புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
21 Posts - 70%
heezulia
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
6 Posts - 20%
viyasan
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
213 Posts - 42%
heezulia
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
21 Posts - 4%
prajai
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_m10யாருக்கு வோட்டுப் போடுவது?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு வோட்டுப் போடுவது?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Apr 09, 2011 11:00 am


- ஞாநி

நம் அரசியல் கட்சிகள் திருந்தவில்லை என்பதற்குத் தொடர்ந்து பல அடையாளங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகக் கவனிப்பதும் இல்லை. அழுத்தம் கொடுப்பதும் இல்லை.

சென்றமுறை ஜெயித்து வந்த 234 எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. இந்த முறை போட்டி யிடும் வேட்பாளர்களில் 18 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 66 பேர் மீது உள்ளவை கடும் குற்றச்சாட்டுகள். ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர் களிலும் கிரிமினல் வழக்குள்ளவர்கள் சதவிகிதம் அதிர்ச்சியாக இருக்கிறது. தி.மு.க - 22 சதவிகிதம். அ.தி.மு.க - 30. பா.ம.க -52. விடுதலைச் சிறுத்தைகள்- 50. தே.மு. தி.க- 19. காங்கிரஸ்- 11. பி.ஜே.,பி- 11.

சென்ற முறை ஜெயித்தவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள். இந்த முறை போட்டியிடுபவர்களில் 35 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். மீதி பெரும்பாலோர் லட்சாதிபதிகள். கோடீஸ்வர வேட்பாளர்கள் கட்சி வாரியாக: தி.மு.க - 65.77 சத விகிதம். அ.தி.மு.க - 52.08. காங்கிரஸ் - 61.11. பா.ம.க - 40.74. விடுதலைச் சிறுத்தைகள் - 33.33. தே.மு.தி.க - 33.333. பி.ஜே.பி- 14.79. மார்க்சிஸ்ட் - 8.33. கம்யூனிஸ்ட்- 0.

ஐந்து வருடங்களில் இவர்களுடைய சொத்து எப்படிப் பெருகியிருக்கிறது என்பதே இவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டி விடும். தி.மு.க அமைச்சர் இ.வ.வேலுவின் சொத்து பல நூறு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆட்சியில் இருந்த அமைச்சர்களை விட அவர்களுடைய மனைவிகள், துணைவிகள் சொத்து அதிகரித்திருக்கிறது. முதலமைச்சர்தான் இதில் வழிகாட்டி. பிறவி கம்யூனிஸ்ட் அல்லவா அவர்! 2006ல் அவர் சொத்து 26.52 கோடி. 2011ல் 44.14 கோடி இதில் கருணாநிதியின் சொத்து வெறும் சுமார் 5 கோடிதான். தயாளுவுடையது சுமார் 16 கோடி. ராஜாத்தியுடையது சுமார் 24 கோடி! இன்னும் பல பேர் மனைவி-துணைவி கணக்கு காட்டியிருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு வெறும் 75 லட்சம். மனைவி ரங்கநாயகியுடையதோ 93 லட்சம். துணைவி லீலாவுடையதோ 2.25 கோடி!


தேர்தல் ஆணையம் இந்த முறை தமிழ்நாட்டில் பிரதான பிரச்னை, பெரும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்படுவதைத் தடுப்பதுதான் என்று அறிவித்து, கடுமையாகச் செயல்பட்டிருக்கிறது. இதன் விளைவு டீக்கடைக்காரர் வீட்டில் சில லட்சங்களும் ஆம்னி பஸ் கூரையில் பல கோடிகளும் பிடிபட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த அளவு கறுப்புப் பணம் சுழற்சியில் இருக்கிறது என்பதற்கு, தேர்தல் ஆணையம் தரும் ஒரு புள்ளிவிவரமே சாட்சி. சென்ற வாரம் வரை பிடிபட்ட 22 கோடியே 40 லட்சம் ரூபாயில், முறையாகக் கணக்கு காட்டி தேர்தலுக்குச் சம்பந்தம் இல்லாத நியாயமான சொந்தப் பணம் என்று நிரூபித்து திரும்பப் பெறப்பட்ட தொகை வெறும் 4 கோடியே 88 லட்சம்தான்.

பணபலம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருசில விதிவிலக்கான இடதுசாரி வேட்பாளர்கள் தவிர, எந்தப் பெரிய கட்சி வேட்பாளரும் ஆணையம் நிர்ணயித்த வரம்புக்குள் செலவு செய்வதே இல்லை என்பது உண்மை. பணபலம் இல்லாமலே ஜெயிக்க முடியும் என்று நம்பும் படித்த இளைஞர்களின் பிரதிநிதியாகத் தங்களை முன்னிறுத்தும் சுயேச்சை வேட்பாளர் சரத்பாபு போன்றோர் போடும் கணக்குக் கூட தப்பாகவே இருக்கிறது. மொத்தம் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ள வேளச்சேரியில் தமக்கு 40 ஆயிரம் வாக் குகள் கிடைத்தால் ஜெயித்து விடலாம் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 70 சதவிகித வாக்குப் பதிவு என்றால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் விழும். அதில் 40 ஆயிரம் ஜெயிக்கப் போதும் என்றால் மீதி ஒரு லட்சம் வாக்குகளுக்கு அர்த்தம் என்ன? அவை பல வேட்பாளரிடையே பிரிவதால் தான் 40 ஆயிரத்துக்கு மதிப்பு வருகிறது!

இந்தத் தேர்தல் முறையே தவறு; விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது பற்றித்தான் படித்தவர்கள் பிரசாரம் செய்து கருத்து திரட்ட வேண்டும். இருக்கும் தவறான முறைக்குள்ளேயே செயல்பட்டு ஜெயித்துவிடலாம் என்று கணக்குப் போடுவது படித்த நல்லவர்களின் அப்பாவித்தனம் அல்லது சாமர்த்தியம். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் என் நண்பர் அவருக்கு எதிர் வேட்பாளர் மூன்று கோடி செலவு செய்தால், தான் ஒரு கோடி வரைக்குமாவது செலவிடும் கட்டா யத்துக்குத் தள்ளப்படுவேன் என்கிறார். நண்பருக்கு மாத வருவாயே 15 ஆயிரத்துக்குள்தான். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும்? கொடுப்பவர்கள் நாளைக்கு பதிலுக்கு என்னவெல்லாம் பிரதி உபகாரம் கேட்பார்கள் என்பதை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒட்டுமொத்த அருவருப்பான சூழ்நிலையில் ஒரே நம்பிக்கைக் கீற்று, தேர்தல் ஆணையத்தின் கறாரான செயல்பாடு மட்டும்தான். ஆனால் அது போதாது. இன்னும் பல தேர்தல்களுக்கு இப்படிப்பட்ட கெடுபிடிகள் தொடர்ந்தால்தான் கட்சி அமைப்பு சீர்படும்.


இப்போதும் பணபலமும், இலவச ஆசை காட்டி வோட்டு வாங்கும் உத்தியும் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன.

இந்தச் சூழலில் எந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுவது என்று பலரும் என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நம் முன்னால் மூன்று வழிகள்தான் இருக்கின்றன.

வழி 1: 49 ஓ. எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமை. இப்போதைக்கு இது மின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ரகசிய பட்டனாக இல்லை. எனவே பகிரங்கமாக சொல்லித்தான் இதைப் பதிவுசெய்ய வேண்டும். எனவே பெருவாரியானவர்கள் இதைப் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. பெருவாரியாக 49 ஓ விழுந்தால்தான் கட்சிகளுக்குக் கலக்கம் ஏற்படும். ஒரு சில நூறு 49 ஓக்கள் பயன் தராது. என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று நமக்கு நாமே வலியுறுத்திக் கொள்ள இது உதவும்.

வழி 2: தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு மட்டைகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்தான்.

(இது-பற்றி நான் எழுதிய நையாண்டி நாடகம் ‘ஆப்புக்கு ஆப்பு’ தேர்தலுக்குச் சில தினங்கள் முன்னால் எங்கள் பரீக்‌ஷா குழுவால் நடிக்கப்பட இருக்கிறது.) கடந்த ஆட்சிக் காலங்களைப் பார்த்தீர்களானால், 1996-2001ல் தி.மு.க ஆட்சியும், 2001-2006ல் அ.தி. மு.க ஆட்சியும் சகிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால், 1991-96 அ.தி.மு.க ஆட்சியும் 2006-2011 தி.மு.க ஆட்சியும் சகிக்க முடியாதவை. மூன்றாவது அணியாக உருப்படியாக எதுவும் உருவாவதற்கு இன்னும் 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை எந்த ஒரு கழகத்தையும் தொடர்ந்து பத்தாண்டு ஆள விடாமல், 5 வருடங்களுக்கு ஒரு முறை கேரளா மாடலில் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்து நம்மை நாமே கொஞ்சம் ஆறுதல்படுத்திக் கொள்ளலாம்.

வழி 3: வேட்பாளர் அடிப்படையில் பார்ப்போம். சரியான கட்சியில் இருக்கும் தப்பான ஆள் என்று சொல்ல எவருமில்லை. ஏனென்றால் சரியான கட்சிகளே இல்லை. தப்பான கட்சியில் இருக்கும் சரியான ஆட்களாக யாரேனும் இருக்கிறார்களா என்று தேடலாம். (சரியான ஆளாக இருந்தால் அவர் ஏன் தப்பான இடத்துக்குப் போகிறார் என்ற தர்க்க நியாயம் தனி.) இரு பிரதான அணிகளிலும் இருக்கும் வேட்பாளர்களில் இருப்பதில் சுமாரானவர் என்பவருக்கு வோட்டுப் போடலாம். நல்ல சுயேச்சைகளுக்குப் போட்டுப் பயனில்லை. எப்படியும் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். அவற்றில் பெருவாரியாக முழு அயோக்கியர்களுக்கு பதில், ஓரளவு நல்லவர்களை யாவது ஜெயிக்க வைக்கலாம்.

மூன்றில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ செய்யுங்கள். ஆனால் வோட்டுப் போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். மூன்றில் எப்படி வோட்டுப் போட்டாலும் தொலைநோக்கில் மாற்றம் வர அது நிச்சயம் உதவும்.

நன்றி: கல்கி


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 1:34 pm

மிக நல்ல கருத்துக்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 11:16 pm

ஞாநி வழக்கம் போல் குழப்பிவிட்டுச்சென்றிருக்கிறார். எது சரியான தீர்வு என்று அறுதியிட்டு கூற வேண்டியது சிந்தனையாளர்களின் கடமை..

இப்படி மழுப்புவதற்கு பதிலாக ’ஆணியே புடுங்காமல்’ இருக்கலாம் தானே...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 09, 2011 11:49 pm

வாக்கை அளிக்காமலும் வீணாக்காதீர்..
வாக்கை அளித்தும் வீணாக்காதீர்

அருமையாக சொல்லி இருக்கிறார் ஞாநி!!



யாருக்கு வோட்டுப் போடுவது?  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக