புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
40 Posts - 63%
heezulia
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
2 Posts - 3%
viyasan
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
232 Posts - 42%
heezulia
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
21 Posts - 4%
prajai
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புக் காதலனே! Poll_c10அன்புக் காதலனே! Poll_m10அன்புக் காதலனே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புக் காதலனே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 08, 2011 4:24 pm

அந்தப் பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்த நேத்ரா, அங்குமிங்கும் கண்களால் ரகுவைத் தேடினாள். டைட் ஜீன்ஸ், ஃபுல் ஹேண்ட் சர்ட் அணிந்த ஃபேஷனாக இருந்தாள். கைகளில் அழகிய பை மற்றும் செல்ஃபோன்.

"ஹாய் நேத்ரா!'

"ஹாய்...!'

"ஏன் இவ்வளவு லேட்? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்காங்கத் தெரியுமா?'

"ஸாரி ரகு! வீட்டுல பாட்டியம்மா ஊருல இருந்து வந்திருக்காங்க, அவங்களுக்கெல்லாம் இப்படிக் கல்யாணத்துக்கு முன்னாடி உங்களோட பழகறது பிடிக்காது; அதான் அவங்கள சமாளிச்சு நான் கிளம்ப கொஞ்சம் லேட்டாயிடுச்சு'

"இன்னும் எந்தக் காலத்துல இருக்க? இப்பெல்லாம் பொண்ணுங்க முன்னே பின்னே தெரியாதவன் கூடவெல்லாம் டேட்டிங், டிஸ்கோதேன்னு சுத்துறாங்க. நமக்கு தான் நிச்சயம் ஆயிடுச்சே! அப்புறமென்ன?'

"இருந்தாலும் ரகு, பாட்டி ரொம்ப கண்டிப்பனவங்க... சரி... சரி... உன் ஃப்ரெண்ட்ஸ் தேடப் போறாங்க, வா உள்ளே போலாம்' இருவரும் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தனர்.

ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். ரகு தன் நண்பர்கள் ஒவ்வொரு வரையும், நேத்ராவிற்கு அறிமுகம் செய்தான். ரகுவின் நண்பர்கள், அன்போடு பழகினர். இரண்டு மணி நேரம் ஜாலியாகக் கழிந்தது. டின்னர் முடிந்து அனைவரும் விடைபெற்றுச் சென்றனர். நேத்ராவும் தயாரானாள்.

"இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன் நேத்ரா. உன்னைப் பிரிவதற்கு மனசேயில்லை.'

"காலம் பூரா ஒண்ணா தானே இருக்கப் போறோம் ரகு?'

"அதுவும் சரிதான், இன்னும் இருபதே நாட்களில் நமக்குக் கல்யாணம். கடந்த ரெண்டு மாசமா நாமளும் விடாமல் செல்ஃபோன் பில்லை ஏத்திக்கிட்டுதான் இருக்கோம்'... ஏக்கப் பெருமூச்சு விட்டான் ரகு.

வெட்கத்துடன் சிரித்தாள் நேத்ரா.

"கல்யாணத்துக்கு முன்னாடி என் மனசுல இருக்கிறது எல்லாத்தையும் பர்சனலா உங்கிட்ட பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன் நேத்ரா...'

"ஏய்... ஏதாவது லவ் மேட்டரா...?' கிண்டலடித்தாள்.

"எனக்கும் கல்லூரி நாட்களில் காதல் கத்திரிக்கால் எல்லாம் வந்தது நேத்ரா. நானும் என் க்ளாஸ்மேட் மீராவும் விரும்பினோம். சினிமா, பீச்னு சுத்தினோம். ஆனா அவளுக்கு வேற இடத்துல கல்யாணமாயிடுச்சு. ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டேன் தெரியுமா? பட்... இப்ப எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டேன். உன்கிட்ட எதையும் மறைக்க கூடாதுங்கிறதுக்காக இதையெல்லாம் சொல்றேன்.'

நேத்ரா, ரகுவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏய்... என்னாச்சு... அப்செட் ஆயிட்டியா? படிச்சவ ஸ்போட்டிவா எடுத்துக்குவேன்னு தான் நான் ஓப்பனா பேசுறேன்...'

"எஸ்... ரகு, பழசைப் பற்றி இனி என்ன பேச்சு? நம் எதிர்காலத்தைப் பத்திப் பேசுவோமே!'

"எத்தனை பாக்கியசாலி நான்!' சிலிர்த்தான்.

"சரி ரகு, டயமாச்சு... நா கிளம்புறேன்.'

"எனக்காக ஒரே ஒரு வேண்டுகோள்...'

"ஐயோ... இன்னும் என்ன...?'

"இந்தக் கண்ணை உறுத்துற டிரஸ் என் நேத்ராவுக்கு நல்லாயில்ல, எனக்காக கொஞ்சம் மாத்திக்கோயேன், நீ என்னவள்...'

"அட... இவ்வளவுதானா' இட்ஸ் ஓகே... பை... ரகு' பறந்தாள்.

அடுத்த வந்த நாட்களும் வேகமாக கரைந்தன. திருமணத்திற்கு முந்தைய இரவு, வரவேற்பு நாளும் வந்தது. மறுநாள் திருமணம். ரகு தன் அத்தை, பாட்டி அனைவரிடமும் அறிமுகப்படுத்தினான்.

ரகு தன் பாட்டியிடம், "பாட்டி உங்க பேத்தி எப்படி இருக்கா?' என்றான்.

"கண்ணுக்கு லட்சணமா இருக்கா படிச்சிருக்காளாடா?'

"என்ன பாட்டி இப்படிக் கேட்கிறீங்க, என்னையே மாதிரியே அவளும் கை நிறைய சம்பாதிக்கறா.'

"உன்னைய மாறியே அவளும் கால்ல சக்கரத்தைக் கட்டிகிட்டு ஓடப் போறாளா...? என் கூட இருப்பாள்னு நினைச்சேனேடா... ம்ஹ்...'

"பாட்டி, கவலைப்படாதீங்க நான் திருமணத்திற்கு அப்புறமா வேலைக்குப் போகமாட்டேன். எப்பவும் உங்க பக்கத்துல இருந்து உங்களை கவனிச்சுக்கிறேன்' என சொல்லிவிட்டு மணமகள் அறைக்கு வந்துவிட்டாள் நேத்ரா. சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. வெளியே ரகு நின்றிருந்தான்.

"ஏய் ரகு, என்ன இந்தப் பக்கம்?'

"சும்மாதான். என் தேவதைக்கு ஏதாவது ஹெல்ப் செய்யலாமேனு வந்தேன்.'

"ஒண்ணும் வேண்டாம் நீ போய், பாட்டி, அத்தை, மாமாவுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணு, பாவம் கல்யாண வேலை அவங்களுக்கும் குறையுமில்லையா?'

"அதெல்லாம் முன்னேற்பாடு பக்காவா செஞ்சு இருக்காங்க. நோ ப்ராப்ளம்... ஆங்... நீ பாட்டின்னு சொன்னவுடன்தான் நினைவுக்கு வருது. நீ பாட்டிக்கிட்ட திருமணத்திற்கு பிறகு வேலைக்குப் போகலைன்னு சும்மா தான சொன்ன?'

"ஆமா, ஏன் கேட்குற?'

"இல்ல... இந்தக் காலத்துல இரண்டு பேரும் வேலைக்குப் போனாலே காலம் தள்ளுறது கஷ்டம்... அதான்... நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதடா?'

"இட்ஸ் ஓ.கே. ரகு!'

"உன் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் எனக்கு கால் பண்ணினாங்க... என் நம்பர்... நீ கொடுத்திருந்தியா?'

"ஆமா ரகு! இனி உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன என் ஃப்ரெண்ட்ஸ் என்ன, என்னைப் பொறுத்த வரைக்கும் எல்லாரும் ஒண்ணுதான். அதான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் உன் நம்பரைக் கொடுத்தேன். எனி ப்ராப்ளம்?'

"நத்திங் டார்லிங்... நிறைய பேர் பேசினாங்க... சிநேகா, ரமேஷ்ன்னு இரண்டு பேரு கடைசியா பேசினாங்க அவங்க பேச்சே எனக்குப் பிடிக்கலை. உன்னோட லெவலுக்கு இவங்களையெல்லாம் அளவா வச்சுக்கோடா...' ரகு முடிப்பதற்குள்,

அங்கு வந்த ரகுவின் நண்பர்கள், "டேய்... அதற்குள் பொண்டாட்டிக்கிட்ட அனுமதி வாங்க வந்துட்டியா'ன்னு கிண்டலடித்துத் துரத்தினார்கள்.

"சீ... மாடிக்கு போங்கடா மச்சான்ஸ்...' நான் பின்னாடி வர்றேன்.

அவர்கள் தலை மறைந்ததும் நேத்ரா, "என்ன அனுமதி ரகு'

"ஆமா நேத்ரா நண்பர்கள் ட்ரிங்ஸ் பார்ட்டி கேட்டு இருக்காங்க, எப்பவும் இப்படித்தான் கண்டுக்காத; இதெல்லாம் இப்ப கல்யாணத்துல கட்டாயமாகிடுச்சு. பாச்சுலர்ஸ் பார்ட்டி கொடுக்கலைன்னா நல்லாயிருக்காது. பட்... உன்னோட ரகுவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஸோ... பீ ஹாப்பி! பை' மறைந்தான் மாடியை நோக்கி.

மாலை வரவேற்பு நடந்தது. ரகுவின் அலுவலகப் பெண் தோழி, வேண்டுமென்றே கிண்டலுக்காக, ரகுவிடம், "என்னைய இப்படி ஏமாத்திட்டேயே ரகு' என்ற கூறி அழ, ரகு, "உன்னையும் கட்டிக்கிறேன்டி... ப்ராமிஸ்!' என்று கையில் அடிக்க, "கொல்' என்று சிரிப்பலை எழுந்தது. இப்படியாக நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவிக்க வரவேற்பு முடிந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்தது. ரகுவைச் சார்ந்தவர்கள் பரபரப்பாக ரகுவை உலுக்கினர். மண்டபத்தில் பெண் வீட்டார் ஒருவரையும் காணவில்லை. அதற்கு பதில் ரகு பெயரில் ஒரு கடிதம் மண்டப மானேஜரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதில்...

அன்பு ரகுவுக்கு,

நேத்ரா எழுதுவது. இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. உனக்கு இது எதிர் பாராத திருப்பம். நீதான் படித்தவனாச்சே! ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொள்.

ஒரு ஆணைப் போல கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உன்னால் அந்த ஆண்மகனை போல நான் உடை அணிவதை ஏற்க முடியவில்லை.

திருமணத்திற்கு முன் நீ ஒரு பெண்ணிடம் கொண்ட காதலை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய்... ஆனால் மனைவியாய் வரப் போறவளின் நண்பர்களைக்கூட உன்னால் சாதாரணமாக ஏற்க முடியவில்லை.

பேச்சுலர்ஸ் பார்ட்டி போல, நானும் வர்ஜின் பார்ட்டி நடத்தினால் உனக்கு ஓ.கே.யா?

நேற்று உன் பெண் தோழி ஜாலிக்காகக் கேட்டது போல் என் ஆண் நண்பன், என்னைக் கேட்டிருந்தால் அதை உன் மனம் எந்த கோணத்தில் ஏற்றிருக்கும்?

உனக்காக என் உடையை மாற்றி, வேலைக்கு போய் சம்பாதித்து, உன் தவறுகளையெல்லாம் பெருந்தன்மையாக ஏற்று குடும்பம் நடத்த நான் ஒன்றும் பெரிய தியாகி அல்ல; நல்ல மனமும், சிந்திக்கும் அறிவும் படைத்த நவீனப் பெண்! வாழ்க்கைக்காக மனச்சாட்சியைக் கொல்ல எனக்கு விருப்பம் இல்லை.

இந்த முடிவு ஒன்றும் உன்னை பாதிக்காது. நீதான் எல்லாவற்றையும் ஸ்போர்டிவ்வாக எடுப்பவனாயிற்றே!

இப்படிக்கு
நேத்ரா



மங்கையர் மலர்



அன்புக் காதலனே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 08, 2011 4:35 pm

இதில் இருந்து என்ன தெரியுது நாம கட்டிக்க போற பொண்னுகிட்ட
உண்மையை பேச கூடாதுனு தெரியுது சிரி

யாரோ அடிக்க வர மாதிரி தெரியுது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 08, 2011 5:32 pm

முரளிராஜா wrote:இதில் இருந்து என்ன தெரியுது நாம கட்டிக்க போற பொண்னுகிட்ட
உண்மையை பேச கூடாதுனு தெரியுது சிரி

மிகவும் சரி பாஸ்! அன்புக் காதலனே! 224747944



அன்புக் காதலனே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 7:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:46 pm

கொஞ்சம் முடிவுரை சொல்லு நண்பா ....?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக