புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
106 Posts - 64%
heezulia
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆடாதொடை Poll_c10ஆடாதொடை Poll_m10ஆடாதொடை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடாதொடை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 22, 2011 12:29 pm

ஆடாதொடை(ADHATODA VASICA அல்லது Justicia adhatoda)

இது ‘மலபார்நட்’ என ஆங்கிலத்திலும் “Adhatoda vasica” எனும் அறிவியல் பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறது. இது, ‘அகன் தாசியே’ எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

மனிதன் பாம்பு, புலி போன்றவைகளுக்கு பயப்படுகிறானோ இல்லையோ, குளிர்ந்த காற்று, ஈரத்தைக் கண்டு பயந்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

மனிதனின் உடல் நலனைக் கெடுத்து, அவனுடைய அன்றாட செயல்பாடுகளைச் சீர்குலைத்து செயலிழக்க வைப்பதில் ஜலதோஷத்திற்கும், அலர்ஜிக்கும் தனி இடமே உண்டு. இதனைப் போக்கி, குணப்படுத்த பல மூலிகைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். “இருமல் மூலிகை” என்று பட்டப் பெயருடன் அழைக்கப்படும் “ஆடாதொடா” மூலிகையும் அவற்றில் ஒன்றாகும். இதனைப் பற்றி மருத்துவக் களஞ்சியத்தில் கூறப்பட்டு இருப்பதாவது.

ஆடாதொடையின் வேறு பெயராக ஆடாதொடை வாசிகா எனவும் அழைக்கப்படுகிறது.

இச்செடி தென்னிந்தியாவிலும், வங்காள தேசத்திலும் ஏராளமாய்ப் பயிராகின்றது. இதன் இலை, மாவிலை, நுணா இலைகளைப் போல 4 முதல் 9 அங்குல நீளமாகவும், 2 முதல் 3 அங்குலம் அகலமாகவும் இருக்கும். மேலும் 4 முதல் 10 அடி உயரம் வரை வளரும். மருத்துவ பயன்பாட்டுக்கு இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை உதவுகின்றன. கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இசிவு அகற்றும், கோழை அகற்றும், புழுக்களைக் கொல்லும், சிறுநீர் பெருக்கும் குணங்கள் உள்ளன.

சித்த மருத்துவம்

இலையின் குணம்

* வாயுநோய், பலவகை காய்ச்சல், வயிற்று நோய், இருமல், வாந்தி, விக்கல், சூலை நோய், அண்ட வாயு ஆகியவைகளைப் போக்கும். பாடகர்களுக்கு நல்ல குரல் ஒலியைத் தரும்.

* இலையின் சாறு 10 அல்லது 20 துளிகளை எடுத்து, தேனுடன் கலந்து கொடுத்தால் மேற்சொன்ன நோய்கள் நீங்கும். குறிப்பாக குருதியழல், இருமல், இளைப்பு நோய், சுரம், காமாலை தீரும்.

* இலையை மட்டும் குடிநீர் செய்து அதில் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

* சுமார் 3 இலைகளைக் குறுக்காக அரிந்து இதனுடன் 1 ஏலக்காய் சேர்த்து 200 மி.லி. அளவு வெந்நீரில் 2-3 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 25 முதல் 50 மி.லி. வீதம் தினமும் 3 வேளைக்கு கொடுத்தால் இருமல், காய்ச்சல், குருதியழல் போகும்.

* 2, 3 கொழுந்து இலைகளைப் பொடியாகக் கத்தரித்து புதிய மண்சட்டியில் இட்டு, சிறிதளவு தேன் சேர்த்து எரித்தால் ஒருவிதமான வாசனை வீசும். அப்போது அதிமதுரம் 5 கிராம், திப்பிலி 3 கிராம், தாளிசபத்திரி 3 கிராம், சிற்றரத்தை 1 கிராம் எனப் போட்டு ஒன்றிரண்டாக நசுக்கி சேர்த்து 500மி.லி சுத்தமான தண்ணீர் விட்டு 100 மி.லி. யாகும் வரை சுண்டச் செய்து வடிகட்டி, காலை, மாலை 2 வேளைகள் கொடுத்து வந்தால் கோழைக் கட்டு அகலும். சளி வெளிப்படும். இருமல், இரைப்பு, காய்ச்சல் போன்றவை நீங்கும்.

* ஒரு பங்கு இலைக்கு 8 பங்கு நீர் சேர்த்து 8ல் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிய நீரை துணியில் தோய்த்து ஒத்தடமிட்டால் வீக்கம், சூலை, கீழ்பிடிப்பு முதலியவை குறையும்.

* இலையின் தனிரசத்தை அருந்தினால், இரத்தபேதி, சீதமும் இரத்தமும் கலந்து போகும் கழிச்சல் நோய் தீரும்.

* இலையை உலரவைத்து சுருட்டாக சுருட்டி புகை பிடித்தால் இரைப்பு நோய் தீரும்.

* இலை, வேர் சமஅளவுகளாக எடுத்து, அதற்கு தக்கபடி மிளகு சேர்த்து, ஊறல் குடிநீர் செய்து கொடுத்தால் இரைப்பு, உப்பிசம், ஈளை, இருமல், காய்ச்சல் தணியும்.

மெழுகு : இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு புதிய மண்பாண்டத்தில் விட்டு,மெழுகு பதமாய்க் காய்ச்சி, 2 முதல் 5 குன்றிமணி அளவு தனித்தோ அல்லது திப்பிலிப் பொடி சேர்த்தோ தினமும் 3-4 வேளை சாப்பிட்டால் சில வகைப் பிணிகள் போகும்.

* இலைச்சாறு 1 பங்கு, தேன் அல்லது இஞ்சிச்சாறு அரைப்பங்கு, இரண்டும் சேர்த்து மெழுகு போல பதமாக காய்ச்சி 2 முதல் 4 குன்றி மணி அளவு தினமும் 3 முறை கொடுத்தால் இரைப்பு, ஈளை, இருமல், இளைப்பு நோய் நீங்கும்.

பூ : பூவை வதக்கி, இருகண்களின் மீதும் வைத்துக் கட்டினால் கண் நோய்கள் தீரும்.

பட்டை : இதனைக் குடிநீர் செய்தாவது, பொடியாகச் செய்தாவது காய்ச்சல், இருமல், இரைப்பு, இளைப்பு ஆகிய நோய்களுக்குக் கொடுக்கலாம்.

வேர் : இதனால் இருமல், அழல் மந்தம், கடுமையான மூச்சு, கழுத்து வலி நோய்கள் போகும்.

* இதன் வேரையும், கண்டங்கத்திரி வேரையும், குடிநீரிட்டு அதில் திப்பிலிப் பொடியை சேர்த்து கொடுத்தால் இருமல் நீங்கும்.

* ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சீந்தில் கொடி, வகைக்கு சிறிதளவு எடுத்து, 16 பங்கு நீர் சேர்த்து 8ல் 1 பங்கு ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து தினமும் 2-3 முறை கொடுத்து வந்தால் இருமல், கோழைக்கட்டு, காய்ச்சல் தீரும்.

* ஆடாதொடை, திராட்சை, கடுக்காய் இவற்றின் குடிநீரில் தேனும் சர்க்கரையுங்கட்டி சாப்பிட்டால் கொடுமையான குருதியழல், இரைப்பு இருமல் தீரும்.

* ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு இவை சேர்ந்த குடிநீரில் அல்லிக்கிழங்கின் பொடியைக் கூட்டிக் கொடுக்க இரைப்பு இருமல் தீரும்.

குடிநீர் : ஆடாதொடை, கண்டு பரங்கி, கையாந்தகரை சங்கன், காஞ்சொறிவேர்,அல்லிக்கிழங்கு, சுக்கு, மிளகு இவற்றைச் சேர்த்துத் தக்க நீர்விட்டு, அது 8-ல் 1 பங்காக வற்றுமாறு காய்ச்சி அதனைத் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் நீங்கும்.

பிற குறிப்பு : ஆடாதொடை ஓர் மருந்துச் செடியாகும். இதை ஹகீம்கள் முக்கியமாய் கெண்டை வாங்கல் வலி, நரம்புத்தடிப்பு, கரண வாதம், கொரண்டல் வாதம் இவற்றிற்குப் பயன்படுத்துகின்றனர்.

ஈழை காசம், மந்த காசம் இவற்றால் ஏற்படுகிற குளிர் சுரம் வராமல் தடுக்கவும், கஷாயமாகவும், லேகியமாகவும் செய்து கொடுக்கிறார்கள். அது கொஞ்சம் கசப்பாக இருக்கும்.

இதன் உலர்ந்த இலையின் குடிநீர், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் விழவும், கொடுக்கப்படுகிறது. இதன் பச்சை இலையை அரைத்து, ஆமணக்கு எண்ணெயில் குழப்பி கரப்பான் புண்களுக்கு மேல் பூச்சாகப் பூசினால் புண்கள் ஆறிப்போகும் என சித்த வைத்திய மூலிகை மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.

யுனானி மருத்துவம்

தோற்றம் : இது இருமலுக்கு மிகவும் பயனுள்ள மூலிகையாகும். இதன் அரபு பெயர் ‘ஹஷீஷதுஸ் சஆல்பீ’ (இருமல் மூலிகை) ஆகும். இது 1/2 கஜத்திலிருந்து 1 கஜம் வரை உயரமாக வளரும். இதில் கிளைகள் அதிகமாக இருக்கும். இதன் இலைகள் மாமர அலைகள் போன்று இருக்கும். ஆனால், அதைவிட லேசாகவும், மிருதுவாகவும் இருக்கும். இலை கசப்பாக இருக்கும்.

பூக்கள் வெண்மையாய் அழகாய் ஒன்றோடு ஒன்று சேர்ந்து காணப்படும். பூக்களின் கழுத்துப்பகுதியில் தேன் போன்ற இனிப்பான திரவம் இருக்கும். கிளைகள் வெண்மை நிறம் கொண்டதாக இருக்கும். இதன் பழங்கள் இரண்டு பாகமாக பிரிந்திருக்கும். ஒவ்வொரு பாகத்திலும் அரஹர பருப்பு அளவில் இரண்டு விதைகள் இருக்கும்.

வளருமிடம் : இது அதிகமாக இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாகாணத்திலும் மற்றும் வங்காளத்திலும் உற்பத்தியாகிறது. இது கடினமான கல் நிறைந்த பூமியில் வளரும்.

வகைகள் : இது இரண்டு வகைப்படும். 1. முள் உடையது பியா பான்ஸா, 2. முள் இல்லாதது பான்ஸா (ஆடாதொடா)

இயல்பு : உஷ்ணம் - வறட்சி (முதல் நிலை) சிலர் உஷ்ணம் என்றும், சிலர் குளிர்ச்சி - ஈரம் என்றும் கூறுகின்றனர். பூக்கள் ஈரமானத் தன்மை உடையது என்று கூறப்பட்டுள்ளது.

பயன்படும் உறுப்புகள் : இலை, வேர், பூக்கள்.

பண்புகளும், பயன்களும் : சளியை வெளியேற்றும் காரணத்தால் ஆஸ்துமா மற்றும் இருமல் நோய்க்குப் பயன்படுகிறது. நுரையீரலுக்குள் காற்றுச் செல்லும் பாதையைத் தூய்மையாக்குகிறது.

கிருமிகளைக் கொல்கின்ற காரணத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான், இருமல் போன்ற நோயைப் போக்க இதன் வேர்ப்பட்டையைக் கஷாயமாக்கிக் கொடுப்பார்கள். காசநோய்க்கு இதன் இலைகள் அல்லது வேர்ப்பட்டையைக் கஷாயமாக்கிப் பயன்படுத்துவார்கள்.

மேலும், இந்த நோய்க்கு இதன் பூக்களைக் கொண்டு சர்பத் அல்லது குல்கந்து தயாரித்து பயன்படுத்துவார்கள். வயிற்றுப் பூச்சிகளைச் சாகடிக்கப் பயன்படுகிறது. இதன் இலைகளைத் துணியில் வைத்தால் பூச்சிகள் வராது.

இதன் கஷாயம் ஜுரங்களைப் போக்கப் பயன்படுகிறது. துர்நாற்றம் கொண்ட சளியை வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் காரணத்தால் தொடை நோய், சொறி, சிரங்கு, நமைச்சல் போன்ற நோய்க்கு பயன்படும். மூக்கிலிருந்து இரத்தம் வருவதைத் தடுக்கிறது.

இதன் புதிய இலைகளின் சாற்றைத் தேனில் கலந்து பயன்படுத்துவார்கள். உலர்ந்த இலைகளைப் பவுடராக்கி தேனில் கலந்து பயன்படுத்துவார்கள். பூக்களைக் கொண்டு குல்கந்து தயாரித்துப் பயன்படுத்துவார்கள்.

தீய விளைவுகள் : உடல் குளிர்ச்சி குணம் உள்ளவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.

தணிக்கும் முறை :
இத்துடன் மிளகு மற்றும் தேன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்க்கும் நோய்கள் : ஆஸ்துமா, இருமல், சளி, கக்குவான், காசநோய், வயிற்றுப்பூச்சிகள், சொறி, சிரங்கு, நமைச்சல், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.

சிறப்புக் குறிகள் : ஆஸ்துமா மற்றும் இருமலுக்குப் பயன்தரும். மாத விலக்கைப் பிரியச் செய்யும்.

அளவு : இலை மற்றும் வேர் பவுடர் 2 அல்லது 3 கிராம்.

கஷாயம் : 5 கிராம் முதல் 12 கிராம் வரை. (ஆடாதொடாவை எரித்து அதன் சாம்பலிலிருந்து உப்பு எடுக்கப்படுகிறது. இது ஆஸ்துமா மற்றும் இருமலுக்கு பயனுள்ளது).

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்

திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சமாக ஆடாதொடை வணங்கப்படுகிறது.

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்



ஆடாதொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 22, 2011 12:31 pm

பயனுள்ள தகவல்,பகிரந்தமைக்கு நன்றி சிவா



ஆடாதொடை Uஆடாதொடை Dஆடாதொடை Aஆடாதொடை Yஆடாதொடை Aஆடாதொடை Sஆடாதொடை Uஆடாதொடை Dஆடாதொடை Hஆடாதொடை A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 12:37 pm

இதுவும் ரம்பா தொடை போல என நினைத்தேன் ,,,,

அறியத்தந்தமைக்கு நன்றி தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 22, 2011 12:39 pm

ரபீக் wrote:இதுவும் ரம்பா தொடை போல என நினைத்தேன் ,,,,

அறியத்தந்தமைக்கு நன்றி தல

ரம்பாவை இன்னுமா நினைக்கிறீங்க.....!! உங்கள் கனவு தேவதைக்கு வயசாகிப்போச்சுன்னா புதுசுக்கு மாறுங்கப்பா!



ஆடாதொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 12:44 pm

சிவா wrote:
ரபீக் wrote:இதுவும் ரம்பா தொடை போல என நினைத்தேன் ,,,,

அறியத்தந்தமைக்கு நன்றி தல

ரம்பாவை இன்னுமா நினைக்கிறீங்க.....!! உங்கள் கனவு தேவதைக்கு வயசாகிப்போச்சுன்னா புதுசுக்கு மாறுங்கப்பா!

இப்போ ஹன்ஸிகா மோத்வானி !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 22, 2011 12:49 pm

ரபீக் wrote:
இப்போ ஹன்ஸிகா மோத்வானி !!!

அப்ப டாப்ஸி வாழ்க்கை~! ஆடாதொடை 440806



ஆடாதொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 12:58 pm

சிவா wrote:
ரபீக் wrote:
இப்போ ஹன்ஸிகா மோத்வானி !!!

அப்ப டாப்ஸி வாழ்க்கை~! ஆடாதொடை 440806

அதுகூட நான் எப்போ வாழ்ந்தேன் >? அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 22, 2011 1:02 pm

ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
இப்போ ஹன்ஸிகா மோத்வானி !!!

அப்ப டாப்ஸி வாழ்க்கை~! ஆடாதொடை 440806

அதுகூட நான் எப்போ வாழ்ந்தேன் >? அதிர்ச்சி அதிர்ச்சி

டாப்ஸி இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு புலம்பினீங்களே மாமா! அதிர்ச்சி



ஆடாதொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 1:05 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
இப்போ ஹன்ஸிகா மோத்வானி !!!

அப்ப டாப்ஸி வாழ்க்கை~! ஆடாதொடை 440806

அதுகூட நான் எப்போ வாழ்ந்தேன் >? அதிர்ச்சி அதிர்ச்சி

டாப்ஸி இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு புலம்பினீங்களே மாமா! அதிர்ச்சி

மப்பு அதிகமா இருக்கும்போது அதுமாதிரி உளறல்கள் வரத்தான் செய்யும் மன்னா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 22, 2011 1:06 pm

ரபீக் wrote:
மப்பு அதிகமா இருக்கும்போது அதுமாதிரி உளறல்கள் வரத்தான் செய்யும் மன்னா !!

அப்ப சரி! ஆடாதொடை 440806



ஆடாதொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக