Latest topics
» மரங்களின் பாதுகாவலர்by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
+12
சிவா
மஞ்சுபாஷிணி
mussab
அருண்
கே. பாலா
kirikasan
Manik
அசுரன்
கலைவேந்தன்
ஷர்மிஅஷாம்
முரளிராஜா
பாலாஜி
16 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
First topic message reminder :
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
கிரிக்கெட் வெற்றி இராணுவத்துக்குச் சமர்ப்பணம் என்றால் தோல்வி புலிகளுக்குச் சமர்ப்பணமா?!சரவணபவன் - இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா?! மாவை கேள்வி
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:15.42 AM GMT ]
உலகக் கிண்ணக் கிரிக்கெட் வெற்றியை போரில் மரணித்த இராணுவத்தினருக்குச் சமர்ப்பணம் செய்வதாகக் கூறிய அரசின் ஐ.நா.பிரதிநிதி, தோல்வியைப் புலிகளுக்குச் சமர்ப்பிக்கப் போகின்றாரா? என சரா எம்பியும், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என மாவை எம்பியும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஒரு விளையாட்டின் முக்கியத்துவத்தை உணராமல் பொறுப்பற்ற வகையில் நாட்டின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் இவ்வாறு பேசலாமா? என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பினார்.
மல்லாகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளை அலுவலகத்தில் கணினி, தையல் பயிற்சி நிலையங்களைக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவும், சரவணபவனும் கலந்து நாடாவை வெட்டி வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வில் மல்லாகம் மற்றும் காங்கேசன்துறைப் பிரதேச அமைப்பாளரும் பிரசே சபை வேட்பாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மேலும் கூறியவை வருமாறு:
அன்று தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காகப் படையினரால் அமைக்கப்பட்ட காவலரண்களைத் தகர்த்து அகற்றுவதற்கு நமது வரிப்பணமே செலவிடப்பட்டுள்ளது. மல்லாகம் உட்பட இப் பிரதேசங்களில் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இவை அன்றும் ஜனாதிபதியின் "வடக்கின் வசந்தம்" திட்டத்தின் கீழ் தொண்டர் அமைப்புக்களின் மூலமே யாழ். மாவட்ட செயலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவற்றை நான் இப்பொழுதே உங்களுக்குக் கூறிவைக்கிறேன்.
இந்த வேலைத் திட்டங்கள் முடிவடைந்ததும் எல்லாவற்றையும் தாமே செய்தோம் எனக் கூறிக்கொண்டு மாயைபோட்டுக் கொண்டு வருவார் அமைச்சர் டக்ளஸ். அதற்கு நீங்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
இங்கு பிரதேச செலாளராக இருக்கும் ஒரு பெண் அதிகாரி டக்ளஸின் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவர்கள் சிவில் அதிகாரிகள். நாளை நிர்வாக மாற்றம் ஏற்பட்டால் இவர்களுடைய நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இப்பொழுது யாழ். பல் கலைக்கழகத்துக்கு சிறந்த நிர்வாகத் திறமையுடைய பெண்மணியான வசந்தி அரசரட்ணம் துணைவேந்தராக வந்துள்ளார். அவர் பதவியேற்றபின் பின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மிகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் பல விடயங்களைக் கூறி உள்ளார். அவர் நிச்சயமாக இம்மாவட்டத்தில் உள்ள பெண் நிர்வாக அதிகாரிகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வார் என்று நம்புகின்றேன் என்றும் சரவணபவன் எம்.பி. கூறினார்.
தொடர்ந்து சுன்னாகத்தில் அமைந்துள்ள கட்புலனற்றோர் பாதுகாப்பகமான "வாழ்வகத்திற்கும்" விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்த வாழ்வகத்தின் அபிவிருத்திக்காக தனது நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபா ஒதுக்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.
இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா? ஐ.நா. பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்றது - மாவை
இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என்று கண்டித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.
மாவை சேனாதிராசா தொடர்ந்து பேசுகையில்,
விளையாட்டு அரங்குகளின் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்ற சித்தாந்தத்தையே சிதைத்து விட்டார் ஐ.நாவின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.
கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும். இந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் என்று யுத்த வெறியூட்டும் வகையில் கூறி உள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்துகொண்டு கிரிக்கெட் வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என்று கூறுகின்றார்.
இங்கே இவர்கள் இருவருமே உலகமே ஆவலுடன் அவதானித்த விளையாட்டுப் போட்டியை ஒரு யுத்தகளமாக்கி வெறியூட்டும் வகையில் பேசுகின்றனர். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என்று கேட்கின்றேன். அரசியல் நாகரிகமற்ற இக்கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அண்மையில் இங்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இங்குள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் முன்னிலையிலேயே கூறினார் 13 ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று.அரசும் அமைச்சர்களும் அப்போது தலையாட்டிக் கொண்டி ருந்தனர். ஆனால், ஜனாதிபதியோ பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது; வழங்கமாட்டேன் என்று தன்பாட்டில் கூறிக் கொண்டு போகிறார்.
அதிகாரப்பரவல் எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள அரசு, எல்லா வகையிலும் எம்மை ஓரம் கட்டுகின்றது.
கல்வித்துறை என்றால் என்ன, ஏனைய எமது விடயங்கள் என்றால் என்ன மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகின்றனர்.
தென்பகுதியில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்வதாகக் கூறிய ஜனாதிபதி, யாழ்.பல்கலைக் கழகத்தை ஒதுக்கிவிட்டார். உயர் கல்வி அமைச்சுடன் பேசியதன் பயனாகவே இந்திய அரசின் உதவியுடன் யாழ்.பல்கலைக்கழகம் சீரமைக்கப்படவுள்ளது.
இன்று உலக நாடுகளில் கல்வித்துறை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அனைத்தும் கணினிமயமாகிவிட்டன. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்ட பின் தங்கிய எமது கிராமங்களுக்கு அந்த வசதிகள் இல்லை.
சகல துறைகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எமது சக்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொண்டதால்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றார்
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:15.42 AM GMT ]
உலகக் கிண்ணக் கிரிக்கெட் வெற்றியை போரில் மரணித்த இராணுவத்தினருக்குச் சமர்ப்பணம் செய்வதாகக் கூறிய அரசின் ஐ.நா.பிரதிநிதி, தோல்வியைப் புலிகளுக்குச் சமர்ப்பிக்கப் போகின்றாரா? என சரா எம்பியும், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என மாவை எம்பியும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஒரு விளையாட்டின் முக்கியத்துவத்தை உணராமல் பொறுப்பற்ற வகையில் நாட்டின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் இவ்வாறு பேசலாமா? என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பினார்.
மல்லாகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளை அலுவலகத்தில் கணினி, தையல் பயிற்சி நிலையங்களைக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவும், சரவணபவனும் கலந்து நாடாவை வெட்டி வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வில் மல்லாகம் மற்றும் காங்கேசன்துறைப் பிரதேச அமைப்பாளரும் பிரசே சபை வேட்பாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மேலும் கூறியவை வருமாறு:
அன்று தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காகப் படையினரால் அமைக்கப்பட்ட காவலரண்களைத் தகர்த்து அகற்றுவதற்கு நமது வரிப்பணமே செலவிடப்பட்டுள்ளது. மல்லாகம் உட்பட இப் பிரதேசங்களில் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இவை அன்றும் ஜனாதிபதியின் "வடக்கின் வசந்தம்" திட்டத்தின் கீழ் தொண்டர் அமைப்புக்களின் மூலமே யாழ். மாவட்ட செயலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவற்றை நான் இப்பொழுதே உங்களுக்குக் கூறிவைக்கிறேன்.
இந்த வேலைத் திட்டங்கள் முடிவடைந்ததும் எல்லாவற்றையும் தாமே செய்தோம் எனக் கூறிக்கொண்டு மாயைபோட்டுக் கொண்டு வருவார் அமைச்சர் டக்ளஸ். அதற்கு நீங்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
இங்கு பிரதேச செலாளராக இருக்கும் ஒரு பெண் அதிகாரி டக்ளஸின் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவர்கள் சிவில் அதிகாரிகள். நாளை நிர்வாக மாற்றம் ஏற்பட்டால் இவர்களுடைய நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இப்பொழுது யாழ். பல் கலைக்கழகத்துக்கு சிறந்த நிர்வாகத் திறமையுடைய பெண்மணியான வசந்தி அரசரட்ணம் துணைவேந்தராக வந்துள்ளார். அவர் பதவியேற்றபின் பின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மிகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் பல விடயங்களைக் கூறி உள்ளார். அவர் நிச்சயமாக இம்மாவட்டத்தில் உள்ள பெண் நிர்வாக அதிகாரிகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வார் என்று நம்புகின்றேன் என்றும் சரவணபவன் எம்.பி. கூறினார்.
தொடர்ந்து சுன்னாகத்தில் அமைந்துள்ள கட்புலனற்றோர் பாதுகாப்பகமான "வாழ்வகத்திற்கும்" விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்த வாழ்வகத்தின் அபிவிருத்திக்காக தனது நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபா ஒதுக்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.
இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா? ஐ.நா. பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்றது - மாவை
இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என்று கண்டித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.
மாவை சேனாதிராசா தொடர்ந்து பேசுகையில்,
விளையாட்டு அரங்குகளின் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்ற சித்தாந்தத்தையே சிதைத்து விட்டார் ஐ.நாவின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.
கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும். இந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் என்று யுத்த வெறியூட்டும் வகையில் கூறி உள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்துகொண்டு கிரிக்கெட் வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என்று கூறுகின்றார்.
இங்கே இவர்கள் இருவருமே உலகமே ஆவலுடன் அவதானித்த விளையாட்டுப் போட்டியை ஒரு யுத்தகளமாக்கி வெறியூட்டும் வகையில் பேசுகின்றனர். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என்று கேட்கின்றேன். அரசியல் நாகரிகமற்ற இக்கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அண்மையில் இங்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இங்குள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் முன்னிலையிலேயே கூறினார் 13 ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று.அரசும் அமைச்சர்களும் அப்போது தலையாட்டிக் கொண்டி ருந்தனர். ஆனால், ஜனாதிபதியோ பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது; வழங்கமாட்டேன் என்று தன்பாட்டில் கூறிக் கொண்டு போகிறார்.
அதிகாரப்பரவல் எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள அரசு, எல்லா வகையிலும் எம்மை ஓரம் கட்டுகின்றது.
கல்வித்துறை என்றால் என்ன, ஏனைய எமது விடயங்கள் என்றால் என்ன மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகின்றனர்.
தென்பகுதியில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்வதாகக் கூறிய ஜனாதிபதி, யாழ்.பல்கலைக் கழகத்தை ஒதுக்கிவிட்டார். உயர் கல்வி அமைச்சுடன் பேசியதன் பயனாகவே இந்திய அரசின் உதவியுடன் யாழ்.பல்கலைக்கழகம் சீரமைக்கப்படவுள்ளது.
இன்று உலக நாடுகளில் கல்வித்துறை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அனைத்தும் கணினிமயமாகிவிட்டன. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்ட பின் தங்கிய எமது கிராமங்களுக்கு அந்த வசதிகள் இல்லை.
சகல துறைகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எமது சக்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொண்டதால்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றார்
Re: விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
அதான் அவங்க டங்குவாரு போச்சுன்னு நினைக்கிரென்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» விஞ்ஞான விளையாட்டு விபரீதம்!
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
» கிராமத்து விளையாட்டு - நீலி விளையாட்டு!
» H1N1 தடுப்பூசியின் விபரீதம்!
» முகஸ்துதியின் விபரீதம்!
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
» கிராமத்து விளையாட்டு - நீலி விளையாட்டு!
» H1N1 தடுப்பூசியின் விபரீதம்!
» முகஸ்துதியின் விபரீதம்!
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|