புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 10, 2011 6:50 pm

பழ.கருப்பையா
''கோட்டைக்குச் செல்ல வேண்டியவர் இல்லை கருணாநிதி. டெல்லி



திகார் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டியவர்!
அடித்துக் கொடுத்த ஆ.ராசா சிறைச்சாலையில் இருக்கும்போது, அடிக்கச் சொன்ன கருணாநிதி வெளியே இருப்பது நியாயமா? கருணாநிதி மட்டும் அல்ல... கருணாநிதியோடு பங்கிட்டுக்கொண்ட மகள் கனிமொழியும் துணைவி ராஜாத்தியும் இருக்க வேண்டிய இடமும், திகார் சிறைச்சாலை​தான்!

உலக வரலாற்றிலேயே எந்த ஜனநாயக நாட்டிலும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இவ்வளவு பெரிய தொகை கொள்ளை போனது இல்லை. இவருக்கு ஒரு கட்சி, இவ்வளவுக்கும் பிறகு ஒரு கூட்டணி. வெட்கம் இல்லாமல் கருணாநிதியின் பெயரால் வாக்குக் கேட்கிற கூட்டணிக் கட்சிக்காரர்கள், தங்களின் சுய மரியாதையை மட்டும் அல்ல, சுரணையையும் இழந்துவிட்டார்களோ என்று ஐயுறுகின்றேன்!

இன உணர்வுக்காகவும் மொழி உணர்வுக்காகவும், அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, சோனியாவுடனும் ராஜபக்​ஷேவுடனும் சேர்ந்து, ஈழத்தை மயானமாக்கிய​போதே, அந்தக் கட்சி வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. தமிழினம் அறிந்த மிகப் பெரிய துரோகிகளில் முதலானவர், கோபாலபுரத்துக் கருணாநிதி. இரண்டாமவர் ஈழத்துக் கருணா. இவர்களை வரலாறு மன்னிக்காது!

அண்ணா, தன்னை அறியாமல் தமிழ்நாட்டுக்குச் செய்த தீமை... கருணாநிதி வளர இடம் கொடுத்தது. எம்.ஜி.ஆர். அறிந்தே தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மை... அம்மாவை அரசியலில் வளர்த்தது!

ஈழத் தமிழர்களின் உயிர்கள் மட்டும் அல்ல... தமிழ் மீனவர்களின் உயிரும் பறிபோவதற்குக் கருணாநிதிதான் காரணம். இனத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை. கருணாநிதி ஆட்சியின் எழுதப்படாதக் கொள்கை... 'நாட்டைச் சுரண்டுவதுதான்’. அதனால்தான் ஆறுகளை எல்லாம்கூட கட்டாந்தரைகளாக்கிவிட்டார்கள். இவர்கள் சுரண்டிய மணல் மீண்டும் ஊற 500 ஆண்டுகள் ஆகும்!

'நான் தொலைக்காட்சிப் பெட்டி தரவில்​லையா?’ என்கிறார் கருணாநிதி. ஒன்றரைக் கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் போகின்ற, வருகின்றவர்களுக்கு எல்லாம் விரட்டி விரட்டிக் கொடுத்தார். அது யாருடைய நன்மைக்காக? தன்னுடைய குடும்பத்துக்கு கேபிள் பணம் வர வேண்டும் என்பதற்காக! கேபிளை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்காக கடந்த ஆட்சி காலத்தில் அரசுடமை ஆக்கினார் அம்மா. அந்த அரசுத் தீர்மானத்தில் தன்னுடைய அன்புக்குரிய கவர்னரைக் கையெழுத்துப் போடவிடாமல் செய்தது மட்டும் அல்லாமல், அடுத்து ஆட்சி மாறியவுடன் அந்தச் சட்டத்தையே ரத்து செய்தவர் கருணாநிதி!

அம்மா ஆட்சியில், 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 7,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது. மீதம் உள்ள உபரி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அம்மா ஆட்சிக் காலத்தில் விற்கப்பட்டது. இன்று கருணாநிதி ஆட்சியில், தரக் குறைவான நிலக்கரியின் காரணமாகவும், ஆட்சித் திறன் இல்லாத காரணத்தினாலும் மின் உற்பத்தி சுருங்கிவிட்டது. மக்களுடைய பயன்பாடு பெருகிவிட்டக் காரணத்தினால், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு... தமிழ்நாடு இருளில் தத்தளிக்கிறது. மக்களின் அடுத்த கட்டத் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்தைப் பெருக்குகின்ற ஆட்சித் திறன் அவருக்கு இல்லை. இவர் ஆட்சிக்கு வந்தபோது அதை செய்ய முடியவில்லை என்றாலும், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி இருந்தால், நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்திருக்குமே.!

அம்மாவின் காலத்தில், 12-க்கு விற்ற அரிசி இன்று 40. அம்மாவின் காலத்தில் அரிசி விற்ற விலைக்கு இன்று உப்பு விற்கிறது. டாடா உப்பு 12. கல் உப்பு 9. கேட்டால், 'உப்பையா சாப்பிடுகிறீர்கள்?’ என்று திருப்பிக் கேட்கிறார். அவர், உப்பில்லாமல் சாப்பிடுகிறவர்போல் இருக்கிறது. உப்புப் போட்டுக்கொண்டால், நியாயமான பதில் சொல்லியாக வேண்டுமே?

அம்மாவின் காலத்தில், ஒரு பவுன் தங்கம் 4,500. இன்று அது 15,500! ஏழைப் பெண்கள் திருமணத்தன்று அரைப் பவுன் தாலிக்குக்கூட வக்கில்லாமல் செய்துவிட்டது கருணாநிதி அரசு. அதனால்தான் அம்மா தான் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்குவதாக வாக்கு அளித்திருக்கிறார்.

அம்மாவின் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.89 சதவிகிதம். இன்று வளர்ச்சி விகிதம் 4.49 சதவிகிதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காக சரிந்துவிட்டது. ஒரு ஆட்சியின் அளவுகோல், அதனுடைய பொருளாதார வளர்ச்சிதான். தமிழ்நாட்டை சத்தீஸ்கருக்கும் மத்திய பிரதேசத்துக்கும் பழைய பீகாருக்கும் கீழாகவே கொண்டுவந்துவிட்டார் கருணாநிதி!

இவருடைய ஆட்சியில் தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் கடன் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி. இது மத்திய அரசு அனுமதித்த கடன் தொகையைவிடக் கூடுதலானது. சிறப்பு அனுமதி பெற்று, நம்மைக் கூடுதல் கடனாளியாக்கிவிட்டார். கதை, வசனம் எழுதும் கருணாநிதியும், பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் அன்பழகனும் எந்தப் பொருளாதாரத்தை அறிவார்கள்?

ஈழத்தை மயானமாக்கிய, கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு மௌன ஒப்புதல் அளித்த, மக்களை ஐந்து ஆண்டுகளாக இருளில் மூழ்கச் செய்த, விலைவாசி உயர்வைத் தடுக்கத் திறன் இல்லாத, ஆறுகளைச் சுரண்டிய, தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த... ஊழலையே ஒரு வரிக் கொள்கையாகக்கொண்ட இந்தக் கருணாநிதி ஆட்சி... தொலைய வேண்டுமா? வேண்டாமா?

மக்கள் சொல்வார்கள்!

சந்திப்பு: த.கதிரவன்

ஜீனியர் விகடன்.
நன்றி

http://new.vikatan.com/article.php?aid=4725&sid=136&mid=2




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 7:17 pm

இதில் சொல்லி இருப்பவை பாதி உண்மையும் பாதி பொய்யும்.. எப்படி என்றால் கருணாநிதி தமிழகப்பொருளாதாரத்தைச் சூறையாடியது உண்மை.. ஆனால் ஜெயலலிதா ஆட்சி பொற்காலம் என்பது பொய்.

இந்திய பொருளாதாரக்கொள்கைளில் இருக்கும் சீர்கேட்டின் காரணமாக இந்தியா முழுவதுமே விலைவாசிப்பிடியில் அகப்பட்டு நெரிக்கப்படுகிறோம் என்பது தான் உண்மை.

எரியும் வீட்டில் பிடுங்கும் வேலையை மட்டும் தான் கருணாநிதி செய்கிறார். அந்த வாய்ப்பு தனக்கு கிடைகக்வில்லை என்று ஜெயலலிதா பொருமுகிறார்.

என்ன ஒரு ஆறுதல் விடயம் என்றால் ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்... கலைஞர் குடும்பம் அப்படி இல்லை... இருபத்தேழாவது பேரனுக்கும் ( வயது ஆறு )சில கோடிகளை எழுதிவைத்து இருக்கிறார்

ஆகவே தமிழகம் மாற வேண்டும்.. ஜெயலலிதாவுக்கு இன்னொரு வாய்ப்பை அளித்துவிட்டு கிடைக்கும் இடைக்கால சுவாசமிடும் அவகாசத்தில் நேர்மையான மூன்றாம் அணி உருவாகவேண்டும்.. அடுத்த தேர்தலில் இவர்கள் இரண்டுபேருமே அல்லாத ஓர் ஆட்சி நிகழவேண்டும்.

இதுதான் என் விருப்பம்... கருத்து..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Apr 10, 2011 7:26 pm

உங்கள் கருத்து நியாயமகாவும் யோசிக்க வைப்பதாகவும் உள்ளது அண்ணா!.17a படிவத்தையும் பிரபல படுத்துங்கள் அண்ணா ! சூப்பருங்க



ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Pஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Oஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Sஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Iஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Tஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Iஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Vஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Eஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Emptyஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Kஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Aஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Rஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Tஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Hஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Iஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Cஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? K
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Sun Apr 10, 2011 7:28 pm

அவங்க ஆட்சியே இருக்கட்டும் நாமெல்லாம் எங்காவது தப்பிச்சி அகதிகளாவது போயிருவோம்



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 7:30 pm

mkag.khan wrote:அவங்க ஆட்சியே இருக்கட்டும் நாமெல்லாம் எங்காவது தப்பிச்சி அகதிகளாவது போயிருவோம்

நீங்க டெல்லிக்கு வாங்க அண்ணாச்சி... கூழோ கஞ்சியோ சேர்ந்து குடிக்கலாம்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Sun Apr 10, 2011 7:32 pm

அய்யய்யோ அங்க கையாலகாத காங்கிரஸ் இருக்குப



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 7:42 pm

ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில்
இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்..

எப்படி கலை இப்படி..?

எந்த அரசியல்வாதி, தன் பெயரில் சொத்து சேர்ப்பார்..? பினாமி என்ற சொல்லை பிரபலப்படுத்தியதே அவர்கள்தானே..?




ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0018-2ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0010-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 7:44 pm

ARR wrote:
ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில்
இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்..

எப்படி கலை இப்படி..?

எந்த அரசியல்வாதி, தன் பெயரில் சொத்து சேர்ப்பார்..? பினாமி என்ற சொல்லை பிரபலப்படுத்தியதே அவர்கள்தானே..?

ஹிஹி... ஒரு குருட்டு நம்பிக்கை தான் அண்ணா... ஐம்பதுக்கு ஐம்பது சான்ஸ் இருக்கேன்னு தான்... ஆனால் கலைஞர் குடும்பத்திற்குச் சென்ற பணம் மீளுமா..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 7:48 pm

எங்கு போன பணமும் மீளாது..!

பார்க்கப்போனா, ஜெயா ரொம்பப் பாவம்.. கட்டின புடவைதான் அவங்களுக்கு மிஞ்சும். சொந்த அண்ணன் குடும்பத்துக்கூட ஏதும் செய்யமுடியாத சூழ்நிலைக் கைதி அவர்.




ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0018-2ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0010-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Apr 10, 2011 9:52 pm

கலை wrote:இதில் சொல்லி இருப்பவை பாதி உண்மையும் பாதி பொய்யும்.. எப்படி என்றால் கருணாநிதி தமிழகப்பொருளாதாரத்தைச் சூறையாடியது உண்மை.. ஆனால் ஜெயலலிதா ஆட்சி பொற்காலம் என்பது பொய்.

இந்திய பொருளாதாரக்கொள்கைளில் இருக்கும் சீர்கேட்டின் காரணமாக இந்தியா முழுவதுமே விலைவாசிப்பிடியில் அகப்பட்டு நெரிக்கப்படுகிறோம் என்பது தான் உண்மை.

எரியும் வீட்டில் பிடுங்கும் வேலையை மட்டும் தான் கருணாநிதி செய்கிறார். அந்த வாய்ப்பு தனக்கு கிடைகக்வில்லை என்று ஜெயலலிதா பொருமுகிறார்.

என்ன ஒரு ஆறுதல் விடயம் என்றால் ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்... கலைஞர் குடும்பம் அப்படி இல்லை... இருபத்தேழாவது பேரனுக்கும் ( வயது ஆறு )சில கோடிகளை எழுதிவைத்து இருக்கிறார்

ஆகவே தமிழகம் மாற வேண்டும்.. ஜெயலலிதாவுக்கு இன்னொரு வாய்ப்பை அளித்துவிட்டு கிடைக்கும் இடைக்கால சுவாசமிடும் அவகாசத்தில் நேர்மையான மூன்றாம் அணி உருவாகவேண்டும்.. அடுத்த தேர்தலில் இவர்கள் இரண்டுபேருமே அல்லாத ஓர் ஆட்சி நிகழவேண்டும்.

இதுதான் என் விருப்பம்... கருத்து..!



ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக