Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
+3
முரளிராஜா
கலைவேந்தன்
murugesan
7 posters
Page 1 of 1
கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்ற கொள்ளை கும்பலாக மாறிவிட்ட
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்
என்று பாவூர்சத்திரத்தில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி பிரசார
பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூ., கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன்
ஆவேசமாக பேசினார். கூட்டத்தில் தா.பாண்டியன் பேசியதாவது: தமிழ்நாட்டில்
இன்னும் 12 நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டசபை
தேர்தலில் வாக்காளர்கள் புதிதாக சிந்திக்க வேண்டியதில்லை. கடந்த பல
ஆண்டுகளாக தமிழகத்தில் பல கட்சிகளின் கூட்டணியோடு திமுக ஆட்சி செய்து
வருகிறது. கருணாநிதி கடந்த 1969ம் ஆண்டு முதல் இன்று வரை 28 ஆண்டுகள்
தமிழகத்தை ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை தமிழக மக்கள் அவருக்கு
வழங்கியுள்ளனர். பழங்காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னர்கள், நெடுஞ்செழியன்,
சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன் ஆகியோருக்கு கூட இந்த வாய்ப்பு
கிட்டவில்லை. ஆனால் திருக்குவளை செல்வனுக்கு தமிழக மக்கள் அந்த வாய்ப்பினை
கொடுத்துள்ளனர். 1969 முதல் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்த
அறிவாளிகளையும், ஆற்றலாளிகளையும் ஒவ்வொருவராக அழித்து விட்டு இன்று ஒரு
கொள்ளை கும்பலை வைத்துக் கொண்டு ஆட்சியையும், திமுக கட்சியையும் நடத்தி
வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் சொத்து மதிப்பு ரூ.30
ஆயிரம் கோடியாகும். அண்ணா அறிவாலய அறக்கட்டளைக்கு தலைவராக இவரும், இவரது
மனைவியும், மகன்களும் மட்டுமே உள்ளனர். மற்றவர்களை சேர்க்கவில்லை. திராவிட
முன்னேற்ற கழகத்திலிருந்து பல தலைவர்களை கருணாநிதி வெளியேற்றியுள்ளார்.
1972ம் ஆண்டு எம்ஜிஆரை தூக்கி எறிந்தார். அவரை மக்கள் தாங்கி கோட்டையில்
அமர வைத்தனர். தற்போது திமுக தமிழ்நாட்டில் ஒரு கூட்டு தொழிற்குடும்பமாக
அரசியல் நடத்தி வருகிறது. கருணாநிதியின் 27வது பேரனுக்கு கூட 7 ஆயிரம் கோடி
மதிப்பில் சொத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று மிகப்பெரிய
மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மின்சார உற்பத்தி குறைவு
அல்ல. தமிழ்நாட்டில் ஹோண்டாய், நோக்கியா போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு
தடையில்லா மின்சாரத்தை கொடுத்துவிட்டு மீதியுள்ள மின்சாரத்தையும் ஆந்திரா,
கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு விற்றுவிட்டு குறைவான மின்சாரத்தையே
தமிழகத்திற்கு வழங்குகிறார். அனல் மின்நிலையத்திற்கு வாங்கும் நிலக்கரியில்
கூட மிகப்பெரிய ஊழல் செய்து தன் குடும்ப முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி
வருகிறார். கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே செயல்படும் திமுக கும்பல்
ஆட்சியில் இருக்கும்போது மின்சாரம் என்ன குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் பல்லாயிரம் கோடியை கருணாநிதி குடும்பம்
வாங்கியுள்ளது. பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு ராஜா தண்டனை
அனுபவிக்கிறார். ராஜாவின் நண்பர் எப்படி செத்தார் என்பது தெரியாமலேயே
மர்மமாக உள்ளது. தற்போது கலைஞர் "டிவி'க்கு வந்த 214 கோடி பணத்தின் மூலம்
கருணாநிதியின் குடும்பம் சிபிஐ அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளது.
இன்று தமிழக மக்களுக்கு கருணாநிதியின் ஆட்சி ஒரு மிகப்பெரிய தலைகுனிவை
தந்துள்ளது. உலக மக்களிடம் தமிழர்களுக்கு கருணாநிதியால் இன்று மிகப்பெரிய
அவமானம் வந்துள்ளது. ஆறுகளில் மணல் கொள்ளை, கல்குவாரிகளில் கனிம வளங்கள்
கொள்ளை, இலவச "டிவி' வழங்குவதில் முறைகேடு, காஸ் அடுப்பு வழங்கியதில்
முறைகேடு இப்படி பல்வேறு பிரச்னைககளில் சிக்கி திமுக திண்டாடி வருகிறது.
அதிலிருந்து விடுபடுவதற்காக தான் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்று
கருணாநிதி அதிமுக கூட்டணியை உடைக்க முயற்சி செய்தார். தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து கட்சிகளையும் உடைத்த மகா கெட்டிக்காரர் கருணாநிதி. நாங்கள் தனியாக
நின்றால் பணம் தருவதாக தூதர்களை அனுப்பினார். எங்களிடமே பேரம் பேசிய இவரை,
இந்த கூட்டத்தை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே கொள்ளையடிக்கின்ற கொள்ளை
கும்பலை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும். அதற்காக எங்களது கூட்டணி
கட்சியின் சார்பில் போட்டியிடும் தென்காசி வேட்பாளர் சரத்குமாருக்கு இரட்டை
இலை சின்னத்தில் வாக்களியுங்கள். ஆலங்குளம் சட்டசபை தொகுதியில்
போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.ஜி.ராஜேந்திரனுக்கு இரட்டை இலை
சின்னத்தில் வாக்களியுங்கள்'' என்றார். தென்காசி எம்.பி., லிங்கம்
பேசியதாவது:- ""நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் சக்திவாய்ந்த மெகா
கூட்டணி அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் மக்களுக்காக
வாழ்ந்தார். அப்படிப்பட்டவர் இருந்த நாற்காலியில் கருணாநிதி
அமர்ந்துள்ளார். தமிழக தேர்தலில் மக்களின் எதிரியாக கருணாநிதி உள்ளார்.
ஈழத்தமிழர் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி தனது
மக்களுக்கு பதவி வாங்குவதற்கு மட்டும் டில்லிக்கும், சென்னைக்கும் அலைந்ததை
நான் கண்கூடாக பார்த்துள்ளேன். கருணாநிதியின் தமிழின உணர்வை எண்ணி உலக
தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் சிரிக்கின்றனர். நாட்டையும், நாட்டு
மக்களையும் இழிவுபடுத்திய திமுக ஆட்சி இனி தொடரக்கூடாது. அதற்கு ஒரு முடிவு
கட்ட வாக்காளர்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்''
என பேசினார்.
நன்றி தினமலர்
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்
என்று பாவூர்சத்திரத்தில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி பிரசார
பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூ., கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன்
ஆவேசமாக பேசினார். கூட்டத்தில் தா.பாண்டியன் பேசியதாவது: தமிழ்நாட்டில்
இன்னும் 12 நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டசபை
தேர்தலில் வாக்காளர்கள் புதிதாக சிந்திக்க வேண்டியதில்லை. கடந்த பல
ஆண்டுகளாக தமிழகத்தில் பல கட்சிகளின் கூட்டணியோடு திமுக ஆட்சி செய்து
வருகிறது. கருணாநிதி கடந்த 1969ம் ஆண்டு முதல் இன்று வரை 28 ஆண்டுகள்
தமிழகத்தை ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை தமிழக மக்கள் அவருக்கு
வழங்கியுள்ளனர். பழங்காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னர்கள், நெடுஞ்செழியன்,
சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன் ஆகியோருக்கு கூட இந்த வாய்ப்பு
கிட்டவில்லை. ஆனால் திருக்குவளை செல்வனுக்கு தமிழக மக்கள் அந்த வாய்ப்பினை
கொடுத்துள்ளனர். 1969 முதல் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்த
அறிவாளிகளையும், ஆற்றலாளிகளையும் ஒவ்வொருவராக அழித்து விட்டு இன்று ஒரு
கொள்ளை கும்பலை வைத்துக் கொண்டு ஆட்சியையும், திமுக கட்சியையும் நடத்தி
வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் சொத்து மதிப்பு ரூ.30
ஆயிரம் கோடியாகும். அண்ணா அறிவாலய அறக்கட்டளைக்கு தலைவராக இவரும், இவரது
மனைவியும், மகன்களும் மட்டுமே உள்ளனர். மற்றவர்களை சேர்க்கவில்லை. திராவிட
முன்னேற்ற கழகத்திலிருந்து பல தலைவர்களை கருணாநிதி வெளியேற்றியுள்ளார்.
1972ம் ஆண்டு எம்ஜிஆரை தூக்கி எறிந்தார். அவரை மக்கள் தாங்கி கோட்டையில்
அமர வைத்தனர். தற்போது திமுக தமிழ்நாட்டில் ஒரு கூட்டு தொழிற்குடும்பமாக
அரசியல் நடத்தி வருகிறது. கருணாநிதியின் 27வது பேரனுக்கு கூட 7 ஆயிரம் கோடி
மதிப்பில் சொத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று மிகப்பெரிய
மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மின்சார உற்பத்தி குறைவு
அல்ல. தமிழ்நாட்டில் ஹோண்டாய், நோக்கியா போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு
தடையில்லா மின்சாரத்தை கொடுத்துவிட்டு மீதியுள்ள மின்சாரத்தையும் ஆந்திரா,
கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு விற்றுவிட்டு குறைவான மின்சாரத்தையே
தமிழகத்திற்கு வழங்குகிறார். அனல் மின்நிலையத்திற்கு வாங்கும் நிலக்கரியில்
கூட மிகப்பெரிய ஊழல் செய்து தன் குடும்ப முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி
வருகிறார். கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே செயல்படும் திமுக கும்பல்
ஆட்சியில் இருக்கும்போது மின்சாரம் என்ன குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் பல்லாயிரம் கோடியை கருணாநிதி குடும்பம்
வாங்கியுள்ளது. பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு ராஜா தண்டனை
அனுபவிக்கிறார். ராஜாவின் நண்பர் எப்படி செத்தார் என்பது தெரியாமலேயே
மர்மமாக உள்ளது. தற்போது கலைஞர் "டிவி'க்கு வந்த 214 கோடி பணத்தின் மூலம்
கருணாநிதியின் குடும்பம் சிபிஐ அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளது.
இன்று தமிழக மக்களுக்கு கருணாநிதியின் ஆட்சி ஒரு மிகப்பெரிய தலைகுனிவை
தந்துள்ளது. உலக மக்களிடம் தமிழர்களுக்கு கருணாநிதியால் இன்று மிகப்பெரிய
அவமானம் வந்துள்ளது. ஆறுகளில் மணல் கொள்ளை, கல்குவாரிகளில் கனிம வளங்கள்
கொள்ளை, இலவச "டிவி' வழங்குவதில் முறைகேடு, காஸ் அடுப்பு வழங்கியதில்
முறைகேடு இப்படி பல்வேறு பிரச்னைககளில் சிக்கி திமுக திண்டாடி வருகிறது.
அதிலிருந்து விடுபடுவதற்காக தான் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்று
கருணாநிதி அதிமுக கூட்டணியை உடைக்க முயற்சி செய்தார். தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து கட்சிகளையும் உடைத்த மகா கெட்டிக்காரர் கருணாநிதி. நாங்கள் தனியாக
நின்றால் பணம் தருவதாக தூதர்களை அனுப்பினார். எங்களிடமே பேரம் பேசிய இவரை,
இந்த கூட்டத்தை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே கொள்ளையடிக்கின்ற கொள்ளை
கும்பலை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும். அதற்காக எங்களது கூட்டணி
கட்சியின் சார்பில் போட்டியிடும் தென்காசி வேட்பாளர் சரத்குமாருக்கு இரட்டை
இலை சின்னத்தில் வாக்களியுங்கள். ஆலங்குளம் சட்டசபை தொகுதியில்
போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.ஜி.ராஜேந்திரனுக்கு இரட்டை இலை
சின்னத்தில் வாக்களியுங்கள்'' என்றார். தென்காசி எம்.பி., லிங்கம்
பேசியதாவது:- ""நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் சக்திவாய்ந்த மெகா
கூட்டணி அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் மக்களுக்காக
வாழ்ந்தார். அப்படிப்பட்டவர் இருந்த நாற்காலியில் கருணாநிதி
அமர்ந்துள்ளார். தமிழக தேர்தலில் மக்களின் எதிரியாக கருணாநிதி உள்ளார்.
ஈழத்தமிழர் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி தனது
மக்களுக்கு பதவி வாங்குவதற்கு மட்டும் டில்லிக்கும், சென்னைக்கும் அலைந்ததை
நான் கண்கூடாக பார்த்துள்ளேன். கருணாநிதியின் தமிழின உணர்வை எண்ணி உலக
தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் சிரிக்கின்றனர். நாட்டையும், நாட்டு
மக்களையும் இழிவுபடுத்திய திமுக ஆட்சி இனி தொடரக்கூடாது. அதற்கு ஒரு முடிவு
கட்ட வாக்காளர்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்''
என பேசினார்.
நன்றி தினமலர்
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Re: கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
மிக நலல் பேச்சு... தமிழக மகக்ள் உணர்வார்களா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
கலை wrote:மிக நலல் பேச்சு... தமிழக மகக்ள் உணர்வார்களா..?
தேர்தல் முடிவில்தான் தெரியும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
ஜெ மேடம் கூட கருணாநிதியை பற்றி நிறைய சொல்கிறார். நிச்சயம் இந்தமுறை மாற்றம் வரும்போல தான் தெரியுது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
கூட்டணியில் பிரச்னை வந்தபோது, பாண்டியன் விஜய்காந்த் அலுவலகத்திலிருந்து, காரில் திரும்பும்போது, செய்தியாளர் கேட்ட கேள்வி..
திரும்பவும் ஜெ.வுடன் சமரசம் செய்துகொள்வீர்களா..?
தா.பா : ஒருக்காலும் இல்லை.. உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் போங்கள்..
24 மணி நேரத்துக்குள் நிலையை மாற்றிக்கொண்ட தீரர் தா.பா..!
திரும்பவும் ஜெ.வுடன் சமரசம் செய்துகொள்வீர்களா..?
தா.பா : ஒருக்காலும் இல்லை.. உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் போங்கள்..
24 மணி நேரத்துக்குள் நிலையை மாற்றிக்கொண்ட தீரர் தா.பா..!
Re: கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
கபடதாரி கலைஞர் ,
மிகவும் கபடதாரி கலைஞர்.
ஈமெயில் மூலம் வந்த செய்தி,
ஈகரை அன்பர்களுக்கு.
ரமணீயன்.
-கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம்- when will the Karunanidhi looting end?
Is there an end to this large scale looting???
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.
-----------------------------------------------------------------
மிகவும் கபடதாரி கலைஞர்.
ஈமெயில் மூலம் வந்த செய்தி,
ஈகரை அன்பர்களுக்கு.
ரமணீயன்.
-கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம்- when will the Karunanidhi looting end?
Is there an end to this large scale looting???
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.
-----------------------------------------------------------------
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
இது எல்லா ஆளும் கட்சியும் செய்வதுதான்..
அல்பாயுசில் போன ஜெ.ஜெ. டிவியில்கூட அரசு விளம்பரங்கள் வந்துள்ளன என்பது பலர் அறியாத செய்தி..
அல்பாயுசில் போன ஜெ.ஜெ. டிவியில்கூட அரசு விளம்பரங்கள் வந்துள்ளன என்பது பலர் அறியாத செய்தி..
Similar topics
» தமிழர்களின் நாக்குகளை வெட்டி எறிந்து, பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்த இலங்கை ராணுவத்தினர்!
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால்
» தமிழர்களின் நாக்குகளை அறுத்தனர் சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்; இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த கொடூரம் பற்றி சிங்கள வீரர் `பகீர்' தகவல்
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால்
» தமிழர்களின் நாக்குகளை அறுத்தனர் சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்; இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த கொடூரம் பற்றி சிங்கள வீரர் `பகீர்' தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|