புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
10 Posts - 56%
heezulia
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
10 Posts - 56%
heezulia
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
யார் கணவன்! Poll_c10யார் கணவன்! Poll_m10யார் கணவன்! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் கணவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:54 pm

யார் கணவன்! Smalarnews_46593874693

முன்னொரு காலத்தில் சோபவதி என்ற ஒரு நாடு இருந்தது. இந்த நாட்டை யசகேது என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த நாட்டின் தலைநகரில் மிகப் பிரமாண்டமான, அழகான கவுரி கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலின் தெற்கே ஒரு பெரிய குளம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று இந்த கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவர். அவர்கள் கோவில் குளத்தில் நீராடிவிட்டு கவுரி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

ஒரு ஆண்டு சித்திரை பவுர்ணமி அன்று பிரம்மஸ்தலம் என்ற ஊரில் இருந்து தளவாய் என்ற இளவரசன் இக்கோவிலுக்கு வந்தான். அதே நாளில் சுதாபட்டா என்பவரின் மகள் மதனசுந்தரியும் இதே கோவிலுக்கு புனித நீராட வந்தாள். மதனசுந்தரி ஒரு பேரழகி. அவளைப் பார்த்த தளவாய் அவள் அழகில் மயங்கினான்.வாழ்ந்தால் மதனசுந்தரியுடன் தான் வாழ்வது என முடிவு செய்து கொண்டான்.


மதனசுந்தரியும் தளவாயைப் பார்த்தவுடன் அவன் மேல் அன்பு கொண்டாள். அவளிடம் ஊர், பெயர் எல்லாம் கேட்டுக் கொண்ட பின் ஊர் திரும்பினான் தளவாய். ஆனால், ஊரில் அவனால் மதனசுந்தரியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதனால் சாப்பிடாமல் தூங்காமல் இருந்தான் அவன் உடல் மெலிந்தது.
இதைப் பார்த்த அவனது அம்மா, ""ஏன் மகனே இப்படி இருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் என கேள்,'' என்றாள். தளவாயும் தனது அம்மாவிடம் மதனசுந்தரியைப் பற்றி கூறினான். உடனே தளவாயின் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரியவந்தது.


அவர் தளவாயை அழைத்தார். ""மகனே இதற்காகவா கவலைப்படுகிறாய் சுதாபட்டா நமக்கு உறவினர்தான். சொத்து, குடும்பம் எல்லாவற்றிலும் நாம் அவர்களுக்கு சமமானவர்கள்தான். நாம் போய் விட்டால் உடனே அவர் திருமணத்திற்கு சம்மதித்து விடுவார், கவலையை விடு,'' என்றார்.

அடுத்த நாள் எல்லாரும் முறைப்படி மதனசுந்தரி வீட்டுக்குச் சென்றனர். அங்கு, ""எனது மகனுக்கு உன் மகளை திருமணம் செய்து கொடு,'' என சுதாபட்டாவிடம் தளவாய் அப்பா கேட்டுக் கொண்டார். அவரும் அதற்கு சம்மதித்தார். ஒரு நல்ல நாளில் தளவாய்க்கும், மதன சுந்தரிக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் மதனசுந்தரியின் தம்பி, தளவாய் வீட்டிற்கு வந்தான். ""வீட்டில் துர்கா பூஜை நடத்துகிறோம், அதற்கு நீங்கள் இருவரும் வர வேண்டும்,'' என தளவாயிடம் கூறினான். தளவாயும் அதற்கு ஒப்புக் கொண்டான். அடுத்த நாள் தனது மனைவி மைத்துனருடன் மாமனார் வீட்டிற்கு புறப்பட்டான் தளவாய். எல்லாரும் சோபவதி என்ற நகரில் உள்ள துர்கா கோவிலை அடைந்தனர். அங்கு மதனசுந்தரியின் அம்மா, அப்பா எல்லாரும் வந்திருந்தனர்.

கோவிலின் மூலஸ்தானத்திற்குள் ஒவ்வொருவராகத் தான் சென்று வழிபட முடியும். எனவே, முதலில் துர்காதேவியை தரிசிக்க தளவாய் சென்றான். அங்கு துர்கா தேவி சிலை தனது 18 கைகளுடனும் கோபமான முகத்துடனும் பயங்கரமாக காட்சி அளித்தது.

துர்காதேவியை பார்த்த தளவாய் அப்படியே பக்தி பரவசத்தில் மூழ்கினான். ""மக்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு உயிர்ப்பலி கொடுத்து உன்னை வழிபடுகின்றனர். நான் என்னையே ஏன் உனக்கு பலியாக கொடுக்கக் கூடாது,'' என துர்காதேவியைப் பார்த்து தளவாய் கேட்டான். பின்னர், அங்கு இருந்த வாள் ஒன்றை எடுத்தான். தனது தலைமுடியை கோவில் மணியுடன் சேர்த்து கட்டினான். வாளால் தனது தலையை வெட்டினான். உடல் தனியே கீழே விழுந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:54 pm

நீண்ட நேரம் வெளியே காத்திருந்த மதனசுந்தரியின் தம்பி, பொறுமை இழந்து கோவிலுக்குள் நுழைந்தான். அதற்கு தனது அக்காவின் கணவர் தலை வேறு உடல் வேறாக கிடந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்னர், தளவாய் செய்தது போலவே அவனும் தனது தலையை வெட்டி உயிரைப் போக்கினான்.

கோவிலுக்குள் போன தம்பியையும் காணவில்லை. என தேடிய மதனசுந்தரி, நேராக கோவிலுக்குள் சென்றாள். அங்கே இரண்டு பேரும் தலை வேறாக உடல் வேறாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். ""ஐயோ, நான் இப்போது என்ன செய்வேன்? என் வாழ்வு இருண்டு விட்டதே!'' என அலறினாள்.


""நான் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பயன், நானும் உயிரை விடுகிறேன்,'' என கூறிக் கொண்டு வாளை எடுத்தாள்.
அப்போது கோவிலின் உள்ளே இருந்து ஒரு குரல் ஒலித்தது. ""மகளே அவசரப் படாதே, உன் கணவர் மற்றும் தம்பியின் பக்தியை மெச்சினேன். நீ இப்போது அவர்கள் தலையை எடுத்து உடலின் மேல் பொருத்து, இரண்டு பேருக்கும் உயிர் வந்து விடும்,'' என துர்கா தேவியே பேசினாள்.
இதைக் கேட்ட மதனசுந்தரி வாளைக் கீழே போட்டாள். அவசர அவசரமாக ஓடிச் சென்று இரண்டு பேரின் தலையையும் எடுத்தாள். ஆனால், அவசரத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எந்த தலை எந்த உடலுக்கு சொந்தம் என பார்க்காமல் தன் கணவன் உடலின் மேல் தம்பி தலையையும், தம்பி உடலின் மேல் கணவர் தலையையும் வைத்து விட்டாள். உடனே இருவரும் உயிரும் பிழைத்து விட்டனர்.


அவர்கள் உயிருடன் வந்தபோது தான் மதனசுந்தரிக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. பேரதிர்ச்சி ஏற்பட்டது. அவளுக்கு இப்போது யாரை கணவராக ஏற்றுக் கொள்வது என்ற பிரச்னையும் ஏற்பட்டது.
மதனசுந்தரியின் கணவன் தலை எந்த உடலில் இருக்கிறதோ அதுதான் அவனது கணவன். ஏனென்றால் தலையை வைத்துதான் உடல் இருக்கிறது அல்லவா எனவே கடைசியாக கணவரின் தலையுள்ள உடலை கணவனாக ஏற்றாள்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக