புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம்
Page 1 of 1 •
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மக்களின் நம்பிக்கையை வைத்து லாபகரமாக வியாபாரம் செய்வது எப்படி
என்பதை நமது தொலைக்காட்சி சானல்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்ள
வேண்டும். காலையில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைகளைப்
பள்ளிக்கோ கல்லூரிக்கோ தயார் செய்து அனுப்பிவிட்டுக் கணவரை
அலுவலகத்திற்குப் புறப்படச் செய்வதற்குள்
குடும்பத்தலைவிக
ளுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம்
இருப்பதில்லை என்பதால், தொலைக்காட்சியின் பக்கம் கவனம் செலுத்துவது
என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதனால்தான் பெரும்பாலான சானல்களில்
ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சிகள் அந்த
நேரத்தைப் பங்குபோட்டுக் கொள்கின்றன.
இந்தக் காலைநேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்காட்சியைத்
திருப்பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்குகின்றன
நமது சானல்கள். பொதுவாக, ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை
குறித்த கவலை குடும்பத் தலைவிகளுக்கு இருப்பதுண்டு. இந்தக் கவலையைத்
தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களது அறியாமையையும்
நம்பிக்கையையும் காசாக்க முயல்கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள்
பிரச்னை தீரவேண்டுமா? இந்தக் கல்லை வாங்குங்கள், அந்தக் கவசத்தை
வாங்குங்கள் என்று சானல்களில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்பிக்கை
வியாபாரம். காசு ஒன்றே குறி என்கிற உன்னதமான குறிக்கோளோடு, கண்ணை
மூடிக்கொண்டு சானல்களும் இதற்குத் துணை போவது கொடுமையிலும் கொடுமை!
விஜய் தொலைக்காட்சியில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை
செய்வதற்காக வரும் நகைக்கடைக்காரர், போகரின் பாஷாணம், சித்தர்
திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்கமாக மாறுவது (தெரிந்தால் இவரே
தங்கம் தயாரிக்க வேண்டியதுதானே!) என்பது போன்ற ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்புப்படுத்திப்
பேசியும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்யூச்சராலஜி,
நியூமராலஜி என்று ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறியும், ஏற்கெனவே குழப்பத்தில்
இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.
உங்கள் ஜாதகத்துடன் நகைக்கடைக்குள் செல்வது, மாஸ்டர் செக்கப்பிற்காக
மருத்துவமனைக்குச் செல்வதைப் போன்றது என்று தனது வியாபாரத்திற்கு வலு
சேர்க்கும் இவர் சொல்ல வருவது என்னவென்றால், 'எங்கள் கடையில், நாங்கள்
கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணியுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்தும்
தீர்ந்துவிடும்' என்பதுதான். கல் ஒன்று, மாங்காய் இரண்டு என்பது
பழமொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம்
தெரிந்துகொண்ட புதுமொழி!
அதிர்ஷ்டக்கல் வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துவிட்டுச் சென்றவுடன்
அந்த இடத்தை விரைந்து நிரப்புகிறார் கடவுள் பெயரில் கவச விற்பனை
செய்யும் சாமியார் வேடமிட்ட ஒரு வியாபாரி. செல்வச் செழிப்பு, புகழ்,
நோயற்ற ஆரோக்கிய வாழ்வு ஆகியவற்றோடு எதிரிகளை வீழ்த்துவது,
விபத்திலிருந்து காப்பது, வழக்குகளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப
பலன்களையும் நல்குகிறதாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள்,
வழக்குறைஞர்கள் கவனிக்க). குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக்
கட்ட முடியாத நிலையில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்கிய பின்னர்
(கவசம் வாங்க மட்டும் காசு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை!)
செல்வச் செழிப்பில் திளைப்பதாகப் பேட்டியும் உண்டு.
இதைத் தொடர்ந்து - கண் திருஷ்டியிலிருந்து காக்கும் மெகா சுரக்ஷா
கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளிலும் குரானிலும் கூடக்
குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்திற்கு வலு
சேர்த்தார்கள் இந்நிகழ்ச்சியில். கல்யாணமாகாத பெண்கள் இதை வாங்கினால்
உடனே திருமணம் நிச்சயமாகுமாம் (பலனடைந்தவரின் பேட்டியும் உண்டு).
இத்தனைக்குப் பிறகும் நீங்கள் ஏமாளியாகாமல் இருந்தால்
ஆச்சரியம்தான்!
மக்கள் தொலைக்காட்சிப் பக்கம் போனால், 'உங்களைச் சொட்டை, வழுக்கை,
கிரிக்கெட் கிரவுண்டு என்று கிண்டல் செய்கிறார்களா? கவலைப்பட
வேண்டாம், எங்களுக்கு போன் செய்யுங்கள்' என்று
அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். ஏதோ காவல்துறையினரின் அறிவிப்பு
இது என்று நினைத்தால், அது உங்கள் தவறு. குறிப்பிட்ட தைலத்தை வாங்கிப்
பூசினால், இத்தகைய கிண்டல் பேச்சுகளிலிருந்து தப்பும் அளவிற்கு
உங்கள் சொட்டை, வழுக்கையெல்லாம் மறைந்து முடி கருகருவென்று வளருமாம்.
மக்களின் பலவீனங்களில் இதுவும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க
முயல்பவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தது மக்கள் தொலைக்காட்சி.
நீங்களுமா?
மெகா தொலைக்காட்சியிலோ, கருப்பானவர்களைச் சிவப்பாக மாற்றும் மந்திரக்
களிம்பு விற்பனை... அந்தக்கால முனிவர்களின் கடுமையான உழைப்பின்
பலனாம் இது (முனிவர்கள் இதற்காகத்தான் கடுந்தவம் புரிந்தார்கள்
போலிருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப் பெரும்பாலான சானல்களை
ஆக்கிரமித்துள்ள இந்த வியாபார வில்லங்கங்கள் எவ்வளவு விபரீதமானவை
என்பது பற்றி யாருக்கென்ன கவலை? Magical remedy பற்றி விளம்பரம் செய்யக்
கூடாது என்று, ஏதோ விதி இருப்பதாக, எப்போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்!
அப்படி ஏதாவது இருக்கும் பட்சத்தில், அந்த விதி எங்கே
தூங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துக்
கொடுப்பவர்களுக்குப் பரிசு அறிவிக்கலாம்!
கல்,
தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கைகள் ஒருபுறம் என்றால், பங்குச்சந்தை
மீதான நம்பிக்கை மறுபுறம். இந்த நம்பிக்கையைப் பங்குபோட்டுக்கொண்டு
விற்பதிலும் சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்படும் (கலைஞர்),
வளாகம் (மக்கள்), வர்த்தக உலகம் (சன் நியூஸ்), மார்க்கெட் டிப்ஸ் (ஜெயா
பிளஸ்) என்று எல்லாச் சானல்களிலும் ஏதாவது ஒரு வடிவில் நுழைந்து
விடுகிறது பங்குச்சந்தை.
எந்தப் பங்கை வாங்கலாம்? என்ன விலைக்கு வாங்கலாம்? சந்தை ஏறுமா,
இறங்குமா? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக்
காத்திருக்கிறார்கள் பங்குச் சந்தை வல்லுனர்கள். குடுகுடுப்பைக்காரன்
குறி சொல்வது போல இவர்கள் கொடுக்கும் பரிந்துரையை நம்பி, பங்குச்
சந்தையில் பணம் போடுபவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் வேறென்ன
செய்ய? பங்குச்சந்தையையும் பரிந்துரைகளையும் நம்புவோர் இருக்கும்
வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்கும் சானல்களின் வியாபாரம் அமோகம்தான்!
எல்லா நம்பிக்கைகளும் ஏதோ ஒருவகையில் வியாபாரமாகிக் கொண்டிருக்க,
ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும்
வியாபாரமாகிக் கொண்டிருந்ததைச் செய்திகளில் பார்க்க முடிந்தது.
வாக்காளர்களுக்கு மதுபானம், வேட்டி சட்டை வழங்கப்பட்டதை ஒரு சானலில்
பார்த்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக
வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றொரு
சானலில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்களும் சேர்ந்து செய்த தேர்தல்
வியாபாரமும், நேயர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதே என்பதைச்
சொல்லத் தேவையில்லை.
நிச்சயமாக என்றேனும் ஒருநாள், இவையெல்லாம் மாறக்கூடும்... இந்த
தொலைக்காட்சி வியாபாரிகளிடம் சிக்காத நாள் கூட வரலாம்...
நம்புங்கள்...!
என்பதை நமது தொலைக்காட்சி சானல்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்ள
வேண்டும். காலையில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைகளைப்
பள்ளிக்கோ கல்லூரிக்கோ தயார் செய்து அனுப்பிவிட்டுக் கணவரை
அலுவலகத்திற்குப் புறப்படச் செய்வதற்குள்
குடும்பத்தலைவிக
ளுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம்
இருப்பதில்லை என்பதால், தொலைக்காட்சியின் பக்கம் கவனம் செலுத்துவது
என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதனால்தான் பெரும்பாலான சானல்களில்
ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சிகள் அந்த
நேரத்தைப் பங்குபோட்டுக் கொள்கின்றன.
இந்தக் காலைநேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்காட்சியைத்
திருப்பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்குகின்றன
நமது சானல்கள். பொதுவாக, ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை
குறித்த கவலை குடும்பத் தலைவிகளுக்கு இருப்பதுண்டு. இந்தக் கவலையைத்
தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களது அறியாமையையும்
நம்பிக்கையையும் காசாக்க முயல்கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள்
பிரச்னை தீரவேண்டுமா? இந்தக் கல்லை வாங்குங்கள், அந்தக் கவசத்தை
வாங்குங்கள் என்று சானல்களில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்பிக்கை
வியாபாரம். காசு ஒன்றே குறி என்கிற உன்னதமான குறிக்கோளோடு, கண்ணை
மூடிக்கொண்டு சானல்களும் இதற்குத் துணை போவது கொடுமையிலும் கொடுமை!
விஜய் தொலைக்காட்சியில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை
செய்வதற்காக வரும் நகைக்கடைக்காரர், போகரின் பாஷாணம், சித்தர்
திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்கமாக மாறுவது (தெரிந்தால் இவரே
தங்கம் தயாரிக்க வேண்டியதுதானே!) என்பது போன்ற ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்புப்படுத்திப்
பேசியும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்யூச்சராலஜி,
நியூமராலஜி என்று ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறியும், ஏற்கெனவே குழப்பத்தில்
இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.
உங்கள் ஜாதகத்துடன் நகைக்கடைக்குள் செல்வது, மாஸ்டர் செக்கப்பிற்காக
மருத்துவமனைக்குச் செல்வதைப் போன்றது என்று தனது வியாபாரத்திற்கு வலு
சேர்க்கும் இவர் சொல்ல வருவது என்னவென்றால், 'எங்கள் கடையில், நாங்கள்
கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணியுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்தும்
தீர்ந்துவிடும்' என்பதுதான். கல் ஒன்று, மாங்காய் இரண்டு என்பது
பழமொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம்
தெரிந்துகொண்ட புதுமொழி!
அதிர்ஷ்டக்கல் வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துவிட்டுச் சென்றவுடன்
அந்த இடத்தை விரைந்து நிரப்புகிறார் கடவுள் பெயரில் கவச விற்பனை
செய்யும் சாமியார் வேடமிட்ட ஒரு வியாபாரி. செல்வச் செழிப்பு, புகழ்,
நோயற்ற ஆரோக்கிய வாழ்வு ஆகியவற்றோடு எதிரிகளை வீழ்த்துவது,
விபத்திலிருந்து காப்பது, வழக்குகளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப
பலன்களையும் நல்குகிறதாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள்,
வழக்குறைஞர்கள் கவனிக்க). குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக்
கட்ட முடியாத நிலையில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்கிய பின்னர்
(கவசம் வாங்க மட்டும் காசு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை!)
செல்வச் செழிப்பில் திளைப்பதாகப் பேட்டியும் உண்டு.
இதைத் தொடர்ந்து - கண் திருஷ்டியிலிருந்து காக்கும் மெகா சுரக்ஷா
கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளிலும் குரானிலும் கூடக்
குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்திற்கு வலு
சேர்த்தார்கள் இந்நிகழ்ச்சியில். கல்யாணமாகாத பெண்கள் இதை வாங்கினால்
உடனே திருமணம் நிச்சயமாகுமாம் (பலனடைந்தவரின் பேட்டியும் உண்டு).
இத்தனைக்குப் பிறகும் நீங்கள் ஏமாளியாகாமல் இருந்தால்
ஆச்சரியம்தான்!
மக்கள் தொலைக்காட்சிப் பக்கம் போனால், 'உங்களைச் சொட்டை, வழுக்கை,
கிரிக்கெட் கிரவுண்டு என்று கிண்டல் செய்கிறார்களா? கவலைப்பட
வேண்டாம், எங்களுக்கு போன் செய்யுங்கள்' என்று
அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். ஏதோ காவல்துறையினரின் அறிவிப்பு
இது என்று நினைத்தால், அது உங்கள் தவறு. குறிப்பிட்ட தைலத்தை வாங்கிப்
பூசினால், இத்தகைய கிண்டல் பேச்சுகளிலிருந்து தப்பும் அளவிற்கு
உங்கள் சொட்டை, வழுக்கையெல்லாம் மறைந்து முடி கருகருவென்று வளருமாம்.
மக்களின் பலவீனங்களில் இதுவும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க
முயல்பவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தது மக்கள் தொலைக்காட்சி.
நீங்களுமா?
மெகா தொலைக்காட்சியிலோ, கருப்பானவர்களைச் சிவப்பாக மாற்றும் மந்திரக்
களிம்பு விற்பனை... அந்தக்கால முனிவர்களின் கடுமையான உழைப்பின்
பலனாம் இது (முனிவர்கள் இதற்காகத்தான் கடுந்தவம் புரிந்தார்கள்
போலிருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப் பெரும்பாலான சானல்களை
ஆக்கிரமித்துள்ள இந்த வியாபார வில்லங்கங்கள் எவ்வளவு விபரீதமானவை
என்பது பற்றி யாருக்கென்ன கவலை? Magical remedy பற்றி விளம்பரம் செய்யக்
கூடாது என்று, ஏதோ விதி இருப்பதாக, எப்போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்!
அப்படி ஏதாவது இருக்கும் பட்சத்தில், அந்த விதி எங்கே
தூங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துக்
கொடுப்பவர்களுக்குப் பரிசு அறிவிக்கலாம்!
கல்,
தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கைகள் ஒருபுறம் என்றால், பங்குச்சந்தை
மீதான நம்பிக்கை மறுபுறம். இந்த நம்பிக்கையைப் பங்குபோட்டுக்கொண்டு
விற்பதிலும் சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்படும் (கலைஞர்),
வளாகம் (மக்கள்), வர்த்தக உலகம் (சன் நியூஸ்), மார்க்கெட் டிப்ஸ் (ஜெயா
பிளஸ்) என்று எல்லாச் சானல்களிலும் ஏதாவது ஒரு வடிவில் நுழைந்து
விடுகிறது பங்குச்சந்தை.
எந்தப் பங்கை வாங்கலாம்? என்ன விலைக்கு வாங்கலாம்? சந்தை ஏறுமா,
இறங்குமா? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக்
காத்திருக்கிறார்கள் பங்குச் சந்தை வல்லுனர்கள். குடுகுடுப்பைக்காரன்
குறி சொல்வது போல இவர்கள் கொடுக்கும் பரிந்துரையை நம்பி, பங்குச்
சந்தையில் பணம் போடுபவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் வேறென்ன
செய்ய? பங்குச்சந்தையையும் பரிந்துரைகளையும் நம்புவோர் இருக்கும்
வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்கும் சானல்களின் வியாபாரம் அமோகம்தான்!
எல்லா நம்பிக்கைகளும் ஏதோ ஒருவகையில் வியாபாரமாகிக் கொண்டிருக்க,
ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும்
வியாபாரமாகிக் கொண்டிருந்ததைச் செய்திகளில் பார்க்க முடிந்தது.
வாக்காளர்களுக்கு மதுபானம், வேட்டி சட்டை வழங்கப்பட்டதை ஒரு சானலில்
பார்த்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக
வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றொரு
சானலில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்களும் சேர்ந்து செய்த தேர்தல்
வியாபாரமும், நேயர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதே என்பதைச்
சொல்லத் தேவையில்லை.
நிச்சயமாக என்றேனும் ஒருநாள், இவையெல்லாம் மாறக்கூடும்... இந்த
தொலைக்காட்சி வியாபாரிகளிடம் சிக்காத நாள் கூட வரலாம்...
நம்புங்கள்...!
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
எந்தப் பங்கை வாங்கலாம்? என்ன விலைக்கு வாங்கலாம்? சந்தை ஏறுமா,
இறங்குமா? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக்
காத்திருக்கிறார்கள் பங்குச் சந்தை வல்லுனர்கள். குடுகுடுப்பைக்காரன்
குறி சொல்வது போல இவர்கள் கொடுக்கும் பரிந்துரையை நம்பி, பங்குச்
சந்தையில் பணம் போடுபவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் வேறென்ன
செய்ய? பங்குச்சந்தையையும் பரிந்துரைகளையும் நம்புவோர் இருக்கும்
வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்கும் சானல்களின் வியாபாரம் அமோகம்தான்!
நல்ல தகவல்! பங்கு சந்தை நல்ல தொழில் தான்.நன்கு தெரிந்த பின் தான் உள்ளே நுழைய வேண்டும்.நம் தான் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் தவிர அவர்கள் அல்ல.
இறங்குமா? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக்
காத்திருக்கிறார்கள் பங்குச் சந்தை வல்லுனர்கள். குடுகுடுப்பைக்காரன்
குறி சொல்வது போல இவர்கள் கொடுக்கும் பரிந்துரையை நம்பி, பங்குச்
சந்தையில் பணம் போடுபவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் வேறென்ன
செய்ய? பங்குச்சந்தையையும் பரிந்துரைகளையும் நம்புவோர் இருக்கும்
வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்கும் சானல்களின் வியாபாரம் அமோகம்தான்!
நல்ல தகவல்! பங்கு சந்தை நல்ல தொழில் தான்.நன்கு தெரிந்த பின் தான் உள்ளே நுழைய வேண்டும்.நம் தான் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் தவிர அவர்கள் அல்ல.
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
இது அவர்கள் வேலை நம் தான் உசாராக இருக்க வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|