ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

4 posters

Go down

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு Empty தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

Post by சிவா Wed Apr 13, 2011 1:33 pm

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்து வருகின்றனர். தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பலம‌டங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறுவோம்: கருணாநிதி

ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறுவோம் என கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் ஓட்டளித்த முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க., கூட்டணி வெற்றி வாயப்பு எந்த அளவிற்கு உள்ளது என்று கேட்டபோது இவ்வாறு கூறினார்.

அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் : ஜெ., : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இன்று காலை 9 மணியளவில் ஓட்டுப் போட்டார். ஓட்டு அளித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெரும் என்றார்.

மக்கள் தி.மு.க., பக்கம் : ஸ்டாலின் : துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் ஓட்டுச்சாவ‌டியில் ஓட்டுப் போட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தி.மு.க., அரசு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சொன்னது மட்டும் அல்லாமல் சொல்லாத பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. எனவே தி.மு.க., ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ப‌தே மக்கள் விருப்பம். தி.மு.க., கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் : அழகிரி

மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் மத்திய அமைச்சர் அழகிரி ஓட்டு போட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அழகிரி : அ.தி.மு.க., வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். தி.மு.க., வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாகவும், வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றஞ்சாட்டி வருவது அ.தி.மு.க., வின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுவதாக கூறுவது அபத்தம். தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் அனைவருக்கும் தெரிந்ததே. எனவே தேர்தலுக்கான செலவு தேர்தல் கமிஷன் அனுமதித்த தொகையை விட குறைவாகவே இருந்துள்ளது. தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் அரசின் சாதனைகள் எடுத்துக் கூறப்பட்டன. ஆனால் அ.த‌ி.மு.க., எங்கள் குடும்பத்தை விமர்சனம் செய்வதை மட்டுமே செய்தது. தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அமோக வெற்றி : விஜயகாந்த் நம்பிக்கை : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய்பிரபாகர் ஆகியோரும் ஓட்டு போட்டனர். ஓட்டு போட்ட பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது; தேர்தல் கமிஷன் துவக்கத்தில் மிகவும் கண்டிப்புடன் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் லிபரலாக இருந்ததால் பணப் பட்டுவாடா நடந்தது. மக்கள் ஆதரவு இருப்பதால் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ரிஷிவந்தியம் தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

வரிசையில் நின்று வைகோ ஓட்டு : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் ஓட்டுப் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை ம.தி.மு.க., புறக்கணித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வந்த வைகோ ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து ஓட்டளித்தார்.

இயந்திரக் கோளாறு : தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில ஓட்டுச்சாவ‌டிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ராஜபாளையம் 41 வது வார்டு பூத் எண் 105ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் ஸ்வாஸ் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண் 105ல் இயந்திரக் கோளாறு காரணாக ஓட்டுபதிவு 5 நிமிடங்கள் ‌தாமதமாக துவங்கியது.

திருச்சியில் ஜரூர் : திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஓட்டுப்போட ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில், அவர் பிளாஸம் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேசன் காசிநாதன் ஓட்டளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ஆர்வம் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

விஜயகாந்த், அன்பழகன், சிதம்பரம் ஓட்டு :
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் ஓட்டுப்போட்டனர். அமைச்சர் அன்பழகன் அண்ணாநகரில் ஓட்டுப் போட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்டலாச்சி நினைவு அரசுப் பள்ளியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது குடும்பத்தாருடன் ஓட்டு போட்டார்.

ஆத்தூரில் பரபரப்பு : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி (தனி) தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி ஐஏஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓட்டுப்பதிவு துவங்கியதும், தனது தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ‌பெரியபுழல்வாசல் கிராமத்தில், உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்தார். ஓட்டுச்சாவடிக்கு அருகில், தஇமுகவினர் பேட்ச், தொப்பி உள்ளிட்டவைகளை கொடுத்து திமுகவிற்கு ஓட்டளிக்குமாறு தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டார். இதுகுறித்து, அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்‌தார். இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரபப்பு நிலவி வருகிறது.

முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் : தமிழகம் முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருவதால் முதல் 2 மணி நேரத்தில் 11 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் 9.2 % : ராமநாதபுரத்தில் 10 மணி நிலவரப்படி 9.2 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. கல்கிணற்று வலசை, கொட்டியன்வலசை, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

தர்மபுரியில் 7.04% : தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் 7.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் 10% : நாகப்பட்டினம், ஸ்ரீவேலூர் பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் 1 மணிநேரத்தில் 10 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் 9 சதவீதம் : திருச்சியில் இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரையிலான காலகட்டத்தில் 9 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மசினங்குடியில் அதிக அளவில் 49 ஓ : நீலகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மசினங்குடியில் அதிக அளவில் 49 ஓ பயன்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி ஓட்டுப்போட்ட வாக்காளர்களில் 10 சதவீதம் ‌வாக்காளர்கள் 49 ஓ பயன்படுத்தப்படுத்தியுள்ளனர்.

தினமலர்


தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு Empty Re: தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

Post by சரவணன் Wed Apr 13, 2011 2:04 pm

நம்மளால ஓட்டு போடா முடியலையே! சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு Empty Re: தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

Post by அருண் Wed Apr 13, 2011 2:12 pm

ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறுவோம்: கருணாநிதி!
அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்!


ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு Empty Re: தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 2:33 pm

சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு Empty Re: தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum