புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வாக்குறுதி நேரம் I_vote_lcapவாக்குறுதி நேரம் I_voting_barவாக்குறுதி நேரம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குறுதி நேரம்


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Tue Mar 29, 2011 9:59 am

வாக்குறுதி நேரம் 1772578765 தேர்தல் காலமென்றாலே அரசியல்
கட்சிகளுக்குப் பிரச்சனைதான். அள்ளிஇறைப்பதற்குப் பணம் தேவைப்படும்
என்பதைவிடவும், மக்களிடம் கொடுப்பதற்கு வாக்குறுதிகள் தேவை என்பதே
அவர்களுக்கு இப்போதுள்ள முக்கியமான பிரச்சனை. கடந்த சட்டமன்ற தேர்தலில்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வின் தேர்தல்
அறிக்கைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ‘இந்தத் தேர்தல் வெற்றியின் ஹீரோ
தேர்தல் அறிக்கைதான்’ என்று அதைப் பல தலைவர்களும் வர்ணித்தார்கள்.
கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் பலத்தைவிடவும், தி.மு.க.வின்
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம்,
கூட்டுறவு கடன் தள்ளுபடி, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் போன்ற
வாக்குறுதிகள்தான் அதற்கு மக்களின் ஆதரவை பெற்றுத் தந்தது என்பதே பலருடைய
கணிப்பாகும்.


தேர்தல் காலத்தில் வழங்கப்படும்
வாக்குறுதிகள் தேர்தல் முடிந்ததும் காற்றில் பறந்துவிடும் என்பதே பொதுவாக
மக்களின் எண்ணமாக இருந்து வந்தது. அந்த வாக்குறுதிகளை அரசியல்கட்சிகளும்
சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை, மக்களும் அதை பெரிதாக நம்புவதில்லை
என்பதுதான் கடந்த கால யதார்த்தம். ஆனால் 2006 சட்டமன்றத் தேர்தலில்
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளும், அதனால் கிடைத்த வெற்றியும் இந்த
அணுகுமுறையை இப்போது மாற்றிவிட்டன. மக்களைக் கவரும் வாக்குறுதிகளைத்
தந்தால் அவர்களது ஆதரவைப் பெறமுடியும் என்று இப்போது அரசியல் கட்சிகள் எண்ண
ஆரம்பித்துவிட்டன.

தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு பெரிய
கட்சிகளில் ‘திங்க் டேங்க்’ என சொல்லப்படும் அறிவுஜீவிகளின் குழு
இருக்கும். இப்போது இதற்காக கார்பரேட் கம்பெனிகள்கூட முளைத்துவிட்டன. ஆனால்
அத்தகைய ‘ஆடம்பரங்கள்’ சிறிய கட்சிகளுக்கு இருப்பதில்லை. கூட்டணி அரசியலே
யதார்த்தம் என ஆகிவிட்ட இன்றைய சூழலில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள்
தமக்கென்று தனித்தனியே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டாலும்கூட கூட்டணிக்கு
தலைமைத் தாங்குகிற கட்சியின் தேர்தல் அறிக்கையே முக்கியமாகக்
கவனிக்கப்படும். இப்போது பெரிய கட்சிகள் ஒரு பக்கம் கூட்டணிப்
பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகளைத்
தயாரிக்கின்ற வேலையில் மும்முரமாக இருக்கின்றன. அவற்றில் என்னென்ன
வாக்குறுதிகள் இடம்பெறப்போகின்றன என்பதை மக்களும் ஆர்வத்தோடு
எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை
அளிக்கும்போது மக்களின் விருப்பம், தேவை ஆகியவற்றைக் கேட்டறிந்து அதை
முடிவு செய்வதில்லை. எதெல்லாம் கவர்ச்சியாக இருக்குமோ அதைத்தான்
வாக்குறுதியாக அளிக்கிறார்கள். இதனால் மக்களுடைய ஜீவாதாரமான பிரச்சனைகள்
போதிய அளவு கவனம் பெறாமல் போய்விடுகின்றன. மக்கள் தமது பிரச்சனைகளை
எடுத்துச்சொல்வதற்குப் போதுமான வாய்ப்பும் இருப்பதில்லை. இவ்வாறு
புறக்கணிக்கப்படுகின்ற பிரச்சனைகளில் முக்கியமானதாக விளங்குவது பெண்களின்
பிரச்சனையாகும்.

நமது வாக்காளர்களில் ஏறத்தாழ பாதி அளவினராக
இருக்கும் பெண்களுடைய பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தந்து
அணுகுவதில்லை. சட்டமன்ற, பாராளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு
வழங்குகிறோம் என எத்தனையோ ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் கூறிவந்தபோதிலும்
அதற்கான மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவது இதற்கொரு உதாரணம்.
இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் பெண்கள் தம்முடைய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில்
எடுத்துரைத்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண முடியும். ஆனால் இதற்கான
வாய்ப்பை அரசியல் கட்சிகள் கொடுக்க மறுத்துவருகின்றன.

மகளிர்
இடஒதுக்கீடு பிரச்சனையைவிடவும் முக்கியமான இன்னொரு விஷயம் இப்போது
தெரியவந்திருக்கிறது. குழந்தைத் திருமணம் என்பது உலகிலேயே அதிகமாக
இந்தியாவில்தான் நடக்கிறது என்ற உண்மையை ‘லான்ஸெட்’ என்ற மருத்துவ இதழ்
இப்போது வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில்
ஏறத்தாழ நாற்பத்தைந்து சதவீத திருமணங்கள் பெண்ணுக்கு சட்டரீதியாக
அனுமதிக்கப்பட்ட பதினெட்டு வயது ஆவதற்கு முன்பே நடந்து விடுகிறது என அந்த
பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று கூறுகிறது. ‘நேஷனல்
ஃபேமிலி ஹெல்த் சர்வே’ மூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில்
பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, உத்திர பிரதேசம் ஆகிய
மாநிலங்களில் சிறுவயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது
சகஜமானதாக இருக்கிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிலைமை
சற்றே பரவாயில்லை என்றபோதிலும், இவையும்கூட விதிவிலக்குகள் அல்ல.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்னும் பல பகுதிகளில் குழந்தைத் திருமணம்
நடைமுறையில் இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் இப்போதும் கோலோச்சுகிற
அறியாமையே இதற்கு முக்கியமான காரணமாகும். விழுப்புரம் மாவட்டத்தில்
சிறுமிகளுக்கு பொட்டுக்கட்டி விடுவது, தவளையோடு கல்யாணம் செய்துவைப்பது
போன்ற மூடப்பழக்கங்கள் நடைமுறையில் இருப்பதை பத்திரிகைச் செய்திகள்
உறுதிப்படுத்துகின்றன. பெண்களின் கல்வி நிலை மோசமாக இருக்கும் பகுதிகளில்
குழந்தைத் திருமணம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வுகளும்
நிரூபித்திருக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள, பெண்ணுக்கு
திருமணம் செய்வதற்கேற்ற சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பது 1978ஆம்
ஆண்டில் அறிவிக்கப்பட்டதாகும். குழந்தை திருமணம் பற்றி முதலில் அக்கறை
காட்டியவர்கள் நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள்தான். அவர்கள்தான்
1929ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணங்களை தடை செய்வதற்கான சட்டத்தை
முதன்முதலாகக் கொண்டுவந்தார்கள். அப்போது பெண்ணுக்கு சட்டபூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது பதினான்கு, அது 1940ஆம் ஆண்டில் பதினைந்து
என உயர்த்தப்பட்டது.

சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதால்
பெண்களுக்கு பல்வேறு விதமான சுகாதாரக்கேடுகள் வருவது மட்டுமல்லாமல்,
அவர்களது உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. முறையாக கல்வி கற்பதற்கும்,
உளவியல் ரீதியான வளர்ச்சிக்கும் அது தடையாக இருக்கிறது. சிறுவயதில்
திருமணமாகிச் செல்லும் பெண்கள் உடனடியாகவே கர்ப்பம் தரிப்பதால்
அவர்களுக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவர்களது உடல்
பக்குவப்படாத நிலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் உடல் ரீதியில்
மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்
என்பதை மருத்துவ ஆய்வுகள் எடுத்துக்கூறுகின்றன. 2001ஆம் ஆண்டு எடுத்த
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் பெண்கள்
பதினைந்து வயதுக்குள்ளாகவே குழந்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள பெண் எய்ட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானோர் பதினெட்டு
வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

குழந்தைத்
திருமணத்தை தடுப்பதற்கு சட்டம் இருந்தபோதிலும், பதினெட்டு வயதுக்குக்கீழ்
உள்ள பெண்ணோடு செய்யப்படும் திருமணத்தை ரத்து செய்வதற்கு தற்போது வழியேதும்
இல்லை. அவ்வாறு ரத்து செய்தால் அது அந்தப் பெண்ணுக்கு மேலும் பாதுகாப்பற்ற
நிலையை ஏற்படுத்திவிடும் என்பதால் நீதிமன்றங்கள் அத்தகைய திருமணங்களை
சட்டபூர்வமாக அங்கீகரித்தே வருகின்றன. குழந்தைத் திருமணத்திற்கு உதவியாக
இருப்பவர்களைத் தண்டிப்பதற்கு தற்போது சட்டத்தில் இடமிருந்தாலும், அது
நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

இந்திய சட்ட ஆணையம் கடந்த
ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள்
சிலவற்றை அரசுக்கு பரிந்துரைத்தது. பதினாறு வயதுக்கு கீழ் உள்ள பெண்ணோடு
செய்யப்படும் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்ய வேண்டும்; இந்திய
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375ஐ திருத்தம் செய்து சட்டரீதியாக உடலுறவுக்கு
சம்மதம் தெரிவிக்கக்கூடிய வயது பதினாறு என ஆக்கவேண்டும்; அனைத்து விதமான
மதங்களிலும் திருமணங்களைக் கட்டாயமாக பதிவு செய்வதற்கு ஆணையிட வேண்டும்;
இந்து திருமணச் சட்டத்தின் ஷரத்துகளும் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின்
பிரிவுகளும் முரண்படாதபடி உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் முதலான
யோசனைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை மத்திய அரசு
கவனித்ததாகத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளும் அதற்காக குரலெழுப்பவில்லை.

பாராளுமன்றத்
தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இந்த நேரத்திலாவது அரசியல் கட்சிகள்
இதுபற்றி அக்கறை காட்ட வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைத்
திருமணங்களை முற்றாகத் தடைசெய்வோம். இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,
சட்ட ஆணையமும் வழங்கியுள்ள ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு சட்ட வடிவம்
கொடுப்போம் என தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கின்ற கட்சிக்கு
பெண்களின் ஆதரவு கிடைக்கும் என்பது நிச்சயம். வாக்குகளைப் பெறவாவது இந்த
வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அளிக்குமா?


நன்றி : எழுத்தாளர் ரவிக்குமார்



வாக்குறுதி நேரம் 168113 அன்புடன் லக்ஷ்மண் வாக்குறுதி நேரம் 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக