ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம்

Go down

கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் Empty கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம்

Post by சிவா Fri 25 Mar 2011 - 11:48

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் நேற்று பகல் 1.15 மணிக்கு தேர்தல் அதிகாரி வாசுதேவனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் பிரசாரம்

வேட்பு மனுவை தாக்கல் செய்து முடித்துவிட்டு வெளியே தயார் நிலையில் நின்று கொண்டிருந்த நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு மதியம் 1.45 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் மாலை 3.30 மணியளவில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி பிர சாரத்தை தொடங்கிய இவர் சென்னகுனம், ஆயந்தூர், முகைïர், சித்தாமூர், அரகண்டநல்லூர், மணம்பூண்டி போன்ற கிராமங்கள் வழியாக வந்து அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு

இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருக்கோவிலூர் வந்தார். அங்கு தொகுதி வேட்பாளரும் மாவட்ட செயலாளருமான எல்.வெங்கடேசனை ஆதரித்து அங்கு கூடியிருந்த மக்களிடத்தில் வாக்கு கேட்டு பேசினார். அப்போது கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு ஆகியவற்றை கண்டித்து பேசினார்.

திருக்கோவிலூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை 5 மணியளவில் புறப்பட்டு விளந்தை, சொரையப்பட்டு, சாங்கியம் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் மாலை 5.45 மணியளவில் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் பேட்டைக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கேட்டு பேசினார்.

திருவரங்கத்தில் சாமி தரிசனம்

மணலூர்பேட்டையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 6.40 மணியளவில் கள்ளிப்பாடி வழியாக சென்று திருவரங்கம் சென்றார். இரவு 6.50 மணியளவில் திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி ஜோதி ஆகியோருடன் சென்று ரங்கநாத பெருமாள், ரங்கநாயகி தாயாரை தரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தார்.

சுமார் 40 நிமிடத்திற்கு பின்னர் இரவு 7.30 மணியளவில் கோவிலில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த் அங்குள்ள கூட்டுரோட்டில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் ஜம்படை, சீர்ப்பனந்தல் வழியாக 8.30 மணிக்கு அரும்பராம்பட்டுக்கு வந்து அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு முடித்த பின்னர் 9 மணிக்கு ஈருடையாம்பட்டில் பிரசாரம் செய்து விட்டு 9.15 மணிக்கு பொரசப்பட்டிலும், 9.30 மணிக்கு மூங்கில்துறைப்பட்டிலும் அதனை தொடர்ந்து மைக்கேல்புரம், கடுவனூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து விட்டு அத்துடன் நேற்றைய பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.

திருக்கோவிலூர் தே.மு.தி.க. வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது:-

மக்களுடன் கூட்டணி

விஜயகாந்த் விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்திற்கு வந்திருக்கின்றார் என்று கூறுகின்றனர். அதுவும் சிவன் தலம்தான். இதுவும் சிவன் தலம்தான். மக்கள் குணத்தை காட்டுகின்ற நேரம் தேர்தல் நேரம். மக்களுக்கு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் இருந்தால், அதற்கு பாடம் புகட்டுகிற நேரம்தான் இந்த நேரம்.

இந்த தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்யாதவர்களுக்கு, பாடத்தை ஓட்டு மூலம் காட்டுவார்கள். விஜயகாந்த் மக்களுடனும், தெய்வத்துடனும் கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க.வுடன் எப்படி கூட்டணி வைத்தார் என்று கேட்கின்றனர். நான் சொன்னபடி தெய்வத்துடனும், மக்களுடனும் கூட்டணி இருக்கத்தான் செய்கிறது. நான் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ பங்கு கேட்கவில்லை. என்னுடைய மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன்.

வெற்றிபெறச் செய்ய வேண்டும்

விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்பதாக சொன்னீர்கள், சட்டசபையில் 5 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதாக கூறினீர்கள், எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள். மொத்தத்திற்கு 5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கவில்லை. தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நான் உங்களுக்காக போராடத்தான் வந்திருக்கின்றேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்..

தினதந்தி!


கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum