ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 1:56 pm

கொழும்பு, நவ. 3: விடுதலை புலி அமைப்பின் மறைந்த அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) அனுசரிக்கப்பட்டது.

கிளிநொச்சி, வன்னி ஆகிய பகுதிகளில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்து தமிழ்ச்செல்வனின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

இலங்கை மட்டுமல்லாது உலக முழுவதும் எங்கெல்லாம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் ஈழத்தமிழர்கள் திரண்டு தமிழ்ச்செல்வனின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் கூறுகையில், தமிழ்ச்செல்வன் ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்றார். எப்போதும் இன் முகத்தை உடையவர் தமிழ்ச்செல்வன். தனி ஈழப் போராட்டத்துக்கான அவரது பங்களிப்பு ஈடுஇணையற்றது என புலிகளின் இணையதளத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பின் வல்லமைமிக்க அரசியல் பிரிவுத் தலைவராக விளங்கிய தமிழ்ச்செல்வன், 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இலங்கை ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 1:57 pm

கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் மேலும் முன்னேற்றம்: புலிகள் பலர் பலி


கொழும்பு, நவ.3: விடுதலைப் புலிகளின் வலுவான இடமாகக் கருதப்படும் கிளிநொச்சியில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இலங்கை ராணுவம் மேலும் முன்னேறியது. அப்போது நடந்த சண்டையில் புலிகள் பலர் இறந்தனர்.

பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை இதைத் தெரிவித்தன.

அக்கராயன்குளத்துக்கு வடக்கே 3 கி.மீ. வரை ராணுவம் முன்னேறியுள்ளது. கிழக்கே தெரமுரிகண்டி என்ற இடத்திலும் கடும் சண்டை நடந்துவருகிறது.

கிளிநொச்சியில் அரசகுளம் பகுதியிலும் ராணுவம் வெற்றிகரமாக முன்னேறிவருகிறது.

முல்லைத் தீவு போர்முனையிலும் ராணுவம் முன்னேறிவருகிறது. குமலமுனை- தண்ணிமுறிப்புக்குளம் சாலை வரை ராணுவம் ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

அதேபோல, முல்லைத் தீவில் உள்ள ஆண்டான்குளம் பகுதியில் புலிகளின் 2 பதுங்கு குழிகளை ராணுவம் தாக்கியது.

அருகில் உள்ள 4 பதுங்கு குழிகளையும் ராணுவம் கைப்பற்றியது. இந்த இடங்களில் எல்லாம் புலிகளுக்கு கடும் சேதாரம் ஏற்பட்டது.

இப்பகுதியில் புலிகள் வைத்திருந்த 129 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன.

மடம் பகுதியின் வடமேற்கில் ராணுவத்தின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பூனெரின் பகுதிக்கு புலிகள் பின்வாங்கினர்.

யாழ்ப்பாணத்தில் முகமலை பகுதியில் 2 இடங்களில் நடந்த சண்டையிலும் ராணுவத்தின் கையே ஓங்கியுள்ளது.

4 தமிழர்கள் சுட்டுக் கொலை: இதனிடையே மட்டக்களப்பில் உள்ள கல்முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் வந்தவர்கள் சுட்டு தமிழர்கள் 4 பேர் இறந்தனர். மக்கள் கூடுவதற்குள் சுட்டவர்கள் பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் புலிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 1:58 pm

ராணுவத்தை ஏமாற்றும் புலிகளின் விமானங்கள்


கொழும்பு, நவ. 2: இலங்கை விமானப் படையின் கண்களுக்குச் சிக்காமல், விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்துவது எப்படி என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலைப் புலிகளிடம் ஒரு விமானம் மட்டுமே உள்ளதாக கருதப்பட்டது. தற்போது இரண்டு விமானங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 28-ம் தேதி கொழும்பு மின் நிலையம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி ராணுவத் தளம் மீது புலிகளின் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின.

புலிகள் அமைப்பின் இலகு ரக விமானங்கள் வானில் வட்டமிடுவதை இலங்கை ராணுவம் கண்டுபிடித்து விட்டது. ஆனாலும் அவற்றை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

கொழும்பு மற்றும் தள்ளாடி ராணுவத் தளங்களில் 12.7 எம்எம் ஏஏ ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளன.

வானில் பறக்கும் எந்த விமானத்தையும் துல்லியமாக சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட அந்த விமான எதிர்ப்பு பீரங்கிகள், புலிகளின் விமானத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் பறக்கும் விமானங்களை மட்டுமே விமான எதிர்ப்பு பீரங்கிகளால் தாக்க முடியும். ஆனால், புலிகளின் விமானங்கள் அதற்கும் தாழ்வாகப் பறந்தன. இதனால் அந்த விமானங்களை தாக்க முடியவில்லை என்று வீரகேசரி இதழ் தெரிவித்துள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 1:59 pm

அதேபோல், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்களின் கண்களிலும் புலிகளின் விமானம் மண்ணைத் தூவியுள்ளது.

சீன தயாரிப்பான எப்7 ரக விமானத்தில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி விமானத்தின் வெப்பத்தை உணர்ந்து இந்த ஏவுகணைகள் குறி தவறாமல் தாக்கும் திறனுடையது.

ஆனால், புலிகளின் விமானத்தில் வெப்பத்தைக் குறைக்க அதன் என்ஜினை மறுவடிவமைப்பு செய்துள்ளனர். இதனால் விமானத்தின் வேகம் குறைந்தாலும், எதிரி விமானங்களின் இலக்குக்கு எளிதில் சிக்காது.

புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியபோது, ராணுவத்தின் எப் 7 விமானம் மூன்று முறை எதிர்கொண்டது. ஆனாலும் ராணுவ விமானத்தால், புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று லக்பிமா நியூஸ் என்ற இதழ் தெரிவித்துள்ளது.

புலிகளின் விமானங்களில் ரேடார்களின் கண்களுக்குத் தப்பும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் தி சண்டே டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 2:00 pm

ராணுவத்துடன் மோதல்: 29 கடற்புலிகள் பலி


கொழும்பு, நவ. 1: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் 29 கடற்புலிகளை ராணுவத்தினர் கொன்றனர். வடக்குக் கடற் பகுதியில் நடைபெற்ற மோதலில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆறு படகுகளும் மூழ்கடிக்கப்பட்டன.

நடுக்கடலில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற மோதலில் 16 பேர் காயமடைந்தனர் என்று இலங்கை ராணுவம் தெரிவித்தது.

நடுக்கடலில் சந்தேகப்படும்படியான படகுகளை இலங்கை ராணுவம் கண்டுபிடித்தது. அவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பதை அறிந்தவுடன் அதன்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இதனால் அவர்கள் தப்பிச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

அதிக வேகத்தில் செல்லக்கூடிய இந்தப் படகுகளில் வெடிமருந்துகளை விடுதலைப் புலிகள் கடத்தியதாகத் தெரிகிறது.

உயிரிழந்த 14 பேரில் 7 பேர் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. காயமடைந்த 16 பேரும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தத் தாக்குதலின்போது இலங்கை விமானப்படையும் ஒத்துழைத்தது. விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்தனர். பதிலுக்கு ராணுவமும் தாக்குதல் நடத்தியது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 2:00 pm

இருதரப்பிலும் பயங்கரமான மோதல் நிகழ்ந்தது. கிளிநொச்சியின் வடகிழக்கு பகுதியில் குறிப்பாக வெலிஓயா பகுதியில் விடுதலைப்புலிகளின் தளங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

இதனிடையே அண்டங்குளம் பகுதியில் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது இரண்டு கையெறி குண்டு, 90 கண்ணி வெடிகள், 6 அதிநவீன வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

வெள்ளிக்கிழமை காலை 8.35 மணிக்குத் தொடங்கிய சண்டை மாலை 4.10 மணி வரை நீடித்தது.

இந்தச் சண்டையில் பல விடுதலைப் புலிகளும், சில ராணுவ வீரர்களும் காயமடைந்ததாகத் தெரிகிறது.

மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியில் போலீஸôர் 5 கண்ணி வெடிகளைக் கைப்பற்றினர். அத்துடன் ரிமோட் கண்ட்ரோல் கருவிகள், பேட்டரிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 2:02 pm

புலிகளின் பயிற்சி தளத்தை கைப்பற்றியது இலங்கை ராணுவம்


கொழும்பு, அக்.30: விடுதலைப் புலிகளின் மிக முக்கிய பயிற்சி தளத்தை இலங்கை ராணுவம் வியாழக்கிழமை கைப்பற்றியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து வருகிறது. முன்னதாக கொழும்பு மற்றும் மன்னாரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டு இடங்களை குறிவைத்து புலிகள் நடத்திய தாக்குதல் இலங்கை அரசை அதிர்ச்சியுற செய்தது.

இந்நிலையில், புலிகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களது முக்கிய தளத்தை இலங்கை விமானப் படைகள் கைப்பற்றியுள்ளன.

பொட்டு அம்மனால் உருவாக்கப்பட்ட பயிற்சி தளம்: பெண் புலிகளின் தற்கொலைப் படை பயிற்சி முகாம் முல்லைத் தீவு பகுதியில் உள்ள வள்ளிபுரத்தில் இயங்கி வருகிறது. புலிகளின் உளவுப் பிரிவு தலைவராக இருந்த பொட்டு அம்மனால் இந்த பயிற்சி தளம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

இந்த தளத்தை குறிவைத்து அந்நாட்டு விமானப் படைகள் வியாழக்கிழமை அதிகாலை முதல் தாக்குதல் தொடுத்தன. இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. நிறைவில் அந்த பயிற்சி தளத்தை இலங்கை படைகள் கைப்பற்றியதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முகாமில் ஏராளமான பெண்கள் இணைந்து தற்கொலைப் படைக்காக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

நாச்சிகுடா: அதேபோல வட மேற்கு கடலோர தளமான நாச்சிகுடா, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இப் பகுதியை புதன்கிழமை மாலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Admin Tue Nov 04, 2008 2:03 pm

இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி


வவுனியா, அக். 29: வவுனியா அருகே நடந்த சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புலிகளின் இணையதளத்தில் புதன்கிழமை வெளியான செய்தி:

வவுனியா அருகே முறிகண்டி -அக்கராயன் பகுதியில் புலிகளின் ஆதிக்கப் பகுதிக்குள் முன்னேற முயன்ற இலங்கை ராணுவத்தினரின் முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இந்த சண்டையில் ராணுவத்தினர் 60 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமான படை வீரர்கள் காயமடைந்தனர்.

புலிகளின் விமானங்கள் பத்திரமாக திரும்பின: மன்னார் ராணுவ தரைப்படைத்தளம் மற்றும் அனல்மின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்கள், தங்கள் தளங்களுக்கு பத்திரமாக திரும்பியதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் தாக்குதலால் செவ்வாய்க்கிழமை இரவு கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சென்னை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலை மேற்கோள்காட்டி விடுதலைப் புலிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு Empty Re: தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மு‌ம்பை தா‌க்குத‌ல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு
» முதலாம் ஆண்டு நினைவு தினம்:கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி நாளை திறந்து வைக்கிறார்
» சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!
» டைட்டானிக் கப்பல் மூழ்கிய 99வது ஆண்டு தினம் அனுசரிப்பு
» இன்று செர்னோபில் அணு உலை விபத்தின் 25ம் ஆண்டு தினம் அனுசரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum