ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு

5 posters

Go down

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு

Post by robinhood Wed Mar 30, 2011 1:51 pm



புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலர் மீது, 80 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என, சி.பி.ஐ., விடுத்த கோரிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்தது. இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சி.பி.ஐ.,யும் அமலாக்கப்பிரிவும், சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்திவருகின்றன. இரு அமைப்புகளும், தங்களது விசாரணை அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தன.
அதில், "அன்னிய செலாவணி நிர்வாக சட்ட விதிகள் மற்றும் சட்ட விரோத பினாமி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன' என, கூறப்பட்டிருந்தது. அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.எஸ்.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை வரும் 31ம் தேதி(நாளை)க்குள் தாக்கல் செய்யும்படி கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலரது மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அமலாக்கப்பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி நடைமுறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது."ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் தன் ஒரு பங்கிற்கு, 106.95 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் சந்தை மதிப்பு, வெறும், 270 ரூபாய் தான். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், பல நாடுகளிலிருந்து வந்துள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சி.பி.ஐ., கோரிக்கைக்கு அனுமதியளித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது.

இதற்காக, மொத்தம், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜா உட்பட, மொத்தம் ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. நான்கு அதிகாரிகள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.முன்னாள் அமைச்சர் ராஜா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் லஞ்சம் ஆகிய குற்றங்களில் வழக்கு பதிவாகும்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக, தவறு செய்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது, உரிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என, அறிக்கையில், அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அறிக்கையில், "சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, மொரிஷியஸ் உட்பட சில நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டியது, மார்ச் 31ம் தேதி என்று முன்பு குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு மேலும் இருநாள் அவகாசம் தரப்பட்டது. அதைத் தவிர, ஏப்., 25ம் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, சி.பி.ஐ., தெரிவித்தது.

சாதிக் மரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சாதிக் பாட்சாவின் மரணம் குறித்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்தும், அந்த விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும், நீதிபதிகள், சி.பி.ஐ.,யிடம் கருத்து கேட்டனர்.

பல்வா சகோதரர் கைது : இதற்கிடையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது.கலைஞர் "டிவி' பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சினியுக் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள் இவர்கள். இந்த விசாரணை தொடர்பாக இவர்களது அலுவலகத்தில் முன்பு நடத்திய சோதனையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஷாகித் பல்வா, ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty Re: ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 5:26 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

சாதிக்பாட்சா இறந்த பாவம் என்னாகுமோ...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty Re: ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு

Post by முரளிராஜா Wed Mar 30, 2011 6:04 pm

முடிவு எப்படி இருக்கும் என பார்ப்போம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty Re: ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு

Post by கலைவேந்தன் Thu Mar 31, 2011 1:23 am

வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty Re: ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு

Post by Aathira Thu Mar 31, 2011 1:25 am

கலை wrote:வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!
சரியாய்ச் சொன்னீங்க...


ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Tராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Hராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Iராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Rராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty Re: ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
» 2ஜி ஊழல்: ஆ.ராசா, 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி!
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
»  பிஎன்பி வங்கி நிதி மோசடி: நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum