ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழருக்கு மகாராணி விருது – பரிந்துரை செய்த நியுசிலாந்து மீது சிறிலங்கா சீற்றம்

2 posters

Go down

ஈழத்தமிழருக்கு மகாராணி விருது – பரிந்துரை செய்த நியுசிலாந்து மீது சிறிலங்கா சீற்றம்  Empty ஈழத்தமிழருக்கு மகாராணி விருது – பரிந்துரை செய்த நியுசிலாந்து மீது சிறிலங்கா சீற்றம்

Post by கண்ணன்3536 Thu Apr 07, 2011 12:53 pm

[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 00:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணியின் சேவைப் பதக்கத்துக்கு பரிந்துரை செய்த நியுசிலாந்து அரசுக்கு, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

நியுசிலாந்தில் உள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக பிரித்தானிய மகாராணியின் சேவைப்பதக்கம் ஈழத்தமிழரான ஆறுமுகம் தேவராஜன் (வயது 77) என்பவருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பதக்கதை பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அண்மையில் வழங்கி கௌரவித்திருந்தார்.

நியுசிலாந்து அரசாங்கமே இவரது பெயரை இந்தப் பதக்கத்துக்குப் பரிந்துரை செய்திருந்தது.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான ஆறுமுகம் தேவராஜன், 1997இல் தனது மகன்களில் ஒருவர் நியுசிலாந்துக்கு புலமைப் பரிசில் பெற்றுச் சென்றதை அடுத்து அங்கு புலம்பெயர்ந்து சென்றார்.

அங்கு இவர் நியுசிலாந்து தமிழ் மாணவர்களுக்கான மனிதாபிமான நிதியம் ஒன்றை உருவாக்கி அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.

நியுசிலாந்தில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசுக்குத் தெரிவான இரண்டு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணி விருது கிடைத்திருப்பது- அதுவும் நியுசிலாந்து அரசின் பரிந்துரையில் வழங்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த விவகாரம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து நாடாளுமன்றத்தில் தனது கவலையைத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சிறிலங்காவின் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா, இதுகுறித்த நியுசிலாந்து அரசுக்கு சிறிலங்காவின் கடும் எதிர்ப்பையும் கவலையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழர்களுக்கு ஆற்றிய பணிக்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரிவினைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக இவரது பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை என்று நியுசிலாந்து அரசாங்கம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் நியுசிலாந்தின் அந்தப் பதிலை சிறிலங்கா அரசு ஏற்கவில்லை என்றும் தொடர்ந்து நிலைமைகளைக் கண்காணிப்பதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.

மேற்கு நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர மோதல்களை நடத்தி வரும் நிலையில், நியுசிலாந்துடனும் தற்போது உரசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தைக் காண கொழும்பு வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பை நியுசிலாந்துப் பிரதமர் நிராகரித்த விவகாரமும் சிறிலங்கா அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஈழத்தமிழருக்கு மகாராணி விருது – பரிந்துரை செய்த நியுசிலாந்து மீது சிறிலங்கா சீற்றம்  Empty Re: ஈழத்தமிழருக்கு மகாராணி விருது – பரிந்துரை செய்த நியுசிலாந்து மீது சிறிலங்கா சீற்றம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Apr 07, 2011 1:55 pm

நியூசீலாந்தின் உயர் விருது ஈழ தமிழருக்கு! கடுப்பில் இலங்கை!!

நியூசீலாந்து நாட்டின் உயர் விருதான குயின்ஸ் சேர்விஸ் விருது இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் தேவராஜா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது என நேற்று நாடாளுமன்றில் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நியூசீலாந்து அரசுக்கு தமது கண்டனத்தினையும் வருத்தத்தினையும் தெரிவித்தார்.

நியூசீலாந்தில் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மகாராணியாரின் இந்த உயரிய விருது இவருடன் மூன்று தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒருவர் இந்தியத் தமிழர் மற்றைய இருவரும் இலங்கையர்கள்.

இலங்கையின் பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆறுமுகம் தேவராஜன் 1997ஆம் ஆண்டு முதல் நியூசீலாந்தில் வசித்து வருகிறார்.

ஹார்ட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தற்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளின் ஒருவராகச் செயல்படுகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விடயம் என அமைச்சர் டிலான் பெரோரா தெரிவித்தார்.

நன்றி Tamilcnn


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்
» சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!
» வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்
» மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum