பாக கருத்து கேட்க நிருபர்கள் பின் தொடர்ந்தனர். ஆனால் ரஜினி நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

ரஜினி வீட்டுக்கு சென்று சேர்ந்ததும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்.

தேர்தலில் எதை மையமாக கருதுகிறீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு ரஜினி கூறியதாவது:

தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பல பிரச்சனைகள் உள்ளன. அதில் மிகப் பெரியது, முக்கியமானது விலைவாசி உயர்வு. இதனால் ஏழைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் அடுத்து யார் முதல்வராக வந்தாலும் அதை முதலில் தீர்க்க வேண்டும். அடுத்த முதல்வராக யார் வந்தாலும், அவர் ஏழைகள் நலனைக் காக்கும், விவசாயிகள் நலன் காக்கும் முதல்வராக இருக்க வேண்டும்.

பொதுவாக நிலையான அரசும், மக்கள் நல அரசும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தத் தேர்தல் மிகக் கடுமையான போட்டியைக் கண்டுள்ளது. யார் வருவார்கள் என்பதை கணிப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்துக் கேட்டபோது,

"அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அவருடன் இணைந்து செயல்பட நான் ஆசைப்படுகிறேன்," என்றார்.

அரசியலில் உங்கள் பங்களிப்பு இனி வரும் காலங்களில் பெரிதாக இருக்குமா?

அது பற்றி வேணாம்... இப்போது அதுபற்றி பேசவும் விரும்பவில்லை. பார்க்கலாம்.

ஊழலுக்கு எதிராக நீங்கள் இயக்கம் எதுவும் ஆரம்பிப்பீர்களா?

அதான் அன்னா ஹஸாரே ஆரம்பித்துள்ளாரே... அதுவே போதும். அதில் நானும் இருப்பேன்.

யார் அடுத்த முதல்வராக வருவார்கள்?

அதை சொல்வது கஷ்டம், என்றார்.

ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடிகர் கமல்ஹாசன் ஓட்டுப் போட்டார்.

அஜீத், சூர்யா ஓட்டுப் போட்டனர்

நடிகர் சிவக்குமார் தனது மனைவி, மகள் பிருந்தா, மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருடன் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார்.

நடிகர் அஜீத் திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் அண்ணா நகரில் உள்ள வள்ளிம்மாள் பள்ளியில் வாக்களித்தனர்.

கவிஞர் வைரமுத்து டிரஸ்ட்புரத்தில் உள்ள சென்னைப் பள்ளியிலும், நடிகை குஷ்புவும், அவரது கணவர் சுந்தர்.சியும் சாந்தோமில் உள்ள பள்ளியில் ஓட்டுப் போட்டனர்.

ஓட்டுப் போட்ட பின்னர் சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவரும் மகிழ்ச்சியுடன் வாக்களித்து வருகின்றனர். மனசாட்சிப்படி அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றார்.



யாதும் ஊரே யாவரும் கேளிர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 7:41 pm

இதனால் எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது என்ன என்றால் அடுத்து கலைஞர் ஆட்சிக்கு வந்தால் ரஜினிக்கு தீராத தலைவலிகள் கொடுப்பார் என்பது தான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 14, 2011 7:50 pm

இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் இல்லை. வைரமும். ப. வெற்றியும் இப்படி செய்ய முடியுமா?



அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Aஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Aஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Tஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Hஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Iஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Rஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Aஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 14, 2011 7:59 pm

ஆப்பை தேடி போய்................................ சிரி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 8:14 pm






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 14, 2011 9:02 pm

வாக்களிப்பது அவர் அவர் இஷ்டம்.



அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Pஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Oஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Sஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Iஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Tஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Iஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Vஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Eஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Emptyஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Kஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Aஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Rஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Tஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Hஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Iஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Cஅடுத்த முதல்வர் யார்?- ரஜினி  K
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 14, 2011 9:22 pm

வாக்களிப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்..
அவரது தனிப்பட்ட உரிமை...

தன் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்று பொருமுவது கட்சித் தலைவரின்

இவற்றை நாம் குறை கூற முடியாது...

ஆனால்.
ஊடகங்கள்...
தாங்கள் பிரபலமடைய எது வேண்டுமானாலும் செய்வார்கள்..

தேர்தல் விதிகளுள் முக்கியமானது:

யார் வாக்களிப்பதையும் படம் பிடிக்க கூடாது!! அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  139731

இதை மீறியவர்களைச் சிறைக்கு அனுப்பலாம்...

படம் பிடித்தவரைச் சிறைக்கு அனுப்பாமல் அங்கிருந்த காவல்துறையினர் என்ன செய்தனர்???

ஏன் அவரைக் கைது செய்யவில்லை?

இந்த விதி பொது மக்களுக்குத் தானா?
இதைக் ஏண் யாருமே கவனிக்கவில்லை?



அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Apr 14, 2011 9:42 pm

செரி கடைசியா ரஜினி யாருக்கு தான் ஓட்டு போர்டாரு அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  838572

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Apr 14, 2011 10:33 pm

அடுத்த முதல்வர் யார்?- ரஜினி  224747944 Super Star

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக