ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாபாரியும் கெட்ட தேவதையும்!

4 posters

Go down

வியாபாரியும் கெட்ட தேவதையும்! Empty வியாபாரியும் கெட்ட தேவதையும்!

Post by சிவா Tue 29 Mar 2011 - 23:57

ஒரு சமயம் ஓர் ஏழை வியாபாரி தன் கடுமையான வேலைகளுக்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் நிழல் தரும் மரம் ஒன்றைக் கண்டான். அதன் அடியில் தங்கிவிட்டுச் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்ல நினைத்தான். அவன் சில பேரிச்சம் பழங்களைத் தன்னிடம் வைத்திருந்தான். அவற்றை உண்டு விட்டு விதைகளைத் தூக்கி எறிந்தான்.

திடீரென ஒரு பெரிய கெட்டதேவதை அவனுக்கு முன்னால் வந்து, ""நீ என் மீது கற்களை வீசிவிட்டாய். அதனால், நீ இறக்க வேண்டும்!'' என்றது.

அந்த வியாபாரி அதற்கு எடுத்துச் சொன்னான். ""அவை வெறும் பேரிச்சம்பழக் கொட்டைகளே. அவை கற்களுமல்ல; நான் உன் மீது எறியவும் இல்லை; நான் உன்னை துன்புறுத்தவில்லை. இருப்பினும் நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!'' என்றான்.

அந்த கெட்டதேவதை வியாபாரியின் எதிர்ப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை.

""அப்படியும் நான் இறக்க வேண்டும் என்று நீ விரும்பினால், எனக்கு ஒரு வரம் கொடு. நான் என்னுடைய கடன்களையெல்லாம் திருப்பித் தரவேண்டும். எனக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்கு நான் இவற்றையெல்லாம் தெரியப்படுத்த வேண்டும். எனக்கு ஒருநாள் அவகாசம் கொடு. நாளை நான் திரும்பி வருகிறேன்!'' என்று வியாபாரி கேட்டுக் கொண்டான்.

""நீ எனக்குச் சத்தியம் செய்து தருவாயா?'' என்றது.

""நான் சத்தியமாகத் திரும்பி வருவேன்!'' என உறுதியளித்தான் வியாபாரி.

மறுநாள் அந்த நேர்மையான வியாபாரி, தான் வாக்குறுதியளித்தபடி திரும்பி வந்தான். இரண்டு வழிப்போக்கர்களும் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தனர். ""இது கெட்ட தேவதைகள் வசிக்குமிடம். ஆதலால், நீ இங்கிருந்து சீக்கிரம் செல்வது நல்லது!'' என்றனர்.

அந்த வியாபாரி முழுக்கதையையும் சொன்னான். முடிவில் தான் இறப்பதற்குத் தயாராக அங்கே காத்துக் கொண்டிருப்பதையும் கூறினான். அவர்கள் அந்த வியாபாரிக்காக வருந்தினர். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது தூசியுடன் கூடிய பெரிய புகைப்படலம் எழுந்தது. அதுதான் அந்தக் கெட்டதேவதை.

""நீ வாக்களித்தபடி வந்தது நல்லது. ஆனால், இந்த இருவரும் யார்?'' என வினவியது.

""இவர்கள் தற்செயலாக என்னைக் கடந்து சென்றனர். அது தவிர வேறு எதுவுமில்லை!'' என்றான்.

""கெட்டதேவதையே! அந்த ஏழை வியாபாரி தன் உயிரை விடும் அளவிற்கு என்ன தவறு செய்தான்? என்னிடம் கூறு!'' என்றார்.

முதல் வழிப்போக்கன், ""ஓர் எதிர்பாராத நிகழ்ச்சிக்காக, நீ உன் சக்திகளைப் பயன்படுத்தி அவனுக்கு கெடுதல் செய்வது, உண்மையில் மிகவும் மோசமான செயல்!'' என்றான்.

இரண்டாவது வழிப்போக்கன், ""வியாபாரியைக் கொல்வதால் நீ என்ன நன்மை அடையப் போகிறாய் கெட்டதேவதையே... மேலும் மேலும் ஏன் பாவத்தை கட்டிக் கொள்கிறாய்?'' என்றான்.

அந்தக் கெட்டதேவதை நீண்ட நேரம் யோசித்துப் பிறகு கூறியது.

""நீங்கள் கூறுவதெல்லாம் சரி. இது ஒரு விபத்துதான். நான் அந்த வியாபாரியை மன்னித்து விடுகிறேன். நீங்கள் சரியான சமயத்தில் நற்புத்திக் கூறி என் கண்களைத் திறந்தீர்கள்!'' என்றது. அந்த வியாபாரி மிகவும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பித் தன் மனைவி குழந்தைகளுடன் வசித்தான்.

நீதி: கொடுத்த வாக்கை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியதால் அவனுக்கு கிடைத்த நன்மையை பார்த்தீர்களா?



சிறுவர் மலர்


வியாபாரியும் கெட்ட தேவதையும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வியாபாரியும் கெட்ட தேவதையும்! Empty Re: வியாபாரியும் கெட்ட தேவதையும்!

Post by மஞ்சுபாஷிணி Wed 30 Mar 2011 - 0:03

பிறர் நமக்கு கெடுதல் செய்தாலும் நாமும் நம் நிலையில் இருந்து கீழிறங்கி கெடுதல் திரும்ப செய்யாது நல்லதே செய்யவேண்டும் என்றும்....

வாக்கு கொடுத்தது கெட்டவருக்காக என்பதால் அலட்சியமாக இராமல் யார்’ எப்படி இருந்தாலும் நம் வரை நாம் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதை அழகாய் உணர்த்தும் அருமையான பாடம் இந்த கதை...

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வியாபாரியும் கெட்ட தேவதையும்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வியாபாரியும் கெட்ட தேவதையும்! Empty Re: வியாபாரியும் கெட்ட தேவதையும்!

Post by Aathira Wed 30 Mar 2011 - 4:05

நேர்மை உண்மை.. ஜெயிக்கும் என்ற நல்ல நீதிக்கதை.. பகிர்வுக்கு நன்றி சிவா..


வியாபாரியும் கெட்ட தேவதையும்! Aவியாபாரியும் கெட்ட தேவதையும்! Aவியாபாரியும் கெட்ட தேவதையும்! Tவியாபாரியும் கெட்ட தேவதையும்! Hவியாபாரியும் கெட்ட தேவதையும்! Iவியாபாரியும் கெட்ட தேவதையும்! Rவியாபாரியும் கெட்ட தேவதையும்! Aவியாபாரியும் கெட்ட தேவதையும்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வியாபாரியும் கெட்ட தேவதையும்! Empty Re: வியாபாரியும் கெட்ட தேவதையும்!

Post by கலைவேந்தன் Wed 30 Mar 2011 - 13:02

மஞ்சு சொன்னதும் டிட்டோ...

ஆதிரா சொன்னதும் டிட்டோ..

நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வியாபாரியும் கெட்ட தேவதையும்! Empty Re: வியாபாரியும் கெட்ட தேவதையும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum